Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

5 கோபுரங்களுடன் பிரமாண்டமாய் அமைகிறது அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடுத்த மாதம் அடிக்கல் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

5 கோபுரங்களுடன் பிரமாண்டமாய் அமைகிறது அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடுத்த மாதம் அடிக்கல் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

5 கோபுரங்களுடன் பிரமாண்டமாய் அமைகிறது அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடுத்த மாதம் அடிக்கல் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

 

அயோத்தியில் 5 கோபுரங்களுடன் பிரமாண்ட அளவில் ராமர் கோவில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 9-ந் தேதி தீர்ப்பு அளித்தது. முஸ்லிம்களுக்கு மசூதி கட்டிக்கொள்வதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்குமாறும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பினால் பல்லாண்டு காலமாக நிலுவையில் இருந்து வந்த அயோத்தி பிரச்சினைக்கு முடிவு ஏற்பட்டது.

இந்த தீர்ப்பின்படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் ஒரு அங்கமாக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையானது, ராமர் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் வாரம் நடைபெறும், பிரதமர் நரேந்திர மோடி விழாவில் பங்கேற்று அடிக்கல் நாட்டுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் நேற்று அனைத்து அறக்கட்டளை உறுப்பினர்களின் முக்கிய கூட்டத்துக்கு பின்னர் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த விழா பிரதமர் மோடியின் வசதிக்கேற்ப அடுத்த மாதம் 3-ந் தேதி அல்லது 5-ந் தேதி நடைபெறும், இதற்கான அழைப்பை அவர் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டது.

அயோத்தியில் 161 அடி உயரத்தில், 5 கோபுரங்களுடன் ராமர் கோவில் கட்டுவதற்கு நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. முதலில் 3 கோபுரங்களுடன் ராமர் கோவில் கட்ட உத்தேசிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறபோது, அதுவே ராம ஜென்ம பூமிக்கு அவரது முதல் பயணமாக அமையும்.

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்டு 3-ந் தேதி அல்லது 5-ந் தேதி நடைபெறுவதை அறக்கட்டளை உறுப்பினரான காமேஷ்வர் சவுபால் உறுதிப்படுத்தினார். அறக்கட்டளை உறுப்பினர்கள் கூட்டத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான அனைத்து அம்சங்களும் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத்ராய் மேலும் கூறியதாவது:-

இயல்பு நிலை திரும்பிய பிறகு நன்கொடைகள் வசூலிக்கப்பட்டு, கோவில் கட்டுமானத்துக்கான அனைத்து வரைபடங்களும் தயாரிக்கப்பட்டு, ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் 3 முதல் 3½ ஆண்டுகளில் முடியும்.

லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தார் மண் பரிசோதனைக்கான மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். 60 மீட்டர் ஆழத்துக்கு கீழே உள்ள மண்ணின் வலிமையின் அடிப்படையில் அஸ்திவாரம் போடப்படும். வரைபடத்தின் அடிப்படையில் அஸ்திவார பணிகள் தொடங்கும்.

சோம்புரா மார்பிள்ஸ் சார்பில் கோவிலுக்கான செங்கற்கள் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தார் தங்கள் பணிகளை மேற்கொள்வார்கள். செங்கற்கள் தொடர்பான பணிகள், சோம்புரா மார்பிள்ஸ் நிறுவனத்தாரால் மேற்கொள்ளப்படும். அவர்கள் ஒன்றிணைந்து பிரமாண்ட கோவிலை கட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/19041828/Ram-Janambhoomi-Teertha-Kshetra-Trust-invites-PM-to.vpf

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

அயோத்தியில் 5 கோபுரங்களுடன் பிரமாண்ட அளவில் ராமர் கோவில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

நல்லது.
இந்த நிகழ்வில் கோடிக் கணக்கான மக்கள் கலந்து கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல ராமர் பிறந்த இடத்தை செக் பண்ணுங்க..👍

108285077_2480207412270504_1769915301566

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

முதல்ல ராமர் பிறந்த இடத்தை செக் பண்ணுங்க..👍

108285077_2480207412270504_1769915301566

நேபாளி சண்டைக்கு வரப்ப் போகின்றான். நேபாளப் படைகளுக்கு முன்னர் இந்தியப் படைகள் நின்று பிடிக்க ஏலாது என்று வேறு கூறுகிறான். 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அயோத்தி ராமர் கோயிலுக்கான பூமி பூஜை: பிரதமர் மோடி ஆகஸ்ட் 5-ம் தேதி பங்கேற்க வாய்ப்பு

pm-modi-likely-to-visit-ayodhya-on-august-5-for-ram-temple-bhoomi-pujan பிரதமர் மோடி : கோப்புப்படம்

அயோத்தி


உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கான பூமி பூஜையில் பிரதமர் மோடி, ஆகஸ்ட் 5-ம்தேதி பங்கேற்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராமர் கோயில் பூமி பூஜைக்கான பணியில் ராமர் கோயில் அறக்கட்டளையான ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தா ஷேத்ரா தீவிரமான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.

 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

அதுமட்டுமல்லாமல் அயோத்தியில் 5 ஏக்கர் நிலத்தை மசூதி கட்டுவதற்காக உத்தரப் பிரதேச அரசு சன்னி வக்பு வாரியத்துக்கு ஒதுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

1595212556756.jpg

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ஏற்பாடு செய்யப்பட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் கடந்த ஜூன் மாதத்திலிருந்து ராமர் கோயில் கட்டுமானத்துக்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

இந்நிலையில் ராமர் கோயில் கட்டும் பணிகளைத் தொடங்குவது குறித்து ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தா ஷேத்ரா சனிக்கிழமை கூடி ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனையில் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 5-ம் தேதிவரை பூமி பூஜை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும், இதில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கவும் முடிவுஎடுக்கப்பட்டது.

ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தா ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் நிர்த்தியா கோபால் தாஸ் அன்றைய கூட்டத்தில் கூறுகையில், பூமி பூஜைக்ாக 40 கிலோ எடையுள்ள வெள்ளியான செங்கல் வைத்து வழிபட்டு பூமி பூஜையைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

1595212569756.jpg

இதுகுறித்து ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தா ஷேத்ரா அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினர் அனில் மிஸ்ரா கூறுகையில் “ ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையின் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்பது உறுதிதான். ஆனால் தேதி இன்னும் முடிவாகவில்லை.

பெரும்பாலும் பிரதமர் மோடி ஆகஸ்ட் 5-ம் தேதி பூமி பூஜையில் பங்கேற்கவே வாய்ப்புள்ளது. இதில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பங்கேற்கிறார். பிரதமர் மோடிக்கு ஏற்கெனவே அழைப்பிதவ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், பிரதமரின் வருகைக்கான தேதி மட்டும் இன்னும் பிரதமர் அலுவலகத்திலிருந்து கூறப்படவில்லை.

வாரணியில் பூமிபூைஜக்கான பல்வேறு பூஜைகள் முடிந்தபின் ராம் லல்லாவின் சிலை தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்றப்படும்” எனத் தெரிவித்தார்.

 

https://www.hindutamil.in/news/india/565416-pm-modi-likely-to-visit-ayodhya-on-august-5-for-ram-temple-bhoomi-pujan-2.html

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

நேபாளி சண்டைக்கு வரப்ப் போகின்றான். நேபாளப் படைகளுக்கு முன்னர் இந்தியப் படைகள் நின்று பிடிக்க ஏலாது என்று வேறு கூறுகிறான். 😂

110312327_675512346512047_7668059935260118538_n.jpg?_nc_cat=108&_nc_sid=dbeb18&_nc_ohc=hrhli5Ns29EAX8MPx_Y&_nc_ht=scontent-frt3-1.xx&oh=dceeb2f870e84fab03682cbfe19ec3c8&oe=5F39A0AF

அருவாள் எங்கே...  :grin: 🤣

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அயோத்தியில் மீசை இல்லாமல் ராமர் சிலையை வைத்தால் என்னை போன்ற ராம பக்தர்களுக்கு பயனில்லை.. சம்பாஜி தெரிவிப்பு..

ram-temple-sambha-1596485693.jpg

அயோத்தி: அயோத்தியில் கட்டப்பட உள்ள கோவிலில் உள்ள ராமர் சிலைக்கு மீசை இருக்க வேண்டும் என்று இந்துத்துவா அமைப்பின் தலைவர் சம்பாஜி பிதே திங்களன்று தெரிவித்தார்.

ராமர் கோயிலின் 'பூமி பூஜை' புதன்கிழமை அன்று உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் நடைபெற உள்ளது, இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அயோத்திக்கு அருகிலுள்ள சாங்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சம்பாஜி பிதே "நீங்கள் நிறுவப் போகிற ராமர், லக்ஷ்மணன் சிலைகளுக்கு மீசை இருக்க வேண்டும் என்று கோவிந்த் கிரிஜி மகாராஜிடம் (கோயில் அறக்கட்டளையின் அறங்காவலர்) கேட்டுள்ளேன்.

நீங்கள் தவறுகளைச் சரிசெய்யாவிட்டால் (ராமர் சிலைகளுக்கு மீசை இல்லாமல் போனால்) என்னைப் போன்ற ராமர் பக்தருக்கு, கோயில் கட்டப்பட்டாலும், அது பயனில்லை." என்று கூறியுள்ளேன்.

கோயில் தளத்தில் "பூமி பூஜை" விழாவைத் தொடங்குவதற்கு முன்பு, சத்ரபதி சிவாஜி மகாராஜா உருவத்தை வணங்க வேண்டும் மேலும்அயோத்தி கோயில் பூமி பூஜை நடைபெறும் ஆகஸ்ட் 5 ஆம் தேதியை இந்துக்கள் தீபாவளி மற்றும் தசரா போன்ற பண்டிகையை போன்று கொண்டாட வேண்டும்" என்றார்

https://tamil.oneindia.com/news/india/the-idol-of-lord-ram-in-the-proposed-temple-at-ayodhya-should-have-a-moustache-sambhaji-bhide-393297.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.