Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திடீரென அரச அலுவலகத்திற்குள் நுழைந்த ஜனாதிபதி! கேள்விகளால் திகைத்துப்போன ஊழியர்கள்

Featured Replies

திடீரென அரச அலுவலகத்திற்குள் நுழைந்த ஜனாதிபதி! கேள்விகளால் திகைத்துப்போன ஊழியர்கள்

நாரஹெபிட்டியிலுள்ள வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலகத்திற்குள் ஜனாதிபதி திடீரென விஜயம் செய்துள்ளார்.

ஒரு நபர் அளித்த முறைப்பாட்டை அடுத்து ஜனாதிபதி இன்று (23) குறித்த அலுவலகத்திற்கு சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ தேவை ஒன்றுக்காக குறித்த அலுவலகத்திற்கு வந்ததாகவும், எனினும் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் தமது வேலையை செய்து கொடுக்கவில்லை எனவும் ஜனாதிபதியிடம் பெண் ஒருவர் முறையிட்டுள்ளார்.

இதன்படி, வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலகத்தை ஜனாதிபதி பார்வையிட்டதுடன், அங்கு போதுமான ஊழியர்கள் இருப்பதையும் அவதானித்தார். இருந்தும் அங்கு சரியாக கடமைகள் முன்னெடுக்கப்படவில்லை.

இதன்போது சேவையை நாட வந்த ஒரு ஊனமுற்ற நபரை ஜனாதிபதி கண்டார், மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் மற்றும் அவரது தேவைகள் மற்றும் தகவல்களை விசாரித்தார்.

குறித்த நபரும் தாம் நாள் முழுதும் வெளியில் இருப்பதாகவும், யாரும் கவனிப்பது இல்லை என்றும் ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளார்.

இதையடுத்து ஊழியர்களைச் சந்தித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொது ஊழியர்களின் முதன்மைப் பொறுப்பை தெளிவுபடுத்தியதுடன், பொதுத் தேவைகளை திறமையாகவும் சமரசமின்றி நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்களை ஏன் வெளியில் அனுப்புகின்றீர்கள், எத்தனை பேர் இருக்கின்றீர்கள், ஏன் தாமதம் என்றெல்லாம் அடுத்தடுத்து கேள்விகளை தொடுத்துள்ளார்.

இதனால் ஊழியர்கள் தடுமாறியதுடன் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

https://www.ibctamil.com/srilanka/80/151081?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறவுகள்

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

அந்த.. ஈர வெங்காயம் எல்லாம் இருக்கட்டும்.
முதலில் ஜனாதிபதி 😷 "மாஸ்க்" போட்டுக் கொண்டு, 
அந்த அலுவலகத்துக்கு போயிருக்க வேண்டாமா...
அதுவே... ஒரு முன்மாதிரியாக இருந்திருக்குமே.

மற்றவர்களுக்கு... புத்திமதி சொல்ல முதல், தங்களை திருத்திக்  கொள்ள வேண்டும்.

  • தொடங்கியவர்

நாடு தன்னிறைவு அடைய என்ன வழி என சிந்தித்து நடை முறைபடுத்துவதை விட்டுவிட்டு இப்படி படங்காட்ட வேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, செண்பகம் said:

நாடு தன்னிறைவு அடைய என்ன வழி என சிந்தித்து நடை முறைபடுத்துவதை விட்டுவிட்டு இப்படி படங்காட்ட வேண்டாம்

கோத்தா விசுவாசிகள் உங்கள் கருத்தை கண்டு கெத கழிக்கப்போகினம் .

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி.. Autocratic leadership ஐ காட்டுவது புதிதல்ல. இராணுவங்களில் இதுதான் தளபதிகளில் நிலை.

ஆனால்.. தேசிய தலைவர் போன்று இவர் ஒரு Charismatic leader ஆக எப்போதும் வர முடியாது.

மேலும் ஒரு சனநாயக நாட்டின் தலைவர் democractic leader ஆக இருப்பதும் மக்களின் கருத்தை பங்களிப்பை கேட்பதும் உணர்வதும் வழிகாட்டுவதுமே நல்லதாக அமைய முடியும். ஊழியர்களும் மக்களே.. பயன்பெறுநரும் மக்களே. எல்லோர் கருத்தையும் உள்வாங்கி சரியான வழிகாட்டுதலை வழங்க வகை செய்வதை விடுத்து இராணுவ தளபதி போல் நிர்வாகம் நடத்த முடியாது சனநாயக நாட்டில்.. நிறுவனங்களில். 

Leadership Styles, 9 Types of leadership PART 1 (Session 14) management  lessons/Dr Kirti Jainani - YouTube

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, செண்பகம் said:

நாடு தன்னிறைவு அடைய என்ன வழி என சிந்தித்து நடை முறைபடுத்துவதை விட்டுவிட்டு இப்படி படங்காட்ட வேண்டாம்

இல்லை, அவர் செய்வது சரியானது. அமேரிக்காவில் இருந்த படியால், புரிகிறது.

இலங்கையில் ஒரு அரச அலுவலகத்தில் வேலை ஒன்று ஆகவேண்டுமாயின், முதலில் அவர்கள் சொல்வது, நாளைக்கு வாங்க, ஹெட்ட எண்ட.

ஏதோ தலைக்கு மேலே வேலைப்பளுக்கள் போலவும், தாம் தான் அலவலகத்தின் முழு வேலையை செய்வது போலவும் பீலா விடுவார்கள்.

பீலாவுக்கு காரணம்.... லஞ்சம் வாங்க...  

லண்டனிலை இருந்து போன ஒருத்தர் சொன்னார். ஊரிலை ஒரு சொந்தத்துடன், உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்துக்கு போனதாகவும், வெளியில இருங்கோ எண்டு போட்டு, உதயன் பேப்பரை வாசித்து முடித்து, கூப்பிட்டு, இண்டைக்கு சரியான பிசி, நாளைக்கு வாருங்கோ எண்டாராம்....

தனக்கு கொதி வந்து, உதயன் பேப்பர் வாசிக்கவே, சம்பளம் தருகினம் எண்ட, அவருக்கு கொதி வந்துடுத்தாம்.

உன்னால முடிஞ்சத பாரு எண்ட ரீதிலா சவால் விட, நான் வெளிநாட்டுக்காரர்.... இவரோட வந்தனான்.... இங்கு ஒரு நலத்திட்டம் விசயமாக நான் தொடர்பில் இருக்கும் அமைச்சரிடம் பேசுகிறேன், நாங்கள் பேசினது ரெக்கோர்டிங்கில் இருக்கு எண்டோன்ன, பம்பரம் போல சுழன்று அலுவலை முடித்துக் கொடுத்தாராம்.

4 hours ago, தமிழ் சிறி said:

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

அந்த.. ஈர வெங்காயம் எல்லாம் இருக்கட்டும்.
முதலில் ஜனாதிபதி 😷 "மாஸ்க்" போட்டுக் கொண்டு, 
அந்த அலுவலகத்துக்கு போயிருக்க வேண்டாமா...
அதுவே... ஒரு முன்மாதிரியாக இருந்திருக்குமே.

மற்றவர்களுக்கு... புத்திமதி சொல்ல முதல், தங்களை திருத்திக்  கொள்ள வேண்டும்.

போட்டுகொண்டு போனவர். அறிவுரை சொல்ல கழட்டி இருப்பார்.... உதவியாளர்கள் வாங்கி வைத்திருப்பினம்...

மேலும் அந்தாளுக்கு கொரோன இல்லை என்று உடனே சோதிச்சு சொல்ல, டாக்குத்தர்மாறும் பக்கத்தில் நிப்பினம். 😁

ஜனாதிபதி எல்லோ... 😎

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

 

மேலும் அந்தாளுக்கு கொரோன இல்லை என்று உடனே சோதிச்சு சொல்ல, டாக்குத்தர்மாறும் பக்கத்தில் நிப்பினம். 😁

ஜனாதிபதி எல்லோ... 😎

கொத்தா என்றால் கொரானா கிருமிக்கும் பயமாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, செண்பகம் said:

திடீரென அரச அலுவலகத்திற்குள் நுழைந்த ஜனாதிபதி! கேள்விகளால் திகைத்துப்போன ஊழியர்கள்

இதெல்லாம் சிறிலங்கா மக்களுக்கு பிரமாண்டமாக தெரியும்.
ஆனால் அபிவிருத்தியடைந்த ஜனநாயக நாடுகளில் இருந்து பார்க்கும் போது சூட்சுமங்கள் விளங்கும்.
பிள்ளையானுக்கு வாழ்த்து சொல்லும் மக்கல் இருக்கும் வரை....😁

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

இதெல்லாம் சிறிலங்கா மக்களுக்கு பிரமாண்டமாக தெரியும்.
ஆனால் அபிவிருத்தியடைந்த ஜனநாயக நாடுகளில் இருந்து பார்க்கும் போது சூட்சுமங்கள் விளங்கும்.
பிள்ளையானுக்கு வாழ்த்து சொல்லும் மக்கல் இருக்கும் வரை....😁

சகோதரர் மாரின் சொத்து கணக்கை மூடி மறைக்க அதிஉத்தமர் இப்படியான ஸ்டண்ட்களை செய்யத்தான் வேணும்...சிங்களமக்களை எப்படி கைக்குள் போடுவது என்று நல்லாக தெரிந்த அதிஉத்தமர்.....சாதாரண சட்டத்தரணியாகவும்,நடுத்தர  படையதிகாரியுமாக இருந்த தங்கள் எஜமானர்கள் எப்படி சிறிலங்காவின் பணக்காரவரிசையில் முதல் இடங்களை பிடித்தார்கள் என நினைத்து பார்க்க போவதில்லை சிங்களமக்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.