Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும்.!

1575409444-Army-Commander-Shavendra-Silv

வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள் மேலும் பலப்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இராணுவத் தளபதி இவ்வாறு கூறியுள்ளார்.

வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டிய தேவை இல்லை. தற்போதுள்ள இராணுவ முகாம்களை மேலும் பலப்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். அங்குள்ள முகாம்களை அகற்றுகின்ற எந்த நோக்கமும் எமக்கு கிடையாது.

வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்படுவதை வைத்துக் கொண்டு, மக்களின் செயற்பாடுகளில் இராணுவம் தலையிடும் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலமே இராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு பொற்காலமாக இருக்கும். கடந்த காலங்களை விடவும் இப்போது நாட்டில் இராணுவம் பலப்படுத்தப்படுகிறது.

எனினும் நாடு இராணுவ மயமாவதாக குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஓய்வுபெற்ற- தகுதியான இராணுவ அதிகாரிகள் தமது திறமையை சிவில் சேவைகளில் வெளிப்படுத்துவதில் என்ன தவறு உள்ளது.?

இராணுவத்தை அதிகமாக பயன்படுத்தி நாட்டின் சேவையை பெற்றுக்கொள்வது இராணுவ மயமாதல் அல்ல. தேவைக்கேற்ப இராணுவத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி நினைகின்றார். நாட்டை இராணுவ மயமாக்க வேண்டும் என்ற தேவை எதுவும் இல்லை.

இராணுவம் ஆட்சியை கைப்பற்ற நினைக்கவும் இல்லை, இராணுவத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு ஜனாதிபதியும் நினைக்கமாட்டார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://jaffnazone.com/news/18909

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இராணுவத்தை அதிகமாக பயன்படுத்தி நாட்டின் சேவையை பெற்றுக்கொள்வது இராணுவ மயமாதல் அல்ல. தேவைக்கேற்ப இராணுவத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி நினைகின்றார்.

அப்புறம் எதற்காக மக்கள் ஆட்சி, சனநாயகம் என்று புலம்பித்திரியவேண்டும், இந்தப் பெயர்களைக் கொண்டு கூவினால்தான் உலகம் பிச்சை போடுமா? இராணுவ ஆட்சிதான் என்று கூறுவதற்கு என்ன தயக்கம். 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகள் தங்கடை  நாட்டுக்குள் கால் வைக்ககூடாது என்று சொல்லிபோட்டினம் ஒருவேளை உள்ளே  விட்டிருந்தால்  இறுதி யுத்தத்தில் தமிழரை இனவழிப்பு செய்த இந்த பேய் ஜனநாயகம் பேசிக்கொண்டு திரிந்து இருக்கும் . 

  • கருத்துக்கள உறவுகள்

பலப்படுத்த பலம் பொருந்திய எதிரிகள் யார்?
பொருளாதாரம் இருக்கும் கேவலத்தில் இராணுவ பலப்படுத்தல் ஏன்? நாடு இருக்கும் கடனில் ஏன் இவ்வளவு செலவு இராணுவத்துக்கு? அதுவும் வடக்கு கிழக்கில்  இராணுவ பலப்படுத்தல் சந்தேகத்தை  உண்டாக்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

பலப்படுத்த பலம் பொருந்திய எதிரிகள் யார்?
பொருளாதாரம் இருக்கும் கேவலத்தில் இராணுவ பலப்படுத்தல் ஏன்? நாடு இருக்கும் கடனில் ஏன் இவ்வளவு செலவு இராணுவத்துக்கு? அதுவும் வடக்கு கிழக்கில்  இராணுவ பலப்படுத்தல் சந்தேகத்தை  உண்டாக்குகிறது.

இதில் சந்தேகம் எதற்கு! இலங்கையில் தமிழினத்தை பூண்டோடு அழிப்பதற்கு எல்லா வளங்களையும் போட்டிபோட்டுச் சிங்கள அரசுகள் பாவிக்கின்றன. இதில் மிகவும் கேவலமான, பெருந்துயர்தரும் விடயம் என்னவென்றால் சில பல தமிழர்களும் அதற்குத் துணைபோவதுதான்.  

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஏதோ பூச்சாண்டி காட்டினாலும், ஈஸ்டர் குண்டு வெடிப்பு, கோத்தாவுக்காகவும், ராணுவத்தின் அவசியத்தினை உணர்த்தவுமே நடத்தப்பட்டது.

யானையை கட்டி தீனி போட ஏலாது. கொரோனாவால், இலங்கையின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதை கட்டி எழுப்புவது மிகவும் கடினம்.

இந்த வருட கடைசி வரை யாரும் விடுமுறைக்கு சொல்லப்போவதில்லை. 

மேற்குகும், இந்தியாவுக்கும் அதே பொருளாதார பிரச்சனை. உதவப்போவதில்லை. சீனா உதவ முன்வந்தாலும், அதனை, இதனை எதிர்பார்க்கும். அதனை மேற்கு விரும்பப்போவதில்லை.

ஸ்ரீ லங்கன் விமானத்தின் தினமும் லண்டனுக்கு பறந்த இரண்டு விமானங்களில் ஒன்று சரக்கு விமானமாக மாறி உள்ளது. அங்கிருந்து கடல் உணவையும், ரம்புட்டான், கதலி, கப்பல் வாழைப்பழங்களை கொண்டு வந்து இறங்குகின்றன. இது போதாதே.

சும்மா இருக்கிற ராணுவத்தினை வடக்கில் வீடு கட்டிக் கொடுக்க பயன்படுத்துகின்றனர். போனவாரம், புங்குடுதீவில், ராணுவம் அமைத்து தரும் ஒரு வீடமைப்பு திட்டத்தினை, வடக்கு ராணுவ தளபதி, அடிக்கல் நாட்டி தொடங்கினார்.

IMG-2219-960x720.jpg?189db0&189db0

அப்பவே போர் முடிந்த பின்னர், மகிந்தா, ராணுவத்தினை விவசாயம் செய்ய வைத்தார். தமக்கு தேவையான மரக்கறி வகைகளை அவர்களே பயிர் செய்து, மிகுதியை சந்தையில் யாவாரம் செய்கின்றனர்.

போறபோக்கில, ஊர்ல, வீட்டு வேலைக்கும் ஆமிக்காரரை கூப்பிடலாம் போல தான் தெரியுது.

சண்டை இல்லாத நிலையில் எமக்கும் பயம் இல்லைதானே.

வெகுவிரைவில் ராணுவவீர்களில் வீட்டுக்கு அனுப்பும் வேலைகள் ஆரம்பிக்கும்.

கடைசீல, சாடசிக்காரன், காலில விழாம, சண்டைக்காரன் காலில விழுற கதையா போகப்போகுது.

சீனாவும் வேண்டாம், ஒருத்தரும் வேண்டாம்... புலம் பெயர் தமிழரே போதும் எண்ட நிலைக்கு கொரோன கொண்டுவந்து விடப்போகுது. 

உந்த ஆமிக்காரர், யூனிபோமை கடாசிப்போட்டு வேலைக்கு வந்து நிப்பினம். 

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.