Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த புலிகளுக்கு நடந்தது என்ன? அமெரிக்க முன்னாள் உயரதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த புலிகளுக்கு நடந்தது என்ன? அமெரிக்க முன்னாள் உயரதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இலங்கையில் புலிகளின் மீறல் நடவடிக்கைகளுக்காகவும் விசாரணை நடத்தப்படவேண்டும். ஆனால் யுத்தத்தின் இறுதியில் சரணடைந்த முக்கிய புலிகள் எவரும் இல்லை. இதுகுறித்து இன்றைய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச அன்று பாதுகாப்பு செயலராக இருந்தபோது நேரில் நான் அவரிடம் கேட்டேன்

அதற்கு அவர் நான் அவர்களைக் கொன்றேன் என்று கூறியது இன்றும் எனது நினைவில் உள்ளது.

யுத்தக் குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவின் விசேட தூதுவராக இருந்த ஸ்டிபன் ஜே.ராப் இவ்வாறு பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

உலகதமிழர் பேரவை மனிதஉரிமைகள் மற்றும் சர்வதேச நீதிக்கான நிலையம் இலங்கையில் நீதி மற்றும் சமாதானத்துக்கான பரப்புரை கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆகிய இணைந்து முன்னெடுத்த இணையவழி கருத்தரங்கில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

லண்டனில் இருந்து அமேல் அபேவர்த்தன என்பவர், “புலிகளுக்கு எதிராகவும் யுத்தக்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் நடவடிக்கை முன்னெடுக்க வேண்டுமா”? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அவர் “ ஆம் புலிகளின் மீறல் தொடர்பாக நீதியை நிலைநாட்டுவதற்கு குறிப்பிடத்தக்க வழிமுறை இல்லை என்பது வெளிப்படையானது.நான் அங்கு(இலங்கையில்)இருந்தபோது இப்போது பாதுகாப்பு செயலராக இருந்த தற்போதைய ஜனாதிபதி இதுகுறித்துப் பேசியமை எனக்கு நினைவில் இருக்கிறது.

குற்றங்கள் இழைத்த தனிநபர்களுக்கு எதிராக நம்பத்தகுந்த சாட்சியங்கள் இருந்தால் மீறல்களுக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.அதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றேன்

ஆனால் சரணடைந்த பின்னர் அத்தகையோர் அவர்கள் அறுபதுபேர்வரை அல்லது அதற்கு மேலும் இருக்கலாம் கொல்லப்பட்டுவிட்டனர்.

எனவே யுத்தகளத்தில் இருந்த குற்றம் சுமத்தப்படக்கூடிய சந்தேக நபர்கள் உயிருடன் இல்லை. எனக்கு நினைவிருக்கிறது.பாதுகாப்பு செயலாளர் கூறினார்,விசாரணை விசாரணை என்று நீண்டகாலம் இழுபடும் அதனால் நான் அவர்களைக் கொன்றேன், நான் அவர்களைக் கொன்றேன்(I killed them; I killed them; I killed them) என்றார்.

ஆனால் இது நீதிமுறைமையே அல்ல” என்றும் ராப் தெரிவித்துள்ளார்.


https://www.ibctamil.com/srilanka/80/159761?ref=home-imp-parsely

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்கொடி விவகாரம்- அமெரிக்க தூதுவரின் குற்றச்சாட்டை அடியோடு மறுக்கும் கோட்டாபய அரசு!

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களை கொலை செய்ததாக, போர்க்குற்றங்கள் மற்றும் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ராப் தெரிவித்த விடயத்தை, ஸ்ரீலங்கா ஜனாதிபதி அலுவலகம் முற்றாக நிராகரித்துள்ளது. 

ஸ்ரீலங்காவில் கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த சந்தரப்பத்தில், பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த விடயத்தை ஒப்புக்கொண்டதாகவும், கொழும்பில் பின்நாளில் தன்னை சந்தித்தபோது, அவர் தன்னிடம் இந்த விடயத்தை தெரிவித்திருந்தாகவும், ராப் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், ராப்பின் கூற்று எவ்வித அடிப்படையும் அற்றது என ஜனாதிபதி அலுவலகம் விளக்கமளித்துள்ளதாக, கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை வெளியான தி ஐலன்ட் நாளேட்டில் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமெரிக்க அதிகாரி பதவி விலகி ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் இதுபோன்றதொரு அறிக்கையை வெளியிடுவதற்கான நோக்கத்தை ஜனாதிபதி அலுவலகம் கேள்விக்குட்படுத்தியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழர் பேரவை, மனித உரிமைகள் மற்றும் உலகளாவிய நீதி மையம், நியூயோர்க் பல்கலைக்கழகம், அமைதி மற்றும் நீதிக்கான இலங்கை பிரச்சாரம் மற்றும் கனேடிய தமிழர் பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய மெய்நிகர் கலந்துரையாடலில் பங்கேற்ற ஸ்டீபன் ராப் கருத்து வெளியிடுகையில், இராணுவத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் குறித்து அப்போதைய பாதுகாப்பு செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடியதை நினைவுகூர்ந்தார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ”நான் அவர்களைக் கொலை செய்தேன்” என தெரிவித்ததாகவும் ராப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போதைய குற்றச்சாட்டு ஜெனீவா அமர்வுகளுக்கானது எனவும், இலங்கையை இழிவுபடுத்தும் பிரச்சாரத்தின் ஒட்டுமொத்த பகுதியாகும் எனவும் ஜனாதிபதி அலுவலகம் குற்றம் சுமத்தியுள்ளது.

ஸ்டீவன் ராப், அதிகாரத்தில் இருந்த காலத்தில், இலங்கை பாதுகாப்பு செயலாளருடன் இதுபோன்ற கலந்துரையாடலை மேற்கொண்டமை தொடர்பில் அறிக்கையிட்டாரா? அல்லது ராப் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் இந்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டாரா? என்பது குறித்து யுத்த குற்றங்கள் மற்றும் உலகளாவிய குற்றவியல் நீதி அலுவலகம் விளக்கமளிக்க வேண்டும் என ஜனாதிபதி அலுவலகம் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

மனித உரிமை பிரச்சாரம் என்பது ஒரு இலாபகரமான தொழிலாகும் என ஜனாதிபதி அலுவலகம் குற்றஞ்சாட்டியுயள்ளது. மேற்கத்தேய நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றும் அந்தக் குழுக்கள் மற்றும் தனிநபர்களிடையே ஏராளமான நிதி வழங்கப்படுவதாகவும், முன்னாள் தூதுவர் ராப்பின் கருத்தானது ஈராக் மீது படையெடுப்பிற்கு வழிவகுத்த பேரழிவு ஆயுதம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்ட அமெரிக்க-பிரித்தானிய பிரச்சாரத்தை இலங்கைக்கு நினைவூட்டுவதாகவும், ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளதாக தி ஐலன்ட் நாளேட்டின் செய்தி மேலும் கூறுகின்றது.

 

https://www.ibctamil.com/srilanka/80/159892

 

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியிருந்தாலும் கோத்தா ஒரு தைரியசாலி...அப்பவே தான் கொன்றேன் என்று ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார் ...இவ்வளவு நாளும் அவருக்கெதிராய் நடவடிக்கை எடுக்காமல் இப்ப அவரை வெருட்டிப் பார்க்கினம் 

  • கருத்துக்கள உறவுகள்

 அதே தைரியத்தோடு அதற்கான தண்டனையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் உண்மையான வீரம். நான் அப்படி சொல்லவில்லை என்று மறுதலிப்பது கோழைத்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

எது எப்படியிருந்தாலும் கோத்தா ஒரு தைரியசாலி...அப்பவே தான் கொன்றேன் என்று ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார் ...இவ்வளவு நாளும் அவருக்கெதிராய் நடவடிக்கை எடுக்காமல் இப்ப அவரை வெருட்டிப் பார்க்கினம் 

அக்காச்சிக்கு உள்ளூர நடுங்குது போல😂

கோத்தாவ கிளற வெளிக்கிட்டா கொண்ணரிலயெல்லோ போய் நிற்கும்..😜

பயப்படாதேயுங்கோ அக்காச்சி.. கோத்தாவின்ர பிடியில இந்தியன்ர குடும்பி இருக்கும்வரைக்கும் கொண்ணர் பாதுகாப்பாய் இருக்கலாம். 

இந்தியன் சுதாகரிச்சாத்தான் பிரச்சனை..

😁

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாதான் சுத்த அப்பாவியாய் இருக்கே. கோத்தா சொல்வதையெல்லாம் அப்பிடியே நம்பி அள்ளிக்கொடுக்குதே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, ரதி said:

எது எப்படியிருந்தாலும் கோத்தா ஒரு தைரியசாலி...அப்பவே தான் கொன்றேன் என்று ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார் ...இவ்வளவு நாளும் அவருக்கெதிராய் நடவடிக்கை எடுக்காமல் இப்ப அவரை வெருட்டிப் பார்க்கினம் 

உங்களைப்போல ஆக்களுக்கு கோத்த/மகிந்த எல்லாம் தைரியசாலிகளாகவும் நல்லவர்களாகவும் தெரிவதில் வியப்பில்லை. 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உங்களைப்போல ஆக்களுக்கு கோத்த/மகிந்த எல்லாம் தைரியசாலிகளாகவும் நல்லவர்களாகவும் தெரிவதில் வியப்பில்லை. 😁

என்ன செய்வது? அது அவர்கள் தப்பில்லை, குணம் குணத்தோடுதான் சேரும்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎16‎-‎02‎-‎2021 at 21:31, Kapithan said:

அக்காச்சிக்கு உள்ளூர நடுங்குது போல😂

கோத்தாவ கிளற வெளிக்கிட்டா கொண்ணரிலயெல்லோ போய் நிற்கும்..😜

பயப்படாதேயுங்கோ அக்காச்சி.. கோத்தாவின்ர பிடியில இந்தியன்ர குடும்பி இருக்கும்வரைக்கும் கொண்ணர் பாதுகாப்பாய் இருக்கலாம். 

இந்தியன் சுதாகரிச்சாத்தான் பிரச்சனை..

😁

முடிந்தால் முதலில் கோத்தாவை பிடித்து உள்ளுக்குள் போடுங்கோ ...நான் உங்களை செயல் வீரன்  என்று ஒத்துக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரதி said:

முடிந்தால் முதலில் கோத்தாவை பிடித்து உள்ளுக்குள் போடுங்கோ ...நான் உங்களை செயல் வீரன்  என்று ஒத்துக்கிறேன் 

அக்காச்சி கோவிக்கப்படாது, 

கொஞ்சம் வரலாற்றை புரட்டிப் பாருங்கோ.. எதுவும் அப்படியும் மாறலாம். வரலாறு அதை மட்டும்தான் சொல்லி நிற்கிறது. 😀

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kapithan said:

அக்காச்சி கோவிக்கப்படாது, 

கொஞ்சம் வரலாற்றை புரட்டிப் பாருங்கோ.. எதுவும் அப்படியும் மாறலாம். வரலாறு அதை மட்டும்தான் சொல்லி நிற்கிறது. 😀

பொய் ஆட்சி அமைக்க முயலும் ஆனால் உண்மை பின் தங்கி இருந்தாலும் அது ஒரு நாள் வெல்லும் ஆளும் என்பது தான் வரலாறு கற்றுத்தரும் பாடம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அக்காச்சி கோவிக்கப்படாது, 

கொஞ்சம் வரலாற்றை புரட்டிப் பாருங்கோ.. எதுவும் அப்படியும் மாறலாம். வரலாறு அதை மட்டும்தான் சொல்லி நிற்கிறது. 😀

உண்மை தான் ...நாளைக்கு கருணா பிரதமராய் கூட வரலாம் 😄...கோத்தா துணிந்து போர்க் குற்றங்களை விசாரித்த ஒருவரிடமே தான் புலிகளை கொலை செய்தேன் என்று ஒப்புக் கொண்டு இருக்கிறார் ...எல்லாராலும் அது முடியுமா சொல்லுங்கள் 

44 minutes ago, விசுகு said:

பொய் ஆட்சி அமைக்க முயலும் ஆனால் உண்மை பின் தங்கி இருந்தாலும் அது ஒரு நாள் வெல்லும் ஆளும் என்பது தான் வரலாறு கற்றுத்தரும் பாடம். 

அண்ணா இப்படியான கருத்துக்களை எழுதும் முன் நன்றாய் யோசியுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

1) உண்மை தான் ...நாளைக்கு கருணா பிரதமராய் கூட வரலாம் 😄

2) ..கோத்தா துணிந்து போர்க் குற்றங்களை விசாரித்த ஒருவரிடமே தான் புலிகளை கொலை செய்தேன் என்று ஒப்புக் கொண்டு இருக்கிறார் ...எல்லாராலும் அது முடியுமா சொல்லுங்கள் 

 

1) நிச்சயமாக இல்லை. முப்பது வருடங்கள் கூட இருந்த ஒரு அமைப்பையே தனது தனிப்பட்ட நலனுக்காக ........... ஒருவரை நம்புவதற்கு சிங்களவன் என்ன முட்டாளா... 🤥

(பேச்சிற்காக நீங்கள் இதைக் கூறினாலும், சிங்களவன் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழனை நம்புவான் என நீங்கள் நம்புகிறீர்களா..😀)

2) அதே துணிவுடன் கொட்டாபய இப்போதும் அதே வசனங்களைக் கூறுவாரானால் உண்மையில் அவர் ஒரு (முட்டாள்) தைரியசாலிதான், நீங்கள் கூறியபடி..

😂😂

அக்காச்சி, இப்படியான கருத்துக்களை எழுதும் முன் நன்றாய் யோசியுங்கள் 

(இது எப்படி இருக்கு... 🤣🤣🤣)

 

 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மைக்காலங்களில் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரித்து தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குகளையும் அதில் சம்பந்தப்பட்டவர்களையும்  கவனித்தால் எப்படியெல்லாம் விட்டுப்பிடிக்கின்றார்கள் என்பது தெரியும்.

இலங்கையை பொறுத்தவரை  கொலைகள் செய்ததாக இருவர் பகிரங்கமாகவே  வார்த்தைகளை கொட்டிவிட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

.கோத்தா துணிந்து போர்க் குற்றங்களை விசாரித்த ஒருவரிடமே தான் புலிகளை கொலை செய்தேன் என்று ஒப்புக் கொண்டு இருக்கிறார்

ஒப்புக்கொள்வதும் பின்னர் மறுத்துரைப்பதும் இவர்களுக்கு ஒன்றும் புதில்லை. ஒவ்வொருநாளும் அவர்கள் வாக்கு அளிப்பதும் எல்லோரும் பாராட்டுத் தெரிவித்த  பின் வாபஸ் பெறுவதும்  வெளியில வருகுது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.