Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குழு சிக்கியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குழு சிக்கியது

image_19bb638b2a.jpgஎம்.றொசாந்த் 

யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன், அவர்களிடமிருந்த 10 இலட்சம் ரூபாய்க்கும்  அதிக பெறுமதியான நகைகளை மீட்டிருக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 23, 24 மற்றும் 26 வயதுடைய சந்தேக நபர்கள் எனவும் அவர்கள்  போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில் கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் 45 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் தொடர்ச்சியாக கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வந்தன. அவை தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

முறைப்பாடுகளின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முனெடுத்து வந்த நிலையில், ஹெரோயின் போதைப்பொருளுடன் கடந்த சில நாள்களுக்கு முன்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஊடாக  7 கொள்ளைச் சம்பவங்களுடன் மூவருக்கும் தொடர்புள்ளமை,  சந்தேக நபர்களிடம் மீட்கப்பட்ட சான்றுப்பொருள்களின் மூலம் கண்டறியப்பட்டது. 

அதனை அடுத்து சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிடப்படும் நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

4 சந்தேக நபர்களிடமிருந்தும் 10 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட நகைகள்  தொலைக்காட்சிப் பெட்டி, மோட்டார் சைக்கிள் ஒன்று, 6 அலைபேசிகள், அப்பிள் ஐபாட்  உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/யாழில்-கொள்ளை-சம்பவத்தில்-ஈடுபட்ட-குழு-சிக்கியது/175-250649

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

யாழில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குழு சிக்கியது

கைது செய்யப்பட்டவர்கள் 23, 24 மற்றும் 26 வயதுடைய சந்தேக நபர்கள் எனவும் அவர்கள்  போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில் கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அரச படைகளே ... தமிழ்ப் பகுதிகளில்,  போதைப்  பொருட்களை... உலாவ விட்டு,
தமிழ் மாணவர்களையும், இளைஞர்களையும்... பாழாக்கியதன் பலன்,
இப்போ... திருட்டு, கொலை என்று வந்து நிற்கின்றது. 😡

இதற்குள்... போதை கடத்தல் காரருக்காக  வாதாட, சுமந்திரனும் இருக்கிறார். 😞

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, கிருபன் said:

யாழில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குழு சிக்கியது

image_19bb638b2a.jpg

இவர்கள் என்றுமே பிடிபட்டவர்களைக் காட்டிப் பொதுமக்களை இந்தக் களவாணிகளிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி செய்யமாட்டார்கள். குற்றவாளிகளைப் பிடித்த தங்களின் பதவிகளை வெளிக்காட்டும் சின்னங்கள் கொண்ட சீருடைப் படங்களையே போட்டுக் காட்டுவார்கள். இதன் பின்னணி என்னவாக இருக்கும்.....??

குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பு வரும்வரை ஒருவரைக் குற்றவாளியாக வெளிக்காட்டக் கூடாது எனச் சட்டமிருப்பதாக இங்கு வந்து தாளம்போடக்கூடாது. சிறீலங்காவில் நீதி, நியாயம், சட்டம், ஒழுங்கு என்பதெல்லாம் ஒரு கண்துடைக்கும் பம்மாத்துக் காரணிகளே.   

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

அரச படைகளே ... தமிழ்ப் பகுதிகளில்,  போதைப்  பொருட்களை... உலாவ விட்டு,
தமிழ் மாணவர்களையும், இளைஞர்களையும்... பாழாக்கியதன் பலன்,
இப்போ... திருட்டு, கொலை என்று வந்து நிற்கின்றது. 😡

இதற்குள்... போதை கடத்தல் காரருக்காக  வாதாட, சுமந்திரனும் இருக்கிறார். 😞

உங்களை பொறுத்த வரை தமிழர்கள் எல்லோரும் சொக்க தங்கங்கள்😠 ...அவர்களுக்கு சொந்த புத்தி ,சுய புத்தி இல்லைtw_cry: ...தாமாக ஒன்றும் செய்ய மாட்டார்கள்...அவர்கள் கெட்டது எதுவும் செய்தால் சிங்களவனோ அல்லது வேறு இனத்தவனோ பழக்கியது...நல்லது எதுவும் என்றால் தாமாக செய்வார்கள் ...ஒருத்தரையும் சாட்டத் தேவையில்லை 🙁

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

உங்களை பொறுத்த வரை தமிழர்கள் எல்லோரும் சொக்க தங்கங்கள்😠 ...அவர்களுக்கு சொந்த புத்தி ,சுய புத்தி இல்லைtw_cry: ...தாமாக ஒன்றும் செய்ய மாட்டார்கள்...அவர்கள் கெட்டது எதுவும் செய்தால் சிங்களவனோ அல்லது வேறு இனத்தவனோ பழக்கியது...நல்லது எதுவும் என்றால் தாமாக செய்வார்கள் ...ஒருத்தரையும் சாட்டத் தேவையில்லை 🙁

ரதி...  "தமிழர்கள், சொக்கத் தங்கங்கள்"  என்று, நான்... எங்கும்  கூறவில்லை. 

ஆனால்... தமிழர் பகுதியில், "ஆறு  தமிழருக்கு... ஒரு, அரச படை காவல் (இராணுவம் + காவல்துறை + கடற்படை) என்ற விகிதத்தில்... குவித்து, வைத்த போதும்.... கேரள  கஞ்சாவும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போதைப் பவுடர்களும்... தாராளமாக  மாணவர்கள் மத்தியில்,  புழக்கத்தில் இருப்பது எப்படி

இவர்களால்... அதை ஏன்?  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர  முடியாது உள்ளது... என்பதே இங்குள்ள ஆதங்கம். :)

பத்து நாட்களுக்கு  முதல்...  18 வயது சிறுவன் ஒருவன், வேறு சிறுவர்களுக்கு... போதைப் பொருட்களை விற்கிறான். அந்தச் சிறுவனுக்கு... இவ்வளவு காவல்துறை இருந்தும், இவைகள்... எப்படி கிடைத்தன?
அவைகள்... ஊருக்குள் வரும்  வழியை, கண்காணிப்பதுதான் அவர்களின் வேலை.

அதை விடுத்து...  தோட்ட வேலைக்குப் போய், களைத்து வரும் ஆட்களை, அடிப்பதும்.tw_confused:
வயோதிபர்களை, பெண்களை மிரட்டுவதும்... அவர்களின் வேலையல்ல.  :(

சென்ற, இரண்டு கிழமையில் மட்டும்..... அரச படைகள்...
சாதாரண மக்களை தாக்கும், சம்பவங்கள் பத்துக்கு மேல் நடந்து முடிந்துள்ளது. 😡

இவர்களுக்கு... உண்மையான அக்கறை இருந்தால்...
கடல் வழியாகவும், கொழும்பில் இருந்தும்,  முஸ்லீம் வியாபாரிகளுடாக...
யாழ்ப்பாணத்துக்கு... கடத்தி வரப்படும் போதைப் பொருட்களை  ஏன் தடுக்க முடியாது

தமிழன், நாசமாக... போகட்டும் என்று, வேண்டுமென்றே... 
அனுமதிக்கின்றார்கள்... என்பது, உங்களுக்கு, இன்னும் புரியவில்லையா 😯

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

உங்களை பொறுத்த வரை தமிழர்கள் எல்லோரும் சொக்க தங்கங்கள்😠 ...அவர்களுக்கு சொந்த புத்தி ,சுய புத்தி இல்லைtw_cry: ...தாமாக ஒன்றும் செய்ய மாட்டார்கள்...அவர்கள் கெட்டது எதுவும் செய்தால் சிங்களவனோ அல்லது வேறு இனத்தவனோ பழக்கியது...நல்லது எதுவும் என்றால் தாமாக செய்வார்கள் ...ஒருத்தரையும் சாட்டத் தேவையில்லை 🙁

ராணுவத்தின் பெயரை சொல்லி களவெடுப்பது முழுவதும் நம்ம கழிசறைகள் பெரிய பைக்குகள் ,போண்கள், போதைக்கு காசு , இதற்கு எங்கே போவது களவுதான் இலகுவழி பல கும்பல்கள் சிக்கியிருக்கு தற்போது

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அவர்கள் கூறிய விடையத்துடன் நான் நூறு விகிதம் உடன்படுகிறேன் நான் என்னதான் சல்ஜாப்புகள் கூறினாலும் எம்மவர்க்கு எங்கே போனது புத்தி.

மாறாக விடுதலைப் புலிகளில் அங்கத்துவர்களாக இருந்து இறுதிப்போரின் பின்பு இராணுவத்தின் புனர்வாழ்வு முகாமுக்குப் போய் வந்தவர்களில் அனேகமானவர்கள் புனர்வாழ்விலிருந்து வரும்போது போதைப்பழக்கத்துக்கு அடிமையாகவே வெளிவருகிறார்கள் அவர்களுக்கு மிகவும் திட்டமிட்டரீதியில் போதைப்பழக்கத்து உட்படிதி வெளியில் விடுகிறார்கள்.

அதை விட முன்னால் போராளிகளுக்கான சமூக அந்தஸ்து என்பது தமிழர்களிடையே மிகவும் அரிது இப்போது அதுவே தாம் வாழும் சமூகத்தின்மீதான கோபமாக அவர்களுக்குள் உருவாகியுள்ளது. உங்களைப் பழிவாங்குகிறேன் எனப் பலர் இந்தச் சமூக ஒழுக்கக்கேட்டுக்கு தெரிந்தே உடன்படுகிறார்கள்.அதுவே அவர்களை வாழ்வின் விளிம்புநிலைக்குத் தள்ளிவிடுகிறது.

நான் அறிய இரண்டுபேர் இப்படியுள்ளார்கள். ஆனால் பிரச்சனை அவர்களுடன் நின்றுவிடுவதில்லை சம்பந்தமே இல்லாதவர்கள் தெரிந்தும் இப்பிரச்சனைக்குள் வந்து விழுகிறார்கள்

பத்துக்கிலோ கஞ்சாவோ அல்லது பத்துக்கிராம் போதைப் பவுடரோ பிடிபட்டால் அதேவாளை அதைப்போல் பலமடங்கு போதை சமாச்சாரம் எங்கோ கைமாறுகிறது என ஊகிக்கலாம்.இது இப்போது தமிழர் பகுதியில் மிகப்பெரிய வலைப்பின்னல் சாம்ராச்சியம் எல்லாமே கைமீறிப்போவிட்டது.

தவிர பிடிபட்டவர்களுக்காக வாதாடும் வக்கீல்களுமே அறம்சார்ந்து சிந்திப்பதில்லை இதில் முக்கியமானவர் 
யாழ் மாநகரசபை அங்கத்தவர் ரெமீடியஸ். 

ஆவாக்குழு காவாலிக்காக யாழ்ப்பாணத்தில் ஒரு பெண் வக்கீல் ஆயராகியிருந்ததை நீங்கள் அறிந்திருக்கலாம்.

குறிப்பாகச் சொல்லப்போனால் இப்போது இப்படித் தறிகெட்டவர்களது அப்பன் ஆத்தை வளர்ப்புச்சரியில்லை என்பதே.அதைவிட சாதியம் தொடர்பான பழிவாங்கலும் அதாவது ஒருகாலத்தில் மேசாதியினரால் துன்புறுத்தபட்டவர்கள் அவர்களைப் பழிவாங்குகிறேன்பேர்வழி எனவும் இப்படியான அனத்துரக விமுறைக் அளிலும் ஈடுபடுகிறார்கள் ஆனால் அதுவே அவர்கள் மீழமுடியாத சிக்கல்களுக்குள் கொண்டுவந்துவிடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ராணுவத்தின் பெயரை சொல்லி களவெடுப்பது முழுவதும் நம்ம கழிசறைகள் பெரிய பைக்குகள் ,போண்கள், போதைக்கு காசு , இதற்கு எங்கே போவது களவுதான் இலகுவழி பல கும்பல்கள் சிக்கியிருக்கு தற்போது

பல்சர் மோட்டார் சைக்கிள்க்கு பெற்றோல் முடிந்து வீதிகளில்  தள்ளுப்பட்டு உருளுது என்று கேள்வி கோவிட் வந்தது இப்படியும் ஒரு நன்மை . 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

பல்சர் மோட்டார் சைக்கிள்க்கு பெற்றோல் முடிந்து வீதிகளில்  தள்ளுப்பட்டு உருளுது என்று கேள்வி கோவிட் வந்தது இப்படியும் ஒரு நன்மை . 

இருந்தாலும் அவர்களுக்கு எப்படி காசு வருகின்றது என்பது தெரியாமல்தான் இருக்கிறது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.