Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரிஷாத்தின் சகோதரர் விடுவிக்கப்பட்டதன் பின்னணி அரசியல் ரீதியான இரகசிய ஒப்பந்தமா ? - மெல்கம் ரஞ்சித்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாத்தின் சகோதரர் விடுவிக்கப்பட்டதன் பின்னணி அரசியல் ரீதியான இரகசிய ஒப்பந்தமா ? - மெல்கம் ரஞ்சித்

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கடும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நபர் தற்போது திடீரென விடுதலை செய்யப்பட்டுள்ளமைக்கு கடும் எதிர்ப்பினை தெரிவிப்பதாகக் கூறிய பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இதன் பின்னணி அரசியல் ரீதியான இரகசிய ஒப்பந்தமாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் கூறினார்.

விடுதலை செய்யப்பட்டுள்ள நபர் தொடர்பில் ஆரம்பத்தில் கூறப்பட்ட விடயங்களுக்கும் தற்போது கூறப்படும் விடயங்களுக்குமிடையில் வேறுபாடுகள் உள்ளன. 

இவர் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறிய தகவல்கள் எம்மிடம் உள்ளன. குற்றப்புலனாய்வு பிரிவினரின் செயற்பாடுகளில் முரண்பாடான நிலைமை காணப்படுகிறது. 

தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு கவலையடைந்துள்ள மக்களுக்கான விசாரணைகள் பக்கசார்பற்ற முறையில் நடத்தப்படுமா இல்லையா என்ற பயம் எமக்கு ஏற்பட்டுள்ளது. அத்தோடு இதில் அரசியல் ரீதியான இரகசிய ஒப்பந்தம் காணப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் எம்மிடம் கேள்வியெழுப்புகின்றனர். இந்த விடயத்தை சாதாரணமாக விட முடியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இனங்காணப்படுவதற்கான நடவடிக்கைகள் ஒழுக்கத்துடனும் பக்கசார்பற்ற ரீதியிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோருகின்றோம் என்றும் அவர் மேலும் கூறினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

 

https://www.virakesari.lk/article/91249

  • கருத்துக்கள உறவுகள்

வாடா சிங்கனே வா...

""ஒழுக்கத்துடனும் பக்கசார்பற்ற ரீதியிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோருகின்றோம் என்றும் அவர் மேலும் கூறினார்""

கத்தோலிக்கருக்கு வந்தா இரத்தம். தமிழருக்கு வந்தால் தக்காளிச் சட்னியா ? 

லூசுப்பயல்...😏

 பக்கச் சார்பும் அநீதியும் உன்னுடனும் சிங்கள ஆட்சியாளரிடமும் இருக்கும் வரையில் நீதியை எப்படி எதிர்பார்ப்பாய் மூடனே. 

😡

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவை ஆட்சிக்கு கொண்டுவந்ததில்  மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு பெரும் பங்கு உண்டு.
வச்சான் பாரு ஆப்பு ஆண்டகைக்கு.  ஆண்டகை மஹிந்தவிடம் அரசியல் அரிவரி  படிக்கவேண்டும்.🤣

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாத் சகோதரர் விடுதலையின் பின்னணியில் இரகசிய அரசியல் ஒப்பந்தம்; கர்தினால் சந்தேகம்

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரியாத் பதியுதீன் திடீரென விடுதலை செய்யப்பட் டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் சகோதரரான அவ ரின் விடுதலையின் பின்ன ணியில் அரசியல் ரீதியான இரகசிய ஒப்பந்தம் இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.”

இவ்வாறு தெரிவித்துள்ளார் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை. கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, நேற்று கொழும்பில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் கடும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நபர் தற்போது திடீரென விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம்.

விடுதலை செய்யப்பட்ட ரியாத் தொடர்பில் ஆரம்பத்தில் கூறப்பட்ட விடயங்களுக்கும், தற்போது கூறப்படும் விடயங்களுக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. இவர் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறிய தகவல்கள் எம்மிடம் உள்ளன. குற்றப்புலனாய்வு பிரிவினரின் செயல்பாடுகளில் முரண்பாடான நிலைமை காணப்படுகிறது.

தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு கவலையடைந்துள்ள மக்களுக்கான விசாரணைகள் பக்கசார்பற்ற முறையில் நடத்தப்படுமா இல்லையா என்ற பயம் எமக்கு ஏற்பட்டுள்ளது. அத்தோடு இதில் அரசியல் ரீதியான இரகசிய ஒப்பந்தம் காணப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்த விடயத்தை சாதாரணமாக விட முடியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இனங்காணப்படுவதற்கான நடவடிக்கைகள் ஒழுக்கத்துடனும் பக்கசார்பற்ற ரீதியிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோருகின்றோம்”என்றார்.

 

http://www.ilakku.org/ரிஷாத்-சகோதரர்-விடுதலையி/

அப்படியென்றால் இனிமேல் கள்ள காணி பிடிப்பும்; அரபு நிதியுடன் தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட குடியேற்றங்களும் தங்கு தடையின்றி நடக்கும் போல. 2015இல் நல்லாட்சி அரசு காலத்தில் எல்லாம் அடங்கியிருந்தது இனி எல்லாம் பழையபடி நடக்கப்போகுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.