Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘முன்னாள் போராளிகளுக்கு கூட்டமைப்பு உதவி கரமாக இருக்கவில்லை’ - மாவை

Featured Replies

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

முன்னாள் போராளிகள் யுத்தம் முடிந்ததன் பின்னர் பல வகையான இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தங்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உதவி கரமாக இருக்கவில்லையெனவும் முன்னாள் போராளிகள் கவலை தெரிவித்துள்ளதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினருக்கும் இடையில், நேற்று  (19) நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர்,  கடந்த ஆட்சிக் காலத்தில், முன்னாள் போராளிகளுக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும் வரவு - செலவுத் திட்டத்தில் பாரியளவில் நிதி ஒதுக்கப்பட்டதாகவும் ஆனால், அந்த நிதி முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்கின்ற ஆதங்கம் தங்களிடம் இருப்பதாகவும் கூறினார்.

முன்னாள் போராளிகள், அவர்களது முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் தன்னிடம் பேசியதாகத் தெரிவித்த மாவை, அவர்கள் அரசியல் ரீதியாகவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பலமடைய செய்ய வேண்டுமெனவும் கூறினார்.

முன்னாள் போராளிகளின் துயரத்தைத் தாங்கள் ங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனவும் கட்சியின் தலைவர் என்ற வகையில், கூட்டமைப்பின் ஏனைய இரண்டு அங்கத்துவக் கட்சிகளுடன் இணைந்து, அவர்களது பிரச்சினைகள் குறித்து கதைத்துள்ளதாகவும், அவர் கூறினார்..

இதற்கமைய, விரைவில், சம்பந்தன் தலைமையில் உயர் மட்ட குழுவைக் கூடி, பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடி, அவர்களது பிரச்சினை குறித்தான முடிவை எடுக்க இருப்பதாகவும், மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அத்துடன், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முன்னாள் போராளிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் முன்னாள் போராளிகளையும் இணைத்துக் கொண்டு செயற்படவுள்ளதாகவும், அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/வன்னி/மனனள-பரளகளகக-கடடமபப-உதவ-கரமக-இரககவலல/72-250561

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ampanai said:

இதற்கமைய, விரைவில், சம்பந்தன் தலைமையில் உயர் மட்ட குழுவைக் கூடி, பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடி, அவர்களது பிரச்சினை குறித்தான முடிவை எடுக்க இருப்பதாகவும், மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அடபாவி 11 வருடத்தின் பின் இப்ப தான் தூக்கத்தால் எழும்புகிறார்கள்.

1 hour ago, ஈழப்பிரியன் said:

அடபாவி 11 வருடத்தின் பின் இப்ப தான் தூக்கத்தால் எழும்புகிறார்கள்.

இதுவும் தேர்தல் முடியும் வரைக்கும் தான்.

அதுக்கு பிறகு கிடைக்கிறத தாங்களே அமுக்குறதுல தான் கவனம் இருக்கும். மற்ற எல்லாத்தையும் மறந்துடுவாங்க.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

இதற்கமைய, விரைவில், சம்பந்தன் தலைமையில் உயர் மட்ட குழுவைக் கூடி, பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடி, அவர்களது பிரச்சினை குறித்தான முடிவை எடுக்க இருப்பதாகவும், மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

செயற்குழு 

பொது குழு 

உயர் மட்ட குழு 

தேர்தல் பணி குழு 

ஆலோசனை குழு 

என்னம்மோ போங்கப்பா ..😢

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

செயற்குழு 

பொது குழு 

உயர் மட்ட குழு 

தேர்தல் பணி குழு 

ஆலோசனை குழு 

என்னம்மோ போங்கப்பா ..😢

தோழர் அதோடு இன்னொன்றையும் விட்டுவிட்டீர்கள் 
தனிப்பட்ட கருத்துக்குழு 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

தோழர் அதோடு இன்னொன்றையும் விட்டுவிட்டீர்கள் 
தனிப்பட்ட கருத்துக்குழு 

சூப்பர் 👏👏👏👏👏👏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.