Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச அரங்கில்... இலங்கையை, நிறுத்தமுடியாதுள்ளமைக்கு.. தமிழ்த் தலைமைகளே காரணம்- கஜேந்திரன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

சர்வதேச அரங்கில்... இலங்கையை, நிறுத்தமுடியாதுள்ளமைக்கு...  தமிழ்த் தலைமைகளே காரணம்- கஜேந்திரன்.

தமிழ்த் தலைமைகள் கடந்த காலங்களில் விட்ட தவறினாலேயே, இலங்கையை சர்வதேச அரங்கில் நிறுத்தமுடியாதுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர்  இவ்வாறு கூறினார்.

குறித்த ஊடக சந்திப்பில் செல்வராசா கஜேந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இன அழிப்பு யுத்தத்துக்கு தலைமை தாங்கி கொண்டு இருந்தவர்கள் தற்போதைய ஆட்சியாளர்கள்தான்.

இன்றைய பிரதமர் அன்றைய ஜனாதிபதியாகவும் இன்றைய ஜனாதிபதி  அன்றைய பாதுகாப்பு செயலாளராகவும்  இருந்து அதனை செயற்படுத்தி இருந்தார்கள்.

இந்த விடயங்கள் தொடர்பாக சர்வதேசளவில் செயற்பட்டு, சர்வதேச விசாரணையை கொண்டு வந்தால் மாத்திரமே இவர்களை கட்டுப்படுத்த முடியும். இல்லையெனில் தமிழர்களை இங்கு வாழவிடப்போவதில்லை.

கடந்த ஆட்சியாளர்களின் தவறுகளே தற்போது ஜனநாயக விரோத ஆட்சியை அவர்கள் நடத்துவதற்கு காரணமாக காணப்படுகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://yarl.com/forum3/forum/40-ஊர்ப்-புதினம்/?do=add

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

 

 

சர்வதேச அரங்கில்... இலங்கையை, நிறுத்தமுடியாதுள்ளமைக்கு...  தமிழ்த் தலைமைகளே காரணம்- கஜேந்திரன்.

தமிழ்த் தலைமைகள் கடந்த காலங்களில் விட்ட தவறினாலேயே, இலங்கையை சர்வதேச அரங்கில் நிறுத்தமுடியாதுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தமிழ் தலைமைகளில் ஒருவரில்லையா?

4 hours ago, தமிழ் சிறி said:

சர்வதேச அரங்கில்... இலங்கையை, நிறுத்தமுடியாதுள்ளமைக்கு...  தமிழ்த் தலைமைகளே காரணம்- கஜேந்திரன்.

சரியான கூற்று தான். 1948 இலிருந்து 2020 வரையான எல்லா தலைமைகளும் தமிழரின் இன்றைய நிலைக்கு காரணம் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கற்பகதரு said:

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தமிழ் தலைமைகளில் ஒருவரில்லையா?

அவர் பாராளுமன்றத்துக்கு வந்து.... இப்ப மூண்டு மாசம் தான்... ஆகுது.
அவருடன்... ஈழ  அரசியலில், 75 வருடமாக கொட்டை  போட்ட..
சம்பந்தன் ஐயாவை... ஒரே, தராசில் நிறுத்துப்  பார்ப்பது,
உங்களுக்கே... நியாயமாய் இருக்கா ⁉️ 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அவர் பாராளுமன்றத்துக்கு வந்து.... இப்ப மூண்டு மாசம் தான்... ஆகுது.
அவருடன்... ஈழ  அரசியலில், 75 வருடமாக கொட்டை  போட்ட..
சம்பந்தன் ஐயாவை... ஒரே, தராசில் நிறுத்துப்  பார்ப்பது,
உங்களுக்கே... நியாயமாய் இருக்கா ⁉️ 🤣

ஓ..... தலைமை இன்னும் சம்பந்தனா? கஜேந்திரனுக்கு வோட்டுப்போட்டது தலைமையை மாற்றுவதற்கு என்று நினைத்து ஏமாந்து போய்விட்டேன். இவர் மணிவண்ணன் போன்றவர்களுடன் சண்டைபிடிக்கும் சின்னப்பொடியன்... சரி ஒரே திராசில் தலைமைகளுடன் சின்னப்பொடியங்களை வைத்து பார்க்க கூடாதுதான். நீங்கள் சொல்வது மிகவும் சரியானதே.😃 நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதானே ..அதில் நீங்களும் சேர்த்திதானே....ஒரு மானகரசபையை ஒழுங்காக வைத்திருக்க முடியாதவர்கள் ...என்னத்தைக் கிழிக்கப் போகிறார்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கற்பகதரு said:

ஓ..... தலைமை இன்னும் சம்பந்தனா? கஜேந்திரனுக்கு வோட்டுப்போட்டது தலைமையை மாற்றுவதற்கு என்று நினைத்து ஏமாந்து போய்விட்டேன். இவர் மணிவண்ணன் போன்றவர்களுடன் சண்டைபிடிக்கும் சின்னப்பொடியன்... சரி ஒரே திராசில் தலைமைகளுடன் சின்னப்பொடியங்களை வைத்து பார்க்க கூடாதுதான். நீங்கள் சொல்வது மிகவும் சரியானதே.😃 நன்றி.

குறுக்க நிக்கிற...  கிழட்டு நரியை, ஓரம் கட்டி...
அடுத்த... புது வருசத்துக்குள்ளை, அல்லது தீபாவளிக்குள்ளை...
 தீர்வு தருவார்....  கஜேந்திரன் செல்வராஜா. 👍 

உங்களுக்கு... பொங்கலுக்கு முன், தீர்வு வேணும், எண்டு...
அடம்...  பிடிக்கப், படாது. 

இது... சாணக்கிய அரசியல்,  
நைசாக... சிங்களவனை, மனம் மாற்ற வேணும் கண்டியளோ.... :grin:


இந்த விசயத்தில...  
"சுடுகுது... மடியை, பிடி"  என்று... சொல்லக் கூடாது,  புரிஞ்சுதா... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

அவர் பாராளுமன்றத்துக்கு வந்து.... இப்ப மூண்டு மாசம் தான்... ஆகுது.
அவருடன்... ஈழ  அரசியலில், 75 வருடமாக கொட்டை  போட்ட..
சம்பந்தன் ஐயாவை... ஒரே, தராசில் நிறுத்துப்  பார்ப்பது,
உங்களுக்கே... நியாயமாய் இருக்கா ⁉️ 🤣

சரியாகச் சொன்னீர்கள் சிறீ அண்ணா! 

40000 சவப்பெட்டிகளைத் தயார் செய்யுங்கள் என்று சிங்கத்தின் குகைக்குள் நின்றே சவால்விட்ட பின்கதவு கஜே எங்கே!

சிங்கக் கொடியாட்டி வருடாவருடம் தீர்வுவரும் என்று மக்களை மடையராக்கும் சம்பந்தன் எங்கே! 

இருவரையும் ஒரே தராசில் வைக்கக்கூடாது தான்.

வெள்ளை வானில் கடத்தப்பட்ட தன் சகோதரனை கோத்தாவுடன் டீல் பேசி விடுவித்த பாசக்கார பயபுள்ள பின்கதவு கஜே இப்போது தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது குறித்து 3 மாதங்கள மும்முர முயற்சியில் இருப்பார் என நம்பலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வாலி said:

---வெள்ளை வானில் கடத்தப்பட்ட தன் சகோதரனை கோத்தாவுடன் டீல் பேசி விடுவித்த பாசக்கார பயபுள்ள பின்கதவு கஜே இப்போது தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது குறித்து 3 மாதங்கள மும்முர முயற்சியில் இருப்பார் என நம்பலாம். 

வெள்ளை.... வானில், கடத்தியது... டக்ளஸ் கும்பல்.

வாலி... 
காலி  வீதியில், வெள்ளவத்தையில், 
ஒரு பிரபலமான தமிழ்க் கடையின் முன்... 
பலரும் பார்க்கக் கூடியதாக... 
டக்ளஸ் தேவானந்தாவின்.. அடியாட்களே, கஜனின் சகோதரரை கடத்தினார்கள்.

அதனை...  சர்வதேச செஞ்சிலுவை சங்கமும், 
நோர்வே தூதரகமும்... தான், கையாண்டது. 

உங்களுக்கு... விருப்பம் இல்லாதவர்கள், மீது....

கோத்தா, கீத்தா... என்று, 
உண்மைக்கு... புறம்பான செய்திகளை, சொல்வது... அழகல்ல. 

 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

வெள்ளை.... வானில், கடத்தியது... டக்ளஸ் கும்பல்.

வாலி... 
காலி  வீதியில், வெள்ளவத்தையில், 
ஒரு பிரபலமான தமிழ்க் கடையின் முன்... 
பலரும் பார்க்கக் கூடியதாக... 
டக்ளஸ் தேவானந்தாவின்.. அடியாட்களே, கஜனின் சகோதரரை கடத்தினார்கள்.

அதனை...  சர்வதேச செஞ்சிலுவை சங்கமும், 
நோர்வே தூதரகமும்... தான், கையாண்டது. 

உங்களுக்கு... விருப்பம் இல்லாதவர்கள், மீது....

கோத்தா, கீத்தா... என்று, 
உண்மைக்கு... புறம்பான செய்திகளை, சொல்வது... அழகல்ல. 

 

இந்த அணுகுமுறை எல்லோர் விடயத்திலும் கடைப்பிடிக்கப்படுகின்றதா?

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

வெள்ளை.... வானில், கடத்தியது... டக்ளஸ் கும்பல்.

வாலி... 
காலி  வீதியில், வெள்ளவத்தையில், 
ஒரு பிரபலமான தமிழ்க் கடையின் முன்... 
பலரும் பார்க்கக் கூடியதாக... 
டக்ளஸ் தேவானந்தாவின்.. அடியாட்களே, கஜனின் சகோதரரை கடத்தினார்கள்.

அதனை...  சர்வதேச செஞ்சிலுவை சங்கமும், 
நோர்வே தூதரகமும்... தான், கையாண்டது. 

உங்களுக்கு... விருப்பம் இல்லாதவர்கள், மீது....

கோத்தா, கீத்தா... என்று, 
உண்மைக்கு... புறம்பான செய்திகளை, சொல்வது... அழகல்ல. 

 

சர்வதேச செஞ்சிலுவை சங்கமும், நோர்வே தூதரகமும் கையாளும் அளவுக்கு மேல் மட்டத்தில் கஜேக்கு செல்வாக்கு இருந்திருக்கின்றது. அந்த மேல் மட்டம் எது? சாதாரண மக்களுக்கு இது சாத்தியமானதாக இருந்ததா? 40000 சவப்பெட்டிகளை தயார் செய்யச் சொன்ன இவர் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வாலி said:

இந்த அணுகுமுறை எல்லோர் விடயத்திலும் கடைப்பிடிக்கப்படுகின்றதா?

சின்னப் பிள்ளை மாதிரி.... வாதிட வேண்டாம் வாலி.
ஒவ்வொரு அணுகு முறையும்... கால, நேர, சந்தர்ப்ப அளவுகளில் மாறு படலாம். 

கொழும்பு... காலி வீதியில், ஒரு  "வெள்ளை வான்"  ஆள்  கடத்தல் என்பதற்கும்...

ஊரில்... ஒரு, குக்கிராமத்தில்... நடக்கும்,
"வெள்ளை வான்" கடத்தலுக்கும்  பாரிய வித்தியாசம் உள்ளது.

என்ன... இருந்தாலும், நீங்கள்... டக்ளஸ் கடத்தினான், 
என்பதை... ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்.....  
என்பது... தெள்ளத்  தெளிவாக தெரிந்த உண்மை.  :grin:

7 minutes ago, வாலி said:

சர்வதேச செஞ்சிலுவை சங்கமும், நோர்வே தூதரகமும் கையாளும் அளவுக்கு மேல் மட்டத்தில் கஜேக்கு செல்வாக்கு இருந்திருக்கின்றது. அந்த மேல் மட்டம் எது? சாதாரண மக்களுக்கு இது சாத்தியமானதாக இருந்ததா? 40000 சவப்பெட்டிகளை தயார் செய்யச் சொன்ன இவர் மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? 

மீண்டும்... மேலே, உள்ள... எனது பதிவை வாசிக்கவும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு டக்ளஸ் கடத்தினானா,  சிங்கள ராணுவம் கடத்தியதா அல்லது வேறு எவர் கடத்தினரா என்பது முக்கியமல்ல. ஒரு வெள்ளை வான் கடத்தல் இடம் பெற்றிருக்கின்றது. உடனே நோர்வேயும் செஞ்சிலுவைச் சங்கமும் தலையிட்டிருக்கின்றன. கடத்தப்பட்ட நபர் விடுவிக்கப்பட்டிருக்கின்றார் ( விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி) இது எல்லோருக்கும் சாத்தியமானதாக இருந்ததா?

உங்கள் கருத்துப்படி டக்ளஸ் வெள்ளவத்தையில் கடத்த நேர்வேயும் செஞ்சிலுவைச் சங்கமும் கோத்தாவிடம் பேசி விடுவித்து இருக்கின்றன. சூப்பர் டீல்👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வாலி said:

இங்கு டக்ளஸ் கடத்தினானா,  சிங்கள ராணுவம் கடத்தியதா அல்லது வேறு எவர் கடத்தினரா என்பது முக்கியமல்ல. ஒரு வெள்ளை வான் கடத்தல் இடம் பெற்றிருக்கின்றது. உடனே நோர்வேயும் செஞ்சிலுவைச் சங்கமும் தலையிட்டிருக்கின்றன. கடத்தப்பட்ட நபர் விடுவிக்கப்பட்டிருக்கின்றார் ( விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி) இது எல்லோருக்கும் சாத்தியமானதாக இருந்ததா?

உங்கள் கருத்துப்படி டக்ளஸ் வெள்ளவத்தையில் கடத்த நேர்வேயும் செஞ்சிலுவைச் சங்கமும் கோத்தாவிடம் பேசி விடுவித்து இருக்கின்றன. சூப்பர் டீல்👍

உங்கள் பாசையில்...  
உங்களுக்கு... 
கோத்தாவுடன், கஜேந்திரன்...
 "டீல்" பண்ணியதற்கான... ஆதாரங்கள் இருந்தால்,
முன் வையுங்களேன்.... நாங்களும், ஒருக்கால் பாப்பம்.    🙃

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

உங்கள் கருத்துப்படி டக்ளஸ் வெள்ளவத்தையில் கடத்த நேர்வேயும் செஞ்சிலுவைச் சங்கமும் கோத்தாவிடம் பேசி விடுவித்து இருக்கின்றன. சூப்பர் டீல்👍

எஜமானின் கட்டளைகளை அடிமைகள் தலைமேற் கொண்டு  செய்யும் போது அந்தக் கட்டளைகளின்  பொறுப்பாளி எஜமானே. ஒட்டுக்குழுக்கள் அனைத்தும் கோத்தாவின் அடிமைகளே. 

  • கருத்துக்கள உறவுகள்

கௌரவ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம். கே.  சிவாஜிலிங்கம் அவர்கள் இவ்வாறு கூறியிருக்கின்றார்கள்!

“தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் பொதுச் செய­லர் செல்­வ­ராஜா கஜேந்­தி­ர­னின் தம்பி கடத்­தப்­பட்ட போது கோத்­த­பாய ராஜ­பக்­ச­வி­டம் ஓடி­போய் கடத்­தப்­பட்ட சகோ­த­ரனை கஜேந்­தி­ரன் மீட்டு வந்­தார். ஆனால் ஊரான் வீட்­டுப் பிள்­ளை­கள் வெள்ளை வானில் கடத்­தப்­பட்­டார்­கள். அப்­போது கடத்­தப்­பட்­ட­வர்­களை காப்­பற்ற என்ன செய்­தார்­கள்.“

Edited by வாலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.