Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் பிரதேச சபையும் முன்னணி வசமானது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

மன்னிக்கவேண்டும் விசுகு ஈழப்போராட்ட தோல்வியை தனியே “சென்றிமென்ற” உடனான பார்வையால்  மட்டும் கொண்டிருக்கும் நேர்மையான தமிழ் தேசிய உணர்வாளர் நீங்கள்.  ஜதார்தத உண்மைகளை தாங்கும் சகதி உங்களுக்கு இல்லை. 

இல்லை சகோ. ஒரு விடயத்தில் சேர்ந்து நின்று செய்து விட்டு தோல்வி என்றதும் மற்றவரை கைவிரல் நீட்டுவதும் நேர்மையை கேள்விக்குறி ஆக்கும் சகோ.

7 minutes ago, விசுகு said:

இல்லை சகோ. ஒரு விடயத்தில் சேர்ந்து நின்று செய்து விட்டு தோல்வி என்றதும் மற்றவரை கைவிரல் நீட்டுவதும் நேர்மையை கேள்விக்குறி ஆக்கும் சகோ.

உங்களது இந்த குற்றச்சாட்டு தவறான பார்வையுடனான குற்றச்சாட்டு என்பது எனது எண்ணம். இதற்கு விரிவாக பதிலெழுதினால் அது நீ்ண்ட பதிலாகிவிடும்.

சுருக்கமாக சொன்னால், முடிவெடுக்க அதிகாரம் கொண்ட இரு அல்லது அதற்கு மேற்பட்ட மனிதர்கள் ஒன்றாகச் சேர்ந்து அரசியல் தீர்மானங்களை எடுத்துவிட்டு தோல்வி என்றவுடன் அடுத்தவர் மீது பழி போட்டால் அது நீங்கள் சொன்ன விடயத்திற்கு பொருந்தும்.

ஆனால் ்முடிவெடுக்க எந்த அதிகாரமும் இல்லாத தலைமையை மட்டுமே நம்பிய  சாதாரண மக்களாகிய நாம் தோல்விக்கும், அழிவுக்கும்  தோல்வியால் ஏற்பட்ட மீளமுடியாத நிலைக்கும்  என்ன காரணம் என்று ஆராய்வு செய்வதில் தவறில்லை. அது நீங்கள் சொன்னது போல் அமையாது. அதுவே இன்றைய தேவை. இதில் விசுவாசத்துக்கு இடமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, tulpen said:

உங்களது இந்த குற்றச்சாட்டு தவறான பார்வையுடனான குற்றச்சாட்டு என்பது எனது எண்ணம். இதற்கு விரிவாக பதிலெழுதினால் அது நீ்ண்ட பதிலாகிவிடும்.

சுருக்கமாக சொன்னால், முடிவெடுக்க அதிகாரம் கொண்ட இரு அல்லது அதற்கு மேற்பட்ட மனிதர்கள் ஒன்றாகச் சேர்ந்து அரசியல் தீர்மானங்களை எடுத்துவிட்டு தோல்வி என்றவுடன் அடுத்தவர் மீது பழி போட்டால் அது நீங்கள் சொன்ன விடயத்திற்கு பொருந்தும்.

ஆனால் ்முடிவெடுக்க எந்த அதிகாரமும் இல்லாத தலைமையை மட்டுமே நம்பிய  சாதாரண மக்களாகிய நாம் தோல்விக்கும், அழிவுக்கும்  தோல்வியால் ஏற்பட்ட மீளமுடியாத நிலைக்கும்  என்ன காரணம் என்று ஆராய்வு செய்வதில் தவறில்லை. அது நீங்கள் சொன்னது போல் அமையாது. அதுவே இன்றைய தேவை. இதில் விசுவாசத்துக்கு இடமில்லை. 

அந்த நேரம் முடிவுகளில் தவறிருந்ததாக தெரியவில்லை. இப்பொழுதும் கூட. அப்படி தவறு இருந்தால் அதற்குள் தள்ளப்பட்டிருக்கலாம் அல்லது வேறு வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

அந்த நேரம் முடிவுகளில் தவறிருந்ததாக தெரியவில்லை.

“தவறு” என்ற வார்த்தையை நீங்கள் அர்த்தப்படுத்தி கொள்வதும் மற்றவர்கள் அர்த்தப்படுத்தி கொள்வதும் வித்தியாசமாக தெரிகிறது. “தவறு” என்பதன் வரைவிலக்கணமே, தவறான முடிவு எடுக்கப்பட்ட போது அது சரியான முடிவு என்று கருதி, விளைவுகளை கண்டபின் பகுத்து ஆயும் போது இதை வேறு விதமாக செய்திருக்கலாம் என்று அறிந்து கொள்வதாகும். தவறுகளை செய்பவர்கள் கூடாதவர்களோ, அல்லது தியாக உணர்வற்றவர்களோ, அல்லது தலைமைத்துவப் பண்பு அற்றவர்களோ அல்ல. இவை எல்லாம் நிறைவாக இருந்தும் தவறிப் போகும் முடிவுகளால் தவறுகள் நடக்கின்றன. ஐயன்ஸ்ரைனும் விஞ்ஞான கோட்பாடுகள் முதல் அணுக்குண்டு ஆய்வுக்கு ஆதரவாக அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியது வரை பல தவறுகளை செய்திருக்கிறார். தவறு செய்வது மனித இயல்பு. விடுதலைப்புலிகளும் மனிதர்களே. தவறு நடந்துவிட்டது. ஏற்றுக்கொள்ளுவோம்.

7 hours ago, விசுகு said:

இப்பொழுதும் கூட. அப்படி தவறு இருந்தால் அதற்குள் தள்ளப்பட்டிருக்கலாம் அல்லது வேறு வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிக்கலாம். 

தவறுக்குள் தள்ளப்படக்கூடும் என்பதையும், வேறு வழிகள் அனைத்தும் அடைக்கப்படக்கூடிய சாத்தியப்பாட்டையும் எதிர்வுகூறும் ஆற்றலை இனியாவது எமது தலைமைகள் அதிகரித்து கொள்ள வேண்டும், இல்லையா? தவறுகளை தவிர்க்க உதவும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கற்பகதரு said:

“தவறு” என்ற வார்த்தையை நீங்கள் அர்த்தப்படுத்தி கொள்வதும் மற்றவர்கள் அர்த்தப்படுத்தி கொள்வதும் வித்தியாசமாக தெரிகிறது. “தவறு” என்பதன் வரைவிலக்கணமே, தவறான முடிவு எடுக்கப்பட்ட போது அது சரியான முடிவு என்று கருதி, விளைவுகளை கண்டபின் பகுத்து ஆயும் போது இதை வேறு விதமாக செய்திருக்கலாம் என்று அறிந்து கொள்வதாகும். தவறுகளை செய்பவர்கள் கூடாதவர்களோ, அல்லது தியாக உணர்வற்றவர்களோ, அல்லது தலைமைத்துவப் பண்பு அற்றவர்களோ அல்ல. இவை எல்லாம் நிறைவாக இருந்தும் தவறிப் போகும் முடிவுகளால் தவறுகள் நடக்கின்றன. ஐயன்ஸ்ரைனும் விஞ்ஞான கோட்பாடுகள் முதல் அணுக்குண்டு ஆய்வுக்கு ஆதரவாக அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியது வரை பல தவறுகளை செய்திருக்கிறார். தவறு செய்வது மனித இயல்பு. விடுதலைப்புலிகளும் மனிதர்களே. தவறு நடந்துவிட்டது. ஏற்றுக்கொள்ளுவோம்.

தவறுக்குள் தள்ளப்படக்கூடும் என்பதையும், வேறு வழிகள் அனைத்தும் அடைக்கப்படக்கூடிய சாத்தியப்பாட்டையும் எதிர்வுகூறும் ஆற்றலை இனியாவது எமது தலைமைகள் அதிகரித்து கொள்ள வேண்டும், இல்லையா? தவறுகளை தவிர்க்க உதவும்.

 

பொருளாதார ரீதியில் பின்னப்பட்ட இன்றைய உலகம் அடிமையாக தான் சொல்வதற்கு எல்லாம் தலை ஆட்டி வாழ மட்டுமே அனுமதிக்கிறது. அதிலிருந்து மீள அதன் பிடியிலிருந்து தப்பிக்க இயக்கம் அத்தனை முயற்சிகளையும் தியாகங்களையும் செய்தது எடுத்தது. 

ஆனால் இங்கே கதை எழுதுபவர்களோடு எனது முரண்பாடு என்னவென்றால் தமிழ் ஈழம் என்பது சாத்தியமே இல்லை ஆயுதப்போராட்டம் இனி வரவே வராது என்பவர்கள் ஆயுதப்போராட்டத்தின் முன்னைய அல்லது அவர்களின் தவறுகளில் இருந்து எதை பெறமுடியும்??

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, tulpen said:

இப்படியான  நியாயபூர்வமான கேள்வியை தெளிவாக கேட்டால்  இங்கு உளசுத்தியுடன் எவரும் பதிலளிக்க மாட்டார்கள் என்பது எனது அபிப்பிராயம். 

உங்கள் கருத்துப்படி அவர்கள் திட்டமிட்டு, வேண்டுமென்றே தங்கள் உயிரைக்கொடுத்து அந்தத் தவறை செய்தார்கள் என்கிறீர்களா? உங்கள் பிரச்சினைதான் என்ன இப்போ? உங்கள் ஆற்றாமைக்கு செத்த பாம்பை அடித்து வீரம் பேசாதீர்கள்? நீங்கள் குறிப்பிடும் யாரும் இன்று உயிரோடு இல்லை, யாருக்கு இந்த வகுப்பு எடுக்கிறீர்கள்?  ஜனநாயக அடிமைகளுக்கா?  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

பொருளாதார ரீதியில் பின்னப்பட்ட இன்றைய உலகம் அடிமையாக தான் சொல்வதற்கு எல்லாம் தலை ஆட்டி வாழ மட்டுமே அனுமதிக்கிறது. அதிலிருந்து மீள அதன் பிடியிலிருந்து தப்பிக்க இயக்கம் அத்தனை முயற்சிகளையும் தியாகங்களையும் செய்தது எடுத்தது. 

இன்றைய உலகை கையாளுவது கடினமானது என்பதும், இயக்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் முயன்றது என்பதும் உலகறிந்த உண்மைகள்.

2 hours ago, விசுகு said:

ஆனால் இங்கே கதை எழுதுபவர்களோடு எனது முரண்பாடு என்னவென்றால் தமிழ் ஈழம் என்பது சாத்தியமே இல்லை ஆயுதப்போராட்டம் இனி வரவே வராது என்பவர்கள் ஆயுதப்போராட்டத்தின் முன்னைய அல்லது அவர்களின் தவறுகளில் இருந்து எதை பெறமுடியும்??

ஆயுதப்போராட்டத்தில் ஆயுதம் மற்றும் போரியல் சம்பந்தப்பட்ட தவறுகளை அடையாளம் காணும் அளவுக்கு இக்களத்தில் அந்த துறைசார் மேதைகள் எவருமே இல்லை. அங்கேயுள்ள மக்களுக்கு விடிவு பிறக்க வேண்டுமானால், அவர்களின் எதிர்காலத்தை சிறப்பான முறையில் இன்றே அடையாளம் காணத்தக்க தலைவர்கள் தேவை. அடுத்து எடுக்கும் நகர்வுகளின் தாக்கத்தை சரியாக எதிர்வு கூறத்தக்க தீர்க்கதரிசன சிந்தனையுடைய அறிஞர்களை பேசவிடும் பொறுமை எமக்கு தேவை. “இங்கே கதை எழுதுபவர்களோடு எனது முரண்பாடு” என்ற உங்கள் வசனத்திலே இவ்வாறான மாற்று சிந்தனைகளுக்கு இடங்கொடுக்கும் பொறுமையை காணவில்லையே? போர்க்காலத்திலும் அந்த பொறுமை குறைவாக இருந்ததால் பலர் ஒதுங்கி சென்றார்கள். ஆனால், அவர்களில் சிலர் முடிவை எதிர்வு கூறி இருக்கவில்லையா? இனியாவது பொறுமையுடன் எங்களுக்கு உவப்பாக இருக்காத எதிர்காலம் பற்றி இவர்களிடம் கேட்டறிந்து அந்த எதிர்காலத்தை மாற்ற முயற்சிக்கலாமே?
 

 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, கற்பகதரு said:

இன்றைய உலகை கையாளுவது கடினமானது என்பதும், இயக்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் முயன்றது என்பதும் உலகறிந்த உண்மைகள்.

ஆயுதப்போராட்டத்தில் ஆயுதம் மற்றும் போரியல் சம்பந்தப்பட்ட தவறுகளை அடையாளம் காணும் அளவுக்கு இக்களத்தில் அந்த துறைசார் மேதைகள் எவருமே இல்லை. அங்கேயுள்ள மக்களுக்கு விடிவு பிறக்க வேண்டுமானால், அவர்களின் எதிர்காலத்தை சிறப்பான முறையில் இன்றே அடையாளம் காணத்தக்க தலைவர்கள் தேவை. அடுத்து எடுக்கும் நகர்வுகளின் தாக்கத்தை சரியாக எதிர்வு கூறத்தக்க தீர்க்கதரிசன சிந்தனையுடைய அறிஞர்களை பேசவிடும் பொறுமை எமக்கு தேவை. “இங்கே கதை எழுதுபவர்களோடு எனது முரண்பாடு” என்ற உங்கள் வசனத்திலே இவ்வாறான மாற்று சிந்தனைகளுக்கு இடங்கொடுக்கும் பொறுமையை காணவில்லையே? போர்க்காலத்திலும் அந்த பொறுமை குறைவாக இருந்ததால் பலர் ஒதுங்கி சென்றார்கள். ஆனால், அவர்களில் சிலர் முடிவை எதிர்வு கூறி இருக்கவில்லையா? இனியாவது பொறுமையுடன் எங்களுக்கு உவப்பாக இருக்காத எதிர்காலம் பற்றி இவர்களிடம் கேட்டறிந்து அந்த எதிர்காலத்தை மாற்ற முயற்சிக்கலாமே?
 

 

ஐயா Justin,

""தற்போது தமிழர்களுக்கு போராடுவதற்கான தேவை இருக்கிறதா ? 

இருந்தால் எந்த வழியில் போராடுவது ? ""

என்று கேட்டிருந்தேன். பதில் இன்னும் வரவில்லையே ..? ஏன்... ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.