Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம் – சி.வீ.விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம் – சி.வீ.விக்னேஸ்வரன்

 

CV-1.jpg

சலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் இப்பொழுது நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம். எங்கோ இருந்தவர்கள் வந்து  இரவிரவாக மக்களுக்கு சலுகைகளைக் கொடுத்து இன்று மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் என  நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் ” எமது உரிமைக்காக போராடிய இளைஞர்கள் மடிந்த காலம் போய் வெறும் களியாட்ட நிகழ்வுகளிலே எமது இளைஞர்களுடைய மனம் லயிக்கக் கூடியதான சூழலை ஏற்படுத்துகின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவர்கள் அரசாங்கத்தின் கையாற்களாக மாறினார்கள். அது எதற்காக என்றால் வட கிழக்கு மாகாண தமிழ் மக்களினுடைய மனதை மெல்ல மெல்லமாக மாற்றி உரிமைகளை விட்டு சலுகைகளை நோக்கி செல்ல வைப்பதற்கான சதித்திட்டத்தின் விளைவுதான் இந்த தேர்தலில் ஒரு தீர்மானம் மக்களால் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இப்பொழுது இருக்கும் இளைஞர்களுக்கு போரினுடைய வலிகள், துன்பங்கள் தெரியாது. ஏனென்றால் போர் நடைபெற்ற காலத்தில் அவர்கள் சிறுவர்களாக இருந்திருப்பார்கள் இப்பொழுதுதான் வாக்களிக்கும் உரிமையைப் பெற்று இளைஞர்களாக உள்ளனர்.  அவர்களுக்கு என்ன தேவை களியாட்ட நிகழ்வுகளும் போதைப் பொருள் பாவனை போன்ற தற்காலிக சந்தோகங்களில் இருக்கின்றார்களே தவிர வருங்காலத்திலே தமிழ் மக்களுக்கு என்ன நடைபெறப் போகின்றது, தமிழனின் கலாசாரம், பண்பாடு, மொழி இவை அனைத்தையும் அழிக்க துடிக்கின்றார்கள் போன்றவை பற்றிய எந்த சிந்தனையும் கிடையாது.

இவ்வாறான ஒரு நிலையிலேயே மக்கள் தீர்மானம் தரப்பட்டிருக்கின்றது. ஆகவே, எமது இளைஞர்கள் இதிலிருந்து விடுபட வேண்டுமாக இருந்தால் பல விதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இளைஞர்களுடைய குறிக்கோள்களை மாற்ற வேண்டும். சமூக புரட்சி ஒன்றை ஏற்படுத்த தவறுவோமாக இருந்தால் நாங்கள் அழிந்தவராகிவிடுவோம்.

வெகுவிரைவிலே இந்த நாட்டிலே சர்வதிகாரம் திளைக்கப் போகின்றது. அதற்குரிய சகல விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்குரிய அத்திவாரம் இடப்பட்டு விட்டது. ஆனாலும் எமது உரிமைகளை நாம் கேட்டே தீருவோம். ஆனால் சிலர் நினைக்கின்றார்கள் அதிகார பலம் அவர்களிடம் சென்றதன் பின்னர் கிடைப்பதைப் பெற்றுக் கொண்டு நாங்கள் வாயை மூடிக் கொண்டு இருந்தால் என்ன என்ற நினைக்கின்றார்கள்.

சலுகையா உரிமையா என்ற போராட்டத்தில் இப்பொழுது நாம் சலுகைக்கு இடமளித்து விட்டோம். எங்கோ இருந்தவர்கள் வந்து  இரவிரவாக மக்களுக்கு சலுகைகளைக் கொடுத்து இன்று மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே, கட்சியின் வெற்றிக்காக உழைத்த அனைவரும் இனிவரும் காலங்களில் மக்களின் எழுச்சிக்காக, புரட்சிக்காக பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின்றேன்.” என்றார்.

   by : Vithushagan

http://athavannews.com/சலுகையா-உரிமையா-என்ற-போர/

விக்கி ஒரு இடத்தில கூறுகிறார் இப்போதுள்ள இளையோருக்கு போரின் வலி தெரியாது என்று. அவருக்கு அந்த வலி தெரியுமோ தெரியவில்லை. கொழும்பில் சொகுசு வாழக்கை வாழ்ந்தவர்கள் எல்லாம் யுத்தத்தை பற்றி பேசுகிறார்கள். காலத்தின் கொடுமை.

இருந்தாலும் என்ன, இன்னுமொரு ஐந்து வருடங்கள் இருக்கின்றது. அதட்குள் துரோகி படடம் எடுக்காமல் இருந்தால் சரிதான். இதட்கு முதலும் கொழும்பிலிருந்து வந்து உங்கள் மாணவனிட்கு இணையதள போராளிகள் அந்த படடம் வழங்கி இருக்கிறார்கள். இணைய போராளிகள் அவதானத்துடன் இருக்கிறார்கள்.

பாராளுமன்றம் சென்று சத்தியப்பிரமாணம் செய்து சலுகைகளைப் பெற்று வேலை வாய்ப்புகளை வழங்கும்போது அதுவே உரிமையாகத் தெரியும்.😄

Just now, Iraivan said:

பாராளுமன்றம் சென்று சத்தியப்பிரமாணம் செய்து சலுகைகளைப் பெற்று வேலை வாய்ப்புகளை வழங்கும்போது அதுவே உரிமையாகத் தெரியும்.😄

சரியாக சொன்னீர்கள். ஐயாவுக்கு துரோகி படடம் கிடைக்கவிடடால் சரிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் மனவோட்டத்தை எடை போடாமல் விட்டது உங்கள் தவறு.டக்கி மேல் உள்ள மக்களின் நிலைப்பாட்டால்தான் கூட்டமைள்கு எதிரான வாக்குகள் வேறு திசை நோக்கிச் சென்றது.உங்களை மாதிரி கறை படியாத ஆக்கள் அபிவிருத்தியையும் முன்னிறுத்தியிருந்தால் நிலமை வேறு.

1 minute ago, சுவைப்பிரியன் said:

மக்களின் மனவோட்டத்தை எடை போடாமல் விட்டது உங்கள் தவறு.டக்கி மேல் உள்ள மக்களின் நிலைப்பாட்டால்தான் கூட்டமைள்கு எதிரான வாக்குகள் வேறு திசை நோக்கிச் சென்றது.உங்களை மாதிரி கறை படியாத ஆக்கள் அபிவிருத்தியையும் முன்னிறுத்தியிருந்தால் நிலமை வேறு.

அவருடன் சேர்ந்து கேடடவர்கள் 90 % கறைபடிந்தவர்கள்தான். அவர் இனி அரசியல் தீர்வு பற்றியே பேச வேண்டும், செயல்பட வேண்டும். இல்லாவிட்ட்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாடடார்கள். அபிவிருத்தி பற்றி பேசி அரசியலுக்கு வந்தவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிடடார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஆமாம் டக்கிளஸ் அங்கிள் தனது சரணாகதி ஆயுத அரசியல் மூலம்.. நெடுந்தீவை சிங்கிப்பூராக்கி.. மத்தியில் கூட்டாட்சி.. மாநிலத்தில் சுயாட்சி வாங்கிக் கொடுத்த திருப்தியில் தமிழ் மக்கள் வாக்குகளை அள்ளிப் போட்டுள்ளனர்.

முடியல்ல.. சிலரின் போலி பிம்பம் காட்டல்.

வறுமைக் கோட்டில் உள்ள தீவக மக்களை அப்படியே வறுமைக் கோட்டில் வைச்சிருந்து தேர்தல் கால சலுகைகளைக் காட்டி வாக்குகளை பறித்துவிட்டு மீண்டும்.. டக்கிளஸ் வேதாளம் பழையபடி முருங்கைமரத்தில் ஏறிக்கொள்ளும். 

இந்த மக்களுக்கு உரிமை பற்றியும் கவலை இல்லை.. சலுகை பற்றியும் கவலை இல்லை. அன்றாட வாழ்க்கையை கொண்டு போவதே அவர்களுக்குப் போராட்டமாக உள்ளது. அதனை தீர்க்காமல்.. உரிமை பற்றி வகுப்பெடுத்து இவர்களின் வாக்குகளைப் பெற முடியாது.

விடுதலைப்புலிகள் ஒவ்வொரு பேச்சுக்களின் போதும் இரண்டு விடயங்களை முன்னிறுத்துவார்கள்...

1. மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனையை தீர்ப்பது.

2.மக்களின் உரிமைப் பிரச்சனை குறித்துப் பேசுவது.

இந்த அணுகுமுறையால் தான் புலிகளால் பெரும்பான்மை தமிழ் மக்களின் இதயங்களை வெல்ல முடிந்தது.

வெறும் தமிழ் தேசிய உச்சரிப்பு மட்டும் தமிழ் தேசிய உணர்வூட்டலை செய்ய முடியாது. இந்த இடைவெளியில்.. அங்கஜன்.. குங்கஜன்.. டக்கிளஸ்.. பிள்ளையான் போன்ற காட்டேரிகளும் தமக்கான தளத்தை பாவிக்கவே செய்யுங்கள். ஆனால்.. இவர்களாலும் தொடர்ந்து மக்களின் விருப்பை தக்க வைக்க முடியாது. காரணம் இவர்களின் அரசியல் சராணாகதி ஆயுத அரசியல் என்பது மக்களுக்குத் தெரியும். அதன் மூலம் தமக்கு ஒரு சின்னப் பயனாவது கிடைக்கட்டும் என்ற ஏக்கத்துக்குள் தள்ளிய தமிழ் தேசிய உச்சரிப்புக் கட்சிகளின் தமிழர் நலன்சார்ந்த முன்னெடுப்பற்ற தன்மை தான்.. எல்லாவற்றிற்கும் காரணம்.

சிங்கள பெளத்த பெருந்தேசியத்தை சிங்கள இளைய சமூகம்.. மூத்த சமூகம் என்று மகிந்த கும்பலால் கடத்த முடியும் என்றால்..  தமிழர்களின் அடிப்படை உரிமை பற்றிய சிந்தனையோட்டத்தை ஏன் கடத்த முடியாது. முடியும்.. ஆனால் மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளையும்.. கவனிச்சுக் கொண்டு உரிமை பற்றி பேச வேண்டும். அதுதான் முக்கியம். 

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் ரொபின்சன் குருசோ கொடுத்த காசுக்குமேலால கூவுகிறார் என. அவரது வார்த்தைப் பிரயோகங்களும் சொல்ல வரும் விடையங்களும் அவர் யார் என உணர்த்துகிறது. 

ரொபின்சன் குருசோ அவர்களே 

இடைக்கிடை மானே தேனே கண்ணே கலைமானே எனவும் போடவும் அப்பத்தான் நீங்கள் யார் எனத் தெரியாமல் இருக்கும்.

1 hour ago, Elugnajiru said:

நான் நினைக்கிறேன் ரொபின்சன் குருசோ கொடுத்த காசுக்குமேலால கூவுகிறார் என. அவரது வார்த்தைப் பிரயோகங்களும் சொல்ல வரும் விடையங்களும் அவர் யார் என உணர்த்துகிறது. 

ரொபின்சன் குருசோ அவர்களே 

இடைக்கிடை மானே தேனே கண்ணே கலைமானே எனவும் போடவும் அப்பத்தான் நீங்கள் யார் எனத் தெரியாமல் இருக்கும்.

உங்கள் அனுபவத்தை இங்கு எழுதவதட்கு உரிமை இருக்கிறது. உங்கள் அனுபவம் பேசும்போது நான் ஒன்றும் செய்ய முடியாது. பணத்துக்கு சோரம் போவனர்கள் நாங்கள் இல்லை.

எனது கருத்துக்கு பதில் கருத்து எழுத முடியுமென்றால் எழுதுங்கள். ஆறறிவு, சொம்பு, பணம் இவைகளை எழுதி அதட்கு பின்னல் ஒழித்துக்கொள்ளாதீர்கள். உங்களைப்போல மற்றவர்களையும் நினைக்காதீர்கள்.

1 hour ago, Elugnajiru said:

நான் நினைக்கிறேன் ரொபின்சன் குருசோ கொடுத்த காசுக்குமேலால கூவுகிறார் என. அவரது வார்த்தைப் பிரயோகங்களும் சொல்ல வரும் விடையங்களும் அவர் யார் என உணர்த்துகிறது. 

ரொபின்சன் குருசோ அவர்களே 

இடைக்கிடை மானே தேனே கண்ணே கலைமானே எனவும் போடவும் அப்பத்தான் நீங்கள் யார் எனத் தெரியாமல் இருக்கும்.

நீங்கள் யார் என்று விளக்கமாக எழுதி இருக்கிறீர்கள். வேறு விளக்கம் தேவைப்படாது. நன்றி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.