Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் கந்தனின் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Nallur-Kandhaswamy-Kovil.jpg

நல்லூர் கந்தனின் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் ஆலய வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுப் பிரசித்திப் பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

வழக்கமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கும் இந்தத் திருவிழாவில், கொரோனா அச்சம் காரணமாக இந்த முறை அதிகம் பேர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஆலய ஊழியர்கள், இந்துக் குருமாருடன் திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் ஆலய வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ். மாநகர பதில் முதல்வர் து. ஈசன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

நயினாதீவு, மடு தேவாலய திருவிழாக்களில் அதிகபட்சம் 300 பக்தர்களை பங்கேற்க அனுமதிக்கப்பட்டது அதற்கமைய நல்லூர் ஆலய வளாகத்திலும் 300 பக்தர்களையேனும் பங்கேற்க அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

https://athavannews.com/நல்லூர்-கந்தனின்-திருவிழ/

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் திருவிழா குறித்து பிரதமரின் அதிரடி தீர்மானம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு அதில் கலந்துகொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, யாழுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், பிரதமர் அவருக்கு குறித்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து, சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக, அதிகளவில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் திருவிழாவில் வழக்கமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கும் நிலையில், இம்முறை கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அதிகம் பேர் பங்கேற்க முடியாம் மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, ஆலய ஊழியர்கள், இந்துக் குருமாருடன் திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழாவில் குறைந்தளவிலாவது பக்தர்களை ஆலய வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என, பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, குறித்த கோரிக்கையினை பரிசீலனை செய்த பிரதமர் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அதிகளவில் பக்கதர்கள் பங்கேற்ற வழிசெய்யுமாறு பணித்துள்ளார்.
 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/நல்லூர்-திருவிழா-குறித்து-பிரதமரின்-அதிரடி-தீர்மானம்/150-253316

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

nallur-1-720x450.jpg

நல்லூர் உற்சவம் குறித்து பிரதமரின் அறிவிப்பு

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் உற்சவ காலத்தில் அதிக எண்ணிக்கையான பக்தர்களை ஆலயத்துக்குள் அனுமதிக்க பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வரலாற்றுப் பிரசித்திபெற்ற நல்லூர் ஆலயத்தின் பெருந்திருவிழா இம்மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதனையடுத்து, கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்த முறை நல்லூர் உற்சவத்தின்போது 50க்கும் குறைவான பக்தர்களை உட்பிரவேசிக்க அனுமதிக்க முடியும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த ஆலயத்தின் சிறப்பினை கருதி, உற்சவ காலத்தில் அதிக எண்ணிக்கையான பக்தர்களை ஆலயத்துக்குள் அனுமதிக்க பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துமாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதே நேரம், சுகாதார அறிவுறுத்தல்களையும் பின்பற்றும் வகையில் குறித்த பொறிமுறையை நடைமுறைப்படுத்துமாறு அவர் பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நல்லூர் ஆலய பெருந் திருவிழாவிற்கு கொரோனா நெருக்கடி காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களே அனுமதிக்கப்படுவார்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நேற்று யாழில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/நல்லூர்-உற்சவம்-குறித்து/

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிலங்கை பிரபலங்களையும் எதிர்பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மாமாங்க தேர் பார்த்தேன் ....சனம் அந்த மாதிரி நின்று தேர் இழுக்குது..கொரோனாவது ,மண்ணாங்கட்டியாவது 😉
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த முறை புலம்பெயர் தமிழர்ரை பேஸ்புக் பக்கம் களைகட்டாது. நல்லூரானுக்கு நன்றி. 😎

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் திருவிழாவில் 300 பேருக்கே அனுமதி: அன்னதானம், தாக சாந்தி, நேர்த்திக் கடன், வியாபாரங்களுக்குத் தடை.!

nallur-murukan.jpg

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவிற்கு 300 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாநகர பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்தார்.

அத்துடன், அங்கப்பிரதிஸ்டை, காவடி, அன்னதானம், தண்ணீர் பந்தல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது சுகாதார பரிசோதகர்களால் ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்த குறித்த தீர்மானம் யாழ். மாநகர சபையில் இன்று (செவ்வாய்கிழமை) நடந்த விசேட அமர்வில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நல்லூர் திருவிழாவில் 500இற்கும் அதிகமான பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார். இருப்பினும் சுகாதாரத் துறையினரால் பிரதமரின் அறிவிப்பு தொடர்பாக பொது சுகாதார பரிசோதர்களுக்கு உத்தியோகபூர்வமாக எந்த அறிவுறுத்தலும் விடுக்கப்படவில்லை.

இதனால், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன்படி திருவிழாவில் 300 பக்தர்களையே அனுமதிக்க முடியும். அன்னதானம், வியாபார நிலையங்கள், தண்ணீர் பந்தல்கள் போன்றவையும் இம்முறை தடை செய்யப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.

https://www.vanakkamlondon.com/nallur-21-07-2020/

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்தசுவாமி கோயில் வரூடாந்த உற்சவத்தில் கலந்துகொள்ள 300 அனுமதிதபட்டதோடு தண்ணீர் பந்தல் அன்னதானம் போன்ற இதர சேவைகள் மறுகபட்டுளளதாக அறிந்து கொள்ள முடிகிறது.

 

யாழ்தீவகம்.

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.