Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீட் தேர்வு: நடிகர் சூர்யாவுக்கு 6 முன்னாள் நீதிபதிகள் ஆதரவு, எதிர்க்கும் வழக்கறிஞர்கள் சங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

பதிலுக்கும்,உங்கள் நேரத்திற்கும் நன்றி அண்ணா ...உங்கள் பதில் எனக்கு உடன்பாடாக இல்லை...

நன்றி ரதி. ஒருவேளை நான் விளக்கிய முறை போதாமல் அல்லது தெளிவில்லாமல் இருக்கலாம்.

3 hours ago, ஈழப்பிரியன் said:

உங்கள் விளக்கத்திற்கு நன்றி வன்னியன்.
இதே மாதிரி வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டிலில் உள்ளவர்களை விட கூடுதலான வேலை வாய்ப்பை பெறுகிறார்களே?எப்படி? ஏன்?இதையும் கொஞ்சம் விரிவாக எழுதுங்கள்.

இதில் பல மோசடிகள் மத்திய ஆளும்வர்க்கத்தின் துணையோடு நடைபெறுகின்றன, அதற்கு இந்த எடுபிடி அதிமுக பதவியில் நீடிக்க மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்துள்ளது.

சுருக்கமாக சொல்கிறேன்.

உதாரணமாக செயலலிதா இறந்து ஓபிஎஸ் பதவி ஏற்றதுமே மத்திய அரசின் அழுத்தத்தால் டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையத்தில் சட்ட திருத்தம் திரைமறைவில் அரங்கேறியது. அது தமிழக அரசு வேலை வாய்ப்புகளில் பிற மாநிலத்தவர்களும் பங்குபெறலாம் என்பது. தமிழ்நாடு மின்வாரியத்தில் இதன்மூலம் பிற மாநிலத்தவர்கள் தற்போது நுழைந்துள்ளனர்.

தமிழ் நாட்டிலுள்ள மத்திய அரசு நிறுவனங்களின் அஞ்சல் துறை வேலைகளில் சொந்த மாநில மக்களைவிட பஞ்சாப் அரியானா மாநிலத்தவர்கள் தமிழில் 95 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் வாங்கியதாக காட்டப்பட்டது.

அதேபோல திருச்சி பொன்மலை ரயில்வே வேலைகளிலும் உள்ளடி வேலைகளால் தமிழர்கள் உரிமைகள் பறிபோயுள்ளது.

தற்பொழுது தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் அந்தந்த மாநில மக்களுக்கே 90 சதவீதம் வேலை வாய்ப்பில் உரிமை என உரிமைக் குரலோடு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளன / கொண்டு வரப்போகிறது இன்னும் சிலவற்றில். 

2 hours ago, ஈழப்பிரியன் said:

வன்னியர் 
ஏற்கனவே தமிழ் ஆங்கிலம் இருமொழி கொள்கை இருக்கும் போது,

இப்போ மூன்றாவது மொழியும் கட்டாயமாக்கப்படுகிறதே உங்கள் அபிப்பிராயம் என்ன?
உங்கள் பேரப்பிள்ளைகளுக்கு மூன்றாவது மொழியாக எதை தேர்வு செய்யப் போகிறீர்கள்?

மூன்றாவது மொழி தமிழ்நாட்டில் இன்னும் வரவில்லை, அப்படி அடிமை அரசு துரோகம் செய்யாது என நம்புகிறேன், ஏனெனில் இந்தி எதிர்ப்பை / மொழி உணர்வை மூலதனமாக வைத்துதான் திராவிட அரசியலின் மையப்புள்ளியே இருக்கிறது.

எனது மகன் பள்ளியில் மூன்றாவது விருப்ப பாடமாக ஃப்ரென்ச் மொழி படித்து,வெளிநாட்டில் பட்ட மேற்படிப்பு படித்து அங்கேயே உள்ளார். அவருக்கு ஃப்ரென்ச் மொழி உதவவில்லை. அவரின் வேலைக்கு தேவையுமில்லை. எனது பேரன் தமிழ்நாடு பாடத் திட்டத்தில்தான் முதலாம் வகுப்பில் படிக்கிறார். இங்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமே.

அப்படி அடிமை அரசால் மறைமுகமாக மூன்றாவது மொழி படித்தே ஆகவேண்டுமென்றால்,விருப்ப மொழியாக ஃப்ரென்ச் அல்லது தெலுங்கு படிக்க வைக்கலாமென உத்தேசம்.

We feel, Telugu is closer to the heart than Mallu !

மொத்தத்தில் தமிழ் நாட்டிற்கு இப்பொழுது ஒரு தன்னமில்லாத, தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையின் தேவை காலத்தின் கட்டாயம். இல்லையெனில் தமிழ் நாட்டை கூறு போட்டு விற்றுவிடுவார்கள்..😜

 

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ராசவன்னியன் said:

மொத்தத்தில் தமிழ் நாட்டிற்கு இப்பொழுது ஒரு தன்னமில்லாத, தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமையின் தேவை காலத்தின் கட்டாயம். இல்லையெனில் தமிழ் நாட்டை கூறு போட்டு விற்றுவிடுவார்கள்..😜

மிகவும் நன்றி வன்னியன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இணைப்பு செய்தியை பார்க்கவும்.. CBI விசாரணையின் நிலை அனைவரும் அறிந்ததே..! 🤗

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2017/may/31/cbi-goes-after-haryanvis-who-topped-tamil-in-postal-exam-1611066.html

 

  • 2 weeks later...
On 24/9/2020 at 11:35, ராசவன்னியன் said:

"குலக் கல்வி"த் திட்டம் :  ஜாதியைக் காப்பாற்ற அரை நாள் !

தராஸ் மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி, 1953-ல் மாகாணத்தில் உள்ள கிராமப்புற துவக்கப் பள்ளிக்கூடங்களில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி, கிராமப்புற குழந்தைகள், பாதி நாளை பள்ளியிலும், மீதி நாளை தந்தையின் பாரம்பரிய தொழிலைக் கற்கவும் செலவழிக்க வேண்டும்.

அதாவது, கோவிலில் பணியாற்றுபவர் குழந்தை கோவிலிலும், விவசாயக் கூலியின் குழந்தை வயல்காட்டிலும், தோட்டியின் மகன் அந்தக் கலையைக் கற்பதிலும் மீதி நாளை செலவிடலாம்.

‘குலக்கல்வித் திட்டம்’ என இதனைப் பெயரிட்டு, தி.க.,  தி.மு.க. போன்ற கட்சிகளும் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஒரு பிரிவினரும் கடுமையாக எதிர்த்தனர். இது மிகப் பெரிய அரசியல் புயலாக உருவெடுத்தது.

இந்தத் திட்டத்தை எதிர்த்து கடுமையான, மிகப் பெரிய போராட்டங்கள் மாகாணத்தில் நடக்க ஆரம்பித்தன.

இதற்கு ஒரு வருடத்திலேயே ராஜாஜியின் அரசு வீழ்ந்தது. அதற்குப் பிறகு அவர் அரசியல் அதிகாரத்தைப் பெறவே முடியவில்லை.:)

ஆனால், இந்தச் சர்ச்சையை அடுத்து தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் பிராமணரல்லாதோர் எழுச்சிக்கான காலம் துவங்கியது. இதன் உச்சமாக காமராஜர், கட்சியின் தேசியத் தலைவராக, கிங் மேக்கராக உயர்ந்தார்.

ராஜாஜி, ஜாதியைக் காப்பாற்றத்தான் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தாரா..? என சிலர் கேட்கக்கூடும். அவர் என்ன நினைத்தார் என யாருக்குத் தெரியும்?

அதன் விளைவு என்னவாக இருக்கும்? என்பதை வைத்துத்தான் இது "குலக்கல்வித் திட்டம்" எனக் குறிப்பிடப்பட்டது.

வினவு

தங்கள் நீண்ட விளக்கத்திற்கு நன்றி ராஜவன்னியர். தமிழ்நாட்டில் பெரியாரின்  சமூகநீதி போராட்டங்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வு கல்வியை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டுவந்து சேர்தத வரலாறு குறித்து அறிந்துள்ளேன். தங்களின் அனுபவப்பதிவு  அது தொடர்பான மேலதிக விளக்கத்தை கொடுத்துள்ளது.  நன்றி.  

  • கருத்துக்கள உறவுகள்

'வேலை வாய்ப்பில் உள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்படுவதற்கு தமிழக அரசே பொறுப்பு' - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்.

1601990817123266.jpg

"மாநிலங்களில் பணியமர்த்தப்படும் அதிகாரிகள் உள்ளூர் மொழியை அறிந்திருக்க வேண்டும்.." என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன்,புகழேந்தி ஆகியோர் 'வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்தி மொழியில் தேர்ச்சி பெற இயலாத நிலையில், தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பணிகளில் அமர்வது எப்படி..?' என்றனர்.

தமிழகத்தில் மின் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பலர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், உள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றனர்.

உதகை ஆயுத தொழிற்சாலை பணியிடத்திற்கான நியமனம் எதன் அடிப்படையில் நடைபெற்றது? என்பது குறித்து பொது மேலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

பாலிமர் செய்திகள்

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

NEET Issue | நீட் மோசடி | திருட்டுத்தனம் செஞ்சாலும் ஒரு நியாயம் வேண்டாமா ?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.