Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவன் ஒரு விமானி,

Featured Replies

என்னால் நம்ப முடியவில்லை, என் அன்பு நண்பனும், சகோதரனுமான தீபக் சதே இப்போது உயிரோடில்லை என்பதை, அவன் ஒரு விமானி, கடைசியாக கோழிக்கோடு வானூர்தி நிலையத்துக்கு துபாயிலிருந்து பெருந்தொற்றுக் காலத்தில் சிக்குண்டிருந்த இந்தியர்களை ஏற்றிக்கொண்டு பறந்து வந்தான்.
தரையிறங்கு சக்கரங்களை இயக்கும் கியர்கள் வேலை செய்யவில்லை, கோழிக்கோடு வானூர்தி நிலையத்தை மூன்று முறை சுற்றி எரிபொருளைக் காலி செய்தான், விபத்து நிகழ்ந்தால் விமானம் தீப்பிடித்து விடக் கூடாதல்லவா...அதற்காக...
ஊர்தி நிலத்தில் அதிர்ந்து வீழ்ந்த போது, அவன் இஞ்சினை அணைத்து விட்டிருந்தான். மூன்றாவது முயற்சியின் போது அவனுக்குத் தெரிந்து விட்டது, இது கடைசிப் பறத்தல் என்று, ஆனாலும் ஏறத்தாழ பத்து குழந்தைகள் உட்பட 180 சக பயணிகளைக் காப்பாற்றிய நிமமதியோடு சிதைந்த காக்பிட்டின் நடுவே முதுகெலும்பு உடைந்து கிடந்தான். ஆனாலும், அவன் கம்பீரமாக இருந்தான்.
தீபக் சாதே 36 வருட பறப்பு அனுபவம் கொண்டவன், தேசியப் பாதுகாப்பு மையத்தில் இருந்து வந்தவன், மதிப்பு மிக்க வீரவாள் விருது பெற்றவன், தேசிய வானுர்திப்படையில் 21 ஆண்டுகள் பணிறாற்றிய பிறகு ஏர் இந்தியாவின் வணிக விமானியாக மாறினான்.
ஒரு வாரத்துக்கு முன்பு நான் அவனை அழைத்துப் பேசிய போது, அதே சிரிப்போடு பேசினான், நான் "வந்தே பாரத்" குறித்துக் கேட்டபோது, பெருமையாகவும், நிறைவாகவும் இருப்பதாகச் சொன்னான்.
உரையாடலின் போது நான் கேட்டேன்,
"தீபக், அரபு நாடுகள் இப்போது பயணிகளை அனுமதிப்பதில்லேயே?
நீ காலி வானுர்திகளையா ஓட்டிச் செல்கிறாய்?"
அவன் சொன்னான்,
"நிலேஷ், நான், மலர்களையும், பழங்களையும், காய்கறிகளையும் அந்த நாட்டு மக்களுக்காகக் கொண்டு செல்கிறேன், ஒருபோதும் காலி விமானங்களோடு போவதில்லை."
90 களின் துவக்கத்தில் ஒரு விபத்தின் போது கடுமையான தலைக்காயங்களோடு, இனி பிழைப்பது கடினம் என்று மருத்துவர்களே நினைத்திருந்த காலத்தில், பறப்பதன் மீதிருந்த காதலில் மீண்டு மறுபடி பறந்தான்.
நாக்பூரில் பிறந்த கலோனல் வசந்த் சாதேயின் மகனான தீபக் சாதே, தன் மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் தவிக்க விட்டுப் போய்விட்டான். சகோதரன் கேப்டன் விகாஸ், ஜம்முவில் விமானப்படையில் பணியாற்றி நாட்டுக்காக முன்னரே மரித்துப் போனவன்.
இந்த துயரான நேரத்தில் ஒரு படை வீரனின் கவிதை என் நினைவில் வருகிறது.....
"நான் போரில் இறந்து போனால், பெட்டியில் வைத்து வீட்டுக்கு அனுப்புங்கள்.
என் பதக்கங்களை என் நெஞ்சில் வைத்துவிட்டு அம்மாவிடம் சொல்லுங்கள், அவன் தன்னால் இயன்றதையும், சிறந்ததையும் நாட்டுக்காக செய்தானென்று.....
என் தந்தையின் முழங்கால்கள் என் முன்னால் மண்டியிட வேண்டாம், அவருக்கு இனி ஒருபோதும் நான் கவலையளிக்க மாட்டேன்.
என் தம்பியிடம் சொல்லுங்கள், நன்றாகப் படி என்று, என் பைக் சாவியை இனி நிரந்தரமாக அவனே வைத்துக் கொள்ளலாம்.
என் தங்கையிடம் கவலையடையாதிருக்கச் சொல்லுங்கள், நாளைய உதயத்தின் கதிர்களாக அவளிடம் நான் சேர்ந்து கொள்வேன்...
என் அன்பானவர்கள் அனைவருக்கும் சொல்லுங்கள், "நான் ஒரு போர் வீரன், இறப்பதற்காகவே பிறந்தவன் என்று.....
மூலம் - நிலேஷ் சதே
தமிழில் - கை.அறிவழகன்
  • கருத்துக்கள உறவுகள்

புரியவில்லையே. விபத்துக்கு காரணம் லாண்டிங்க் கியர் இல்லாமல் பெலி லாண்டிங்க் செய்தமையா? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அபராஜிதன் said:
என்னால் நம்ப முடியவில்லை, என் அன்பு நண்பனும், சகோதரனுமான தீபக் சதே இப்போது உயிரோடில்லை என்பதை, அவன் ஒரு விமானி, கடைசியாக கோழிக்கோடு வானூர்தி நிலையத்துக்கு துபாயிலிருந்து பெருந்தொற்றுக் காலத்தில் சிக்குண்டிருந்த இந்தியர்களை ஏற்றிக்கொண்டு பறந்து வந்தான்.
தரையிறங்கு சக்கரங்களை இயக்கும் கியர்கள் வேலை செய்யவில்லை, கோழிக்கோடு வானூர்தி நிலையத்தை மூன்று முறை சுற்றி எரிபொருளைக் காலி செய்தான், விபத்து நிகழ்ந்தால் விமானம் தீப்பிடித்து விடக் கூடாதல்லவா...அதற்காக...
ஊர்தி நிலத்தில் அதிர்ந்து வீழ்ந்த போது, அவன் இஞ்சினை அணைத்து விட்டிருந்தான். மூன்றாவது முயற்சியின் போது அவனுக்குத் தெரிந்து விட்டது, இது கடைசிப் பறத்தல் என்று,

தமது இறுதிக்கணங்களிலும் மனிதத்தை  நேசிக்கும் மாந்தர்களால் இவ்வுலகு அசைகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

என் அன்பானவர்கள் அனைவருக்கும் சொல்லுங்கள், "நான் ஒரு போர் வீரன், இறப்பதற்காகவே பிறந்தவன் என்று.....

 

—-வீரவணக்கம் தீபக்—-

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஓடுபாதை நீளம் போதாமை 2011 லேயே பலமுறை முறைப்பாடு செய்யப்பட்டு இருந்தும் 
அவர்கள் பெரிதாக அக்கறை கொள்ளவில்லை. டேபிள் டாப்  ஓடுபாதைகள்(Table Top Runways)  சரியான தெளிவான 
தூர பார்வை இல்லாவிட்டால் இறங்குவது ஆபத்தானது .... குறித்த இடத்தில் இறங்க முடியாது 
கொஞ்சம் தூரம் கடந்துவிடால் கூட ... பிரேக் கொண்டு பிளேனை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர 
எஞ்சிய தூரம் போதாது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/8/2020 at 08:30, அபராஜிதன் said:

என்னால் நம்ப முடியவில்லை, என் அன்பு நண்பனும், சகோதரனுமான தீபக் சதே இப்போது உயிரோடில்லை என்பதை, அவன் ஒரு விமானி,

இதே விமானி இலங்கையில் தமிழர்கள் மேல் குண்டுகள் போட்டதாக சொல்கிறார்களே?

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.....! 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இதே விமானி இலங்கையில் தமிழர்கள் மேல் குண்டுகள் போட்டதாக சொல்கிறார்களே?

இனி நாம் அதெல்லாம் மறந்திட வேணுமாம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.