Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவான உண்மை வரலாறும் இன்று நடப்பதும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

மன்னிக்கவும் ரஞ்சித் எனது கேள்வி இதுவல்ல.

உங்களின் ஒற்றைவரிக் கேள்வி என்ன?

Just now, ரஞ்சித் said:

உங்களின் ஒற்றைவரிக் கேள்வி என்ன?

நீங்கள் பதிலளித்த கேள்விக்கு அடுத்த வரியில் உள்ள கேள்வி தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

நீங்கள் பதிலளித்த கேள்விக்கு அடுத்த வரியில் உள்ள கேள்வி தான்.

வரலாற்று விடயங்களை உள்ளதை உள்ளபடி அறிவதில்  எந்த தவறும் இல்லை. ராஜனி கொலை ஈபிஆர்எவ் செய்தது என்றால் புலிகளின் ஆரம்ப காலத்தில் புலிகளுக்கு முக்கிய உதவிகளை செய்த, ( காயப்பட்ட புலிகளை தனது  சகோதரி வீட்டில் வைத்தியம் பார்தது பராமரித்த) ராஜனிக்கு ஒரு நினைவு வணக்கம் புலிகள் செய்யாது ஏன்?  அவரது கொலை செய்திகளை இருட்டிப்பு செய்ததேன்? 

புலிகள் ராஜினிக்கு நினைவு வணக்கம் செய்யாததுதான் பிரச்சினையா அல்லது நினைவு வணக்கம் செய்யாததே அவரைப் புலிகள் செய்தார்கள் என்று நீங்கள் நம்புவதனாலா? இரண்டிற்கும் பதில் ஒன்றுதான். அவர் வணக்கம் செய்யுமளவிற்கு தகுதியானவராக இருந்திருக்கவில்லை, அவரைப் புலிகள் கொல்லவும் இல்லை. 

 

ராஜினி கொல்லப்பட்ட அன்று வரதராஜப்பெருமாளைச் சென்று சந்தித்த சிறிதரன் தனக்குச் சொல்லப்பட்டபடியே வெளியில்வந்து புலிகளே அவரைக் கொன்றார்கள் என்று கூறினார். இதுதான் நடந்தது. இதை ஏற்கமுடியாதென்றால் நான் என்ன செய்யமுடியும்? ஈ பி ஆர் எல் எப் இக்கொலையினைச் செய்திருக்கமாட்டர்கள் என்று நீங்கும் நம்புமளவிற்கு அவர்கள் தேவதூதர்களா? 

அவரைக் கொன்றது புலிகள்தான் என்று உங்களுக்குத் தெரிந்தால் இங்கே அதைப் பகிருங்கள். எல்லோரும் பார்க்கலாம்.

Just now, ரஞ்சித் said:

வரலாற்று விடயங்களை உள்ளதை உள்ளபடி அறிவதில்  எந்த தவறும் இல்லை. ராஜனி கொலை ஈபிஆர்எவ் செய்தது என்றால் புலிகளின் ஆரம்ப காலத்தில் புலிகளுக்கு முக்கிய உதவிகளை செய்த, ( காயப்பட்ட புலிகளை தனது  சகோதரி வீட்டில் வைத்தியம் பார்தது பராமரித்த) ராஜனிக்கு ஒரு நினைவு வணக்கம் புலிகள் செய்யாது ஏன்?  அவரது கொலை செய்திகளை இருட்டிப்பு செய்ததேன்? 

புலிகள் ராஜினிக்கு நினைவு வணக்கம் செய்யாததுதான் பிரச்சினையா அல்லது நினைவு வணக்கம் செய்யாததே அவரைப் புலிகள் செய்தார்கள் என்று நீங்கள் நம்புவதனாலா? இரண்டிற்கும் பதில் ஒன்றுதான். அவர் வணக்கம் செய்யுமளவிற்கு தகுதியானவராக இருந்திருக்கவில்லை, அவரைப் புலிகள் கொல்லவும் இல்லை. 

 

 இராணுவக்கெடுபிடிகளின் மத்தியுலும் தனது உயிரை துச்சமென மதித்து, விடுதலைபுலிப்போராளிகள் காயப்பட்ட போது வைத்தியம் பார்த்து அவர்களை காப்பாற்றியது வணக்கம் செய்ய தகுதியற்ற நிலையா?

 இது உங்களுக்கே ஓவராக தெரியவில்லை. விசுவாசம் கண்ணை மட்டுமல்ல மனச்சாட்சியையும் மறைக்கும் என்பது உண்மை தான். 

ரஞ்சித், அனைத்து ஆயுத இயக்கங்களும் ஈவிரக்கமின்றி அப்பாவிகளை கொலை செய்த‍துத உண்மை. இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. அதில் பிரயோசனமும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

பக்கம் பக்கமாக எழுதும் உங்களால்

உங்களுக்குப் பதிலளிப்பதற்காகப் பக்கம் பக்கமாக எழுதவில்லை. நீங்கள் குறிப்பிட்ட யாழ்ப்பாணத்தின் பெருமையான துரையப்பா அரங்கு எனது பார்வையில் எப்படியிருந்தது என்பதை எனது அனுபவத்திலிருந்து எழுதினேன்.

சிலவேளைகளில் நான் எழுதுவது எனது உணர்வுகளின் வெளிப்பாட்டிற்கேயன்றி, மற்றையவர்கள் அதனைப் படிக்கவேண்டும் என்பதற்காகவல்ல. 

நான் அந்தப் பதிவினை இடும்போது உங்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் எண்ணம் இருக்கவில்லை. ஏதோ எதேச்சையாகக் கேட்கிறீர்கள் என்று கடந்து சென்றுவிட்டேன்.  

3 minutes ago, tulpen said:

இராணுவக்கெடுபிடிகளின் மத்தியுலும் தனது உயிரை துச்சமென மதித்து, விடுதலைபுலிப்போராளிகள் காயப்பட்ட போது வைத்தியம் பார்த்து அவர்களை காப்பாற்றியது வணக்கம் செய்ய தகுதியற்ற நிலையா?

துல்பேன்,

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள முடியாத முட்டாள் இல்லை நான்.

ரஜினிக்கு நினைவு வணக்கம் செய்ய முடியாமைக்கான காரணம் புலிகளே அவரைக் கொன்றார்கள் என்பதனால்த்தான் என்று நிறுவ முற்படுகிறீர்கள் என்பது எனக்குத் தெரிகிறது. இதற்குப் போய் எனது மனச்சாட்சியை எல்லாம் எதற்கு இழுக்கிறீர்கள்? 

உங்களுக்கு விரும்பியதை நினைத்துக்கொள்ளுங்கள், நான் தடுக்கமுடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியாக, அந்த உண்மையான தேசியவாதிகள் யாரென்பதையும் கூறிவிடுங்கள்.

2 minutes ago, ரஞ்சித் said:

உங்களுக்குப் பதிலளிப்பதற்காகப் பக்கம் பக்கமாக எழுதவில்லை. நீங்கள் குறிப்பிட்ட யாழ்ப்பாணத்தின் பெருமையான துரையப்பா அரங்கு எனது பார்வையில் எப்படியிருந்தது என்பதை எனது அனுபவத்திலிருந்து எழுதினேன்.

சிலவேளைகளில் நான் எழுதுவது எனது உணர்வுகளின் வெளிப்பாட்டிற்கேயன்றி, மற்றையவர்கள் அதனைப் படிக்கவேண்டும் என்பதற்காகவல்ல. 

நான் அந்தப் பதிவினை இடும்போது உங்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் எண்ணம் இருக்கவில்லை. ஏதோ எதேச்சையாகக் கேட்கிறீர்கள் என்று கடந்து சென்றுவிட்டேன்.  

மன்னிக்கவும் ரஞ்சித், உங்களது உணர்வுகளை காயப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. வரலாற்றில் சில விடயங்களை  உணர்ச்சி வசப்படாமல் வாசித்த‍த்தால் பல உண்மைகளை Realize பண்ணக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்த‍து.  எம்மை நாமே ஏமாற்றி கொள்வதால் எந்த பிரயோசனமும் இல்லை. 

கருத்தாடலுக்கு நன்றி ரஞ்சித். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

மன்னிக்கவும் ரஞ்சித், உங்களது உணர்வுகளை காயப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. வரலாற்றில் சில விடயங்களை  உணர்ச்சி வசப்படாமல் வாசித்த‍த்தால் பல உண்மைகளை Realize பண்ணக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்த‍து.  எம்மை நாமே ஏமாற்றி கொள்வதால் எந்த பிரயோசனமும் இல்லை. 

கருத்தாடலுக்கு நன்றி ரஞ்சித். 

உங்களுக்கும் எனது நன்றிகள்.

4 minutes ago, ரஞ்சித் said:

இறுதியாக, அந்த உண்மையான தேசியவாதிகள் யாரென்பதையும் கூறிவிடுங்கள்.

அதற்கான பதில் இதுவரை இல்லை என்பது தான். மக்கள் மட்டும் தான்.  உண்மையான தேசியத்தை விரும்பிய மக்களை " பிச்சை வேண்டாம் நாயை பிடி" என்ற நிலைக்கு உருவாக்கியவர்கள் இந்த அரசியல் ஆயுத போலி தேசியவாதிகள் தான்

எதிர்காலத்திலாவது அறிவுபூர்மான உண்மை தேசியவாதிகள் வருவார்கள் என்று நீங்களும் நானும் நம்புவோம். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

அதற்கான பதில் இதுவரை இல்லை என்பது தான். மக்கள் மட்டும் தான்.  உண்மையான தேசியத்தை விரும்பிய மக்களை " பிச்சை வேண்டாம் நாயை பிடி" என்ற நிலைக்கு உருவாக்கியவர்கள் இந்த அரசியல் ஆயுத போலி தேசியவாதிகள் தான்

தமிழரசுக் கட்சியின் அரசியல் போலியானதாக இருக்கலாம். ஆனால் புலிகளோ ஆரம்பத்தில் இருந்த ஏனைய இயக்கங்களின் போராட்டமோ போலியானது இல்லை. சிங்கள ஆக்கிரமிப்பிற்கெதிரான அவர்களின் போராட்டத்தில் போலித்தனம் இருக்கவில்லை, அவர்கள் எவரையும் ஏமாற்றி சுயநலத்திற்காகப் போராடவில்லை. வேண்டுமென்றால் போராடிய விதங்கள் பிழையாக இருக்கலாம், அதற்காக அதன் தேவையும், நியாயத்தன்மையும் போலியென்று நீங்கள் கூறுவதை என்னால் ஏற்கமுடியவில்லை. 

எம் இனத்தின் மீதான சிங்கள ஆக்க்ரமிப்புப் போலியானதில்லை. அதனால் எமக்கேற்பட்டுவரும் அழிவுகள் போலியானதில்லை. நாம் இழந்த உயிர்களும், கொடுத்த தியாகங்களும் போலியானது இல்லை. எமது இலட்சியமான சுதந்திர தாயகமும் போலியானது இல்லை. அப்படியானால் நீங்கள் கூறும் போலித்தனம் எங்கிருக்கிறது. புலிகளோ மற்றைய இயக்கங்களோ மக்களை ஏமாற்றத்தான் ஆயுதப் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்து நடத்தினார்கள் என்று நினைக்கிறீர்களா? அதனால் அவர்களுக்கு உள்ள ஆதாயம் என்ன? 

உங்களுக்கு புலிகள் மீதிருக்கும் வெறுப்பினால் அவர்களின் இலட்சியத்தினைப் போலியென்று கூறுகிறீர்கள். அது உங்கள் விருப்பம். என்னால் மாற்றவும் முடியாது, மாற்றும் எண்ணமும் கிடையாது. 

3 minutes ago, ரஞ்சித் said:

தமிழரசுக் கட்சியின் அரசியல் போலியானதாக இருக்கலாம். ஆனால் புலிகளோ ஆரம்பத்தில் இருந்த ஏனைய இயக்கங்களின் போராட்டமோ போலியானது இல்லை. சிங்கள ஆக்கிரமிப்பிற்கெதிரான அவர்களின் போராட்டத்தில் போலித்தனம் இருக்கவில்லை, அவர்கள் எவரையும் ஏமாற்றி சுயநலத்திற்காகப் போராடவில்லை. வேண்டுமென்றால் போராடிய விதங்கள் பிழையாக இருக்கலாம், அதற்காக அதன் தேவையும், நியாயத்தன்மையும் போலியென்று நீங்கள் கூறுவதை என்னால் ஏற்கமுடியவில்லை. 

எம் இனத்தின் மீதான சிங்கள ஆக்க்ரமிப்புப் போலியானதில்லை. அதனால் எமக்கேற்பட்டுவரும் அழிவுகள் போலியானதில்லை. நாம் இழந்த உயிர்களும், கொடுத்த தியாகங்களும் போலியானது இல்லை. எமது இலட்சியமான சுதந்திர தாயகமும் போலியானது இல்லை. அப்படியானால் நீங்கள் கூறும் போலித்தனம் எங்கிருக்கிறது. புலிகளோ மற்றைய இயக்கங்களோ மக்களை ஏமாற்றத்தான் ஆயுதப் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்து நடத்தினார்கள் என்று நினைக்கிறீர்களா? அதனால் அவர்களுக்கு உள்ள ஆதாயம் என்ன? 

உங்களுக்கு புலிகள் மீதிருக்கும் வெறுப்பினால் அவர்களின் இலட்சியத்தினைப் போலியென்று கூறுகிறீர்கள். அது உங்கள் விருப்பம். என்னால் மாற்றவும் முடியாது, மாற்றும் எண்ணமும் கிடையாது. 

தமிழரசுக்கட்சியில் அரசியல் போலித்தனத்தின் எதிர்மறை அத்தனையும் உள்வாங்கி கொண்டவர்கள் தான் அத்தனை ஆயுத போராட்ட இயக்கங்களும். அவர்களுள் புலிகளும் உள்ளடக்கம்.

இலட்சியத்திற்கு உணமையாக இருப்பதை விட தமது ஆதிக்கம் அதிகாரத்திற்கு உண்மையாக இருக்கவே அத்தனை இயக்கங்களும் அவர்களை அறியாமலே உள்ளானார்கள். இதில் புலி, புளொட், ரெலோ என்று எந்த வேறுபாடுகளும் இல்லை. இலட்சியத்திற்கு உண்மையாக இருந்திருந்தால் சகிப்பு தன்மையற்று  அப்பாவிகளை கொலை செய்திருக்க மாட்டார்கள். 

உண்மையான ஜதாரத்தம் என்பது மக்கள் பார்வையில் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்பது தான். அதை தான் கடந்த தேர்தலில் மக்களாக காட்டினார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

ராஜினி கொல்லப்பட்ட அன்று வரதராஜப்பெருமாளைச் சென்று சந்தித்த சிறிதரன் தனக்குச் சொல்லப்பட்டபடியே வெளியில்வந்து புலிகளே அவரைக் கொன்றார்கள் என்று கூறினார். இதுதான் நடந்தது. இதை ஏற்கமுடியாதென்றால் நான் என்ன செய்யமுடியும்? ஈ பி ஆர் எல் எப் இக்கொலையினைச் செய்திருக்கமாட்டர்கள் என்று நீங்கும் நம்புமளவிற்கு அவர்கள் தேவதூதர்களா? 

 

ராஜினி திரணகம இலண்டனில் இருக்கும்போது புலிகளுக்கு சார்பாக இயங்கியவர். அவர் புலிகளின் அலுவலகத்தில் தட்டச்சு உதவி எல்லாம் செய்தார் என்று அண்மையில் படித்திருந்தேன்.

—-

சிங்களவர்கள் முட்டாள்கள், நாங்கள் கெட்டிக்காரர்கள் என்பது ஓர் அரசியல் கோட்பாடு அல்ல. அது வெறும் Fantasy. இந்த மேற்குலக நாடுகளின் நிலைப்பாடு என்ன? They do not care who get killed. அவர்கள் தங்களுடைய நலனுக்காக யாரையும் கொலை செய்வார்கள். அது தான் நடக்கின்றது. இவற்றை நான் சொன்னால் ‘போர் என்றால் மக்கள் இறப்பார்கள்’ என்ற பதில் தான் ராஜினிடமிருந்து எத்தனையோ தரம் வந்தது. அவர் என்னுடன் City University கூட்டத்துக்கு வந்திருக்கின்றார். நான் மனித உரிமை பற்றி கதைத்தேன். அவர் தனி நாடு ஏன் தேவை? Legitimized struggle for oppressed   என்று பேசினார். 

 

Edited by கிருபன்

7 hours ago, கிருபன் said:

ராஜினி திரணகம இலண்டனில் இருக்கும்போது புலிகளுக்கு சார்பாக இயங்கியவர். அவர் புலிகளின் அலுவலகத்தில் தட்டச்சு உதவி எல்லாம் செய்தார் என்று அண்மையில் படித்திருந்தேன்.

கிருபன் அதை விட பெரிய விடயம் காயப்பட்ட புலிப்போராளிகளுக்கு இராணுவ நெருக்கடிகள் மத்தியிலும் வைத்தியம் பார்த்து காப்பாறியது. அவருக்கு   நினைவு வணக்கம் செய்ய தகுதியற்றவர் அதனால் செய்யவில்லை  என்று கூறுமளவுக்கு உண்மை மறைக்கப்படுகிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, tulpen said:

கிருபன் அதை விட பெரிய விடயம் காயப்பட்ட புலிப்போராளிகளுக்கு இராணுவ நெருக்கடிகள் மத்தியிலும் வைத்தியம் பார்த்து காப்பாறியது. அவருக்கு   நினைவு வணக்கம் செய்ய தகுதியற்றவர் அதனால் செய்யவில்லை  என்று கூறுமளவுக்கு உண்மை மறைக்கப்படுகிறது. 

எங்கள் கண் முன்னால் நிகழந்த சம்பவங்கள் எல்லாம் திரிபுபடுத்தப்பட்ட வரலாறாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் என்றும் தலைவர் பிரபாகரனின் உறவினர் என்றும், பிரதேசவாத வெறியுடன் முகநூலில் வந்த காணொளியைப் பார்த்தேன். சிரிப்பதா அல்லது நோவதா என்று தெரியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
On 16/1/2021 at 01:33, Justin said:

பிரபா, நீங்கள் வாசித்த கட்டுரையை எழுதியவர்கள் குறிப்பிடாத விடயங்கள் சில இருக்கின்றன:

புலிகளால் அழிக்கப் பட்ட இயக்கங்களில் இடதுசாரிவாதம் இருந்தது. புலிகளிடம் தேசியவாதம் மட்டுமே இருந்தது. அந்த இயக்கங்களை ஸ்தீரி லோலன்களாக மட்டுமே சுட்டிக் காட்டும் வரலாறு மட்டுமே புலிகளின் சார்பானவர்களால் இன்று எழுதப் படுகின்றன.

நான் நினைக்கிறேன் 1984/85 வரை யாழில் மேதின ஊர்வலம் நடத்தி வந்த இடது சாரிகளை "சிவப்புக் கொடியை இனி மடிச்சு வைச்சு விட்டு, புலிக் கொடியைத் தூக்கிப் பிடியுங்கோ!" என்று புலிகள் சொன்னதோடு வடக்கில் இடது சாரிகள் மௌனமாகி விட்டனர். 

 

நன்றி Justin அண்ணா..

நான் வளர்ந்த சூழலில் சமயத்தில் அப்பொழுது இந்த இடதுசாரிகள் என்றால் நான் அறிந்தது வாசுதேவ நாணயக்காரவும், JVPயும் விக்ரமபாகு கருணாரட்னவும் தான்.. இதில் விக்ரமபாகு கருணாரட்னாவை தவிர மற்றவர்கள் இப்பொழுது இடதுசாரிகள் இல்லை.. 

சமீபத்தில்தான் இனியொரு என்ற வலைத்தளத்தில் வந்த ஒரு கட்டுரையில்தான் தமிழர்களிலும் இடதுசாரிகள் இருந்தார்கள் என்பதை தெரிந்துகொண்டேன்.. அதைப்பற்றி மேலும் தகவல்களை வாசிக்க தொடங்கியுள்ளேன்..

புலிகள் கூறியதால்தான் மெளனமானர்களா? இல்லை மேலே கிருபன் கூறிய காரணத்தினாலா?  // இலங்கை இடதுசாரிகளின் மோசமான வீழ்ச்சி 1970 களில் ஆரம்பித்த காலத்தில் இருந்துதான் நீங்கள் வரலாற்றைப் பார்க்கின்றீர்கள். இடதுசாரி இயக்கங்களின் வீழ்ச்சிக்குக் காரணம் அவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கான வெகுஜனப் போராட்டங்களைக் கைவிட்டு பாராளுமன்றவாதத்தில் மூழ்கியதும், தேசியமுதலாளித்துவக் கட்சியாகிய சுதந்திரக்கட்சியுடன் நிபந்தனையற்ற முறையில் கூட்டுச்சேர்ந்து அதன் வாலாக இழுபட்டுச் சென்றதுமேயாகும்//

என்னுள் இந்தக்கேள்வி எழாமல் இல்லை..

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

சமீபத்தில்தான் இனியொரு என்ற வலைத்தளத்தில் வந்த ஒரு கட்டுரையில்தான் தமிழர்களிலும் இடதுசாரிகள் இருந்தார்கள் என்பதை தெரிந்துகொண்டேன்.. அதைப்பற்றி மேலும் தகவல்களை வாசிக்க தொடங்கியுள்ளேன்..

 

தமிழரிடையே இயங்கிய இடதுசாரிகள் பற்றி பல நீண்ட கட்டுரைகள் உள்ளன. வழமைபோல அவை மிகவும் நீண்டதும் சில புரியாத சொற்களுடனும் இருப்பதால் யாழில் இணைக்கலாமா, வேண்டாமா என்று யோசிக்கின்றேன்.

ஓரளவு புரியும் மொழியில் இருந்தால் இணைக்கின்றேன்.

இடதுசாரி,  வலதுசாரி பற்றிய சிறு விளக்கம் (கலையகம் வலைப்பதிவில் சுட்டது!):
 ஒரு சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களின் நலன்களுக்காக முன்னெடுக்கப்படும் அரசியல் இடதுசாரியம். சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள முதலாளிகளின் அல்லது மேட்டுக்குடி வர்க்கத்தின் நலன்களுக்காக முன்னெடுக்கும் அரசியல் வலதுசாரியம். இடதுசாரி, வலதுசாரி என்பது பொதுப்படையான இரண்டு பிரிவுகள். இரண்டுக்கும் நடுவில் நிற்கும் அரசியல் கட்சிகளும் உள்ளன. இந்தக் கலைச்சொற்கள், அரசியலை எளிமைப் படுத்தி புரிந்து கொள்வதற்காக பாவிக்கப்படுகின்றன. இடதுசாரிகள் எல்லோரும் மார்க்சிஸ்டுகள் அல்ல. அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. 
புலிகள் தமிழ் மக்களின் நலன்களை கவனத்தில் எடுத்திருந்தால் அது இடதுசாரியம் தான். இல்லை, முதலாளிகளின் திறந்த சந்தை முக்கியம் என்று நினைத்திருந்தால் அது வலதுசாரியம் தான்.
 
"ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம், முதலாளித்துவ நலன் சார்ந்ததாக இருந்தாலும், வரலாற்றுப் போக்கில் அது முற்போக்கான பாத்திரம் வகிக்கின்றது." 150 வருடங்களிற்கு முன்னர் அயர்லாந்தின் விடுதலையை ஆதரித்த கார்ல் மார்க்ஸின் கூற்று அது.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நன்றி Justin அண்ணா..

நான் வளர்ந்த சூழலில் சமயத்தில் அப்பொழுது இந்த இடதுசாரிகள் என்றால் நான் அறிந்தது வாசுதேவ நாணயக்காரவும், JVPயும் விக்ரமபாகு கருணாரட்னவும் தான்.. இதில் விக்ரமபாகு கருணாரட்னாவை தவிர மற்றவர்கள் இப்பொழுது இடதுசாரிகள் இல்லை.. 

சமீபத்தில்தான் இனியொரு என்ற வலைத்தளத்தில் வந்த ஒரு கட்டுரையில்தான் தமிழர்களிலும் இடதுசாரிகள் இருந்தார்கள் என்பதை தெரிந்துகொண்டேன்.. அதைப்பற்றி மேலும் தகவல்களை வாசிக்க தொடங்கியுள்ளேன்..

புலிகள் கூறியதால்தான் மெளனமானர்களா? இல்லை மேலே கிருபன் கூறிய காரணத்தினாலா?  // இலங்கை இடதுசாரிகளின் மோசமான வீழ்ச்சி 1970 களில் ஆரம்பித்த காலத்தில் இருந்துதான் நீங்கள் வரலாற்றைப் பார்க்கின்றீர்கள். இடதுசாரி இயக்கங்களின் வீழ்ச்சிக்குக் காரணம் அவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கான வெகுஜனப் போராட்டங்களைக் கைவிட்டு பாராளுமன்றவாதத்தில் மூழ்கியதும், தேசியமுதலாளித்துவக் கட்சியாகிய சுதந்திரக்கட்சியுடன் நிபந்தனையற்ற முறையில் கூட்டுச்சேர்ந்து அதன் வாலாக இழுபட்டுச் சென்றதுமேயாகும்//

என்னுள் இந்தக்கேள்வி எழாமல் இல்லை..

 

பிரபா,

வெளிப்படையாக கூறிக்கொள்ளாவிடினும் Jaffna Youth Congress அமைப்புக்கூட காந்திய வழிமுறைகளில் நம்பிக்கை வைத்த ஒரு இடதுசாரிய போக்குடைய அமைப்புத்தான்.

வெள்ளையர் ஆட்சியில் கிட்டத்தட்ட நிலப்பிரபுத்துவ அமைப்புப்போல ஆதிக்க சாதி கோலோச்சிய சமூகமாகவே யாழ் சமூகம் இருந்தது. 50ம் ஆண்டுக்கு முதல் கிட்டதட்ட சகல கோவில்களிலும் தாழ்தபட்ட மக்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டது. 60களின் முடிவில் கூட 17% கோவில்களில் மட்டுமே எல்லாரும் உட் செல்ல, வடம் பிடிக்க முடிந்தது.

68இல் மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் ஆலயப்பிரவேசம் கூடாது என்று வாசலில் துவக்கோடு நின்றவர் தமிழ் தேசிய தூண் “அடங்காதமிழன்” சுந்தரலிங்கம்.

காந்தியவாதிகளும் சமபந்தி போராட்டங்களில் ஈடுபட்டாலும், அவை வெறும் கண்துடைப்பாகவே இருந்தன. எனக்கு தெரிந்த ஒருவர் ஒரு சமபந்தி போராட்டத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு போராட்டத்தன்று தனிமனிதனாக சமபந்தியில் உட்கார்ந்தாராம்😀. வாறோம் என்று சொன்ன ஏனைய உயர்சாதி காந்தியவாதிகள் கடைசி நேரத்தில் காய்வெட்டி விட்டார்களாம். மத பேதம் இன்றி சாதியம் பரவிக் கிடந்தது. 

இடதுசாரிகளின் போராட்டமும், கன்னங்கரவின் இலவச கல்வியுமே மாற்றத்தை தந்தது. 

புலிகளுக்கு அடுத்து யாழ் சமூகத்தில் அதிக மாற்றத்தை தந்தவர்கள் இடதுசாரிகளே.

ஆரம்பத்தில் கூட அனைவரினதும் அபிமான இயக்கம் புளொட். ஏன்? உமா மகேஸ்வரனினதும், பிரபாகரனினதும் சாதிய பின் புலங்கள். 

கடைசிவரை ஈபிஆர் எல் எவ் வில் தலைமையில் அதிகம் ஒரு சாதியும், உறுப்பினர்கள் அதிகம் மறுசாதியுமாகவே இருந்தார்கள். 

85-86 இல் சில இயக்கங்களை “இன்ன சாதி” இயக்கம் என இளக்காரமாக சர்வசாதாரணமாக பேசுவார்கள். 

50 களில் இடதுசாரிகள் வந்திராவிட்டால், 70 களில் பிரபாகரனை வர யாழ் சமூகம் விட்டிருக்குமா என்பது சந்தேகமே.

இலங்கையில் இடதுசாரியம் தோற்றது ஒரு வரலாற்று துயரம்.

அவர்கள் பல வருடங்களாக எமக்கு குரல் கொடுத்தும் நாம் தேர்தல் மூலம் தொடர்ந்தும் நில சுவாந்தர்களையே பாராளுமன்றம் அனுப்பியதும் இதற்கான காரணங்களில் ஒன்று.

தெற்கில் இடதுசாரிகள் பலமாக இருந்தபோது வடக்கிலும் அவர்கள் பாராளுமன்ற பலம் பெற்றிருந்தால் வரலாறு வேறு மாதிரியாக அமைந்திருக்க கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

நன்றி கோஷான்..

இனி இவர்களால் மீள எழமுடியுமோ தெரியாது ஆனால் இந்த சமயத்தில் இப்படியான ஒரு கட்டுரையை எழுதியவிதத்தில் தெரிகிறது இவர்களது உள்நோக்கம் நேர்மையான ஒன்று இல்லை என.. 

19 hours ago, கிருபன் said:

தமிழரிடையே இயங்கிய இடதுசாரிகள் பற்றி பல நீண்ட கட்டுரைகள் உள்ளன. வழமைபோல அவை மிகவும் நீண்டதும் சில புரியாத சொற்களுடனும் இருப்பதால் யாழில் இணைக்கலாமா, வேண்டாமா என்று யோசிக்கின்றேன்.

உண்மைதான்..

ஆனாலும் விடயங்கள் பல அறிய முடிந்தது..

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ் பல்கலைக்கழகத்தைத் திறந்துவைக்க வந்த பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவிற்கு  யாழ்ப்பாணம் கொடுத்த பிரமாண்டமான வரவேற்பு

https://www.facebook.com/ThamilaruviSiva/videos/2898218803835509

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.