Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் பிறந்து, கல்வி கற்ற தமிழரே அரசாங்க அதிபராக நியமிக்கப்பட வேண்டும் - முருங்கன் ரஜமஹா விகாரை விகாராதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் பிறந்து, கல்வி கற்ற தமிழரே அரசாங்க அதிபராக நியமிக்கப்பட வேண்டும் - முருங்கன் ரஜமஹா விகாரை விகாராதிபதி

மன்னார் மாவட்டத்தில் பிறந்து இந்த மண்ணிலேயே கல்வி கற்று வளர்ந்த தமிழர்களே மன்னார் மாவட்டத்தில் அரசாங்க அதிபர் உற்பட அனைத்து பதவிகளுக்கும் நியமிக்கப்பட வேண்டும் என்று மன்னார், முருங்கன் 'ரஜமஹா விகாரை'விகாராதிபதி வல்பொல சரண தேரர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்தார்.

thero.jpg

மன்னார் உயிலங்குளம் பிரதான வீதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) அலுவலகம் நேற்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குறித்த அலுவலகத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

-இதன் போது அமைச்சருடன் உரையாடுகையிலேயே மன்னார், முருங்கன் 'ரஜமஹா விகாரை'விகாராதிபதி வல்பொல சரண தேரர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் அமைச்சரிடம் மேலும் தெரிவிக்கையில்,

நீங்கள் சரியாக யோசிக்க வேண்டும். ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருடன் சேர்ந்து கடமையாற்ற வேண்டும்.

நான் உங்களுடன் முன்னுக்கு நிற்கின்றேன். எல்லாறும் வேலை செய்ய வேண்டும்.வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும். குறிப்பாக புத்தளம் மற்றும் வேறு இடங்களில் இருந்து இங்கு வந்து வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்ளுகின்றனர்.

ஏன்   காலி மாவட்டத்தில் உள்ள சிங்களவர் ஒருவர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் வேறு மாவட்டத்தில் இருந்து மன்னாரிற்கு வந்த அரசாங்க அதிபர்.

மன்னார் மாவட்டத்தில் பிறந்து இந்த மண்ணிலேயே கல்வி கற்று வளர்ந்த தமிழர்களே மன்னார் மாவட்டத்தில் அரசாங்க அதிபர் உற்பட அனைத்து பதவிகளுக்கும் நியமிக்கப்படவேண்டும். என்று மன்னார், முருங்கன் 'ரஜமஹா விகாரை'விகாராதிபதி வல்பொல சரண தேரர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மேலும்  தெரிவித்துள்ளார்.

 

https://www.virakesari.lk/article/82629

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கு மாகாணங்களில் பிறந்தவர்களையும், ஏனைய மாகாணங்களில் பிறந்தவர்கள் ஆட்சி செய்யும்போது, வேறு மாவட்டத்தில் பிறந்த பிக்குவும் டக்ளசும் மன்னார் மாவட்டம்பற்றி முடிவெடுக்க முயல்வது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. 

6 hours ago, கிருபன் said:

மன்னார் மாவட்டத்தில் பிறந்து இந்த மண்ணிலேயே கல்வி கற்று வளர்ந்த தமிழர்களே மன்னார் மாவட்டத்தில் அரசாங்க அதிபர் உற்பட அனைத்து பதவிகளுக்கும் நியமிக்கப்பட வேண்டும் என்று மன்னார், முருங்கன் 'ரஜமஹா விகாரை'விகாராதிபதி வல்பொல சரண தேரர்

மதவெறியை கக்கும் பௌத்த பிக்கு!

நல்ல நோக்குடன் கூறிய கருத்தாகின் வரவேற்கக்கூடியதே. டக்ளஸ் இங்குள்ள அரச அதிபரை மாற்றுவதட்கு முயட்சித்து கர்தினாளினால் நிறுத்தப்பட்ட்தும் எல்லோருக்கும் தெரியும். எனவே அவரிடமே இந்த கருத்து முன்வைக்கப்பட்ட்து நல்லது. கார்த்தினாலுடன் பிக்குவும் இணைந்துள்ளார்.

18 hours ago, Rajesh said:

மதவெறியை கக்கும் பௌத்த பிக்கு!

இங்கு எங்கு மத வெறி இருக்கு ?

அதை விட முக்கியம்... யார் வருவதென்று எங்கட கள்ள காணி களவானி தான் தீர்மானிப்பார்.. பொது தேர்தலில்  ராஜபக்‌ஷ 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால் அவர் மீண்டும் இணைவார் அதுக்கு பிறகு கள்ளமாக காணி பிடிக்க மாட்டார் நேரடியாவே புடுங்கி எடுப்பார். ரணிலின் காலத்தில் தமிழர்கள் பலர் ஆடிய ஆட்டம் கொஞ்சமா...அவர் ஒட்டிசுட்டானில் குடியேற்றம் அமைக்க முயன்ற பொழுது மட்டக்களப்பில் இருந்து பஸ் பிடித்து போய் அட்டகாசம் பண்ணியவார்கள் எல்லாம் இனி வாய் மூடிக்கொண்டு இருக்க வேண்டியது தான்.

On 24/5/2020 at 16:15, கிருபன் said:

மன்னார் மாவட்டத்தில் பிறந்து இந்த மண்ணிலேயே கல்வி கற்று வளர்ந்த தமிழர்களே மன்னார் மாவட்டத்தில் அரசாங்க அதிபர் உற்பட அனைத்து பதவிகளுக்கும் நியமிக்கப்படவேண்டும்.

அப்பிடியே வவுனியாவுக்கும் திருகோணமலைக்கும் நுவரெலியாவுக்கும் தமிழ் அரச அதிபரை கேட்டா ஒரு நேர்மை இருக்கும். இல்லை என்றா இது ஒரு சந்தர்ப்பவாத மதவெறி தான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.