Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை எந்தவிதத்திலும் நீக்கப்படக் கூடாது - பிரித்தானியா மீது இந்தியா அழுத்தம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிக்கப்படவேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதற்காக இந்தியா இங்கிலாந்துடன் தகவல்ப் பரிமாற்றங்களில் ஈடுபட்டிருக்கிறது. தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் தடைநீக்க வேண்டுகோள்களினைப் பரிசீலிக்கும் தீர்ப்பாயம் அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளை பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலிலிருந்து நீக்குவதற்காக எடுத்த முடிவிவினையடுத்தே இந்தியா அத்தடை நீட்டிக்கப்படவேண்டும் என்கிற அழுத்தத்தினை இங்கிலாந்து மீது திணித்திருக்கிறது. இந்திய ஒன்றியம் இத்தீர்ப்பாயம் வெளியிட்ட தீர்மானம்பற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது, பயங்கரவாதிகள் எனும் பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது தொடரப்படுவதை தமது நாடு விரும்புகிறதென்று அறிவித்திருக்கிறது.

பிரித்தானியாவுடனனா தகவல்ப் பரிமாற்றங்களின்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையுட்பட உலகின் பல நாடுகளிலும் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாகவும், பல நடவடிக்கைகளில் அது ஈடுபட்டுவருவதாகவும் கூறியிருப்பதோடு தனது வாதங்களுக்கு ஆதாரங்களாக ஆவணங்களையும், இலத்திரணியல் பதிவுகளையும் கொடுத்திருக்கிறது. இந்த ஆவணங்களில் முன்னாள் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் மீள் ஒருங்கிணைவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்களும் அடங்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

சென்ற மாதம், இங்கிலாந்தின் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் முறையீட்டு நீதிமன்று வெளியிட்ட தீர்ப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை இங்கிலாந்தில் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட அமைப்பாக பிரகடணம் செய்வதற்கு இங்கிலாந்தின் உள்த்துறை அமைச்சு எடுத்த முடிவு தவறுகள் நிறைந்ததும், நீதிக்குப் புறம்பானதுமான முடிவென்றும் தீர்ப்பு வழங்கியிருந்தது. இத்தீர்ப்பினையடுத்து தனது கடுமையான ஆட்சேபணையினைத் தெரிவித்த இலங்கையரசு புலிகள் அமைப்பு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தனது பயங்கரவாதச் செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருவதாகவும், உள்நாட்டில் வன்முறைகளை ஏவிவிடும் நடவடிக்கைகளிலும், அமைதியினைக் குலைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட எத்தனித்து வருவதாகவும் கூறியிருந்தது.


2019 ஆம் ஆண்டில் விடுக்கப்பட்ட தடைநீக்க வேண்டுகோளினை இங்கிலாந்து அரசு நிராகரித்திருந்ததினையடுத்து  புலிகள் மீதான தடையினை எதிர்த்து பெயர் தெரியாத ஆனால் அவ்வியக்கத்தின் முன்னணி அமைப்பான நாடுகடந்த தமிழீழ அரசெனும் அமைப்பினைச் சேர்ந்தவர்களே  அண்மையில் இத்தீர்ப்பாயத்திடம் முறையீடு செய்திருந்தார்கள். 

நாடுகடந்த தமிழீழ அரசு எனும் அமைப்பு இலங்கைக்கு வெளியே செயற்பட்டு வருவதுடன், இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகவும் பிரகடணப்படுத்தப்பட்டிருக்கிறது. புலம்பெயர் தமிழர்களின் ஆதரவோடு இலங்கையில் தமிழர்களுக்கான தனியான தேசம் ஒன்றினை அமைக்கும் நோக்கிலேயே இவ்வமைப்பு தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகிறது.


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையினை இங்கிலாந்து 2000 ஆண்டில் கொண்டுவந்திருந்ததுடன், இன்றுவரை அத்தடையினை நீட்டித்தும் வருகிறது. இங்கிலாந்து தவிரவும், இந்தியா உட்பட இன்னும் 32 நாடுகளில் அவ்வியக்கம் இன்றுவரை தடைசெய்யப்பட்டிருக்கிறது. இத்தடை தொடர்பான இறுதித் தீர்மானம் இங்கிலாந்து உள்த்துறைச் செயலாளரினால் எடுக்கப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.


தமிழர்களுக்கான தனியான தேசமொன்றினை இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நிறுவிட சுமார் 30 வருடங்களாக புலிகள் இயக்கம் ஈடுபட்டுவந்த ராணுவப் போராட்டம் அவ்வியக்கத்தின் தலைவரை இலங்கை ராணுவம் கொன்றதையடுத்து தோற்கடிக்கப்பட்டது.

மூலச் செய்தி : பிரஸ் ஸ்ட்ரட் ஒப் இந்தியா

https://www.thenewsminute.com/article/indian-government-wants-ban-ltte-continue-presents-evidence-uk-137607

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சங்கிகளின் உண்மையான சுயரூபம் வெளிவந்தவுடன், சப்பைக் கட்டுக் கட்டும் சங்கிகளின் அபிமானிகளில் ஒருவர். மறைமுகமாக இந்தியா ஈழத்தமிழருக்கு தீர்வினை வழங்கவிருக்கிறதாம்.

 

புலிகள் மீதான தடை நீட்டிக்கப்பட வேண்டும் என்று ஊளையிடும் இந்தியப் பிசாசுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியா ஒன்றும் அரசியல்வாதிகளின் விருப்பத்துக்கு முடிவெடுக்கும் நாடு கிடையாது. ஹிந்தியா மாதிரி சட்டத்தை மதிக்கத்தெரியாத காட்டுமிராண்டி நாடும் இல்லை.

சட்டம் தடையை நீக்கச் சொல்லி முடிவெடுத்தால்.. பிரித்தானிய அரசும் நீக்குவதை தான் செய்ய முடியும். ஹிந்தியா மாதிரி..சட்டத்தின் தீர்ப்பை.. ஆளுநர்.. அரசியல்வாதின்னு தலையில் போட்டு நீர்த்துப் போகச் செய்யும் நாடு கிடையாது.

என்ன இவ்வளவு கெடுதி செய்தும் ஹிந்தியா இன்னும் ஈழத்தமிழரின் நட்பு நாடு என்று சொல்லும்.. எம் தமிழ் அரசியல்வியாதிகளை நினைத்தால் தான் கவலையாக உள்ளது.

ஹிந்தியாவை விட சீனா.. தமிழர்கள் உறவு கொண்டாட பறுவாயில்லைப் போல இருக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்

"நாய்பெற்ற தெங்கம் பழம்" - பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது. :(

எந்த தீர்வையும் எட்ட விடக்கூடாது..

இலங்கையில் எப்பொழுதும் ஒரு குழப்பம் இருக்கவே வேணும்..

ஒரு பயலும் எந்தப் பக்கமும் சாயக்கூடாது..

நாம் குதிரை ஏறிக்கொண்டே இருக்கோணும்..!

 

6 hours ago, nedukkalapoovan said:

என்ன இவ்வளவு கெடுதி செய்தும் ஹிந்தியா இன்னும் ஈழத்தமிழரின் நட்பு நாடு என்று சொல்லும்.. எம் தமிழ் அரசியல்வியாதிகளை நினைத்தால் தான் கவலையாக உள்ளது.

வீடு அங்கை இருக்கு மட்டும் சொல்லிக்கொண்டுதான் இருப்பினும் 

 

6 hours ago, nedukkalapoovan said:

ஹிந்தியாவை விட சீனா.. தமிழர்கள் உறவு கொண்டாட பறுவாயில்லைப் போல இருக்குது. 

ஏன் ஒரு மிகவும் பாதிக்கப்படட சிறுபான்மை இனம் வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார இராணுவ வல்லரசாக வரும் நாட்டை எதிர்க்கும் போக்கை எடுக்க வேண்டும்?. நாம் இந்த விடயத்தில் எமது நீண்ட கால நலன் கருதி இந்த நாடுகளுடன் நட்ப்பு பேணினால் என்ன?. சீன மக்களை பெரும்பான்மையாக கொண்ட சிங்கப்பூரில் எமது மொழி அரசியல் சாசனத்தில் உத்தியோகபூர்வ மொழி. அந்த நாட்டின் தொடக்கம் வளர்ச்சிக்கு அன்றும் இன்றும் சீனருடன் தமிழர் தான் மூலமாக உள்ளனர். அத்துடன் சீனாவுடன் நெருங்கிய உறவுகளை சிங்கப்பூர் வளர்த்துக்கொண்டு வருகிறது பகைக்காமல். சிங்கப்பூர் அமெரிக்க வட்டத்தில் உள்ள நாடாகினும் அது தனது  நலன் கொண்டு அதை செய்கிறது. கிழக்கு தீமோரும் அதையே செய்கிறது. உருத்திரகுமாரனும் அங்கை இருக்கிற சில கூட்டங்களும் சர்வேதேச வல்லரசு போட்டிக்குள் எங்களை நசுங்கி சாக வைக்க பக்க சார்பான அறிக்கைகள் விடுகினம். இதனால் சும்மா இருக்கிற எதிரிகள், விரோதிகள் காணாது எண்டு இப்ப சீனாவையும் அதட்குள் கொண்டுவந்து சேர்க்கினம். இந்த நிலை தொடர்ந்தால் திபெத்தின் அதே நிலையை சிங்களம் ஊடக சீன நடைமுறைப்படுத்தும். தடுக்க ஆரால் முடியும்?. இதை உணர்ந்து அறிக்கையை மேற்கத்திய மூலைக்குள் இருந்து எழுதி விடுபவர் யோசிக்கவேண்டும். நாங்கள் உலங்கின் நீண்டகால போர்க்கை உணர மறுத்தால் தொடர்ந்து அனுபவிப்போம்!

ரசிய பழமொழி: இரண்டு யானை சண்டை பிடித்தால் விளைவுகளை அனுபவிப்பது புல்லு தான் என்று (When two elephants fight it is the grass that suffers). இது தான்  உலக வரலாற்றில் தொடர்ந்து நடக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, nedukkalapoovan said:

ஹிந்தியாவை விட சீனா.. தமிழர்கள் உறவு கொண்டாட பறுவாயில்லைப் போல இருக்குது. 

தலைவரும்,தமிழினமும் கிந்தியாவை நம்பித்தான் மோசம் போனார்கள். இது வரலாறு அல்ல கண்ணெதிரில் நடந்தது.

ஈழத்தமிழ் அரசியல் தலைவர்கள் சீன தூதரகத்தின் கதவை தட்ட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா என்கிற சகுனி இயங்கு நிலையில் இருக்கும் வரைக்கும் தமிழினம் தலை நிமிர்ந்து வாழ முடியாது. பல நாடுகள் அதற்குள் புகுந்து குடைச்சல் கொடுக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.