Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டி: சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nunavilan said:

ஓ இந்த முட்டாள்கள்தான் உங்களுக்கு ஒரு நாடு, இரு தேச அடிப்படையில் தீர்வு தரப்போகிறார்களா🤦‍♂️ 

 

யாரோடு பேசினாலும் சிங்களவர் தான் தீர்வு தர வேண்டியவர்கள் என்பது தான் என் கருத்து. அதன் கருத்து யாராக இருந்தாலும் சிங்களவருடன் தான் பேச வேண்டும் என்பதை உங்களால் உய்த்தறிய முடியவில்லையா?

அப்போ நீங்கள் என்ன சொன்ன வருகுறீர்கள்? ஒரு வெளிநாட்டு அரசுடனும் பேச தேவையில்லை. கஜேந்திரகுமார் பாராளுமன்றில் பேசும் பேச்சை கேட்டதும், சிங்கள அரசு நடுநடுங்கி சும்மா சூப்பர் தீர்வினை எமக்கு தந்து விடும் என்றா🤣.

 

தாராளமாக பேசலாம். கடந்த கால அனுபவத்தின் படி சுயநலமாக இருந்தார்கள் நான் பார்த்த அளவில் என குறிப்பிட்டு இருந்தேன். தாராளமாக பேசலாம். கடந்த கால அனுபவத்தின் படி சுயநலமாக இருந்தார்கள் நான் பார்த்த அளவில் என குறிப்பிட்டு இருந்தேன்.
  அப்போ கூட்டமைப்பு தீர்வை எடுத்து தருமாக்கும் என்று உங்களை போல் கேட்டு பார்ப்போம் என்ன விடை வருகிறது என.

சிங்களவனுக்கு கொரோனா வந்தால் ஒரு வேளை நடுங்க கூடும்.

 

 

 

நீங்கள் என்ணுவது சரியே. 
நக்கலை குறைத்து மற்றவர்களை கடுபேற்றுவதை  நீங்கள் முதலில் நிறுத்த வேண்டும்.

யாரோடு பேசினாலும் சிங்களர்தான் தீர்வு தரவேண்டும். ஆனால் மாகாண சபையே இல்லை என்ற நிலைபாட்டில் இருக்கும் அடிப்படைவாத இனவாதிகளிடம் போய், ஒரு வெளிநாட்டு அளுத்தமும் இல்லாமல் பாராளுமன்றத்தில் சீன் போடுவதால் அவர்கள் தீர்வை தருவார்கள் என எனக்கு படவில்லை.

கூட்டமைப்பு வேலைக்கு ஆகாது என நான் ஏற்று கொண்டு 3வது ஆண்டு விழாவும் கொண்டாடியாகி விட்டது. அவர்களை விட இவர்கள் மோசம் என்பதுதான் நான் சொல்ல வருவது.

பிகு: நக்கலாக கருத்தை எடுத்துரரைப்பது சப்ளின், முதல் Borat வரை ஏற்றுகொள்ளபட்ட பாணி, யாழிலும் அதற்கு தடையில்லை என நினைக்கிறேன்.  ஆனால் அநாகரீகமாக கருத்தை விட்டு விட்டு, கருத்தாளரை விமர்சிப்பது ஆகாது. நீங்கள் அப்படி அல்ல என்ற என் நம்பிக்கையை உறுதி செய்தமைக்கு நன்றி.

  • Replies 59
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விளங்க நினைப்பவன் said:

EVC மெசின் என்று போட Electronic Verification Code  என்று வருகிறது.
சீமானுக்கும் EVC மெசினுக்கும் என்ன தொடர்போ

இந்த எலக்டிரானிக் வோட்டிங் மெசின் 1998 இல் இருந்து இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது. “இந்தியா ஒளிர்கிறது”, என்ற வாய்பாயின் பிஜேபி ஆட்சி கட்டிலில் இருந்து அகன்றதும்,  பின் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் மோடியிடம் தோற்றதும், கர்நாடகாவில் பிஜேபி தோற்றதும், டெல்லியில் புதிதாக கட்சி தொடங்கிய கேஜ்ரிவால், காங்கிரசையும், பிஜேபியையும் தள்ளி விட்டு ஆட்சியை பிடித்ததும், மத்ய பிரதேசத்தில் பிஜேபி ஆட்சி இழந்ததும் இதே மெசின் கொண்டு நடந்த தேர்தல்களில்தான்.

அவற்றில் எல்லாம் ஏன் சுத்து மாற்று செய்யவில்லை. மிக இலகுவாக இன்னும் ராகுலே ஆட்சியில் இருக்கலாமே?

இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் கெட்ட கோபம் வரும். 

நமக்கு டெபாசிட்டே தேறவில்லை. மக்கள் முகத்தில் கரியை பூசி விட்டார்கள் என்று ஓப்பனாக  சொல்லவா முடியும்? இப்படி ஏதாவது டிரம்ப் போல சொல்லி கொள்ள வேண்டியதுதான்.

ஆனால் இந்த கள்ள வாக்கு மெசின் இருக்கும் வரை தாம் வெல்லவே போவதில்லை என்று தெரிந்தும் ஏன் தேர்தலில் தொடர்ந்து போட்டி போடுகிறார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி🤣

பிகு: அமெரிக்கா முதல் இந்தியாவரை 100% குழறுபடியற்ற தேர்தல் எங்கும் சாத்தியமில்லை. ஆனால் முடிவுகளை மாற்றும் படி பெருவாரியாக களவு நடக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அய்யநாதன் சொல்லும் தகவல்கள் சரியாக இருந்தால் இந்த வாக்களிப்பு இயந்திரம் நீதிமன்றத்தினால் தடை செய்யப் பட்டிருக்க வேண்டும். எத்தனை வழக்குகள் போடப் பட்டன, அவற்றுள் எத்தனை வெற்றி பெற்றன அல்லது தள்ளுபடியாகின என்று ஏதாவது கணக்கு இருக்கிறதா? 

இந்தக் கேள்விக்குப் பதிலாக நீதிமன்றங்களும் சேர்ந்து சதி செய்வதாகச் சொல்ல ஆரம்பிப்பார்களோ தெரியாது. 

இயந்திரத்தில் சில inherent glitches இருந்து அதனால் சில பத்து வாக்குகள் மாறி விழலாம். இது அமெரிக்காவிலும் நடக்கிறது. ஆனால், மில்லியன் கணக்கான வாக்குகளில் இந்த error rate பாதிப்பை ஏற்படுத்தாது. 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:
21 hours ago, விளங்க நினைப்பவன் said:

EVC மெசின் என்று போட Electronic Verification Code  என்று வருகிறது.
சீமானுக்கும் EVC மெசினுக்கும் என்ன தொடர்போ

இந்த எலக்டிரானிக் வோட்டிங் மெசின் 1998 இல் இருந்து இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது. “இந்தியா ஒளிர்கிறது”, என்ற வாய்பாயின் பிஜேபி ஆட்சி கட்டிலில் இருந்து அகன்றதும்,  பின் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் மோடியிடம் தோற்றதும், கர்நாடகாவில் பிஜேபி தோற்றதும், டெல்லியில் புதிதாக கட்சி தொடங்கிய கேஜ்ரிவால், காங்கிரசையும், பிஜேபியையும் தள்ளி விட்டு ஆட்சியை பிடித்ததும், மத்ய பிரதேசத்தில் பிஜேபி ஆட்சி இழந்ததும் இதே மெசின் கொண்டு நடந்த தேர்தல்களில்தான்.

அவற்றில் எல்லாம் ஏன் சுத்து மாற்று செய்யவில்லை. மிக இலகுவாக இன்னும் ராகுலே ஆட்சியில் இருக்கலாமே?

இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் கெட்ட கோபம் வரும். 

நமக்கு டெபாசிட்டே தேறவில்லை. மக்கள் முகத்தில் கரியை பூசி விட்டார்கள் என்று ஓப்பனாக  சொல்லவா முடியும்? இப்படி ஏதாவது டிரம்ப் போல சொல்லி கொள்ள வேண்டியதுதான்.

ஆனால் இந்த கள்ள வாக்கு மெசின் இருக்கும் வரை தாம் வெல்லவே போவதில்லை என்று தெரிந்தும் ஏன் தேர்தலில் தொடர்ந்து போட்டி போடுகிறார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி🤣

பிகு: அமெரிக்கா முதல் இந்தியாவரை 100% குழறுபடியற்ற தேர்தல் எங்கும் சாத்தியமில்லை. ஆனால் முடிவுகளை மாற்றும் படி பெருவாரியாக களவு நடக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

தகவல்களுக்கு நன்றி கோஷன் சே
நுணாவிலான் EVC மெசின் என்று சொன்னதால் தான்  தேடினேன் நீங்கள் சொன்னவற்றோடு 100% உடன்படுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில்.......... தேர்தல் ஒழுங்கீனங்களையும்,தேர்தல் நடவடிக்கைகளையும்,வாக்களிப்பு நிலைய முறைகேடுகளையும் இந்திய ஊடகங்களே பகிரங்கப்படுத்தி நீதியும் இல்லை நியாயங்களும் இல்லை என செய்திகளை பிரசுரிக்கும் போது......

இங்குள்ள ஒரு சிலர் இந்திய தேர்தல் ஆணையத்துக்கே நற்சான்றிதழ் வழங்குகின்றார்கள்.

ஆக.......இவர்கள் தமிழின விடுதலை ஒவ்வாமைகள் .

தேர்தல் ஒழுங்கீனங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ளதென்றாலும் மூன்றாம் உலக நாடுகள் என அழைக்கப்படும் நாடுகளில் அவை சற்று அதிகமாக நடைபெறுகிறதுதான். இருந்தாலும் ஒட்டுமொத்த தேர்தல் முடிவை மாற்றக்கூடியதாக இருப்பது நடைமுறைச்சாத்தியமற்றது. தேர்தலில் போட்டியிடும் பலவேறு தரப்புக்கள் தாம் பலம் பெற்றிருக்கும் இடங்களில் இவ்வாறான மோசடிகளை மேற்கொண்டாலும் தோல்வியடைந்தால் மறு தரப்பை மட்டும் குற்றம் சாட்டுவதும் அங்கு வழமையானது. 

நான் முன்னர் ஒரு தடவை இங்கு குறிப்பிட்டதைப்போல எமது தாயகத்தில் 1977 தேர்தலில்  வட்டுக்கொட்டை தீர்மானமான தமிழீழ கோரிக்கையை பெருவாரியான வாக்குகளால் வெல்ல வைப்பதற்காக ஒவ்வொரு தமிழர்  தொகுதியிலும் ஆயிரக்கணக்கான கள்ள வாக்குகள் தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு போடப்பட்டது அனைவரும் அறிந்த விடயம்.  அதற்காக அன்று வட்டுக்கோட்டைத்தீர்மானம்  கள்ளவாக்குகளால் மாத்திரம் வென்றது என்று கூற முடியாது.   

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2020 at 21:47, தமிழ் சிறி said:

சீமான்...  ஸ்ராலினை எதிர்த்து... போட்டியிடலாம், என்ற செய்தியை... கேட்டதும்,
ஸ்ராலினுக்கு...  மெரினாவில்,  " யூரின்"  போயிருக்கும் என்று நினைக்கின்றேன்.  

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

தேர்தல் ஒழுங்கீனங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ளதென்றாலும் மூன்றாம் உலக நாடுகள் என அழைக்கப்படும் நாடுகளில் அவை சற்று அதிகமாக நடைபெறுகிறதுதான். இருந்தாலும் ஒட்டுமொத்த தேர்தல் முடிவை மாற்றக்கூடியதாக இருப்பது நடைமுறைச்சாத்தியமற்றது. தேர்தலில் போட்டியிடும் பலவேறு தரப்புக்கள் தாம் பலம் பெற்றிருக்கும் இடங்களில் இவ்வாறான மோசடிகளை மேற்கொண்டாலும் தோல்வியடைந்தால் மறு தரப்பை மட்டும் குற்றம் சாட்டுவதும் அங்கு வழமையானது. 

நான் முன்னர் ஒரு தடவை இங்கு குறிப்பிட்டதைப்போல எமது தாயகத்தில் 1977 தேர்தலில்  வட்டுக்கொட்டை தீர்மானமான தமிழீழ கோரிக்கையை பெருவாரியான வாக்குகளால் வெல்ல வைப்பதற்காக ஒவ்வொரு தமிழர்  தொகுதியிலும் ஆயிரக்கணக்கான கள்ள வாக்குகள் தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு போடப்பட்டது அனைவரும் அறிந்த விடயம்.  அதற்காக அன்று வட்டுக்கோட்டைத்தீர்மானம்  கள்ளவாக்குகளால் மாத்திரம் வென்றது என்று கூற முடியாது.   

ஒரு எடுகோளுக்காக இந்த வாக்களிப்பு இயந்திரத்தை நம்பாதோர் ஆதரிக்கும் கட்சி வென்று விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்வார்கள்? வென்ற இடங்களை கவனமாக தவிர்த்து விட்டு, எதிராளி வென்ற இடங்களில் மட்டும் வாக்களிப்பில் சீர்கேடு இருந்ததாக புதுக்கதை பின்னுவார்கள்! ஒரே தேர்தல், ஒரே வகையான இயந்திரம், ஆனால் தங்கள் கட்சிக்கு நல்ல வாக்கு, எதிராளி வென்றால் கள்ள வாக்கு! இந்த சின்னப் பிள்ளைத் தனமான வாதம், இலங்கையில் சும், கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன் வென்ற தேர்தலிலும் நடந்தது! 

இப்போது அமெரிக்காவில் ட்ரம்பும் இதே ஜோக்கர் வாதம் தான்! என்ன வாக்காளர்கள் பெருவாரியானோர் இதனைக் கண்டு கொள்வதில்லை! 
 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

ஒரு எடுகோளுக்காக இந்த வாக்களிப்பு இயந்திரத்தை நம்பாதோர் ஆதரிக்கும் கட்சி வென்று விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்வார்கள்? வென்ற இடங்களை கவனமாக தவிர்த்து விட்டு, எதிராளி வென்ற இடங்களில் மட்டும் வாக்களிப்பில் சீர்கேடு இருந்ததாக புதுக்கதை பின்னுவார்கள்! ஒரே தேர்தல், ஒரே வகையான இயந்திரம், ஆனால் தங்கள் கட்சிக்கு நல்ல வாக்கு, எதிராளி வென்றால் கள்ள வாக்கு! இந்த சின்னப் பிள்ளைத் தனமான வாதம், இலங்கையில் சும், கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன் வென்ற தேர்தலிலும் நடந்தது! 

இப்போது அமெரிக்காவில் ட்ரம்பும் இதே ஜோக்கர் வாதம் தான்! என்ன வாக்காளர்கள் பெருவாரியானோர் இதனைக் கண்டு கொள்வதில்லை! 
 

வெல்லாத இடங்களிலும் நாங்கள் எடுத்த 4% மட்டும் நல்லவாக்கு மிச்சம் எல்லாம் கள்ளவாக்கு என்று சாதிப்பார்கள்🤣

நான் நினைக்கிறேன் இந்த சாம்பிளின் அளவு (size of the sample), பிழையின் எண்ணிக்கை (number of actual errors), margin of error இவற்றை வடிவாக விளங்க படுத்தினால், ஏன் இந்தியா போன்ற நாடுகளில் நடக்கும் தேர்தல்களை உலகம் முழுவதும் நேர்மையான தேர்தல் என ஏற்கிறது என்பது இப்படியான சிந்தனை உள்ளவர்களுக்கு புரியகூடும் என.

அல்லது “கடலில் இட்ட சக்கரை” என்ற தமிழ் பழமொழி மூலமும் விளக்கலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kavi arunasalam said:

spacer.png

126265456_388926902422054_3106436656147275105_n.jpg?_nc_cat=101&cb=846ca55b-311e05c7&ccb=2&_nc_sid=dbeb18&_nc_ohc=fMgE3AzQq08AX9cYk1b&_nc_ht=scontent-frt3-2.xx&oh=b5e86316f1efdd52132776f69490d4c5&oe=5FE44479

126289422_178756600546099_5894544874454153450_n.jpg?_nc_cat=105&ccb=2&_nc_sid=dbeb18&_nc_ohc=vmneaIU-j3IAX_VWbu-&_nc_ht=scontent-frx5-1.xx&oh=e7921af2dc613bf902987afc9f86dde9&oe=5FE56607

127502822_3406086392992102_2529117192417210075_n.jpg?_nc_cat=101&ccb=2&_nc_sid=dbeb18&_nc_ohc=Nve4AjVdr_wAX9vKvwZ&_nc_ht=scontent-frt3-2.xx&oh=de769bfd9ab53e709a97ca8cac89234a&oe=5FE6C565

:grin:  :grin:  🤣

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.