Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் வன்புணர்வு – வீடு திரும்பிய நிலையில் முறையிட்டார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் வன்புணர்வு – வீடு திரும்பிய நிலையில் முறையிட்டார்!

rape-3.jpg?189db0&189db0

 

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி எல்லையை ஒட்டிய மாசேரிக்கும் குடத்தனைக்கும் இடையில் கடந்த 8ம் திகதி கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண், வீடு திரும்பிய நிலையில் தன்னை மூவர் வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இருந்து (08.06.2020) தென்மராட்சி – கொடிகாமத்தில் உள்ள காதலர்கள் என்று கூறப்படும் இளைஞர்கள் இருவரை சந்திக்க வந்த பெண்கள் இருவரை குழு ஒன்று வரணி எல்லையை ஒட்டிய மாசேரி பகுதியில் வைத்து கடத்த முயன்றுள்ளது.

இதன்போது கடத்த முற்பட்டவர்களிடம் இருந்து 16 வயது சிறுமி ஒருவர் தப்பித்து வந்து மக்களின் உதவியுடன் கொடிகாமம் பொலிஸில் சரணடைந்திருந்தார்.

இவ்வாறு சரணடைந்த சிறுமி பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து கொடிகாமம் பொலிஸாரும் பருத்தித்துறை பொலிஸாரும் இணைந்து மற்றைய பெண், காதலர்கள் என்று கூறப்படும் இருவர் மற்றும் கடத்தல் சந்தேக நபர்கள் உள்ளிட்டோரை வலை வீசித் தேடி வந்தனர்.

அதன்படி சம்பவம் இடம்பெற்ற பகுதியை அடையாளம் கண்ட கொடிகாமம் பொலிஸார், சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட சிறுமியின் கைபேசியில் உதவியுடன் விசாரணையை மேற்கொண்டு சந்தேக நபர்களின் உறவினர் ஒருவரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் இருப்பதால் பருத்தித்துறை பொலிஸார் வழக்கு விசாரணையை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் வீடு திரும்பியுள்ளதை அறிந்த பொலிஸார், சுன்னாகத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். இதன்படி நேற்று (11) பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு சென்ற குறித்த பெண், “தாம் சந்திக்க வந்த இரண்டு இளைஞர்கள் உள்ளிட்ட மூவரும் தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என்றும், கைபேசி தொடர்பிலேயே அவர்கள் அறிமுகமாகினர் என்றும், அவர்களை பற்றி எதுவும் தெரியாது என்றும்” முறையிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

 

https://newuthayan.com/கடத்தப்பட்டதாக-கூறப்ப/

தவறிய அழைப்பின் நட்பால் ஏற்பட்ட விபரீதம்! யுவதி ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வு…!

 

 

x1080-960x540.jpg?189db0&189db0

யாழ் வறணி மாசார் பகுதியில் காதலனுடன் கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண் தன்னை மூன்று பேர் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக பொலிஸாரிடம் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 8ம் திகதி யாழ் சுண்ணாகத்திலிருந்து சென்று வறணி மா சார் பகுதியில் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் தமது நண்பர்களை அழைத்து எம்முடன் தவறாக நடக்க முற்பட்ட போது அக்குழுவிடமிருந்து தாம் தப்பி வந்ததாகவும் ஒரு பெண் கொடிகாமம் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண்ணை பொலிஸார் தேடினர்.

பின்னர் கடத்தப்பட்டவர்களால் குறித்த பெண் விடுவிக்கப்பட்ட நிலையில் குறித்த பெண் தன் மீது மூன்று ஆண்கள் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக குற்றம் சாட்டி நேற்று (11) பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

https://newuthayan.com/தவறிய-அழைப்பின்-நட்பால்/

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழில்.கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார் ?

June 12, 2020

sexually-abusing.jpg

யாழில் குழுவொன்றினால் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பட்ட பெண் , தன்னை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார்கள் என நான்கு நாட்களுக்கு பின்னர் பருத்தித்துறை காவல் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

யாழ்.சுன்னாகம் பகுதியை சேர்ந்த இரு பெண்களுக்கும் வடமராட்சி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களுக்கும் இடையில் தொலைபேசியின் தவறிய அழைப்பு (மிஸ்ட் கோல்) மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சில நாட்கள் பழக்கத்தின் பின் நால்வரும் சந்திப்பதற்கு விரும்பியுள்ளனர். அதனடிப்படையில் கடந்த 8ஆம் திகதி சுன்னாகத்தில் இருந்து பெண்கள் இருவரும் யாழ்.நகருக்கு பேருந்தில் சென்று அங்கிருந்து கொடிகாமத்திற்கு பேருந்தில் சென்றுள்ளனர். கொடிகாம பேருந்து நிலையத்தில் இரு இளைஞர்களும் அவர்களுக்காக காத்திருந்து , இரு பெண்களும் பேருந்தால் இறங்கியவுடன் அவர்களை தமது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கொடிகாமம் பருத்தித்துறை வீதியூடாக வரணி மாசார் பகுதிக்கு சென்றுள்ளனர்.

அவர்கள் நான்கு பேரும் அங்கு இருந்த வேளை அப்பகுதிக்கு வந்த மேலும் சில இளைஞர்கள் இரு பெண்களிடமும் அத்துமீறி நடக்க முற்பட்டுள்ளனர். அவ்வேளை அங்கிருந்து ஒரு பெண் தப்பி ஓடி  வீதிக்கு வந்து வீதியால் சென்றவர்களின் உதவியுடன் கொடிகாமம் காவல் நிலையத்திற்கு சென்று , இளைஞர்கள் குழு ஒன்று தம்மை கடத்தி செல்ல முற்பட்டதாகவும் , அவர்களிடமிருந்து தான் தப்பி ஓடி வந்துள்ளதாகவும் , தனது நண்பியையும் , நண்பர்களான இரு இளைஞர்களையும் காப்பற்றுமாறும் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் கொடிகாம காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த அதேவேளை , சம்பவம் இடம்பெற்றது பருத்தித்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியாக இருந்தமையால் , பருத்தித்துறை காவல்துறையினருக்கு அறிவித்து இரண்டு காவல்துறை பிரிவினரும் அன்றைய தினம் (8ஆம் திகதி) கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண்ணையும் , பெண்களுடன் சென்ற இரு ஆண்களையும் தேடினார்கள்.

அந்நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் அன்றைய தினம் மாலையே வீடு திரும்பியுள்ளார். அதனை அறிந்து கொண்ட பருத்தித்துறை காவல்துறையினர் அவரது வீட்டுக்கு சென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதால் வாக்கு மூலம் அளிக்க வருமாறு கேட்டனர். அதற்கு குறித்த பெண் நான்கு நாட்களாக மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை பருத்தித்துறை காவல்நிலையத்திற்கு சென்று வாக்கு மூலம் அளித்தார்.

குறித்த வாக்கு மூலத்தில் , தொலைபேசி ஊடாக ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில் , இரு இளைஞர்களையும் தானும் தனது நண்பியும் சந்திக்க சென்றோம். அப்போது அவர்கள் தம்மை வரணி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர்.அங்கு அவர்கள் தமது நண்பர்களை அழைத்து எம்முடன் தவறாக நடக்க முற்பட்ட வேளையே நண்பி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். என்னால் தப்பி செல்ல முடியவில்லை.

நாம் நம்பி சென்ற இளைஞர்களும் அவர்களின் நண்பர்களான ஏனைய இளைஞர்களுமாக மூன்று பேர் என்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் அங்கிருந்து என்னை அழைத்து வந்து பேருந்தில் ஏற்றி விட்டார்கள் என வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை , அந்த இளைஞர்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும் தொலைபேசி ஊடான பழக்கம் மாத்திரம் எனவும் தெரிவித்துள்ளார். அதனால் அவர்களின் தொலைபேசி இலக்கத்தினை கொண்டு சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.   #கடத்திசெல்லப்பட்ட  #வன்புணர்வு  #இளைஞர்கள் #தொலைபேசி

 

http://globaltamilnews.net/2020/144785/

  • கருத்துக்கள உறவுகள்

முகப்புத்தகம் பத்தி ஒன்றுமே சொல்லவில்லை.... அங்கிருந்து தானே தொடங்கி இருக்கும்.

பொதுவாக பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி பாதிப்படையும்  பெண்கள் அதன் பின்னரான சமூகத்தின் பழிச்சொல்லுக்கு பயந்து அவமானத்தால் தற்கொலை செய்வது அல்லது அதை மறைத்து வாழும் அதே வேளை அதை நிகழ்ததிய குற்றவாளிகள் திமிராக உலாவுவதோடு தம்மால் பாதிக்கப்பட்ட பெண்ணையே கேலி செய்யும்  ஒரு சமுதாயத்தில் இவ்வாறு துணிந்து காவல்நிலையத்தில் தான் பாலியல் லீதியில் துன்புறுத்தப்பட்டதாக முறையிடுவது பாராட்டப்படவேண்டியது.

இவ்வாறாக எதிர்காலத்தில் பெண் பிள்ளைகளின் துணிச்சல் தான்  பெண்பிள்ளைகளுக்கு எதிரான  சமுக குற்றங்களைக் களைய உதவும். 

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் குழுவொன்றினால் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்பட்ட பெண், தன்னை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார்கள் என நான்கு நாட்களுக்கு பின்னர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

யாழ்.சுன்னாகம் பகுதியை சேர்ந்த இரு பெண்களுக்கும் வடமராட்சி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களுக்கும் இடையில் தொலைபேசியின் தவறிய அழைப்பு (மிஸ்ட் கோல்) மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சில நாட்கள் பழக்கத்தின் பின் நால்வரும் சந்திப்பதற்கு விரும்பியுள்ளனர். அதடனடிப்படையில் கடந்த 8 ஆம் திகதி சுன்னாகத்தில் இருந்து பெண்கள் இருவரும் யாழ்.நகருக்கு பேருந்தில் சென்று அங்கிருந்து கொடிகாமத்திற்கு பேருந்தில் சென்றுள்ளனர். கொடிகாமம் பேருந்து நிலையத்தில் இரு இளைஞர்களும் அவர்களுக்காக காத்திருந்து, இரு பெண்களும் பேருந்தால் இறங்கியவுடன் அவர்களை தமது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கொடிகாமம் பருத்தித்துறை வீதியூடாக வரணி மாசார் பகுதிக்கு சென்றுள்ளனர்.

அவர்கள் நான்கு பேரும் அங்கு இருந்த வேளை அப்பகுதிக்கு வந்த மேலும் சில இளைஞர்கள் இரு பெண்களிடமும் அத்துமீறி நடக்க முற்பட்டுள்ளனர். அவ்வேளை அங்கிருந்து ஒரு பெண் தப்பி ஓடி வீதிக்கு வந்து வீதியால் சென்றவர்களின் உதவியுடன் கொடிகாமம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று, இளைஞர்கள் குழு ஒன்று தம்மை கடத்தி செல்ல முற்பட்டதாகவும், அவர்களிடமிருந்து தான் தப்பி ஓடி வந்துள்ளதாகவும், தனது நண்பியையும், நண்பர்களான இரு இளைஞர்களையும் காப்பற்றுமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த அதேவேளை, சம்பவம் இடம்பெற்றது பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியாக இருந்தமையால், பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவித்து இரண்டு பொலிஸ் பிரிவினரும் அன்றைய தினம் (8 ஆம் திகதி) கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண்ணையும், பெண்களுடன் சென்ற இரு ஆண்களையும் தேடினார்கள்.

அந்நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் அன்றைய தினம் மாலையே வீடு திரும்பியுள்ளார். அதனை அறிந்து கொண்ட பருத்தித்துறை பொலிஸார் அவரது வீட்டுக்கு சென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதால் வாக்கு மூலம் அளிக்க வருமாறு கேட்டனர். அதற்கு குறித்த பெண் நான்கு நாட்களாக மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்கு மூலம் அளித்தார்.

குறித்த வாக்கு மூலத்தில், தொலைபேசி ஊடாக ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில், இரு இளைஞர்களையும் தானும் தனது நண்பியும் சந்திக்க சென்றோம். அப்போது அவர்கள் தம்மை வரணி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர்.

அங்கு அவர்கள் தமது நண்பர்களை அழைத்து எம்முடன் தவறாக நடக்க முற்பட்ட வேளையே நண்பி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். என்னால் தப்பி செல்ல முடியவில்லை.

நாம் நம்பி சென்ற இளைஞர்களும் அவர்களின் நண்பர் ஒருவருமான மூன்று பேர் என்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் அங்கிருந்து என்னை அழைத்து வந்து பேருந்தில் ஏற்றி விட்டார்கள் என வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அந்த இளைஞர்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனவும் தொலைபேசி ஊடான பழக்கம் மாத்திரம் எனவும் தெரிவித்துள்ளார். அதனால் அவர்களின் தொலைபேசி இலக்கத்தினை கொண்டு சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

-யாழ். பிரதீபன்- Derana

https://www.madawalaenews.com/2020/06/blog-post_663.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.