Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களது இருப்பையும் பாதுகாப்பையும் இந்தியா தான் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது இருப்பையும் பாதுகாப்பையும் இந்தியா தான் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் - சிறிதரன்.!

Sritharan-MP-210819-seithy1.jpg

இலங்கை அரசின் சர்வாதிகாரப் போக்கும் இப்போதுள்ள 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் அதனால் இலங்கையில் நடைபெறப்போகும் பல காரியங்களும் எங்களை தாண்டி இந்த அரசு ஏதோ செய்யப் போகின்றது என்ற அச்சம்  எங்களிடம் இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

kili-spb-1024x538.jpg

“மறைந்த பாடகர் எஸ்.பி.பி தமிழ் மக்களினுடைய உணர்வுகளோடு பயணித்த ஒருவர் அதற்காக பல பாடல்களை எங்கள் இனம் சார்ந்து எங்கள் தேசம் சார்ந்து பாடி இருக்கின்றார்.

எங்களது இருப்பையும் பாதுகாப்பையும் இந்தியா தான் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நாங்கள் எங்களை உங்களிடம் (இந்தியா) ஒப்படைத்து காத்திருக்கின்றோம் .

என்ற அவர் மேலும் எம்மைப் பாதுகாக்கின்ற பொறுப்பும் இந்தியாவிடம் ஒப்படைக்க பட்டிருக்கின்றது” என குறிப்பிட்டார்.

spb-1024x538.jpg

குறித்த அஞ்சலி நிகழ்வில் இந்திய துணைத்தூதுவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் குருகுலராஜா மற்றும் கலைப் படைப்பாளிகள் கலைஞர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தியதுடன் தமது இரங்கல் செய்தியினையும் துணைத்தூதுவர் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

https://thamilkural.net/newskural/mainnews/76134/

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எங்களது இருப்பையும் பாதுகாப்பையும் இந்தியா தான் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் - சிறிதரன்.!

குரங்கிடம் ஆப்பம் பங்கிடக் கொடுத்த பூனைகளின் கதையை இவர் இன்னமும் படிக்கவில்லைப் போலும்.🤔

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு முள்ளிவாய்க்காலுக்கு தயாராக வேண்டியதுதான் ... ☹️

5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எங்களது இருப்பையும் பாதுகாப்பையும் இந்தியா தான் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நாங்கள் எங்களை உங்களிடம் (இந்தியா) ஒப்படைத்து காத்திருக்கின்றோம் .

என்ற அவர் மேலும் எம்மைப் பாதுகாக்கின்ற பொறுப்பும் இந்தியாவிடம் ஒப்படைக்க பட்டிருக்கின்றது” என குறிப்பிட்டார்.

அடடா அப்படியா?. மீண்டும் 80க்கு போய்டடமா?. வடக்கு கிழக்கு இணைப்பில் இருந்து மாகாணசபை அதிகாரங்கள் வரை 1987இல் இருந்து தொடர்ந்து இந்தியாவால் ஒன்றுமே செய்யமுடியாத நிலையில் நீங்கள் உங்கள் இயலாதன்மையை பறைசாற்றும் பேச்சு  தான் இது. 2009கு பின்னர் 13+ என்று கதை விட்டு இருநாட்டு தலைவர்களும் அறிக்கைவிட்ட பின்னரும் இன்றுவரை என்ன நடந்தது. இனி நீங்கள் இந்தா உணவுப்பொட்டலங்கள் வானத்தில் இருந்து விழுகிறது என்று அண்ணாந்து பார்த்து கொண்டுகிடக்கவேண்டியது தான்.

காஸ்மீரில் கடும் போக்கு எடுத்திருக்கும் இந்தியா எப்படி இலங்கையில் இன்னொரு கொள்கையை கடைபிடிக்கும்?. பாதுகாப்பு சபையில் அங்கத்துவ  நாடான சீனாவின் இலங்கை மீதான ஆதிக்கத்தை மீறி இந்தியாவால் நகர முடியாது. சீன பாணியில் சிறுபான்மையினரை  பெருமைப்பாண்மை இனத்துடன் ஒன்றிணைப்பைதையே இலங்கை செய்யும். சீனாவும் தன் 
நலனுக்காக அதையே ஊக்குவிக்கும். நாங்கள் இடையில இந்தியாவை நம்பி நசியவேண்டியதுதான். 

இலங்கையில் உண்மையில் யனநாயகம் நிலக்கவேண்டுமாயின் ராஜபக்ஷக்கள் முடக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால்  சர்வேதேச மனித உரிமை முனைப்புகள்  ஒருகட்டத்துக்கு மேலால் போகாமல் இந்தியா பார்த்துக்கொண்டது. ராஜபக்ஷக்கள் தப்பித்துக்கொண்டனர். இப்பொது இந்தியாவின் நிலை?. நேபாளம் சீன உந்துதலுடன் தனது எல்லைகளை நகர்த்த பாக்கிறது. அவர்களது  எல்லையையே பாதுகாக்கமுடியாத நிலை இந்தியாவுக்கு . 

இலங்கை விடயத்தில் இந்தியாவால் ஒன்றை தான் செய்யமுடியும். மாகாணசபை தேர்தலை விரைவில் வைக்க அழுத்தம் கொடுக்கலாம். சிங்கள பெரும்பான்மையுடன் வந்த ராஜபக்ஷக்களுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் இந்தியா அழுத்தம் கொடுத்தால் இருக்கிறது போய் விடும் என்று இந்திய பயப்படக்கூடும். எங்களது அரைசியலும் சிதறுண்டு இருப்பதால் மாகாணசபையும் தனது நலனுக்கு எதிரானவர்களிடம் போய்விடும் என இந்திய சிந்திக்கக்கூடும். எனவே ஒரு வெளி சக்தி எங்கள் விடயத்தில் தலையிடுவதட்கு அனுகூலமான காலம் தற்போழுது இல்லை. அதை உருவாக்க எங்களது செயல்பாடுகளை மாற்றவேண்டும். எங்களுக்கு ஒரு கட்சியையே உருப்படியா நடத்த தெரியாது. அதட்குள் வானம் ஏறி வைகுண்டம் போக நிக்கிறம்!

Edited by puthalvan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, puthalvan said:

அடடா அப்படியா?. மீண்டும் 80க்கு போய்டடமா?. வடக்கு கிழக்கு இணைப்பில் இருந்து மாகாணசபை அதிகாரங்கள் வரை 1987இல் இருந்து தொடர்ந்து இந்தியாவால் ஒன்றுமே செய்யமுடியாத நிலையில் நீங்கள் உங்கள் இயலாதன்மையை பறைசாற்றும் பேச்சு  தான் இது. 2009கு பின்னர் 13+ என்று கதை விட்டு இருநாட்டு தலைவர்களும் அறிக்கைவிட்ட பின்னரும் இன்றுவரை என்ன நடந்தது. இனி நீங்கள் இந்தா உணவுப்பொட்டலங்கள் வானத்தில் இருந்து விழுகிறது என்று அண்ணாந்து பார்த்து கொண்டுகிடக்கவேண்டியது தான்.

காஸ்மீரில் கடும் போக்கு எடுத்திருக்கும் இந்தியா எப்படி இலங்கையில் இன்னொரு கொள்கையை கடைபிடிக்கும்?. பாதுகாப்பு சபையில் அங்கத்துவ  நாடான சீனாவின் இலங்கை மீதான ஆதிக்கத்தை மீறி இந்தியாவால் நகர முடியாது. சீன பாணியில் சிறுபான்மையினரை  பெருமைப்பாண்மை இனத்துடன் ஒன்றிணைப்பைதையே இலங்கை செய்யும். சீனாவும் தன் 
நலனுக்காக அதையே ஊக்குவிக்கும். நாங்கள் இடையில இந்தியாவை நம்பி நசியவேண்டியதுதான். 

இலங்கையில் உண்மையில் யனநாயகம் நிலக்கவேண்டுமாயின் ராஜபக்ஷக்கள் முடக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால்  சர்வேதேச மனித உரிமை முனைப்புகள்  ஒருகட்டத்துக்கு மேலால் போகாமல் இந்தியா பார்த்துக்கொண்டது. ராஜபக்ஷக்கள் தப்பித்துக்கொண்டனர். இப்பொது இந்தியாவின் நிலை?. நேபாளம் சீன உந்துதலுடன் தனது எல்லைகளை நகர்த்த பாக்கிறது. அவர்களது  எல்லையையே பாதுகாக்கமுடியாத நிலை இந்தியாவுக்கு . 

இலங்கை விடயத்தில் இந்தியாவால் ஒன்றை தான் செய்யமுடியும். மாகாணசபை தேர்தலை விரைவில் வைக்க அழுத்தம் கொடுக்கலாம். சிங்கள பெரும்பான்மையுடன் வந்த ராஜபக்ஷக்களுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் இந்தியா அழுத்தம் கொடுத்தால் இருக்கிறது போய் விடும் என்று இந்திய பயப்படக்கூடும். எங்களது அரைசியலும் சிதறுண்டு இருப்பதால் மாகாணசபையும் தனது நலனுக்கு எதிரானவர்களிடம் போய்விடும் என இந்திய சிந்திக்கக்கூடும். எனவே ஒரு வெளி சக்தி எங்கள் விடயத்தில் தலையிடுவதட்கு அனுகூலமான காலம் தற்போழுது இல்லை. அதை உருவாக்க எங்களது செயல்பாடுகளை மாற்றவேண்டும். எங்களுக்கு ஒரு கட்சியையே உருப்படியா நடத்த தெரியாது. அதட்குள் வானம் ஏறி வைகுண்டம் போக நிக்கிறம்!

அருமையான கருத்து... புதல்வன். 👍 :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா மட்டுமல்ல, யாராலும் இலங்கையை எதுவும் செய்யவோ, நகர்த்தவோகூட முடியாது  என்பதற்கு கடந்த பத்தாண்டுகள் சான்று.

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர் தனது இருப்பைப்பற்றிக்கூறுகிறார் நீங்கள் தப்பா நினைக்காதையுங்கோ

கூடிய விரவில் இவர் விக்கியர் பாசறையில் துண்டுபோடுவார் அதற்கான அடிக்கல் நாட்டல்தான் இந்தப்பேச்சு. அனேகமாக மணிவண்ணனையும் கூடவே அழைச்சுப்போவார். விக்கியருக்கு இரண்டு சால்வைத்துண்டுகள் இனாமாக வரப்போகுது.

மேலதிக செய்தி,

விக்கியரை ஆதரிச்சு பதிவு எனும் இணையத்தளம் சும்மா வெளுத்துவாங்குது இப்பதிவை இயக்குபவர் ஏழாலை மணியம் விதானையின் மகன். இவர் இந்தியாவின் நிகழ்சி நிஅலுக்குள் எப்போதோ உள்வாங்கப்பட்டுவிட்டார்.

Edited by Elugnajiru

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.