Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்களை போல் ஒரு தலைவனை தந்தையாக பெற்றது... என் வாழ்க்கையின் பெரும் பேறு - கனிமொழி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை போல் ஒரு தலைவனை தந்தையாக பெற்றது... என் வாழ்க்கையின் பெரும் பேறு -கனிமொழி 

kanimozhi-1591177208.jpg

 சென்னை: கருணாநிதியை போல் ஒரு தலைவனை தந்தையாக பெற்றது தன் வாழ்க்கையின் பெரும் பேறு என திமுக மகளிரணிச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.உடன்பிறப்பே என்று கருணாநிதி அழைப்பதும், கூட்டம் அலைகடல் என ஆர்ப்பரிப்பதும் பேரிசையாக இருக்கும் என நினைவுகூர்ந்துள்ளார்.

கருணாநிதி உயிருடன் இருந்தபோது அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற சுவையான சில நிகழ்வை கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

கருணாநிதியை சந்திக்க

ஒரு நாள் தலைவரோடு அறிவாலயத்தில் அவரது அறையில் நின்று கொண்டிருந்தேன். மாலை நேரம்; பல ஊர்களில் இருந்து கழகத்தோழர்கள் தலைவரை சந்திக்கக் காத்திருந்தார்கள். துறைமுகம் காஜா அவர்களை ஒவ்வொருவராக அறைக்குள் அனுப்பிக்கொண்டிருந்தார். அப்போது 75 அல்லது 80 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் அறைக்குள் வந்தார்.

ஞாபகம் இருக்கா?

எண்பது வயதைத் தாண்டியிருந்தத் தலைவரை பார்த்து அவர் எப்படி இருக்க? என்னை உனக்கு ஞாபகம் இருக்கா? என்றபடி உள்ளே நுழைந்தார். அவரது தொனியில், நீ கட்சி தலைவராயிட்ட; முதலமைச்சராவேற ஆயிட்ட; உனக்கெப்படி என்னை எல்லாம் நினைவு இருக்கும்? என்ற எள்ளல் ததும்பி வழிந்தது.

சுற்றி நின்றவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சி. பெரியவர் அடுத்து என்ன சொல்லப் போகிறாரோ என்ற எச்சரிக்கை பற்றிக்கொண்டது. ஒரே இறுக்கம். என்ன ஆச்சரியம் ! தலைவர் முகத்திலோ ஒரு மந்தகாசப் புன்னகை பூத்தது. கருப்புக் கண்ணாடிக்குள்ளும் கண்களில் படர்ந்த குறும்பு தெரிந்தது.ஏன் ஞாபகம் இல்ல என்று அவரைப் பெயர் சொல்லி அழைத்தார். பார்த்துப் பலவருடம் ஆயிடுச்சு என்றார். அதுவே எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவர் அடிக்கடி தலைவரை வந்து சந்திக்கக் கூடியவர் இல்லை.

தேடிப்பார்த்தேன்

அடுத்து, தலைவர் கேட்டார், நான் போனவாரம் கூட உங்க ஊருக்கு பொதுகூட்டத்துக்கு வந்தேனே; உன்ன கூட்டத்தில் தேடிப்பார்த்தேன். நீ வரலயே. அதற்குள் அந்த பெரியவர் கொஞ்சம் நெளிந்தார். இல்ல, என் மகளோட கணவர் வீட்ல ஒரு உறவுக்காரர் இறந்துட்டார். அங்க போகும்படி ஆயிடுச்சு. நீ வந்தப்ப இல்லயேன்னு தான் பாக்க வந்தேன்.

தலைவனும் தொண்டனும் வாழ்க்கையின் பெரும் பேறு

ஒரு பேரியக்கத்தின் தலைவருக்கும் அதன் அடிப்படைத் தொண்டனுக்குமான உரையாடல் இது. அறையில் இருந்த நானும் மற்றவர்களும் நெகிழ்ச்சியோடு அதை பார்த்துக்கொண்டிருந்தோம். அவர், உடன்பிறப்பே ! என்று அழைப்பதும்; கூட்டம் அலைகடல் என ஆர்ப்பரிப்பதும் மனதில் பேரிசையாக வியாபித்தது.அப்பா! உங்களைப்போல் ஒருதலைவனைத் தந்தையாகவும் பெற்றது மறுபிறவியற்ற இந்த வாழ்க்கையின் பெரும் பேறு.!

https://tamil.oneindia.com/news/chennai/kanimozhi-praises-and-remembrance-karunanidhi-leadership-qualities/articlecontent-pf461693-387309.html

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சி மனோரமா போட்டு உடைக்கும் வரை தனது மகள் என்று ஒத்துக்கொள்ளாத தகப்பனை பத்தி, மகளின் பெருமை.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2020 at 17:49, Nathamuni said:

ஆச்சி மனோரமா போட்டு உடைக்கும் வரை தனது மகள் என்று ஒத்துக்கொள்ளாத தகப்பனை பத்தி, மகளின் பெருமை.

முலாம் பூசினால் எல்லாம் மறைந்து விடும்...இப்ப அவ கன்னி மொழி..

  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2020 at 23:49, Nathamuni said:

ஆச்சி மனோரமா போட்டு உடைக்கும் வரை தனது மகள் என்று ஒத்துக்கொள்ளாத தகப்பனை பத்தி, மகளின் பெருமை.

பாராளுமன்ற பதவிகளையும், 
கோடிக் கணக்கான சொத்துக்களையும் கொடுத்தால்...
எந்தத் தந்தையும்,  நல்ல தந்தைதான். 😜

  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2020 at 23:49, Nathamuni said:

ஆச்சி மனோரமா போட்டு உடைக்கும் வரை தனது மகள் என்று ஒத்துக்கொள்ளாத தகப்பனை பத்தி, மகளின் பெருமை.

ஆச்சி மனோரமாவைப் போட முடியவில்லை உண்மை வெளிவந்தது. வேறும் பல உண்மைகளைப் போட்டுடைக்க முயன்ற எத்தனைபேர் போடப்பட்டார்களோ? அறிவது கடினம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தமிழ் சிறி said:

பாராளுமன்ற பதவிகளையும், 
கோடிக் கணக்கான சொத்துக்களையும் கொடுத்தால்...
எந்தத் தந்தையும்,  நல்ல தந்தைதான். 😜

எல்லாரும் சீமான் திரியில் மாய்ந்து மாய்ந்து கருத்தெழுதுவதிலும் பார்க்க இந்த திரிய பற்ற வைப்பார்கள் என்டு பார்த்தனன்.. முடியலேய தோழர்..😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/6/2020 at 23:49, Nathamuni said:

ஆச்சி மனோரமா போட்டு உடைக்கும் வரை தனது மகள் என்று ஒத்துக்கொள்ளாத தகப்பனை பத்தி, மகளின் பெருமை.

என்ன மருந்து மாயமோ இல்லாட்டி செய்வினையோ தெரியேல்லை. உத்தமன்ரை மோள் கனிமொழி என்ன சொன்னாலும் என்ரை காதிலை தேனாய் ஒலிக்குது. கோவம் எண்டது துண்டற வருதேயில்லை.......இந்த வருத்தம் எனக்கு மட்டும் தானா? 😜

ஆமா... திருப்பதி உண்டியல் மேல ...

  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2020 at 10:22, புரட்சிகர தமிழ்தேசியன் said:

 

உங்களை போல் ஒரு தலைவனை தந்தையாக பெற்றது... என் வாழ்க்கையின் பெரும் பேறு -கனிமொழி

 

இன்னும் பதிவில் இல்லாமல் இருக்கும் உங்கள் சகோதர சகோதரிகளையும் முடிந்தால் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எல்லாரும் சீமான் திரியில் மாய்ந்து மாய்ந்து கருத்தெழுதுவதிலும் பார்க்க இந்த திரிய பற்ற வைப்பார்கள் என்டு பார்த்தனன்.. முடியலேய தோழர்..😜

தோழரே.... இப்ப, சீமான் தான் முக்கியம். 👍
கருணாநிதி 😎 குடும்பம், ஊசிப்  போன வடை.  😅

  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2020 at 23:49, Nathamuni said:

ஆச்சி மனோரமா போட்டு உடைக்கும் வரை தனது மகள் என்று ஒத்துக்கொள்ளாத தகப்பனை பத்தி, மகளின் பெருமை.

மனோரமா: பள்ளத்தூரிலிருந்து வந்த ...

நாதமுனி....   ஆச்சி மனோரமா, கருணாநிதியின்,
என்ன, உண்மையை....போட்டு உடைத்தார்?

அதனைப் பற்றி, நான் அறியவில்லை.  
சற்று, விரிவாக.... கூறுங்களேன்.  ப்ளீஸ்.  🙃

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழ் சிறி said:

மனோரமா: பள்ளத்தூரிலிருந்து வந்த ...

நாதமுனி....   ஆச்சி மனோரமா, கருணாநிதியின்,
என்ன, உண்மையை....போட்டு உடைத்தார்?

அதனைப் பற்றி, நான் அறியவில்லை.  
சற்று, விரிவாக.... கூறுங்களேன்.  ப்ளீஸ்.  🙃

இதை சொல்லவே ஒரு தில்லு வேணும், கட்டுமரத்துக்கு இருக்கு.

இவரோட சின்ன வீடு பற்றி பேச இவருக்கு அசிங்கமா இல்லயா

 

ரஜனி, கமல் சிரிப்பினை பாருங்கள்

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

இதை சொல்லவே ஒரு தில்லு வேணும், கட்டுமரத்துக்கு தரமாகவே இருக்கு.

நன்றி... நாதமுனி. :)
வெட்கம், கெட்ட கருணாநிதி. அதனைச்  சொல்ல....
மண்டபம் நிறைந்த... கரகோசங்கள்....  :rolleyes:

தி.மு.க. செம்புகள்... என்று, பெயர் வர காரணமாக இருந்தவர்,
😎 தோழர்  கருணாநிதி மட்டுமே. 😎 :grin: 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

நன்றி... நாதமுனி. :)
வெட்கம், கெட்ட கருணாநிதி. அதனைச்  சொல்ல....
மண்டபம் நிறைந்த... கரகோசங்கள்....  :rolleyes:

தி.மு.க. செம்புகள்... என்று, பெயர் வர காரணமாக இருந்தவர்,
😎 தோழர்  கருணாநிதி மட்டுமே. 😎 :grin: 

சொன்னது முதலமைச்சர் என்பதால்...

வேறு யாரும் சொல்லி இருந்தால்... வடிவேலு ஸ்டைலில் திட்டி இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

சொன்னது முதலமைச்சர் என்பதால்...

வேறு யாரும் சொல்லி இருந்தால்... வடிவேலு ஸ்டைலில் திட்டி இருப்பார்கள்.

உண்மை...நாதமுனி.
கருணாநிதிக்கு... பக்கத்தில் இருந்து,
பல்லுக்  காட்டுபவர்களை... பார்க்க, கடுப்பு வருகுது.

இப்படியும்.... பிழைக்கும், மனிதர்களை பார்க்க.. வெறுப்பு வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

உண்மை...நாதமுனி.
கருணாநிதிக்கு... பக்கத்தில் இருந்து,
பல்லுக்  காட்டுபவர்களை... பார்க்க, கடுப்பு வருகுது.

இப்படியும்.... பிழைக்கும், மனிதர்களை பார்க்க.. வெறுப்பு வருகின்றது.

படித்த அண்ணா எங்கே. 

படிக்காத கருணாநிதி எங்கே. அவரது காலம், கடந்து போய் விட்டது...

இன்று, அவர் போல இன்னுமொரு தலைமுறை ஒரு குப்பைத்தனமான அரசியல் செய்யும் என்று நினைக்கவில்லை. இவர் போன்றவர்கள் அரசியலில் இருந்தபடியால் தான், ஜெயலலிதா போன்ற அந்த மாதிரி பெண்களுக்கும் அரசியலுக்கு வரலாம் என்று எண்ணம் வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

படித்த அண்ணா எங்கே. 

படிக்காத கருணாநிதி எங்கே. அவரது காலம், கடந்து போய் விட்டது...

இன்று, அவர் போல இன்னுமொரு தலைமுறை ஒரு குப்பைத்தனமான அரசியல் செய்யும் என்று நினைக்கவில்லை. இவர் போன்றவர்கள் அரசியலில் இருந்தபடியால் தான், ஜெயலலிதா போன்ற அந்த மாதிரி பெண்களுக்கும் அரசியலுக்கு வரலாம் என்று எண்ணம் வந்தது.

வரலன்னு நேரடியா சொல்ல ...

ரசுனி காந்திற்கும்.... தமிழக, முதல் அமைச்சராக வர ஆசை உள்ளது.  :rolleyes:
அவரின்..... பாரியார் தான்,  உழைத்த காசை.... தமிழ் நாட்டில் கொட்டாதீங்க, 
கர்நாடக மாநிலத்தில், போடுங்கண்ணு ....சொல்லீட்டாப்  போலை இருக்கு. 😎

அதுக்குப் பிறகு... சூப்பர் ஸ்ரார்,  வாயே... திறப்பதில்லை.
திறந்தால்,  வாயிலேயே... குத்தி விடுவோம்.    😂

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

என்ன மருந்து மாயமோ இல்லாட்டி செய்வினையோ தெரியேல்லை. உத்தமன்ரை மோள் கனிமொழி என்ன சொன்னாலும் என்ரை காதிலை தேனாய் ஒலிக்குது. கோவம் எண்டது துண்டற வருதேயில்லை.......இந்த வருத்தம் எனக்கு மட்டும் தானா? 😜

ஆமா... திருப்பதி உண்டியல் மேல ...

சரியாய் இருக்கும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.