Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலத்சினி சாரா ஜெஸ்மினாக மாறியது எப்படி? தாயார் கவிதா தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலத்சினி சாரா ஜெஸ்மினாக மாறியது எப்படி? தாயார் கவிதா தகவல்

July 27, 2020

உயிர்த்தஞாயிறுதற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான முகமட் ஹஸ்துனின் மனைவி சாரா ஜெஸ்மின் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியின் மனைவியுடன் பெப்ரவரி முதல் ஏப்பிரல் 26 ம் திகதிவரை தங்கியிருந்தார் என சாராவின் தாயார் கவிதா தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

pulasthini.jpg

 

2015ம் திகதி ஜூலை மாதம் தனியார் வகுப்புக்கு சென்ற மகள் வீடு திரும்பவில்லை, நான் அவ்வேளை அபுதாபியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன் எனது தாயார் மூலம் மகளை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்தேன் என கவிதா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
எனது மகள் களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்தார், அன்றைய தினம் இலங்கை தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச்செயலாளர் தொலைபேசி மூலம் எங்களை தொடர்புகொண்டு புலத்சினி தங்களிடம் உள்ளதாகவும் ஒரு வார காலத்தில் திரும்பிவருவார் என தெரிவித்தார் எனவும் கவிதா தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் நான் நாடு திரும்பினேன் என தெரிவித்த கவிதா நான் மாளிகாவத்தையில் உள்ள அப்துல் ராசிக்கின் அலுவலகத்துக்கு சென்றவேளை எனது மகள் முஸ்லீம் உடையிலிருப்பதை பார்த்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நான் மாளிகாவத்தை பொலிசில் முறைப்பாடு செய்தேன் ,அவர்கள் விசாரணை செய்த பின்னர் 15 நாட்களின் பின்னர் புலத்சினியை நான் அப்துல் ராசிக்கிடம் கையளிக்கவேண்டுமென தெரிவித்தனர் என கவிதா தெரிவித்துள்ளார்.

easter-attack-pco-6.jpg

 

புலத்சினி 18வயதை கடந்தவர் என்பதால் அவர் தனது வாழ்க்கை குறித்து முடிவெடுக்கலாம் எனபொலிஸார் தெரிவித்தனர் எனவும் கவிதா தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் புலத்சினியை ராஸிக் கூட்டிச்சென்றார்,நான் உடனடியாக மறுநாள் மாளிகாவத்தை சென்றவேளை அப்துல் ராசிக் எனது மகளை ஹஸ்டனிற்கு திருமணம் செய்து வைத்துள்ளார் என்பதை அறிந்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் திருமணம் இடம்பெற்றமைக்கான எந்த ஆதாரத்தையும் அவர்கள் காண்பிக்கவில்லை,மேலும் அதன் பின்னர் எனது மகளின் பெயரினை சாரா ஜெஸ்மின் என பெயர் மாற்றம் செய்துள்ளனர் என்பதை அறிந்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர் கணவருடன் சேர்ந்து வாழமுடியாது என்பதால் புலத்சினியை அபுதாபிக்கு அழைத்துச்சென்று அங்கு வைத்திருந்தேன் அவர் அங்குவேலை பார்த்தார் எனவும் கவிதா தெரிவித்துள்ளார்.

Mohamed-Hasthun-300x169.jpg

 

இதன் பின்னர் தான் கல்வி கற்பதில் ஆர்வமாகவுள்ளதாக தெரிவித்து மகள் இலங்கைக்கு செல்லப்போவதாகவும், ஹஸ்துனுடன் செல்லமாட்டேன் எனவும் தெரிவித்தார் என கவிதா தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஹஸ்துன் நான் எனது மகளைபலவந்தமாக பிடித்துவைத்திருப்பதாக காத்தான்குடி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்,முஸ்லீம் சம்மேளனமும் இணைந்து முறைப்பாடு செய்தது பொலிஸார் தலையிட்டு எனது மகளை ஹஸதனிடம் ஒப்படைத்தனர் எனவும் கவிதா தெரிவித்துள்ளார்.

easter-att3-2.jpg

 

இதன் பின்னர் நான் ஜஹ்ரான் ஹாசிமின் மனைவி மகளை நாரம்மலவில் உள்ள தனது வீட்டுக்குஅழைத்துச்சென்றுள்ளார் என்பதை அறிந்தேன் என தெரிவித்துள்ள கவிதா 2019 பெப்ரவரி மாதம் தான் தனது மகளுடன் இறுதியாக தொலைபேசி மூலம் உரையாடியதாக தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் நான் இலங்கைக்கு திரும்பிவந்து ஏப்பிரல் ஆறாம் திகதி எனது மகளை இரண்டுமாதமாக தொடர்புகொள்ள முடியவில்லை என முறைப்பாடு செய்தேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஏழாம் திகதி ரொசான் என்பவர் வீட்டுக்கு வந்து ராசிக் என்பவர் தன்னை புலத்சினி ஜஹ்ரானின் மனைவியுடன் இருக்கின்றார்என தெரிவித்ததுடன் தொலைபேசி இலக்கமொன்றை தந்தார் எனவும் கவிதாகுறிப்பிட்டுள்ளார்

 

http://thinakkural.lk/article/58257

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன விடயம்.. கட்டாய மத மாற்றமா.. லவ் ஜிகாத்தா..? வறுமையா ..? ஆருக்காவது தெரியுமா..? 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இது என்ன விடயம்.. கட்டாய மத மாற்றமா.. லவ் ஜிகாத்தா..? வறுமையா ..? ஆருக்காவது தெரியுமா..?

லவ் ஜிஹாத் தோழர் 
பிள்ளை சாதாரண தரத்தில் 9 A அல்லது அல்லது 10 A எடுத்திருக்க வேணும் ,
உயர்தரத்திற்கு தேற்றாத்தீவிலிருந்து என்னுடைய பாடசாலைக்கு மாறி  super junior ஆக ஒருமாசமாக பார்த்ததாக நண்பன் சொன்னான், எனக்கு ஞாபகம் இல்லை , காரணம் அந்த நண்பன் ஒருநடமாடும் பெண்கள்க்ளோபீடியா, இப்போ கூட அப்டேட்டிற்கு அவனை தான் கூப்பிடுவது   
 

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இது என்ன விடயம்.. கட்டாய மத மாற்றமா.. லவ் ஜிகாத்தா..? வறுமையா ..? ஆருக்காவது தெரியுமா..? 

இது லவ் ஜிஹாதாக இருக்க சந்தர்ப்பம் இல்லை. பொதுவாக லவ் ஜிகாத் என்பது அழகான , பணக்கார பெண்களைத்தான் தங்கள் வளையத்துக்குள் கொண்டு வருவார்கள். இந்தப்பெண் பணக்கார பெண்ணாக தெரியவில்லை.

எனக்கு தெரிந்த இரண்டு பெண்கள் இப்படியாக மாட்டுப்படடதை கண்டிருக்கிறேன். ஒரு அழகான பணக்கார இந்து பெண் யாழ் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது இது நடந்தது. இவர்கள் மணம்முடித்த சில நாட்களின் பின்னர் அந்த பெண்ணை வீடிட்கு அனுப்பி சொத்தை எல்லாம் எழுதி எடுக்கும்படி கூறிவிட்ட்தான். இன்னொரு அழகான கத்தோலிக்க பணக்கார பெண்ணும் இதே நிலையை சந்திக்க நேர்ந்தது. இந்த இரண்டு சம்பவங்களும் மன்னாரில் நடந்தவை

.இங்கு நடந்த சம்பவம் கடடய மத மாற்றமாகவே தெரிகின்றது. அவர் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்போலவே தெரிகின்றார். 

19 minutes ago, Robinson cruso said:

.

எனக்கு தெரிந்த இரண்டு பெண்கள் இப்படியாக மாட்டுப்படடதை கண்டிருக்கிறேன். ஒரு அழகான பணக்கார இந்து பெண் யாழ் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது இது நடந்தது. இவர்கள் மணம்முடித்த சில நாட்களின் பின்னர் அந்த பெண்ணை வீடிட்கு அனுப்பி சொத்தை எல்லாம் எழுதி எடுக்கும்படி கூறிவிட்ட்தான். இன்னொரு அழகான கத்தோலிக்க பணக்கார பெண்ணும் இதே நிலையை சந்திக்க நேர்ந்தது. இந்த இரண்டு சம்பவங்களும் மன்னாரில் நடந்தவை

.

பின்னர் இவர்களுக்கு என்ன நடந்தது ? அதுவும் கத்தோலிக்க அமைப்புக்கள் அமைதியாக இதை வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தது ஆச்சர்யமாக இருந்தது.

இப்பொழுது இப்படியான மதமாற்றங்கள் யாழ்ப்பாணத்தில் கூட ஓரளவுக்க் நடக்க தொடங்கி விட்டது.புங்குடு தீவிலேயே 3 பெண்கள் மாறியுள்ளனராம்.
 

Edited by Dash

Just now, Dash said:

பின்னர் இவர்களுக்கு என்ன நடந்தது ? அதுவும் கத்தோலிக்க அமைப்புக்கள் அமைதியாக இதை வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தது ஆச்சர்யமாக இருந்தது.

இப்பொழுது இப்படியான மதமாற்றங்கள் யாழ்ப்பாணத்தில் கூட ஓரளவுக்க் நடக்க தொடங்கி விட்டது.புங்குடு தீவிலேயே 3 பெண்கள் மாறியுள்ளனராம்.
 

இந்துப்பெண்ணுக்கு வயிற்றில் குழந்தை. இனி என்ன செய்ய முடியும்? எழுதிக்கொடுத்ததுதான். அவளும் முஸ்லிமாக மாறிவிடடாள். கத்தோலிக்க பெற்றோர் அந்த இடத்தைவிடடே இடம்பெயர்ந்து சென்று விடடார்கள். இவளும் முஸ்லிமாக மாறி அந்த வீட்டில் வசதியாக சீவிக்கிறார்கள். பெண்கள் வயதுக்கு வந்தவர்களாதலால் சடடப்படி ஒன்றும் செய்ய முடியாது. 

4 hours ago, Robinson cruso said:

இந்துப்பெண்ணுக்கு வயிற்றில் குழந்தை. இனி என்ன செய்ய முடியும்? எழுதிக்கொடுத்ததுதான். அவளும் முஸ்லிமாக மாறிவிடடாள். கத்தோலிக்க பெற்றோர் அந்த இடத்தைவிடடே இடம்பெயர்ந்து சென்று விடடார்கள். இவளும் முஸ்லிமாக மாறி அந்த வீட்டில் வசதியாக சீவிக்கிறார்கள். பெண்கள் வயதுக்கு வந்தவர்களாதலால் சடடப்படி ஒன்றும் செய்ய முடியாது. 

இது பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் முக்கியம்

20 hours ago, Dash said:

இது பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் முக்கியம்

விழிப்புணர்வு இருந்தாலும் வயத்துக்கோளாறுகளினால் இப்படி நடக்கின்றது. சிலர் வறுமையினால் இப்படி போய் விடுகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.