Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் தின எதிரொலி - சுமந்திரன் ஓர் இனவாதி! நாடாளுமன்றில் கடுமையான கூச்சல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தின எதிரொலி - சுமந்திரன் ஓர் இனவாதி! நாடாளுமன்றில் கடுமையான கூச்சல்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராடி உயிர்நீத்தவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நினைவு கூர்ந்தமையால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை குறுக்கீடு செய்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர, அவருடன் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த போராளியான கப்டன் பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனின் திருவுருவப்படத்துக்கு அவரது தாயாரோடு இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் சுடர் ஏற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தியிருந்தார்.

வல்வெட்டித்துறை, கம்பர்மலையைச் சேர்ந்த கப்டன் பண்டிதர், 1985 ஜனவரி 9 ஆம் திகதி அச்சுவேலிப் பகுதியில் நடந்த மோதலில் உயிர்நீத்திருந்தார்.

இந்த நிலையில் அவரது நினைவஞ்சலியில் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துகொண்டமையினால் நாடாளுமன்றத்திற்கு அகௌரவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் சரத் வீரசேகர, கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

எனினும் அமைச்சரின் எதிர்ப்பை நிராகரித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தாம் நினைவேந்தலில் கலந்துகொண்டதை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவிப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டார்.

அவரது தாயார் தனது சட்டத்துறையில் மிகநெருங்கியவர் என்று குறிப்பிட்ட சுமந்திரன், தென்னிலங்கையில் ஜே.வி.பியினரின் கலவரத்தின் பின்னர் உயிர்நீத்தவர்களை மாவீரர்கள் என்ற பெயரில் நினைவுகூர்வதை எதிர்க்காதவர்கள், ஏன் வடக்கில் இடம்பெற்ற போரில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்வதை எதிர்க்கின்றார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

அத்துடன் உயிர்நீத்த ஒவ்வொருவரையும் நினைவுகூர்வதற்கு அவர்களுடைய பெற்றோருக்கு உரிமையிருக்கின்றது என்பதையும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் அழுத்தமாக சுட்டிக்காட்டினார்.

இருந்த போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் இந்தக் கருத்தினால் கடும் கோபமடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான அட்மிரல் சரத் வீரசேகர,

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஜே.வி.பியினரை ஒப்பீடு செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தியதுடன் ஜே.வி.பியினரது போராட்டத்தை நியாயப்படுத்திக் காண்பித்தார்.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்காகவே போராடினார்கள் என்று குறிப்பிட்ட அமைச்சர், அவர்களை நினைவுகூர்ந்ததினால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஓர் இனவாதி என்றும் அவர் முத்திரைப் பொறித்தார்.

இந்த இருவரது வாக்குவாதத்தினால் சபையில் கடுமையான கூச்சல் நிலைமை ஏற்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் தலையீடு செய்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இருவரது வாக்குவதத்தை தடுத்து சபையை அமைதிப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

 

https://www.ibctamil.com/srilanka/80/155154?ref=home-imp-flag

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களிடத்தில் சரிந்திருந்த சுமந்திரனின் மதிப்பு இதனால் தூக்கி நிறுத்தி சரி செய்யப்பட்டது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள அரசியல்வாதிகள் தங்களை தக்க வைப்பதற்கு இனவாத பேச்சுக்களே போதுமானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பண்டிதரின் வீட்டில் நினைவேந்தலுக்கு நான் சென்றது எதற்காக? சரத் வீரசேகராவுக்கு சுமந்திரன் பதிலடி

November 28, 2020

sumanthiran-3.jpg
 

“அமைச்சர் சரத் வீரசேகரா போன்றவர்களின் இனவாதப் பிரசாரத்தால் நாடு பிழையாக வழிநடத்தப்படும் நிலைமை உள்ளது” என்று எம்.ஏ. சுமந்திரன் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது கடுமையாகக் குற்றஞ்சாட்டினார்.

தமக்கு எதிராக அமைச்சர் சரத் வீரசேகர கிளப்பிய ஆட்சேபனைக்கு பதிலளித்த சுமந்திரன் இன்று பாராளுமன்றத்தில் கூறியவை வருமாறு:-

“அமைச்சருக்கு இந்த விடயத்தில் பதில் தர வேண்டிய கடப்பாடு ஏதும் எனக்குக் கிடையாது. எனினும் இவ்விடயத்தில் என் பெயர் பகிரங்கமாக பிரஸ்தாபிக்கப்பட்டமையால் நான் பதில் தருகின்றேன். 1985 இல் உயிரிழந்த பண்டிதர் என்பவரின் 83 வயதுத் தாயான சின்னத்துரை மகேஸ்வரி என்ற வயோதிப மாதுவுக்காக சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகினேன். அவர் ஒவ்வொரு வருடத்திலும் நவம்பர் மாதத்தில் தனது மகனுக்கு நினைவஞ்சலி செய்வது வழமை.

01-8-13.jpgஅவரின் மகன் விடுதலைப் புலிகளின் ஒரு தலைவர்தான். ஆனாலும் அந்த வயோதிபர் தாயைப் பொறுத்தவரை அவர் அந்தத் தாயின் மகன்தான். ஒவ்வொரு தாய்க்கும் தனது பிள்ளைகளை நினைவேந்த உரிமையுண்டு. ஜே.வி.பி. அதன் தலைவரான றோஹண விஜயவீரவை, கொழும்பு வீதிகள் எங்கும் அவரின் உருவப்படங்ள், சித்திரங்ளை அலங்கரித்து நினைவு கூர்வது குறித்து, இந்த அமைச்சர் ஒரு கேள்வி தன்னும் எழுப்பியவர் அல்லர்.

அதனால்தான் உயிரிழந்தவர்களை நினைவேந்துவதில் கூட இந்த நாட்டில் தமிழர்கள் பாகுபாடு காட்டப்படுகின்றார்கள், ஒதுக்கப்படுகின்றார்கள் என்று நான் இந்தச் சபையில் கூறினேன். அத்தகைய கீழ்த் தர நடத்தையைக் கொண்ட இந்த அமைச்சர்தான், அந்தத் தாய் தனது மகனை நினைவேந்தல் செய்தபோது நான் அவருடன் கூடவே நின்றமையை இங்கு கேள்விக்கு உட்படுத்துகின்றார்.

அந்தத் தாய் தனிப்பட்ட முறையில் தனது மகனுக்கு நினைவேந்தல் செய்யும் முழு உரிமையும் உண்டு என்று முதல் நாள்தான் மேல்நீதிமன்றம் தனது உத்தரவில் விசேடமாகக் குறிப்பிட்டிருந்தது. அந்த நினைவேந்தலைத்தான் அத்தாய் தனது வீட்டில் – அது வீடு என்றும் கூறமுடியாது ஒரு கொட்டில் அவ்வளவுதான் – அதில் மேற்கொண்டார். நான் அவருடன் கூட இருந்தேன்.

sarath-weera-cartoon.t.png
 

இந்த நினைவேந்தல் நிகழ்வு பொது இடங்களில் செய்யப்பட முடியாது. தனித்து வீட்டில் செய்யலாம் என்பதை அந்தத் தாய்க்கு விளங்கப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட நீதிபதி என்னிடம் விசேடமாக கோரியிருந்தார். அந்த நிகழ்விலேயே நான் பங்குபற்றினேன். அது தனிப்பட்ட நிகழ்வு. அந்த நிகழ்வுப் படங்களைப்பாருங்கள். அவரின் மகன் சீருடையில் கூட இருக்கவில்லை. இது ஒரு மகனுக்காக தாய் ஆற்றிய நினைவேந்தல் நிகழ்வு.

அவருக்காக நான் முதல் நாள் மன்றில் முன்னிலையாகியிருந்தேன். அந்த நிகழ்வை தனிப்பட்ட முறையில் வீட்டில் அவர் நடத்தலாம் என்பதை அவருக்கு விளங்கப்படுத்துமாறு நீதிமன்றறே என்னை விசேடமாகக் கோரியிருந்தது. இதனை சர்ச்சைக்குரிய விடயமாக நிலையில் கட்டளையின் கீழ் இங்கு எழுப்ப முடியாது. என்றாலும் கீழ்தரனமான முறையில் அமைச்சர் அதனை முன்னெடுப்பது முற்றிலும் தவறு” என்றார் சுமந்திரன்.
 

 

https://thinakkural.lk/article/93572

  • கருத்துக்கள உறவுகள்

 

இன்று பாராளுமன்றத்தில் பொதுப் பாதுகாப்பு அமைச்சரான சரத் வீரசேகரவிற்கும், எம். ஏ. சுமந்திரனுக்குமிடையில் பலத்த விவாதம் ஏற்பட்டது.

விடுதலைப் புலிகளின் உறுப்பினரான பண்டிதருக்கு எவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நினைவஞ்சலி செலுத்த முடியும் என வீரசேகர சபையில் கேள்வி எழுப்பினார்.

பதிலளித்த சுமந்திரன்:

"அமைச்சருக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியம் எதுவும் எனக்கு இல்லை. ஆனால் என் பெயர் பொது வெளியில் குறிப்பிடப்பட்டதால் என் கருத்தை இங்கே பதிவு செய்கிறேன்.

சில நாட்களுக்கு முன்னர் நான் வயதான அம்மாவான சின்னத்துரை மகேஸ்வரி என்பருக்காக யாழ் மேல் நீதிமன்றில் நான் ஆஜரானேன். அவரது மகன் 1985 இல் பண்டிதர் என அழைக்கப்படும் அவரது மகனை வருடா வருடம் நவம்பர் மாதத்தில் நினைவு கூர்வது வழக்கம். தனது நினைவு கூரல் உரிமையைப் பாதுகாக்கவென அவர் அந்த வழக்கைப் பதிவு செய்திருந்தார்.

(வீரசேகர இடைமறிக்க) ஆம் அவர் விடுதலைப் புலிகள் தலைவர் தான். ஆனால் பண்டிதர் அந்த அம்மாவினது புதல்வன் கூட. அத்துனை தாய்மாருக்கும் தம் பிள்ளைகளை நினைவேந்தும் உரிமை இருக்கிறது.

அமைச்சர் ஒரு போதும் ஜே.வி.பி-யின் தலைவர் ரோகன விஜயவீரவை ஜே.வி.பி-யின் தலைவர்கள் முழுச் சீருடையில் கொழும்பெங்கும் கொண்டு திரிந்து நினைவேந்துவதைக் குறித்துக் கேள்வி எழுப்பியதில்லை. இதனால் தான் நான் இந்தச் சபையில் நினைவேந்தும் விடையத்தில் கூட தமிழருக்கெதிராகப் இனவாதம் பாய்ச்சப்படுவதைப் பற்றிப் பேசியிருந்தேன்.

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி, மிகத் தெளிவாக அம்மா தன் மகனை வீட்டில் நினைவு கூருவதற்கு முழுமையான உரிமை இருப்பதாகச் சொல்லியிருந்தார். அம்மா தன் உரித்தை வீட்டில் செயற்படுத்தினார். வீடில்லை அதைக் கொட்டில் என்றே கூற வேண்டும். அம்மா தன் மகனைத் தன் கொட்டிலில் நினைவு கூர்ந்த போது நானும் அவரோடு இணைந்திருந்தேன். அவரருகில் நின்றேன். மகன் எந்தவொரு சீருடையைக் கூட அணிந்திருக்கவில்லை. இது தாயொருவர் தன் மகனை நினைவேந்திய செயற்பாடு. கூட்டாக எவரும் நினைவேந்தலில் முடியாத போதும் எல்லோரும் தனிப்பட்ட நினைவேந்தலில் ஈடுபடலாம் என்பதை என் மனுதாரருக்கு விளக்குமாறு நீதிமன்றம் என்னைப் பணித்திருந்தது.

சரத் வீரசேகரவின் இது வித இனவதாகக் கருத்துக்களால் முழு நாடும் தவறாக வழி நடத்தப்படுகிறது. அதை இச் சபை அனுமதிக்கிறது," என்றார்

https://www.facebook.com/M.A.Sumanthiran/videos/475001343478471

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, கிருபன் said:

அமைச்சருக்கு இந்த விடயத்தில் பதில் தர வேண்டிய கடப்பாடு ஏதும் எனக்குக் கிடையாது. எனினும் இவ்விடயத்தில் என் பெயர் பகிரங்கமாக பிரஸ்தாபிக்கப்பட்டமையால் நான் பதில் தருகின்றேன். 1985 இல் உயிரிழந்த பண்டிதர் என்பவரின் 83 வயதுத் தாயான சின்னத்துரை மகேஸ்வரி என்ற வயோதிப மாதுவுக்காக சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகினேன். அவர் ஒவ்வொரு வருடத்திலும் நவம்பர் மாதத்தில் தனது மகனுக்கு நினைவஞ்சலி செய்வது வழமை.

 இனி சிங்கள  பேப்பர்காரன்கள் இவரை கூப்பிட்டு நாலு கேள்வியள் கேட்க சொந்த வேசத்திலை காட்சியளிப்பார். 🤣

எப்படி இருந்தபோதும் சுமந்திரன் தவறு செய்திருப்பதுபோலவே தெரிகின்றது. வரும்காலங்கள் இதட்கு பதில் சொல்லும். அத்துடன் இவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகாதபடியால் இப்போது அழைப்பாணை வழங்கி இருக்கிறார்கள். சிக்கல்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.