Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’திட்டமிட்டவாறு யுத்தத்தை ஒழித்தேன்’ - சரத் பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

’திட்டமிட்டவாறு யுத்தத்தை ஒழித்தேன்’ - சரத் பொன்சேகா

இராணுவத்தில் புதிய நுட்ப பயற்சிகளை அளித்தமையே யுத்த வெற்றிக்கு காரணமெனத் தெரிவித்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, தான் தனிப்பட்ட முடிவுகளையும் பிரயத்தனங்களையும்  மேற்கொண்டதனாலேயே, பயங்கரவாத்தை தோற்கடிக்க முடிந்தது என்றார். தெரிவித்தார்.

நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் இன்று உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், யுத்தத்தை குறிப்பிட்ட காலத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாக தான் உறுதியளித்தவாறு அதனை முடிவுக்கு கொண்டுவந்தேன். திட்டமிட்ட செயற்பாடுகளே அதற்குக் காரணம் எனவும் கூறினார்.

அத்துடன், இறுதி யுத்தத்தின்போது 45000 பொதுமக்கள் கொலைசெய்யப்படடதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாகத் தெரிவித்த அவர், சுமார் ஐந்து, ஆறு ஆயிரம் பேர் வரை தவறுதலாக உயிரிழந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டதுடன், 270,000 பேரை பாதுகாக்க முடிந்ததாகவும் பயங்கரவாதத்தில் ஈடுபட்ட 12,000 பேருக்கு புனர்வாழ்வு அளித்ததாகவும் கூறினார்.

எனவே, புனரவாழ்வு வழங்கப்பட்டவர்கள் மீளவும் பயங்கரவாதத்தில் ஈடுபடாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றார்.  

2009 ஆண்டுக்குப் பின்னர் மாவீரர் தின நிகழ்வை நடத்த சந்தர்ப்பம் கிட்டாது என அன்று பயங்கரவாதிகளுக்கு கூறினேன். அதே நிலைப்பாட்டுடனேயே இன்றும் உள்ளேன் என சரத் பொன்சேகா கூறினார்.  

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/தடடமடடவற-யதததத-ஒழததன/175-260371

 

இது அவர்களுக்குள் நடக்கும் போட்டி. யார் வெல்லுகிறார்கள் என்று பாப்போம். பொன்சேகாவா இல்லை ராஜ்பக்சேயவா ?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இறுதி யுத்தத்தின்போது 45000 பொதுமக்கள் கொலைசெய்யப்படடதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாகத் தெரிவித்த அவர், சுமார் ஐந்து, ஆறு ஆயிரம் பேர் வரை தவறுதலாக உயிரிழந்திருக்கலாம்

இது பொன்சேகாவின் அடுத்த வருடத்திற்கான உரை,

இறுதி யுத்தத்தின்போது 45000 பொதுமக்கள் கொலைசெய்யப்படடதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாகத் தெரிவித்த அவர், சுமார் ஐந்து, ஆறு நூறு பேர்கள் வரை தவறுதலாக உயிரிழந்திருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Robinson cruso said:

இது அவர்களுக்குள் நடக்கும் போட்டி. யார் வெல்லுகிறார்கள் என்று பாப்போம். பொன்சேகாவா இல்லை ராஜ்பக்சேயவா ?

ஐயா வங்காலையன் நீங்கள் சிறீலங்காவிலேயே இல்லையா..?

ராஜபக்சேக்கள் வென்று பலகாலம்...

51 minutes ago, MEERA said:

ஐயா வங்காலையன் நீங்கள் சிறீலங்காவிலேயே இல்லையா..?

ராஜபக்சேக்கள் வென்று பலகாலம்...

ஐயோ மீரா , நான் இன்னும் இலங்கையை விட்டு ஓடிப்போகவில்லை. எதிர்காலத்திலும் போகும் எண்ணம் இல்லை. ராஜபக்சேக்கள் வெல்லவில்லை. போன்சேகாதான் யுத்தத்தை வென்றது. ராஜபக்சேக்கள் அதை கொள்ளையடித்துவிடடார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொலை செய்யப்படவில்லை- சரத் பொன்சேகா

 

 

    by : Yuganthini

http://athavannews.com/wp-content/uploads/2019/07/sarath-ponnsekka-720x450.jpg

நாட்டில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது 45,000 பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த குழுநிலை விவாதத்தில் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளதாவது, “இராணுவத்தில் புதிய நுட்ப பயற்சிகளை அளித்தமையே யுத்த வெற்றிக்கு காரணமாகும்.

நான் தனிப்பட்ட முடிவுகளையும் பிரயத்தனங்களையும் மேற்கொண்டதனாலேயே, பயங்கரவாத்தை தோற்கடிக்க முடிந்தது.

யுத்தத்தை குறிப்பிட்ட காலத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாக நான் உறுதியளித்தேன். அதனை முடிவுக்கு கொண்டுவந்தேன். திட்டமிட்ட செயற்பாடுகளே அதற்குக் காரணமாகும்.

மேலும், இறுதி யுத்தத்தின்போது 45,000 பொதுமக்கள் கொலை செய்யப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுக்கின்றேன்.சுமார் ஐந்து அல்லது ஆறு ஆயிரம் பேர் வரை தவறுதலாக உயிரிழந்திருக்கலாம்.

ஆனாலும், 270,000 பேரை பாதுகாக்க முடிந்தது.பயங்கரவாதத்தில் ஈடுபட்ட 12,000 பேருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் புனரவாழ்வு வழங்கப்பட்டவர்கள், மீளவும் பயங்கரவாதத்தில் ஈடுபடாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொலை செய்யப்படவில்லை- சரத் பொன்சேகா | Athavan News

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

ஐயோ மீரா , நான் இன்னும் இலங்கையை விட்டு ஓடிப்போகவில்லை. எதிர்காலத்திலும் போகும் எண்ணம் இல்லை. ராஜபக்சேக்கள் வெல்லவில்லை. போன்சேகாதான் யுத்தத்தை வென்றது. ராஜபக்சேக்கள் அதை கொள்ளையடித்துவிடடார்கள்.

ஐயா வங்காலை, 

ஏற்கனவே எழுதியது தான் உங்கட பிரச்சனை வேறு.

வடக்கு கிழக்கிற்கு வெளியே ஓடிவிட்டு புளுகுவதை பாருங்கள்.

பொன்சேகா வென்றுவிட்டார் என்றால் பிறகேன் யார் வெல்லுகிறார்கள் என்று பார்க்கிறீர்கள்?

5 hours ago, Robinson cruso said:

இது அவர்களுக்குள் நடக்கும் போட்டி. யார் வெல்லுகிறார்கள் என்று பாப்போம். பொன்சேகாவா இல்லை ராஜ்பக்சேயவா ?

 

5 minutes ago, MEERA said:

ஐயா வங்காலை, 

ஏற்கனவே எழுதியது தான் உங்கட பிரச்சனை வேறு.

வடக்கு கிழக்கிற்கு வெளியே ஓடிவிட்டு புளுகுவதை பாருங்கள்.

பொன்சேகா வென்றுவிட்டார் என்றால் பிறகேன் யார் வெல்லுகிறார்கள் என்று பார்க்கிறீர்கள்?

 

நீங்கள் uk இட்கே ஓடும்போது நாங்கள் வட கிழக்கை விட்டு  எங்குமே போக முடியாதா? என்னடா இது புதுக்கதையா இருக்கு. தமிழனுக்கு வந்த சோதனை. சரி சரி யார் வேண்டாலும் தமிழன் தோற்றுவிடடனே என்ற கவலைதான். மாற்றப்படிக்கு வேறொன்றுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Robinson cruso said:

நீங்கள் uk இட்கே ஓடும்போது நாங்கள் வட கிழக்கை விட்டு  எங்குமே போக முடியாதா? என்னடா இது புதுக்கதையா இருக்கு. தமிழனுக்கு வந்த சோதனை. சரி சரி யார் வேண்டாலும் தமிழன் தோற்றுவிடடனே என்ற கவலைதான். மாற்றப்படிக்கு வேறொன்றுமில்லை.

இந்த இடத்தில் மட்டும் உங்களுக்கு தமிழன் தேவைப்படுகிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓமடாப்பாநீங்கள் வெண்டிட்டியள் அல்லோ இனி இதுவும் சொல்லுவியள் இன்னமும் சொல்லுவியள் இதுக்குநீங்கள் அனுபவிக்காமலா போவியள் (ஏற்கனவே சிறையில் அனுபவிச்சது காணாது போலை)

6 hours ago, MEERA said:

இந்த இடத்தில் மட்டும் உங்களுக்கு தமிழன் தேவைப்படுகிறான்.

அதாவது உங்களுக்கு ஏற்றமாதிரி கருது எழுத வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள். என்னைப்பொறுத்த வரைக்கும் தமிழனாக இருக்கலாம், சிங்களவனாக இருக்கலாம். உண்மையை எழுத வேண்டும். சிங்களவர்களிலும் தமிழனுக்காக கதைக்கிற , எழுதுகின்ற இருக்கவே செய்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Robinson cruso said:

அதாவது உங்களுக்கு ஏற்றமாதிரி கருது எழுத வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள். என்னைப்பொறுத்த வரைக்கும் தமிழனாக இருக்கலாம், சிங்களவனாக இருக்கலாம். உண்மையை எழுத வேண்டும். சிங்களவர்களிலும் தமிழனுக்காக கதைக்கிற , எழுதுகின்ற இருக்கவே செய்கிறார்கள்.

எனக்கு ஏற்றவாறு எழுத ஒருபோதும் சொல்லவில்லை.

எப்போதும் தமிழனாக மட்டும் இருங்கள்.

4 minutes ago, MEERA said:

எனக்கு ஏற்றவாறு எழுத ஒருபோதும் சொல்லவில்லை.

எப்போதும் தமிழனாக மட்டும் இருங்கள்.

அப்படி என்றால் தமிழன் உண்மையை எழுதக்கூடாதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.