Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் ஜனநாயகத்தை தழுவியுள்ளேன்- நாடாளுமன்றத்தில் பிள்ளையான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஜனநாயகத்தை தழுவியுள்ளேன்- நாடாளுமன்றத்தில் பிள்ளையான்

August 20, 2020

நான் ஜனநாயகத்தை தழுவியுள்ளேன் என நாடாளுமன்றத்தில் தனது முதலாவது உரையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் என்ற போதிலும் தான் ஜனநாயகத்தை தழுவியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Pillayan-1-611x420-300x206.jpg

 

பதின்மவயதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்ததாக தெரிவித்துள்ள அவர் பின்னர் ஜனநாயகத்தை தழுவியதாக தெரிவித்துள்ளார்.
13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான பிரதமரின் முயற்சிகளுக்கும முழுமையான ஆதரவை வழங்கப்போவதாக பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்ப்பட்டுள்ள போதிலும் நாடாளுமன்ற அமர்வுகளில் தான் கலந்துகொள்வதை சட்டமா அதிபர் தடுக்கின்றார் என குறிப்பிட்டுள்ள அவர் ஒவ்வொரு அமர்வில் கலந்துகொள்வதற்கும் நீதிமன்றத்தின் அனுமதியை கோருவேன் என தெரிவித்துள்ளார்

 

http://thinakkural.lk/article/63532

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த நல்லாட்சி அரசாங்கமானது என்னை திட்டமிட்டு சிறைப்படுத்தியிருக்கின்றது – பிள்ளையான்

கடந்த நல்லாட்சி அரசாங்கமானது என்னை திட்டமிட்டு சிறைப்படுத்தியிருக்கின்றது –  பிள்ளையான்

மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சந்தர்ப்பத்தை பெற்றுத் தருமாறு புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தன் கோரிக்கை விடுத்தார்.9ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் பங்கேற்பதற்கு மட்டக்களப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து பிள்ளையான் நேற்றைய தினம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார்.

இதனையடுத்து, தற்போது இடம்பெற்று வரும் 9ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் பங்கேற்ற பிள்ளையான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பாக புதிய சபாநாயகராக பொறுப்பேற்ற மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.இந்த நாடாளுமன்ற அமர்வில் வந்து நான் கலந்து கொள்வதற்கும் பல தடங்கல்களும் தாமதங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் அனுமதி கோர வேண்டும். இப்படி ஒரு சூழலில் என்னால் மக்களுக்கு சேவையாற்ற முடியாது.

எங்களுடைய நாட்டில் சமூக முரண்பாடுகள் நடந்து முடிந்திருக்கின்றது. நாம் இந்த சமூக முரண்பாடு, ஆயுத பேராட்டங்கள் காரணமாக 16 வயதிலே விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து போராடியவன்.ஆனால் அந்த அமைப்பின் நோக்கங்கள் கொள்கைகள் பிழைத்ததன் காரணமாக அதிலிருந்து விலகி ஜனநாயக ரீதியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினை ஆரம்பித்து இன்று பல விடயங்களை செய்திருக்கின்றோம்.இந்த நிலையில் இப்போது வட பகுதி மக்களும் தென்பகுதி மக்களும் இணைந்து பலமா ஒரு அரசாங்கத்தை அமைத்திருக்கின்றார்கள். இந்த அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் நான் ஒத்துழைப்பு வழங்குவேன்.மேலும் தான் 5 வருடங்கள் சிறை வாசம் அனுபவிப்பதாக தெரிவித்த அவர், மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சந்தர்ப்பத்தை பெற்றுத் தருமாறு புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்தார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/கடந்த-நல்லாட்சி-அரசாங்கம/

 

சபாநாயகர் இவருக்கு அனுமதி பெற்றுக்கொடுக்க வேண்டும். தேசியம் எண்டு பேசிக்கொண்டு கொலை, கொள்ளை செய்த எத்தனையோ பேர் பாராளுமன்றில் இருக்கிறார்கள். அப்படி என்றால் அடைக்கலம், வினோ, சித்தார்த்தன், டக்கு ஆகியோரையும் உள்ளே தள்ள வேண்டும்.வெளியிலயும் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களையும் உள்ளே தள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய அரசியலுக்கு போட்டியாக இலங்கை அரசியலும்...... இரு நாட்டிலும் பாராளுமன்றத்தில் கள்ளர்களும் காடையர்களும்....😎

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர் சிங்களக் குட்டிகளை தழுவிறார்.. இவர் சனநாய் அகத்தை தழுவிறார். என்ன ஒன்று இரண்டுக்கும் சி நாய் ஒரு எலும்புத்துண்டும் இன்னும் வீசல்லை. அதுக்கே காணாது. இதில.. தெருநாய்களுக்கு.. போட.. இப்படியயே கையில பெரிய இரும்புக் காப்போட வந்து போக வேண்டியான். என்ன உள்ள ஒரு வெள்ளை.. வெளில.. இன்னொரு வெள்ளை அவ்வளவு தான். 

  • கருத்துக்கள உறவுகள்

தன்னுடைய தொழிலை தொடர இப்படியானதுகளை தன்னோட வைத்திருந்தால் தானே தன் கைபடாமல் செய்யலாம். அதுக்கு இவை ஜனநாயகம் என்று பெயர் வேற. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.