Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரிஷாத்தை கைது செய்ய இரு குழுக்கள் களத்தில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

( எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கைது செய்து உரிய நீதிமன்றில் ஆஜர் செய்ய  நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புள டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபருக்கு நேற்று (13 ) மாலை ஆலோசனை வழங்கிய நிலையில், அவரை கைது செய்ய இரு குழுக்கள் அனுப்பி வைக்கப்ப்ட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் மன்னார் வீட்டுக்கு ஒரு குழுவும் கொழும்பிலுள்ள வீட்டுக்கு மற்றொரு குழுவும் அவரைக் கைது செய்ய அனுப்பி வைக்கப்ப்ட்டுள்ளதாக சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள தகவல்கள் தெரிவித்தன.  அரச பணம் தவறாக பயன்படுத்தப்ப்ட்டமை தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தல் சட்ட விதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பிலும் அவரையும் மேலும் இருவரையும் இவ்வாறு சந்தேக நபர்களாக  பெயரிட்டு வாக்கு மூலம் பதிவு செய்துகொள்ளவும், கைது செய்து உரிய மன்றில் ஆஜர்படுத்தவும்  சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியிருந்தார்.

நடந்து முடிந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, புத்தளத்தில் இருந்து 222 இ.போ.ச. பஸ்களில் 12 ஆயிரம் இடம்பெயர்ந்த  வாக்காளர்களுக்கு சிலாபத்துறை பகுதிக்கு, வாக்களிக்கச் செல்ல போக்குவரத்து வசதிகளை செய்துகொடுத்தமை ஊடாக, நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவதற்கான திட்டத்தின் 9.5 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் இந்த கைது நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/92089

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாத்தின் கணக்காளர் கைது!

முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியூதீனின் கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் என்பவர் கிருலப்பனை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ரிஷாத் பதியூதீன் உட்பட மூவரை கைதுசெய்யுமாறு பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவுக்கு அமையவே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/92076

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாட்டுக்கு கைது ஆணை: ‘முஸ்லிம்களைச் சீண்டிப்பார்க்கும் செயற்பாடு’

-பைஷல் இஸ்மாயில்

தற்போதைய அரசாங்கமானது, சிறுபான்மை மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான போக்கையே கடைப்பிடித்து வருவதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் மக்கள் தங்களுக்கு ஆதரவை தரவில்லை என்ற காரணத்தால், தற்போதைய ஆட்சியாளர்கள் இப்போது அதற்கான பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனரென்றார்.

இந்நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுத்தீனை கைது செய்வதற்கு ஆணை பிறப்பித்துள்ளமையானது, முஸ்லிம்களைச் சீண்டிப்பார்க்கும் செயற்பாடாகவே நோக்க வேண்டியுள்ளதெனவும், நஸீர் தெரிவித்தார்

http://www.tamilmirror.lk/திருகோணமலை/ரஷடடகக-கத-ஆண-மஸலமகளச-சணடபபரககம-சயறபட/75-256842

  • கருத்துக்கள உறவுகள்

தலைமறைவான ரிஷாட் பதியுதீன்; கொழும்பு, மன்னார், புத்தளம் பகுதிகளில் பொலிஸார் தேடுதல்

 
%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%
 42 Views

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தலைமறைவாகியுள்ளார்.

ரிஷாத் பதியுதீனை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு சட்டமா அதிபர் நேற்று விடுத்த உத்தரவை அடுத்து, அவரைக் கைது செய்வதற்கு ஆறு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்தக் குழுக்கள் கொழும்பு, மன்னார், புத்தளம் ஆகிய இடங்களில் ரிஷாத் பதியுதீனைத் தொடர்ந்தும் தேடி வருகின்றன.

அவர் தலைமறைவாகியதையடுத்து அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் பயணத் தடை சி.ஐ.டி.யினரால் பெறப்பட்டுள்ளது.

https://www.ilakku.org/தலைமறைவான-ரிஷாட்-கொழும்/

  • கருத்துக்கள உறவுகள்

"கள்ளன், பொலிஸ்... விளையாட்டு" என்றால், இதுதான். :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாதை கைது செய்ய வேண்டாம் எனக் கோரி புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை கைது செய்வதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் பாலாவியில் இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் கவனயீர்ப்பு ஆர்ப்பட்டம் ஒன்று இடம்பெற்றது.

புத்தளம் பாலாவி இளைஞர் அமைப்பு உள்ளிட்ட பொதுஅமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் ஏற்பாடு செய்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், முன்னாள் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எம்.ஐ.இல்யாஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது 20ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தம், தேர்தல் காலங்களில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை என்பனவற்றுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஜூம் ஆத் தொழுகையின் பின்னர் நபர்களுக்கிடையிலான தூரம், முகக் கவசம் உட்பட சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 'ரிஷாத் பதியுதீன் பயங்கரவாதி அல்ல. அவர் சிறுபான்மை மக்களின் தலைவர்', 'சிறுபான்மை கட்சிகளை அழிக்காதே', 'சஜீதை ஆதரித்தது குற்றமா?', 'சர்வதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் 20 ஆவது சீர்திருதத்தம் எமக்கு வேண்டாம்' உள்ளிட்ட மூன்று மொழிகளிலும் வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களையும் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். 

பாராளுமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தை இல்லாமல் ஆக்கி சர்வதிகார போக்குடைய அரசாங்கத்தை கொண்டுவருவதற்கே 20ஆவது அரசியல் யாப்பு சீர் திருத்தத்தை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

நாட்டில் ஜனநாயகம், சட்டம், ஒழுங்கு உள்ளிட்டவை பாதுகாக்கப்பட வேண்டும். பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு, கணக்காய்வாளர் திணைக்களம் உள்ளிட்டவையும் சுயாதீனமாக இயங்க வேண்டும். ஒரு தனிமனிதனுடைய கரங்களில் அதிகாரங்களை சென்றடைவதற்கும், ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைப்பதற்கும் நாங்கள் ஒருபோதும் துணைபோக மாட்டோம். 

20ஆவது அரசியல் சீர்திருத்ததிற்கு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆதரவு வழங்கவில்லை என்பதற்காக அவரை கைது செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கலாகும் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது புத்தளம் தலைமையக பொலிஸாரும், போக்குவரத்து பொலிஸாரும், பொலிஸ், இராணுவ மற்றும் விமானப்படை இரகசியப் பிரிவினரும் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/92276

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தா தான் எங்கேயாவது பதுக்கி வைத்திருப்பார் 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிழம்பு said:

20ஆவது அரசியல் சீர்திருத்ததிற்கு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆதரவு வழங்கவில்லை என்பதற்காக அவரை கைது செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அப்படியாயின் பவுத்த பிக்குகள், கத்தோலிக்க ஆயர் குழுக்கள் எல்லோரையுமல்லவா குழுக்கள் அமைத்து தேடவேண்டும்? அவர்களும் ஒளித்து விளையாட வேண்டும்.

ஏதோ சந்தனக் கடத்தல் வீரப்பனை தேடுகிற மாதிரி குழுக்கள் களம் என்று படம் காட்டுகினம்.

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாட்டை தேடி கிழக்கு வரை சி.ஐ.டி. வலைவீச்சு!

தொடர்ந்து நான்காவது நாள் முயற்சியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனைத் தேடி கிழக்கு மாகாணம் வரை தேடுதல் வேட்டையினை முன்னெடுத்தது.

கொழும்பு, புத்தளம் மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தது.

இதனைத் தொடர்ந்து, அவரைத் தேடி பொத்துவில், அம்பாறை, சம்மாந்துரை, நிந்தவூர் மற்றும் கல்முனை பகுதிகளில் உள்ள அவரது நெருங்கிய தொடர்புடையோர் வீடுகளிலும் சி.ஐ.டி.யினர் தேடுதலை நடத்தியிருந்தனர்.

அத்தோடு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அம்பாறையில் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரஃப் இல்லத்திலும் அருகில் உள்ள பொது மக்கள்களின் வீடுகளிலும் தேடுதலை நடத்தியுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது அரச பேருந்துகளில் புத்தளத்திலிருந்து மன்னாருக்கு மக்களை ஏற்றிச் சென்றமை தொடர்பாக அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் ரிஷாட் பதியுதீனை கைது செய்யச் சட்டமா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இருப்பினும் ரிஷாட் பதியுதீனை கைது செய்யப் பிடியாணை தேவையில்லை என்று நீதிமன்றம் அறிவித்ததில் இருந்து சில நாட்கள் கடந்துவிட்ட நிலையில் ரிஷாட் பதியுதீன் தலைமறைவாகினார்.

இதனை அடுத்து ரிஷாட் பதியுதீனை கைது செய்ய ஆறு தனி குழுக்கள் நியமிக்கப்பட்ட நிலையில் அதில் ஒரு குழு ரிஷாட் பதியுதீனின் கொழும்பு இல்லத்திற்கும் சென்று அவரது மனைவியிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ரிஷாட்டை-தேடி-கிழக்கு-வர/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.