Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஓரணியில் தமிழ் உறவுகள் ; அடக்கியாள நினைக்காதீர்;சம்பந்தன் கடும் எச்சரிக்கை.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓரணியில் தமிழ் உறவுகள் ; அடக்கியாள நினைக்காதீர்;சம்பந்தன் கடும் எச்சரிக்கை.!

Screenshot-2020-09-30-11-16-13-461-org-m

"வடக்கு, கிழக்கு தமிழ்பேசும் மக்களின் தாயகம். இங்கு தமிழ்பேசும் உறவுகளை அடக்கியாள முடியும் என்று ராஜபக்ச அரசு இனியும் எண்ணவேகூடாது. கடந்த 26ஆம் திகதியும், 28ஆம் திகதியும் இங்கு நடைபெற்ற அரசுக்கு எதிரான அறவழிப் போராட்டங்களின் வெற்றிச் செய்திகள் இதற்கு உதாரணங்களாக உள்ளன."

- இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும், ராஜபக்ச அரசின் திட்டமிட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் அழைப்புக்கிணங்க கடந்த 26ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டமும், 28ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் போராட்டமும் நடைபெற்றன. இதற்குத் தமிழ்பேசும் உறவுகள் முழுமையான பங்களிப்பை வழங்கியிருந்தார்கள்.

ஹர்த்தால் போராட்டம் நாம் நினைத்த மாதிரி வடக்கு, கிழக்கில் வெற்றியடைந்துள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தமிழ்பேசும் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அரசு எம்மை அடக்கியாள இனியும் நினைக்கவே கூடாது என்பதை தமிழ்பேசும் உறவுகள் ஓரணியில் நின்று புரியவைத்துள்ளனர்.

தமிழ்பேசும் உறவுகளின் இந்த உணர்வுபூர்வ எழுச்சியைக் கண்டாவது அரசு தனது போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழ்பேசும் மக்களுக்கு சகல உரிமைகளையும், நிரந்தர அரசியல் தீர்வையும் வழங்க இந்த அரசு முன்வர வேண்டும்" - என்றார்.

http://aruvi.com/article/tam/2020/09/30/17354/

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஓரணியில் தமிழ் உறவுகள் ; அடக்கியாள நினைக்காதீர்;சம்பந்தன் கடும் எச்சரிக்கை.!

மிகவும் சுவாரசியமான தலைப்புகள்.

சர்வதேசமயப்படுத்த எமது இனப்பிரச்சனையை இன்று மீண்டும் 80பதுகல் போன்று ஹர்த்தால், உண்ணாவிரதந்தாலும் அதிர்ச்சியூட்டும் தலையங்கங்களாலும் மட்டும் முன்னோக்கி கொண்டுசெல்லமுடியாது. மாறாக மக்களின் பிரதிபலிப்புகளை சர்வேத தூதுவர்களை நீங்கள் கிரமாக சந்தித்து அவர்களுக்கு தெரியப்படுத்துவதுடன் புலம்பெயர் மற்றும் எமது நலன் சார்ந்த உள்ளக சக்திகளுடன் சேர்த்து புதிய முன்னெடுப்புகளை செய்யும் மற்றைய தமிழ் கட்சிகளுக்கு தார்மீக ஆதரவை வழங்க வேண்டும். முன்னர் போல குண்டு சட்டிக்குள்ள குதிரை ஓடாமல் மற்றவர்கள் நல்லது செய்தால் அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கப்பழகுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழ்பேசும் உறவுகளின் இந்த உணர்வுபூர்வ எழுச்சியைக் கண்டாவது அரசு தனது போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

"ஆமாம் அரசிடம் மட்டுமல்ல சம்பந்தரான என்னிடமும் மாற்றம் ஏற்படும். இனி நான் எனது வாழ்நாளில்  சிங்கக்கொடி தூக்கமாட்டேன்". இப்படிச் சம்பந்தர் சொன்னதை என் கனவில் கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

"ஆமாம் அரசிடம் மட்டுமல்ல சம்பந்தரான என்னிடமும் மாற்றம் ஏற்படும். இனி நான் எனது வாழ்நாளில்  சிங்கக்கொடி தூக்கமாட்டேன்". இப்படிச் சம்பந்தர் சொன்னதை என் கனவில் கேட்டேன்.

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்.

நானும் யாழ்களம்போல் சாத்திரங்களை நம்புவதில்லை. ஆனாலும் நம்பிக்கைதான் வாழ்க்கை. இதனை யாராலும் மாற்ற முடிவதில்லையே....! கனவுகாணுங்கள் என்று அன்றைய இந்திய சனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் ஏன் சொன்னார்.... ??

 Quellbild anzeigen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.