Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுவிசில் தமிழ் திருடர்கள்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களின் வீடுகளில் திருட்டுக்கள் அதிகமாக போகத்தொடங்கியுள்ளது. பல வருடங்களிற்கு முன் நெதர்லாந்தில் இருந்து வந்த எனது உறவினர் ஒருவர் சொன்னார் தங்களுடைய வீட்டில் திருட்டு போனது என்று. நெதர்லாந்தில் இப்படி நிறையவே தமிழ் வீடுகளில் திருட்டு போவதாக சொன்னார். சுவிசில் அப்படி நடைபெறாது என்று நானும் பெருமையா சொன்னேன்.

ஆனால் கடந்த சில மாதங்களாக சுவிசிலும் தமிழர்களின் வீடுகளில் திருட்டுக்கள் அதிகமாகிவிட்டன. சுரிச் மாநிலத்தில் 60ற்கு மேற்பட்ட தமிழர்களின் வீடுகள் களவாடப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது. ஆனால் இன்னும் இந்த திருடர்கள் பிடிபடவில்லை.

ஒரு வீட்டில் திருடிக்கொண்டிருக்கும் போது பக்கத்துவீட்டுக்காறர் இவர்களை கண்டுள்ளார். என்ன செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு இது தனது அண்ணனின் வீடு என்றும் அவரின் தொலைக்காட்சியை தான் தனது வீட்டிற்கு எடுத்துச்சொல்ல அவர் சொன்னதாகவும் அந்த பக்கத்துவீட்டுக்காரரிடம் சொல்லியுள்ளார். அவர் தமிழராக இருந்ததால் இதனை பக்கத்துவீட்டுக்காரரும் நம்பியுள்ளார்.

அதற்கு பின் இவர்களை திருடும் நேரத்தில் யாரும் பார்க்கவில்லை.

கடந்த சனி,ஞாயிறு தினங்களில் பேர்ண் மாநிலத்தில் தமிழர்களின் வீட்டில் திருட்டு போயுள்ளது.

வருகின்ற மாதம் தமிழ் கோயில்களில் திருவிழாக்கள் ஆரம்பமாகவுள்ளன. அனைவரும் குடும்பமாக சென்று திருவிழாக்களில் கலந்து கொள்ளுங்கள். கோவிந்தா கோவிந்தா!!!

எனது மாநிலத்திற்கு இன்னும் வரவில்லை. வந்தால் என்னிடம் தப்பிக்முடியாது!!!!இந்த நாய்களிற்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பது தவறு!

இப்படியான சம்பவங்கள் உங்கள் நாட்டிலும் நடைபெற்றுள்ளனவா? தகவல்கள் தெரிந்தால் அறியத்தரவும்.

  • கருத்துக்கள உறவுகள்

செல்வம் கொழிக்கும் நாடு அதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டனிலும் தமிழர்கள் வீடுகளில் திருட்டுக்கள் நடைபெற்று வருகிறது. சிட்னியில் அண்மைக்காலத்தில் பல வீடுகளில் திருட்டுக்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் திருட வந்தவர்களில் தமிழர்கள் இல்லை. லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்களாக சந்தேகிக்கப்படுகிறது. இவர்களின் பிண்ணனியில் இருந்து சில தமிழர்களும் இயங்குவதாகவும் கூறப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் கடந்த சில மாதங்களாக சுவிசிலும் தமிழர்களின் வீடுகளில் திருட்டுக்கள் அதிகமாகிவிட்டன. சுரிச் மாநிலத்தில் 60ற்கு மேற்பட்ட தமிழர்களின் வீடுகள் களவாடப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது. ஆனால் இன்னும் இந்த திருடர்கள் பிடிபடவில்லை.

ஒரு வீட்டில் திருடிக்கொண்டிருக்கும் போது பக்கத்துவீட்டுக்காறர் இவர்களை கண்டுள்ளார். என்ன செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு இது தனது அண்ணனின் வீடு என்றும் அவரின் தொலைக்காட்சியை தான் தனது வீட்டிற்கு எடுத்துச்சொல்ல அவர் சொன்னதாகவும் அந்த பக்கத்துவீட்டுக்காரரிடம் சொல்லியுள்ளார். அவர் தமிழராக இருந்ததால் இதனை பக்கத்துவீட்டுக்காரரும் நம்பியுள்ளார்.

இதில் இரண்டு பெண்களும் இருந்திருப்பதாக அறிந்தேனே.

:rolleyes::rolleyes: தமிழனுக்கு பெரிய எதிரி தமிழன் தானே
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது மாநிலத்திற்கு வரட்டும்!!! நான் எல்லாத்துக்கும் ரெடியா தான் இருக்கிறன். சந்தேகப்படுகிற மாதிரி என்ர சுற்றுவட்டாரத்தில நிக்கிற வாகனங்கள் எல்லாத்தையும் நான் நேற்று இரவில இருந்தே போட்டோ எடுத்து வச்சிட்டன். முக்கியமா கறுத்தக்கண்ணாடி போட்ட வாகனங்களை தான் எடுத்தனான். என்ர வீட்டில கை வச்ச தெரியும் அவையளுக்கு!!!

அப்படி போடுங்க வடிவு இப்பதான் நீங்க 007

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்குதானே தெரியும் தமிழன் இரண்டு மூன்று வேலை செய்து வயித்தை வாயைக்கட்டி என்னத்தை வாங்கி பதுக்கி வைத்திருப்பன் என்று. :rolleyes:

என்னத்தை சஜீவன்

  • கருத்துக்கள உறவுகள்

சுவிசில் தமிழ் திருடர்கள்?

இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. :P :P

அதாவது, தமிழர் பெரும்பாலாக வாழும் இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்று சொல்ல வந்தேன்.. :rolleyes:

ம்ம் நானும் கேள்விப்பட்டேன். பேர்ன் ல நடந்ததும் தெரியும் அதுவும் தமிழ் ஆக்கள் தான் திருடினமோ எண்டு தெரியாது. சூரிச் ல போன மாதம் ஒரு வீட்டில போய் திருடியிருக்காங்க . அவையிண்ட நிறைய் நகைகளை எடுத்துட்டுப் போய்ட்டாங்கள்.

நம்மட ஆக்களும் நகை போடுறதும் அப்படித்தான். ஒரு கல்யாணவீடோ அல்லது நோர்மலான கொண்டாட்டத்துக்கே கூடப் போட்டுக் கொண்டு வருகினம். போடுற நகைகளை பாதுக்காப்பா வைக்க வேண்டாமா ? இங்கதான் முக்கியமான பொருள் நகைகளை வைக்க பேக்ங் இருக்கே ..... ம்ம் என்ன ஆச்சிரியம் எண்டால் இந்த திருடர்கள் என்னும் பிடிபடுகினம் இல்லை.....

இனும வீட்டில வாறவர் போறவர்களை பதிவு செய்ய கெமரா பூட்டிவைக்கனும் . சுவிஸ் காரர்கள் மாதிரி. ஆனால் முகமூடி போட்டுக் கொண்டு வந்துட்டால் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எனது மாநிலத்திற்கு வரட்டும்!!! நான் எல்லாத்துக்கும் ரெடியா தான் இருக்கிறன். சந்தேகப்படுகிற மாதிரி என்ர சுற்றுவட்டாரத்தில நிக்கிற வாகனங்கள் எல்லாத்தையும் நான் நேற்று இரவில இருந்தே போட்டோ எடுத்து வச்சிட்டன். முக்கியமா கறுத்தக்கண்ணாடி போட்ட வாகனங்களை தான் எடுத்தனான். என்ர வீட்டில கை வச்ச தெரியும் அவையளுக்கு!!!

அப்ப உங்க வீட்டுல்ல எக்கசக்கமான அசையா சொத்து இருக்கு எண்டு சொல்ல வாரீங்க.

உங்க வீட்டு விலாசத்தை கொஞ்சம் மெதுவா சொல்லுறது :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி செய்திர்கள் என்டால் நிங்கள் தான் திருடன் என்று ..............................

எனது மாநிலத்திற்கு வரட்டும்!!! நான் எல்லாத்துக்கும் ரெடியா தான் இருக்கிறன். சந்தேகப்படுகிற மாதிரி என்ர சுற்றுவட்டாரத்தில நிக்கிற வாகனங்கள் எல்லாத்தையும் நான் நேற்று இரவில இருந்தே போட்டோ எடுத்து வச்சிட்டன். முக்கியமா கறுத்தக்கண்ணாடி போட்ட வாகனங்களை தான் எடுத்தனான். என்ர வீட்டில கை வச்ச தெரியும் அவையளுக்கு!!!

கறுத்த கண்ணாடி போட்ட ஆட்களையும் எடுக்கணும்.. :rolleyes: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அசையா சொத்தெண்டா என்ர மனுசிதான் இருக்கிறா. கொண்டுபோயிராதேங்கப்பா!!!

எனது மாநிலத்திற்கு வரட்டும்!!! நான் எல்லாத்துக்கும் ரெடியா தான் இருக்கிறன். சந்தேகப்படுகிற மாதிரி என்ர சுற்றுவட்டாரத்தில நிக்கிற வாகனங்கள் எல்லாத்தையும் நான் நேற்று இரவில இருந்தே போட்டோ எடுத்து வச்சிட்டன். முக்கியமா கறுத்தக்கண்ணாடி போட்ட வாகனங்களை தான் எடுத்தனான். என்ர வீட்டில கை வச்ச தெரியும் அவையளுக்கு!!!

007 கை வைக்காம காலை வைச்சா என்ன செய்வீங்க

:P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தலைப்பு எழுதி ஒரு 3நாள் ஆகேலை. அதுக்குள்ள பேர்ணில 5 தமிழ் குடும்பத்தின்ர வீட்டில களவு போய்ட்டுது. ஒன்டு காவல்துறைக்கு சில நூறு மீற்றர்கள் தள்ளி இருக்கிற வீடு!!!

இந்த தலைப்பு எழுதி ஒரு 3நாள் ஆகேலை. அதுக்குள்ள பேர்ணில 5 தமிழ் குடும்பத்தின்ர வீட்டில களவு போய்ட்டுது. ஒன்டு காவல்துறைக்கு சில நூறு மீற்றர்கள் தள்ளி இருக்கிற வீடு!!!

இப்படி தான் நேற்று சிட்னியில கோம்புச் என்ற இடத்தில மனிசி நகை எல்லாவற்றையும் கான்பாகுள்ள வைத்து கொண்டு ஜோகா கிளாசுக்கு இறங்கி போகும்போது மூன்றுபேர் துப்பாக்கியோட வந்து அந்த தமிழ் மனிசியிட்ட இருந்த எல்லாவற்றையும் பரித்து கொண்டு போயிட்டாங்க,இதன் பின் தமிழ் ஆட்கள் இருகிறதா சொல்லீனம் சிகரை கைது செய்துள்ளதாகவும் சொல்லீனம் ஆனா உண்மை,பொய் தெறியாது

இந்த தலைப்பு எழுதி ஒரு 3நாள் ஆகேலை. அதுக்குள்ள பேர்ணில 5 தமிழ் குடும்பத்தின்ர வீட்டில களவு போய்ட்டுது. ஒன்டு காவல்துறைக்கு சில நூறு மீற்றர்கள் தள்ளி இருக்கிற வீடு!!!

அதிகமாக கழுத்து நிறைய தங்கத்தோட திரியிறாங்க நம்மட ஆக்கள் 007.

சூரிச் விமான நிலையத்தில அதிகமாக களவு போவது எங்கட ஆக்களிட்ட இருந்துதான் வடிவேல்.

நிச்சயமா ஊருக்கு போறவங்க கையில உள்ள

கைபையில ( hand bag) காசு நகை இருக்கும்.

ஐரோப்பாவிலுள்ளவர்கள் வருவதற்கு திறந்த பிறகு

வெளி ஆட்கள் (வெள்ளைகள்) இங்கே இலகுவா வர முடியுது.

அது ஒரு படி...................

தமிழ் ஆக்கள்ட வீட்டில நடக்கிற களவுகளுக்கு

தமிழ் ஆக்கள்

வேறு சிலரை பாவிப்பதாகவும்

சில தமிழர்கள் நேரடியாக இறங்குவதாகவும் சொல்கிறார்கள்?

உண்மை தெரிந்தால் எழுதுங்கள்?

எதற்கும் வங்கிகளில் வைப்பது பாதுகாப்பு.

சோசல்ல இருக்கிறவங்க பாடுதான் பிரச்சனை?

தமிழ் நாடே பெட்டர்தான்

தமிழ் நாடே பெட்டர்தான்

நீங்கள் இருக்கும் போதா? :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தமிழர்களின் உதவி இல்லாம் நடக்க முடியாத ஒரு விடயம்!! இதன் பின்னனியில் என்றாலும் தமிழர்கள் இருப்பார்கள். களவு போகும் வேளையில் நேரில் பார்த்தவர்களும் இருக்கிறார்கள். திருட வந்தவர்கள் தமிழர்கள் தான் என்பதை உறுதி செய்துள்ளனர்.

இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் தமிழர்களே தமிழர்களை வேட்டையாடுவது தான்.

இப்ப தமிழ் கோயில் திருவிழாக்கள் வருகுது. சனம் பக்தியோட கோயிலுக்க போக இவங்கள் கத்தியோட வீட்ட போகப்போறாங்கள்.

இது ஒருவர் இருவர் செய்யும் செயலாக இருக்கவே முடியாது. ஒரு பெரிய அமைப்பே உள்ளது என்று நினைக்கின்றேன். வேறு நாட்டிலிருந்து வந்த தமிழர்கள் என்றும் ஒரு கதை அடிபடுகிறது.

சுவிசிற்கும் பிரான்சிற்கும் உள்ள எல்லையில் 70பவுன் நகையுடன் ஒரு தமிழ் பெண்ணை பொலிசார் பிடித்ததாக அறிந்தேன். சரியான நிலவரம் தெரியவில்லை. கேள்விப்பட்டதை எழுதியுள்ளேன். கவனமாக இருங்கள்.

நான் அவர்களின் வருகையை எனது மாநிலத்தில் எதிர்பார்த்து வழி மீது விழி வைத்து ஆயுதங்களுடன் தயாராக உள்ளேன்.அவ்வப்போது இரவு வேளைகளில் பல்கனியில் இருந்து வெளியே நோட்டமிடுவேன்.

பிரான்ஸில் ஒரு பெண் வெளிநாட்டு ஆட்களை வைத்து திருட்டுச் செய்வதாக நானும் அறிந்தேன். ஆனால் விபரம் தெரியாது.

இவனுகள் கருநாய், டக்கி குழுக்களைச் சேர்ந்தவங்களா இருப்பாங்களோ? கடைசியா தமிழரை இப்படியும் அபேஸ் பண்ண புறப்பட்டுட்டாங்க போல தெரியுது! தமிழ் உறவுகளே உஷார். இங்கு ஒஸ்லோவில் அதிஸ்டவசமாக கள்வர் பயமில்லை.

இலண்டனில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பே இதுபோன்ற களவுகள் எனது உறவினர் வீட்டில் அவர்கள் திருமணவீடொன்றுக்குச் சென்றிருந்த போது நிகழ்ந்தது. களவு நடந்தபோது சில வெளிநாட்டுக்காரர்(இவர்கள் தமிழர்களாயும் இருக்கலாம்) கைத்தொலைபேசியில் கதைத்தபடி வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் நடமாடியது அயலவர்களால் அவதானிக்கப்பட்ட விடயம் பின் விசாரணையின்போது தெரியவந்தது.

Edited by Norwegian

இக் குற்றச்செயலில் ஈடுபட்ட

சில தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் சூரிச் போலீசாராால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கதவுகளை திறப்பதற்கு புதுவிதமான ஒரு வித திறப்புகளை வைத்திருந்ததாகவும்.

ஒரு வீட்டினுள் நகை இருக்கிறதா?

அது எங்கே இருக்கிறது என்று கண்டு பிடிப்பதற்குமாக

விசேடமான டிடெக்டர் கருவி ஒன்றை பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.

அதாவது தேவையற்ற வீடுகளில் நுழைவதையும்

நுழைந்த வீட்டுக்குள் அதிக நேரத்தை கடத்தாமலும் இருக்க

இந்த தங்கத்தை கண்டு பிடிக்கும் கருவியை பயன்படுத்தி உள்ளார்கள்.

இவர்கள் நன்கு படித்த இளைஞர்கள் என்றும் தெரிய வந்துள்ளது!

சற்று பொறுங்கள்..................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.