Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருணா தொடர்பான குற்றச்சாட்டுகளை அரசு விசாரிக்க வேண்டும் - வியாழேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணா தொடர்பான குற்றச்சாட்டுகளை அரசு விசாரிக்க வேண்டும் - வியாழேந்திரன்

மட்டக்களப்பு , கிழக்கு மாகாணத்தில் கருணா எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் தொடர்பாக சில குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் உள்ளதால் இவர் மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் என. இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்

spacer.png

மட்டக்களப்பு வில்லியம் மண்டபத்தில்  முற்போக்குத் தமிழர் அமைப்பின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரனின் பிறந்த நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை 15.11.2020ம் திகதி இடம்பெற்ற  இரத்ததான முகாமில் இரத்ததானம் வழங்கிய பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வினாயகமூர்த்தி முரளிதரன் என்பவரை நான் ஒரு அரசியல்வாதியாக கூட கணக்கெடுப்பதில்லை ஏன் ஒரு மனிதனாக கூட கணக்கெடுப்பதில்லை. அவர் ஒரு காமெடி பீஸ். ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு என்பது நாட்டின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்டது. அந்த வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதில் தற்போது 34 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது இன்னும் 2ம்,  3ம் கட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

கருணா அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டதனை ஊடகங்கள் வாயிலாக பார்த்தேன். மட்டக்களப்பில் இருக்கின்ற அமைச்சர் 20 ஆயிரம் ரூபாவை அந்த வேலைவாய்ப்பு விண்ணப்பங்களுக்கு வாங்கி வேலைவாய்ப்பை கொடுத்ததாக சொல்லியிருக்கின்றார்.

அந்த படிவத்தை பிரதேச செயலகங்களிலே பெற்று குறித்த வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்றவர்கள் வேலைவாய்ப்பினை பெற்றிருக்கின்றார்கள் இது இந்த கருணாவுக்கு ஒரு வகை வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு.

மக்கள் மத்தியில் பிரபலமானவர்களின் பெயரை உச்சரித்து அவர் பிரபலமாக வேண்டும் என நினைப்பவர்தான் கருணா ஆகவே அவர் என்ன பேசினாலும் நான் அதை கணக்கெடுப்பதில்லை.

கிழக்கு மாகாணத்தில் கருணா தொடர்பாக சில குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் உள்ளது. இதனை அரசாங்கம் விசாரிக்க வேண்டும்.

அண்மையில் வழங்கப்பட்ட வேலைவாய்ப்புக்கு 20 ஆயிரம் ரூபா ஒரு விண்ணப்பத்திற்கு நான் வாங்கியதாக கருணா நிருபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவேன். என இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
 

https://www.virakesari.lk/article/94420

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எல்லோருமே ஒரே ஆட்கள் என்றல்லவா நினைத்திருந்தேன்? ஏனென்றால் இவர்கள் அனைவரினதும் எஜமானர்கள் ஒரே ஆட்கள்தானே? இப்போது என்ன சிக்கல்?

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தொடர்பாக சில குற்றச் சாட்டுகள் மக்கள் மத்தியில் உள்ளதால் இவர் மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வில்லியம் மண்டபத்தில் தனது பிறந்த நாள் தினத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இரத்ததான முகாமில் இரத்ததானம் வழங்கியபின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

 

விநாயகமூர்த்தி முரளிதரன் என்பவரை நான் ஒரு அரசியல்வாதியாக கூட கணக்கெடுப்பதில்லை ஏன் ஒரு மனிதனாக கூட கணக்கெடுப்பதில்லை. அவர் ஒரு காமெடி பீஸ்.

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு என்பது நாட்டின் ஜனாதிபதி அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்டது. அந்த வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதில் தற்போது 34 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது இன்னும் 2ஆம் மற்றும் 3ஆம் கட்டங்கள் வழங்கப்படவுள்ளது

கருணா அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டதனை ஊடகங்கள் ஊடாகப் பார்த்தேன். மட்டக்களப்பில் இருக்கின்ற அமைச்சர் 20 ஆயிரம் ரூபாவை அந்த வேலைவாய்ப்பு விண்ணப்பங்களுக்கு வாங்கி வேலைவாய்ப்பை கொடுத்ததாக சொல்லியிருக்கின்றார்.

அந்த படிவத்தை பிரதேச செயலகங்களிலே பெற்று குறித்த வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்றவர்கள் வேலைவாய்ப்பினை பெற்றிருக்கின்றார்கள் இது இந்த கருணாவுக்கு ஒரு வகை வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு.

மக்கள் மத்தியில் பிரபலமானவர்களின் பெயரை உச்சரித்து அவர் பிரபலமாக வேண்டும் என நினைப்பவர்தான் கருணா ஆகவே அவர் என்ன பேசினாலும் நான் அதை கணக்கெடுப்பதில்லை.

கிழக்கு மாகாணத்தில் கருணா தொடர்பாக சில குற்றச் சாட்டுகள் மக்கள் மத்தியில் உள்ளது. இதனை அரசாங்கம் விசாரிக்க வேண்டும்.

அண்மையில் வழங்கப்பட்ட வேலைவாய்ப்புக்கு 20 ஆயிரம் ரூபா ஒரு விண்ணப்பத்திற்கு நான் வாங்கியதாக கருணா நிருபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவேன் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/154363

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ரஞ்சித் said:

இவர்கள் எல்லோருமே ஒரே ஆட்கள் என்றல்லவா நினைத்திருந்தேன்? ஏனென்றால் இவர்கள் அனைவரினதும் எஜமானர்கள் ஒரே ஆட்கள்தானே? இப்போது என்ன சிக்கல்?

அந்த காமடி பீஸ்  ஒரு லட்சம் வேலைவாய்ப்புக்கு ஒரு அப்பிளிகேஷன் க்கு 20 ஆயிரம் வாங்கி போட்டினம் என்று உளறி தள்ளி  போட்டுது .

பங்கு பிரச்சனை அவ்வளவுதான் .

3000 இராணுவத்தை கொலை செய்ததட்கே விசாரணை தண்டனை ஒன்றுமே இல்லயாம் , இதுக்கெல்லாம் விசாரணை நடக்குமா? உங்களுக்கு வேறு ஏதும் வேலை இருந்தால் போய் பாருங்கையா.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

1 hour ago, nunavilan said:

 

எட்டப்பன் கருணா பற்றி நீங்கள் என்னதான் கூறினாலும் அரசு கருத்தில் எடுக்காது. ஜனாதிபதி நீதி வழங்குவதில் உறுதியாக இருந்தாலும் கருணா விடயத்தில் அங்கெ எப்போதும் ஒரு soft corner இருந்துகொண்டே இருக்கும். தானே 3000 சிங்கள ராணுவத்தை கொன்றதாக வாக்குமூலம் வழங்கியும் அதட்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஏன் அரசு தயங்குகின்றது. கருணாவின் பேச்சிலிருந்து அவரது தராதரத்தை கணிக்கலாம். எனவே இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் உங்கள் அரசியல் போராட்டத்தை மக்களுக்காக தொடர்வது நல்லது என நினைக்கிறேன். இவருக்கு எதிராக நடவடிக்கை என்பது கல்லில் நார் உரிப்பதை போன்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.