Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முகமாலையில் எலும்புக்கூடுகள், புலிகளின் சீருடைகள், துப்பாக்கிகள் மீட்பு; கண்ணிவெடி அகற்றும் போது அதிர்ச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முகமாலையில் எலும்புக்கூடுகள், புலிகளின் சீருடைகள், துப்பாக்கிகள் மீட்பு; கண்ணிவெடி அகற்றும் போது அதிர்ச்சி

5000-3-15-300x204.jpgகிளிநொச்சி – முகமாலையில் பெருந்தொகை எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் துப்பாக்கிகளும் காணப்பட்டதாகவும் யாழ்ப்பாண ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்று வரும் பகுதியில் இன்று இந்த எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில் காணப்படும் எலும்புக் கூடுகள், விடுதலைப் புலிகளின் சீருடைகள் பெண் போராளிகளாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் நிறுவனபணியாளர்கள் தகவல் வழங்கியுள்ளனர். இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக பளைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியில் விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவலரண் முன்னர் அமைந்திருந்தது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

http://thinakkural.lk/article/42930

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சோடு துப்பாக்கியை அணைத்தபடி போராளியின் உடல் எச்சம்

FB_IMG_1590155168495.jpg?189db0&189db0

கிளிநொச்சி – முகமாலையில் முன்னரங்கு பதுங்குழி ஒன்றில் இருந்து விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கியுடன் உடல் எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்றுவரும் பகுதியில் இன்று (22) உடல் எச்சங்கள் அடையாளம் காணப்பட்டது.

இந்நிலையில், விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

நெஞ்சோடு துப்பாக்கியை அணைத்தவாறு குறித்த எச்சங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் நிறுவன பணியாளர்களால் தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அது ஒரு பங்கர் இருந்த இடமாக இருந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ முன்னரங்க நிலைக்கு சமீபமாக போய் வீழ்ந்த வேவுப் புலியாக இருக்கக் கூடும்.

வீழ்ந்து அநாதையாக தூங்கிவிட்ட அந்த வீரப் புலித் தமிழச்சிக்கு.. வீர வணக்கம். 

அண்மையில் பிரித்தானியா கட்டியமைத்த பெரும் விமானந்தாக்கிக் கப்பலை கொண்டு வருவதற்காக பிரித்தானிய தென்கோடியில் உள்ள துறைமுக கடலடியை துப்பரவு செய்த போது.. சிதைந்த ஜேர்மனிய விமானப் பகுதிகளோடு பல மனித உடல்கூறுகளையும் கண்டெடுத்தனர்.

போர் எங்கு நிகழினும் விளைவு ஒன்று தான். என்ன வெற்றி பெற்றவன் மனிதனின் மரணத்தை கொண்டாடுறான்.. தோற்றவன் தொண்டைக்குழிக்குள் அழுகையை நிறுத்திக் கொண்டு மெளனித்துக் கடந்து போய்க் கொண்டிருக்கிறான்.

போர்கள் தவிர்க்கப்படுவது.. பேச்சுக்களால் வெல்லப்படுவதின் தார்ப்பரியத்தை உரைக்கும். ஆனால்.. பேசவே மாட்டேன் என்ற அகங்காரிகளிடம்.. பேசி எதைப் பெறுவது எனும் நிலையில்...???! 

புலிகளின் சீருடைகள் காணப்பட்ட பகுதியில் அகழ்வுப் பணிகள் சற்றுமுன்னர் ஆரம்பம்

In இலங்கை     May 26, 2020 10:40 am GMT     0 Comments     1540     by : Dhackshala

Kili-2-3-720x450.jpg

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் காணப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான அகழ்வு பணிகள் சற்று முன்னர் ஆரம்பமாகியது.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் அகழ்வு பணிகள் ஆரம்பமாகி நடைபெற்ற வருகின்றன.

Kili-5-2-428x285.jpg

Kili-4-3-428x285.jpg

Kili-3-3-428x240.jpg

Kili-1-3-428x285.jpg

கிளிநொச்சியில் புலிகளின் சீருடைகள் காணப்பட்ட பகுதியில் இன்று மீண்டும் அகழ்வு

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் எலும்புக்கூடுகள் மற்றும் புலிகளின் சீருடைகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்றுவரும் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டது.

அதன்பின்னர், அங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் குறித்த பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கிகளும் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டார்.

குறித்த பகுதிக்கு வருகை தந்த நீதிபதி அவற்றை பார்வையிட்டதுடன், எதிர்வரும் 26ஆம் திகதி அதாவது இன்று அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிட்டார்.

அதற்கமைய குறித்த பகுதியில் இன்று மீண்டும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்கதக்கது.

http://athavannews.com/புலிகளின்-சீருடைகள்-காணப/

விடுதலைப் புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட மனித எச்சங்கள் - இன்றும் அகழ்வுப்பணி

கிளிநொச்சி - முகமாலை பகுதியில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வு இன்றைய தினம் இடம் பெற்றது.

கிளிநொச்சி - பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முகமாலை பகுதியில் கடந்த 22 ஆம் திகதி கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் விடுதலைப்புலிகளின் சீருடைகளுடன் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக பளை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதற்கமைய கடந்த 26 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதிபதி த. சரவணராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு விடுதலைப் புலிகளின் சீருடையுடனான மனித எச்சங்கள் மற்றும் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டன.

இந்த நிலையில் இன்றையதினம் இரண்டாம் கட்ட அகழ்வு கிளிநொச்சி மாவட்ட நீதிபதி த.சரவணராஜா முன்னிலையில் இடம் பெற்றது.இன்றைய தினமும்

  • மகசின் 02,
  • வெடிக்கும் தோ 34,
  • வெடித்த கப் 6,
  • சைநட் 1 ,
  • தகடு 1
  • பச்சை இராணுவ சீருடையுடனான மனித எச்சங்கள் சில மீட்கப்பட்டன.

குறித்த அகழ்வு தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வு எதிர்வரும் 9 ஆம் திகதி செவ்வாய்கிழமை இடம்பெற உள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/144524

  • கருத்துக்கள உறவுகள்

முகமாலை மனித எச்சங்கள் தொடர்பான அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 9 ஆம்திகதி வரை ஒத்திவைப்பு

spacer.png
கிளிநொச்சி, முகமாலை பகுதியில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான அகழ்வுப் பணிகள், எதிர்வரும் 9 ஆம்திகதி மீண்டும் நடைபெறவுள்ளன.குறித்த பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியாக தெரிவிக்கப்படும் நிலையில், தற்போது இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், இதுதொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முகமாலை பகுதியில் கடந்த 22ஆம் திகதி கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கையின் போது விடுதலைப்புலிகளின் சீருடைகளுடன் மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, கடந்த 26ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதிபதி சரவணராஜா முன்னிலையில் முதலாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.Mukamalai__10_

இதன்போது, துப்பாக்கிகள், விடுதலைப் புலிகள் அமைப்பினரின் சீருடைகள் மற்றும் மனித எச்சங்கள் என்பன மீட்கப்பட்டிருந்தன. இதனையடுத்து, நேற்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நீதிபதி முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.இதன்போதும், இரண்டு மகசின்கள், 34 வெடிக்கும் தோட்டார்கள், 1 சயனைட், தகடு மற்றும் இராணுவ சீருடையுடனான மனித எச்சங்கள் என்ன மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/முகமாலை-மனித-எச்சங்கள்-த/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • 3 months later...

முகமாலையில் சீருடைகள் எலும்புத் துண்டுகள்! ஸ்தலத்திற்கு விரைந்த இராணுவம் மற்றும் பொலிஸார்

பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட முகமாலை பகுதியில் சீருடைகள், கால் பகுதி எலும்பு துண்டுகள், பற்றிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் மாலை கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட போதே இந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் உடனடியாக இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் சந்தேகத்திற்குரிய பொருட்களை பார்வையிட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதனையடுத்து பளை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/150735?ref=rightsidebar

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.