Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

பிரதேச வாதம் இல்லை. சலுகைகளுக்கும்,  சுயநலத்திற்கும் சாய்பவர்கள். அதை மறைக்க கையாளும் சொல் அது. எதிரி நம்மை  பிரித்து லாபமடைய பாவிக்கும் ஆயுதங்களில் இதுவும் ஒன்று. அதையே பிரட்டி பாவித்து தம்மை மறைத்துக்கொள்கிறார்கள். எஜமானர்கள் என்ன செய்கிறார்கள்?  தர்மத்தை போதிக்க வேண்டியவர்கள், குடி  மக்களை இனபேதம் இன்றி  சமமாக நடத்த வேண்டியவர்கள் எங்கும் எதிலும் கக்குவது இனவாதம். நாங்களும் இந்நாட்டின் மூத்த குடிகளே, என்று தத்துவார்த்தமாகவிளக்குபவருக்கு, தாம் தமது ஆதாரத்தை காட்டி நிரூபிப்பதை விடுத்து, இனவாதி என்று மாற்றி சித்தரிக்கவில்லையா? அவர்களின் தொண்டர்களும், அடிமைகளும் அதைத்தானே பிரதிபலிப்பார்கள். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சினால்,  அவர்கள் சொல்வது சரி என்றாகிவிடும். எஜமானரின் ஆயுதம் இனவாதம், அவர் தொண்டரின் வாதம் பிரதேசவாதம்.

வேதனை என்னவென்றால், இதுபற்றி எதுவுமே எழுதவேண்டாம் என்றுவிட்டு, இப்போது நானே எழுதிக்கொண்டிருக்கிறேன். 

மாவீரர்களின் தியாகங்கள் மக்களின் மனதில் இருந்தால்ப் போதும், வெளியில் காட்டப்படத் தேவையில்லை என்று சொல்வதும் ஒருவகையில் பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப்போகிறது. அதுபோல, மக்களா கேட்டர்கள் என்று கேட்பதோ, பிசுபிசுத்துப் போய்விட்டது என்று சொல்வதோ, இதன் பின்னால் நின்று ஹர்த்தாலை நடத்துபவர்கள் யாரென்று கேள்விகேட்பதோ தமிழர் நலன்சார்ந்து எழுப்பப்படும் கேள்விகள் அல்லவென்பது தெளிவு.

சிலவேளைகளில் சிந்திக்கும்பொழுது, மிக அண்மைக்காலம்வரை இவ்வாறான மக்கள் போராட்டங்களுக்கும், நினைவேந்தல்களுக்கும் உண்மையாகவே ஆதரவு வழங்கிய எம்மில் சிலர் இன்று அவற்றினைப் புறக்கணிக்கும் முகமாகவும், கேள்விகேட்கும் முகமாகவும் செயற்படுவது அவர்கள் இன்று வரிந்திருக்கும் புதிய அரசியல் பாதையின் காரணத்தினால்த்தானோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. 

மொத்த இனத்தினதும் விடுதலைக்காக தமதுயிரை வழங்கிய மாவீரர்களுக்கான நினைவேந்தல்களை முன்னெடுப்பது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தினைச் சார்ந்தவர்கள் என்பதற்காகவே எம்மில் சிலர் அந்த நிகழ்வினை எதிர்க்க நினைப்பதும், இழிவாகப் பேசுவதும், மக்களுக்கு இவை தேவையற்றவை என்று சொல்வதும், மாவீரர்களுக்கான நினைவேந்தலினை இன்றிருக்கும் முன்னாள்ப் போராளிகள் என்னும் சிலரை மேற்கோள் காட்டி "தேவையற்றவை" என்று நிறுவ முயல்வதும் வேதனையே. 

  • கருத்துக்கள உறவுகள்

சுயநலம் பெருகி, சலுகைகளுக்கு மக்கள் விலை போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதே யதார்த்தம். அதற்கு பல்வேறு காரணங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன் வைக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ரஞ்சித் said:

இதை நீங்கள் நம்பி ஏற்றுக்கொள்கிறீர்களா? 

இதில் என்ன சந்தேகம்? திலீபன் ஒரு பயங்கரவாதி, ஆகவே அவரது நினைவுநாளை அனுஷ்ட்டிப்பது பயங்கரவாதிகளை ஆதரிப்பது போன்றது என்று சொல்லி, நினைவுநாளை நடத்த விடாமல் தடுத்த சிங்களப் பேரினவாத அரசுதான் இதைக் கையில் எடுத்தது. இதற்கெதிராக மக்கள் போராடுவது தவறென்று சொல்கிறீர்களா? 

 

ஒரு போராளியை மேற்கோள் காட்டி உங்கள் கருத்தினை முன்வைக்கிறீர்கள்? ஏன், உங்கள் கருத்திற்கு "போராளி" என்பவர் மூலம் வலுச்சேர்க்கவா? மக்கள் போராடவே கூடாதெனும் மனோநிலையை ஏற்படுத்த நினைக்கிறீர்கள். அதுசரி, ஹர்த்தால் அனுஷ்ட்டிப்பது எப்படி அவரது வாழ்க்கையினைப் பாதிக்கும் என்று அவர் நினைக்கிறார்? 

ஏன் மறுக்கணும்    திலிபன் ஞாபக நாளுக்கு உண்ணாவிரதம் அறிவித்தவர்கள் , ஹர்த்தால் அறிவித்தவர்கள் ஏன் ஓர் நாள் மட்டும் அறிவிக்க வேண்டும் தீர்வு அதாவது நினைவு நாளை அனுஸ்டிக்க தீர்வு வரும் வரை  அவர்கள்  உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும்  ஒரு கிழமையோ அதற்கு மேலயோ இருந்து பெற்றுக்கொடுக்கலாம் தானே மக்களை ஏன் குழப்பமடைய செய்ய வேண்டும்  2009 மே மாதத்திற்கு பிறகு புலிகளை சார்ந்த அனைத்து நினைவுகளுக்கும் மகிந்த ராஜபக்ச அரசு தடை விதித்திருந்தது 
2015 ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை யாரும் திலிபன் ஞாபக நாளைப்பற்றி பெரிதாக பேசவில்லை ஆனால் தடை இல்லை ஆனால் ஆயிரக்கணக்கான மக்களை அந்த நினைவு நாளில் காணக்கூடியதாகவும் இல்லை  ஆனால் மக்கள் மறந்ததாக அர்த்தமும் இல்லை திலிபனை.

டக்ளஸ் புலிகளை அன்றிலிருந்து வெறுத்து வருகிறார் அவர் பேச்சு அவர் திலிபனை பற்றி  பேசியது அவர் அரசியல் இருப்புக்கும் சிங்கள மக்களை குளிர்விப்பதற்குமாக இருக்கலாம் . ஆனால் எந்த சிங்கள அரசியல் வாதிகளும் திலிபனை அவதூறாக பேசியதில்லை .

போராளியை பற்றி நான் பேசக்காரணம் வலு சேர்க்கவல்ல அவர்களை வலு இழக்காமல் செய்வட்கற்கு முன்னாள் போராளிகள் பல ர் தற்கொலை இறப்பு என செய்திகள் படிச்சு இருப்பியள்  இருப்பவர்களை நிம்மதியாக இருக்கும் காலத்திலாவது விடுங்கள் ஒரு நாள் இழப்பால் ஒன்றும் ஆகப்போவதில்லை என நீங்கள் சொல்லலாம்  ஆனால் தினக்கூலி வேலை செய்பவர்களுக்கு அது பொருந்தாது மக்கள் போராட்டம் நடத்தாலாம் ஆனால் அந்த போராட்டத்திற்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பது எனது நிலை கிடைக்காத ஒர் தீர்வுக்கு கர்த்தால் ஆர்ப்பாட்டம் பண்ணுவது வீண் தானே என்பதை நான் சொல்ல முனைகிறேம் 

 

 

16 hours ago, ரஞ்சித் said:

வேதனை என்னவென்றால், இதுபற்றி எதுவுமே எழுதவேண்டாம் என்றுவிட்டு, இப்போது நானே எழுதிக்கொண்டிருக்கிறேன். 

மாவீரர்களின் தியாகங்கள் மக்களின் மனதில் இருந்தால்ப் போதும், வெளியில் காட்டப்படத் தேவையில்லை என்று சொல்வதும் ஒருவகையில் பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப்போகிறது. அதுபோல, மக்களா கேட்டர்கள் என்று கேட்பதோ, பிசுபிசுத்துப் போய்விட்டது என்று சொல்வதோ, இதன் பின்னால் நின்று ஹர்த்தாலை நடத்துபவர்கள் யாரென்று கேள்விகேட்பதோ தமிழர் நலன்சார்ந்து எழுப்பப்படும் கேள்விகள் அல்லவென்பது தெளிவு.

சிலவேளைகளில் சிந்திக்கும்பொழுது, மிக அண்மைக்காலம்வரை இவ்வாறான மக்கள் போராட்டங்களுக்கும், நினைவேந்தல்களுக்கும் உண்மையாகவே ஆதரவு வழங்கிய எம்மில் சிலர் இன்று அவற்றினைப் புறக்கணிக்கும் முகமாகவும், கேள்விகேட்கும் முகமாகவும் செயற்படுவது அவர்கள் இன்று வரிந்திருக்கும் புதிய அரசியல் பாதையின் காரணத்தினால்த்தானோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. 

மொத்த இனத்தினதும் விடுதலைக்காக தமதுயிரை வழங்கிய மாவீரர்களுக்கான நினைவேந்தல்களை முன்னெடுப்பது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தினைச் சார்ந்தவர்கள் என்பதற்காகவே எம்மில் சிலர் அந்த நிகழ்வினை எதிர்க்க நினைப்பதும், இழிவாகப் பேசுவதும், மக்களுக்கு இவை தேவையற்றவை என்று சொல்வதும், மாவீரர்களுக்கான நினைவேந்தலினை இன்றிருக்கும் முன்னாள்ப் போராளிகள் என்னும் சிலரை மேற்கோள் காட்டி "தேவையற்றவை" என்று நிறுவ முயல்வதும் வேதனையே. 

இன்னும் நல்லாட்ட்சி அரசாங்கம் என நினைத்திருக்கும் உங்களை ஒன்றும் செய்ய இயலாது  என சிம்பிளா சொல்லலாம் ரகுநாதன் தற்போதய நிலை வேறு என்பதை புரிந்து கொள்ளும் வரைக்கும் நீங்கள்  அந்த நிலையில் தான் இருப்பீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, விசுகு said:

இங்கு அரசியல்  பேசவரவில்லை சகோ

கர்த்தால்  செய்யுங்கோ என்றும்  கேட்கவில்லை

செய்யக்கூடாது என்று ஆர்ப்பாட்டம்  செய்வது எதற்காக??

நீங்கள் குறிப்பிடும் தமிழ் அரசியல்வாதிகளை விட இது வடிகட்டிய சுயநலம்

இன்று அரசியல் சூதாட்டம் களைகட்டி இருக்கிறது மக்களை குழப்பும் நடவடைக்கையில் பலர் ஒன்றை செய்துவிட்டு வேறெங்கோ கமிசன் போல அரசியலில் இடம் தேட நினைக்கிறார்கள் 

கிழக்கில் கர்த்தால் நடந்ததும் உன்மை நாலு பேர் செய்திக்காகவும் அரசியலுக்காகவும் ஆர்ப்பாட்டம் நடத்தியதும் உண்மை 

21 hours ago, goshan_che said:

இதில் ஒரு லொஜிக் இருக்கிறது. வாழைச்சேனை மட்டத்தில் ஒரு சின்ன பகவதி இதை நடத்தியும் இருக்கலாம்.

அப்படித்தான் கேள்விப்பட்டன் அரசியலில் முன்நிற்க என்று சொன்னமாதிரி இருந்திச்சு

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, satan said:

பிரதேச வாதம் இல்லை. சலுகைகளுக்கும்,  சுயநலத்திற்கும் சாய்பவர்கள். அதை மறைக்க கையாளும் சொல் அது. எதிரி நம்மை  பிரித்து லாபமடைய பாவிக்கும் ஆயுதங்களில் இதுவும் ஒன்று. அதையே பிரட்டி பாவித்து தம்மை மறைத்துக்கொள்கிறார்கள். எஜமானர்கள் என்ன செய்கிறார்கள்?  தர்மத்தை போதிக்க வேண்டியவர்கள், குடி  மக்களை இனபேதம் இன்றி  சமமாக நடத்த வேண்டியவர்கள் எங்கும் எதிலும் கக்குவது இனவாதம். நாங்களும் இந்நாட்டின் மூத்த குடிகளே, என்று தத்துவார்த்தமாகவிளக்குபவருக்கு, தாம் தமது ஆதாரத்தை காட்டி நிரூபிப்பதை விடுத்து, இனவாதி என்று மாற்றி சித்தரிக்கவில்லையா? அவர்களின் தொண்டர்களும், அடிமைகளும் அதைத்தானே பிரதிபலிப்பார்கள். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சினால்,  அவர்கள் சொல்வது சரி என்றாகிவிடும். எஜமானரின் ஆயுதம் இனவாதம், அவர் தொண்டரின் வாதம் பிரதேசவாதம்.

நாங்கள் என்றும் பிரதேச வாதம் என சொல்லவில்லை அடிக்கடி இந்த சொல்லை பாவிப்பவர்களுக்கு தெரியும் யார் இந்த பிரதேச வாதிகள் என அளவானவர்கள் அப்படியே தூக்கி  போடலாம் தொப்பியை 
நீங்கள் அஞ்சாமல் இருக்கலாம் நாங்கள் இங்கு அஞ்சித்தான் வாழ வேண்டும்  அவர்கள் எஸ் டி எவ் பாதுக்காப்புடன் இருந்தும் அரசுடன் ஒட்டி இருந்தும் கதை சொல்லும் போது மட்டும் வேத வாக்கு என எண்ணிக்கொண்டு இருங்கள் 

நீங்கள் நம்பினால் நம்புங்கள் இங்கு கருத்து எழுதினால் எனக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைக்கிறது நம்புறீங்களா 

  • கருத்துக்கள உறவுகள்
On 30/9/2020 at 03:08, தனிக்காட்டு ராஜா said:

ஓர் போராளிய சந்திச்சன் அதே கர்த்தால் நாளன்று எனக்கும் தேத்தண்ணி குடிக்க கடை இல்லை அதனால் அவரை சந்திக்க நேர்ந்தது உயிர் பிழச்சி இருக்கிறவனையும் வாழ விடமாட்டார்கள் போல் இருக்கிறது என்று சொன்னார்

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஏன் ஓர் நாள் மட்டும் அறிவிக்க வேண்டும் தீர்வு அதாவது நினைவு நாளை அனுஸ்டிக்க தீர்வு வரும் வரை  அவர்கள்  உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும்

யாரும் யாரையும்  ஆயுதமுனையில் வற்புறுத்தி, பயமுறுத்தி ஹர்த்தாலுக்கு வாருங்கள் என்று  அழைக்கவில்லை. ஒரு நாளுக்கே உங்களிடம் முறையிட்டவர்கள், தீர்வு வரும்வரை உண்ணாவிரதம் இருந்தால் பிழைப்பு என்னாவது? திலீபனைபோல் எல்லோரும் உண்ணாவிரதம் இருந்து இறந்தால் அதற்கும் ஒரு விளக்கம் கொடுக்க இலகுவாக இருக்கும். அரசாங்கத்தின் சர்வாதிகாரப்போக்கை கண்டித்து தமது எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் எது செய்தாலும் வாயை மூடிக்கொண்டு தலை ஆட்டவேண்டும் என்று நினைக்கிறீர்களா?  

"அதிலும் காலையில் மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டு தான் சிலர் போயிருப்பார்கள்..."
 

சிலரின் அனுபவம் பேசுதோ????

  • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2020 at 19:12, ரஞ்சித் said:

ஆர் அந்தப் புரட்சியாளர்கள் அண்ணை?
 

வேற யார அந்த காலத்து தாடிக்கார அண்ணமார்,தோழர்மார் இப்ப புலம்பெயர்ந்து முதலாளித்துவ நாடுகளில் பெண்ஸ்கார் ஓடிக்கொண்டு  சோசலிசம் பேசுறவையள்.....அவையள் போற போக்கில் மாவோவின் அவதாரம் கோத்தா என்று சொன்னாலும் சொல்லுவினம் போல இருக்கு....

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2020 at 04:03, satan said:

யாரும் யாரையும்  ஆயுதமுனையில் வற்புறுத்தி, பயமுறுத்தி ஹர்த்தாலுக்கு வாருங்கள் என்று  அழைக்கவில்லை. ஒரு நாளுக்கே உங்களிடம் முறையிட்டவர்கள், தீர்வு வரும்வரை உண்ணாவிரதம் இருந்தால் பிழைப்பு என்னாவது? திலீபனைபோல் எல்லோரும் உண்ணாவிரதம் இருந்து இறந்தால் அதற்கும் ஒரு விளக்கம் கொடுக்க இலகுவாக இருக்கும். அரசாங்கத்தின் சர்வாதிகாரப்போக்கை கண்டித்து தமது எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் எது செய்தாலும் வாயை மூடிக்கொண்டு தலை ஆட்டவேண்டும் என்று நினைக்கிறீர்களா?  

"அதிலும் காலையில் மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டு தான் சிலர் போயிருப்பார்கள்..."
 

சிலரின் அனுபவம் பேசுதோ????

மக்கள் இப்படி சொல்லவில்லை மக்கள் பிரதிநிதி சொல்லிட்டார் ஐயா சுமந்து 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.