Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐந்து ராஜபக்ஷர்களுக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான தார்மீக கடமை இருக்கின்றது- வீ.ஆனந்தசங்கரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து ராஜபக்ஷர்களுக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான தார்மீக கடமை இருக்கின்றது- வீ.ஆனந்தசங்கரி

 

sangary.jpg

ஐந்து ராஜபக்ஷர்களும் இணைந்து பிரச்சினைகளை கையிலெடுத்து அதற்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் தார்மீக கடமை காணப்படுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் இன்று (வியாழக்கிழமை) எழுதியுள்ள கடிதத்திலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடித்ததில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் பிரதம அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டதற்கு எனது உள்ளங்கனிந்த வாழ்த்துக்கள். இப்பதவி தங்களுக்கு புதிதல்ல என்பதையும் அனைவரும் அறிவோம்.

2007ஆம் ஆண்டு மாசி மாதம் 4ஆம் திகதி காலி முகத்திடலில் 59ஆவது சுதந்திரதின விழாவில்  நீங்கள், என்னையும் டக்ளஸ் தேவானந்தாவையும் குறிப்பிட்டு ஆற்றிய உரையின் பகுதியை தங்களிற்கு ஞாபகமூட்டுவதற்காக இங்கே தந்துள்ளேன்.

‘தமிழ், இஸ்லாமிய மக்களின் உயிர்களையும், சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டியது எமது கடமை. அத்துடன் அவர்களின் பிள்ளைகளின் எதிர்கால உலகத்தை வளம்பெற வைக்க வேண்டும், என்று மொறக்ககாகந்த மகா சமுத்திர திட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட போது நான் கூறியதை, மீண்டும் வற்புறுத்தி கூறுவது யாதெனில், பயங்கரவாதத்தை இல்லாமல் செய்வதற்கு மிகப்பொருத்தமான ஆயுதம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதே.

அதற்கு தற்போது தென்னிலங்கை சிங்கள மக்கள் தயாராகிவிட்டார்கள். விடுதலைப் புலிகளின் வெறித்தனமான வேண்டுகோளிற்கு இடமளியோம். இருப்பினும் நாம் நியாயமாகவும் நேர்மையாகவும் நடப்பின் குறைந்தபட்சம் திருவாளர்கள் ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடன் இசைந்து செயற்பட வேண்டும்’

என்னைப்பற்றி குறிப்பிட்டதில் இருந்து உங்கள் சிந்தனை என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எனது ஞாபகசக்திக்கு எட்டியவகையில் உங்களைப் போன்ற தரத்தில் உள்ள ஒருவர் பிரச்சினையையும் கூறி அதற்குரிய தீர்வையும் குறிப்பிட்டமை முதற் தடவையாகும்.

ஆகவே, ஐந்து ராஜபக்ஷர்களாகிய நீங்கள், சுயமாக முன்வந்து பிரச்சினையை கையில் எடுத்து அதற்கு தீர்வு காண வேண்டிய தார்மீக கடமையை புரிந்து, உங்களின் மூதாதையர்களின் நற்பெயரை காப்பாற்றி அவர்களின் ஆத்மா சாந்தியடைய வைப்பீர்கள் என நம்புகின்றேன்.

தேசபிதாவினுடைய கௌரவத்தை பாதுகாக்க வேண்டிய கடமை இன்று ராஜபக்ஷர்களுடைய கையில்தான் உள்ளது என” கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    by : Yuganthini

https://athavannews.com/ஐந்து-ராஜபக்ஷர்களுக்கும/

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் இன்று (வியாழக்கிழமை) எழுதியுள்ள கடிதத்திலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனந்த சங்கரி.... இன்று, மகிந்தவுக்கு எழுதிய கடிதம்..... நாளைக்குத்தான் அவருக்கு கிடைக்கும்.

மகிந்த...அந்தக் கடிதத்தை, வாசிக்க முதல் நாங்கள் வாசித்தது.... ரொம்ப பெருமையாக உள்ளது. 😛😜🤪

ஆனந்த சங்கரி ஐயா கடிதம் எழுதி எழுதியே களைத்து விடடார். பாவம் மனுஷனை பாராளுமன்றத்துக்கு போகவும் விடுகிறார்கள் இல்லை. போய் இருந்திருந்திருந்தால் மக்கள் வாழ்வு இப்போது எங்கோ சென்றிருக்கும். அடுத்த முறையாவது பார்த்து ஒட்டு போடுங்கள் கிளிநொச்சி மக்களே. மக்கள் சேவையே மகேசன் சேவை என மனிதன் உழைத்து உழைத்தே தேய்ந்து போய் விடடார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, nunavilan said:

ஐந்து ராஜபக்ஷர்களுக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான தார்மீக கடமை இருக்கின்றது- வீ.ஆனந்தசங்கரி

பஞ்சபாண்டவர்கள் எண்டு சொல்லாத வரைக்கும் சந்தோசம்.😄

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு ஈமெயில் என்ற ஒன்றிருக்கு என்று சொல்லிக் கொடுங்கப்பா. ஒரே கடிதம் தான் எழுதிக்கிட்டு இருக்காரு.

அதுசரி.. உதயசூரியன் இந்தா கிளம்புது என்றாரு... தேர்தலுக்கு முன்னம்.. இப்ப அந்தப் பேச்சையே காணம். உதய சூரியன் ஒரேயடியா அஸ்தமனமாகிட்டுப் போல. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.