Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`சிறுமியை ஆடையின் மேல் தொடுதல் போக்சோவில் வராது!’ - மும்பை உயர் நீதிமன்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

`குழந்தைகள் பாலியல் குற்றத்தடுப்பு சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கொடுக்க வேண்டுமானால், கடுமையான குற்றச்சாட்டாகவும், அதற்கு வலுவான ஆதாரமும் இருக்க வேண்டும்’ என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த 39 வயது நபர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் 12 வயது சிறுமிக்கு கொய்யாப்பழம் தருவதாக ஆசைவார்த்தை கூறி தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். அங்கு சென்றவுடன் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், பின்னர் அந்தப் பெண்ணின் ஆடையைக் கழற்ற முயன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

சிறார் வதை
 
சிறார் வதை

ஆனால், அச்சிறுமி கத்தி கூச்சல்போட, அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் அந்தச் சிறுமியின் வாயைப் பொத்தி அந்தக் கொடூரத்தைச் செய்துவிட்டு சிறுமியை வீட்டுக்குள் அடைத்துவிட்டு வெளியில் கதவைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார் அந்த நபர். சிறுமியை அவரின் தாயார் தேடியபோது எங்கும் கிடைக்காத நிலையில் பக்கத்து வீடு அடைக்கப்பட்டிருந்தது. ஆனால் உள்ளேயிருந்து அவரது மகளின் அழுகைச் சத்தம் வந்ததால், கதவைத் திறந்தபோது, சிறுமி நடந்த சம்பவத்தை தாயிடம் தெரிவித்தார்.

உடனே இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் குழந்தைகள் பாலியல் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டதற்காக குழந்தைகள் பாலியல் குற்றத்தடுப்பு சட்டத்தின் 8-வது பிரிவின் கீழ் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து குற்றவாளி தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி புஸ்பா கனடிவாலா வழங்கிய தீர்ப்பில் தெரிவித்திருக்கும் விளக்கம் தற்போது விவாதப் பொருளாகியிருக்கிறது. ``குழந்தைகள் பாலியல் குற்றத் தடுப்புச் சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கொடுக்க வேண்டுமானால் கடுமையான குற்றச்சாட்டாகவும், அதற்கு வலுவான ஆதாரமும் இருக்க வேண்டும். இவ்வழக்கில் சிறுமியின் ஆடையைக் குற்றவாளி கழற்றிவிட்டு மார்பகத்தைத் தொட்டாரா அல்லது அப்படியே ஆடையுடன் தொட்டாரா அல்லது கையை ஆடைக்குள்விட்டுத் தொட்டாரா என்று தெளிவாக குறிப்பிடப்படப்படவில்லை.

 

எனவே இந்தச் செயல் பாலியல் தாக்குதலில் வரவில்லை. சிறுமி உட்பட இந்த வழக்கில் அனைவரின் வாக்குமூலத்திலும் எந்தவித முரண்பாடும் இல்லை. அதோடு குற்றம்சாட்டப்பட்டவர் சிறுமியின் மார்பகத்தைத் தடவியிருக்கிறார் என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. ஆனால், சட்டப்பிரிவு 7-ன் கீழ் தோல்மீது தோல்பட்டு செய்யப்படும் அத்துமீறல்கள்தான் பாலியல் தாக்குதலாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 7-வது சட்டப் பிரிவுப்படி பாலியல் நோக்கத்தோடு பிறப்புறுப்பு, மார்பகம் போன்றவற்றைக் கையால் தொட்டதாக இருக்க வேண்டும்” என்றும் நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கு 7-வது சட்டப்பிரிவின் கீழ் குற்றமாக வரவில்லை” என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

ஆனால், சிறுமிக்கு நடந்த சம்பவத்தை பாலியல் தாக்குதலாகக் கருத வேண்டும் என்ற அரசு வழக்கறிஞரின் கோரிக்கையையும் நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார். தண்டனை, குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்ததாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதோடு இந்த வழக்கில் சிறுமியை மானபங்கப்படுத்தியதாகக் கருதி, 354-வது சட்டப்பிரிவின் கீழ் ஓராண்டு மட்டும் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

தீர்ப்பு
 
தீர்ப்பு

மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கும் இந்தத் தீர்ப்பு அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவரும் சூழலில், இதைப் பாலியல் தாக்குதலாகக் கருத முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருப்பது, இது போன்ற மற்ற வழக்குகளுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, இந்த வழக்கில் மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

`சிறுமியை ஆடையின் மேல் தொடுதல் போக்சோவில் வராது!’ - மும்பை உயர் நீதிமன்றம் | Touching a girl with a dress cannot be accepted as sexual assault: Mumbai high Court verdict (vikatan.com)

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பர்😄 நீதிபதி பெண் போல இருக்கின்றது ….வாழ்க இந்தியா 

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதியின் மீது இப்படியொரு அத்துமீறல்(😝) நடத்திப் பார்த்தால் நீதிபதியின் உண்மை முகம் தெரியவரும்

(கடுமையான சொற்பிரயோகத்தினைப் பொறுத்தருள்க)

😡

On 26/1/2021 at 02:13, Kapithan said:

நீதிபதியின் மீது இப்படியொரு அத்துமீறல்(😝) நடத்திப் பார்த்தால் நீதிபதியின் உண்மை முகம் தெரியவரும்

(கடுமையான சொற்பிரயோகத்தினைப் பொறுத்தருள்க)

😡

அண்ணே, அந்த தீர்ப்பு குடுத்தது ஒரு கிழவியாம். அதுக்கிடட போய் நீங்க சொல்ற மாதிரி -------------

  • கருத்துக்கள உறவுகள்

இது பாலியல் வன்கொடுமை இல்லையா?: தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!

spacer.png

 

பாலியல் வழக்கு ஒன்றில் மும்பை உயர் நீதிமன்றம் வழங்கிய சர்ச்சையான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று (ஜனவரி 27) நிறுத்தி வைத்தது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்த சதீஸ் ரெக்டே(39), பக்கத்து வீட்டில் வசித்த சிறுமியைக் கொய்யாப் பழம் தருவதாகக் கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது சிறுமியின், மார்பகத்தை தொட்டு பாலியல் தொந்தரவு செய்து ஆடையை அவிழ்க்க முயன்றிருக்கிறார். இதனால் சிறுமி அழ ஆரம்பித்ததால் வீட்டுக்குள்ளே வைத்துப் பூட்டிவிட்டு ஓடியிருக்கிறார். இதையடுத்து அழுகை குரல் கேட்டு ஓடி வந்த அவரது தாய், சிறுமியை மீட்டிருக்கிறார்.

இதுகுறித்து சதீஸ் ரெக்டே மீது சிறுமியின் பெற்றோர் நாக்பூர் போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் சதீஸ் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தை விசாரித்த நாக்பூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் போக்சோ சட்டத்தை உறுதி செய்து குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து சதீஸ் ரெக்டே மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

 

இந்த மனுவை விசாரித்து நீதிபதி புஷ்பா கனேடிவாலா வழங்கிய தீர்ப்பு தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. “போக்சோ சட்டத்தில், பாலியல் நோக்கத்துடன் ஒருவரைத் தோலுடன் தோல் உரசினால் மட்டுமே அது பாலியல் வன்முறை என கருத்தில் கொள்ளப்படும். வெறுமனே ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொந்தரவு கொடுத்தால் அது பாலியல் வன்முறைக்குக் கீழ் வராது. போக்ஸோ சட்டத்தின் பிரிவு 8இன் கீழ் பாலியல் நோக்கத்துடன் செய்யப்பட்ட குற்றம் அல்ல’ என்று வழங்கிய தீர்ப்பு சர்ச்சைக்குள்ளானது.

நாட்டில் பெண்களும், சிறுமிகளும் வெளியில் செல்லும் போதும், அக்கம் பக்கத்தினராலும் பாலியல் தொந்தரவுக்கும் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்படுவது அதிகரித்து வரும் நிலையில் இந்த தீர்ப்புக்குப் பெண்கள் அமைப்பினர், நீதித் துறையைச் சார்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த தீர்ப்புக்கு எதிராகத் தேசிய பெண்கள் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது, மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலும் உச்ச நீதிமன்ற கவனத்துக்குக் கொண்டு சென்றார். மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி, முன்னெப்போதும் இதுபோன்ற தீர்ப்புகள் வழங்கப்பட்டதில்லை. இது ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்று தெரிவித்தார்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த தீர்ப்புக்கு எதிராக மனுத் தாக்கல் செய்ய வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலுக்கு அனுமதி வழங்கியது. மேலும், உயர் நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்து, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
 

https://minnambalam.com/public/2021/01/27/43/sc-stays-bombay-hc-order-skin-to-skin-contact-necessary-offence-sexual-assault-pocso

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளதை சொல்லோணுமெண்டால் இது ஊர்களிலை நடக்கிற குரும்பட்டிக்கதை.  இதிலை பிரச்சனை என்னவெண்டால் வயது ஒற்றவர்கள் செய்யும் போது பிரச்சனை வராது. 
மிஞ்சிய மிச்ச வயதுக்காரர் செய்யும் போது மரணதண்டனையும் தப்பில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.