Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ நடவடிக்கை: பிரதமர் மோடி உறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ நடவடிக்கை: பிரதமர் மோடி உறுதி

pm-modi  
 

சென்னை

இலங்கை தமிழர்கள் சமத்துவம், கண்ணியத்துடன் வாழ்வதற்கு அந்நாட்டு அரசுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி, மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்க சென்னை வந்தார். காலையில் விமானம் மூலம் வந்த அவர், விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை அடையாறு ஐ.என்.எஸ் தளத்திற்குச் சென்றார்.

 
 
 

பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் நேரு உள் விளையாட்டரங்கம் வந்தடைந்தார். பிரதமர் வரும் வழி எங்கும் அதிமுக, பாஜக தொண்டர்கள் அவருக்குக் கொடி அசைத்து வரவேற்பு அளித்தனர்.

பின்னர் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். துணை முதல்வர் ஓபிஎஸ் வரவேற்புரையாற்றினார். அடுத்து முதல்வர் பழனிசாமி பேசினார். நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துப் பேசினார். அவர் பேசியதாவது:

மீனவர்களின் உரிமைகளை பாதுகாப்போம் என உறுதி அளிக்கிறேன். இலங்கை அரசால் கைது செய்யப்படும் மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இலங்கை சிறைகளில் இப்போது ஒரு இந்திய மீனவர்கூட இல்லை. மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளில் இதுவரை 313 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள படகுகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்தியாவின் கடலோர பகுதிகளை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பல திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

மீன்பிடி தொழிலுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கடற்பாதி வளர்ப்புக்கு என தமிழகத்தில் தனி பூங்கா அமைக்கப்பட்டும்.சமூக மற்றும் உள் கட்டமைப்புகளை இந்தியா விரைவாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

கிராமங்கள் அனைத்திற்கும் மின்சார வசதி அளிக்க புதிய திட்டம் தொடக்கம். உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்.

இலங்கை தமிழர்கள் மீது மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் சென்ற முதல் பிரதமர் என்ற பெருமை எனக்கு உண்டு. வளர்ச்சி பணி மூலம் இலங்கை தமிழர் பிரச்னையில் கவனம் செலுத்தி வருகிறோம். வடகிழக்கு இலங்கையில் குடிபெயர்ந்த தமிழர்களுக்க 50 ஆயிரம் வீடுகள் கட்டி தரப்ப்பட்டுள்ளது.

மலையக தமிழர்களுக்கு 4 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் சேவைக்கு இந்தியா உதவி செய்துள்ளது. சென்னை - யாழ்ப்பாணம் இடையே விமான போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா கட்டி கொடுத்த யாழ்ப்பாணம் கலாசார மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இலங்கை தமிழர்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினையை இலங்கை அரசிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். தமிழர்கள், சமத்துவம், கண்ணியத்துடன் வாழ்வதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும். இலங்கைத் தமிழர்கள் சம உரிமை, மரியாதையோடு வாழ்வதை இந்திய அரசு தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/633717-pm-modi-2.html

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடு மூடர், முதலில் தமிழ் நாட்டில் உள்ளவர்கள் கண்ணியத்துடனும், கெரவமாகலாவும் வாழ்வதற்கு வழி தேட  வேண்டும்.

750 மீனவர்கள் பல சித்திரவதைகளுடன் கொல்லப்பட்டும், ஹிந்தியா சொறி நாய்களிலும்  கேவலமாக தமிழ் நாடு தமிழரை கழித்து  வைத்து இருக்கிறது.

இத்தாலிய marines ஆல் கொல்லப்பட்ட 2 மல்லு மீனவரிற்கு, சோனியா இத்தாலிய நாட்டவராய் இருந்தும், hague international court இல் வழக்கு, அந்த மரின்ஸ் ஐ கைது செய்து ஹிந்திய சட்டமன்றத்தில் வழக்கு.

இத்தாலி   hague international court இல், அந்த marines வழக்கு இத்தாலியிலேயே நடக்க வேண்டும் என்றும், எந்த த ண்டனையும்  இத்தாலியிலேயே, இத்தாலிய அமுல் படுத்த வேண்டும் என்றும் arbitration. 
 

மற்றது, ஹிந்தியா இப்படியே அவ்வப்போது சொல்லியும், 13 இ உச்சரித்து சிங்களத்தின் கட்டமைக்கப்பட்ட ஈழத்தமிழ் இனப்படுகொலைக்கு சிங்களத்தின் பிரதான பங்காளராகவும், களம் மற்றும் காலம் அமைக்கும் பங்காளராகவும் இருப்பதை  மறைகிறது.   

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி...?

மீதமிருக்கும் தமிழர்களையும் கொலை செய்தா... 😏

  • கருத்துக்கள உறவுகள்

 ராஜீவ் மறைவுக்கு பின்னர் மாறி மாறி பாஜக ஆட்சிக்கு வந்ததினால்தான்  ஈழபோராட்டம் கொஞ்சம் நின்று பிடித்தது.

காங்கிரசே தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால் சிங்களவனுடன் சேர்ந்து முழுவீச்சில் என்றோ எம்மை அடக்க பார்த்திருப்பார்கள்.

காங்கிரஸ் ஆனாலும் சரி பாஜக ஆனாலும் சரி அவர்கள் மாறி மாறி ஆட்சியில் அமரும் இந்திய தேசிய கட்சிகள், அவர்கள் பேச்சில் வாக்குகள் பெற்று ஆட்சியை பிடிக்கும் உள்நோக்கம் இருக்குமே ஒழிய , மனசார ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கரிசனை கிஞ்சித்தும் கிடையாது என்பது குழந்தைக்கும் புரியும்.

மோடி ஆனாலும் சரி ராகுல் ஆனாலும் சரி அவர்கள் பயமெல்லாம் தமிழகத்தில் நின்றுகொண்டு ஈழதமிழர்பற்றி அவர்கள் போராட்டம் பற்றி வெளிப்படையாக  தப்பாக பேசும் தைரியம் அவர்களிடம் அறவேயில்லை.

ஈழதமிழர்களில் பலரே சிங்களதேசம் எமக்கு செய்த அநியாயங்களை கொஞ்சம் கொஞ்சமா மறந்து சிங்கள அரசியலுடன் ஒட்டி உறவாட ஆரம்பித்துவிட்ட போதிலும்.

தமிழகம் எமக்கு சிங்களவன் செய்த அநியாயங்களை மன்னிக்க தயாராகவே இல்லை.

எம்மை வளர்த்ததும் அந்த பூமி, எம் இழிநிலை கண்டு ஓயாமல் கோபம் கொள்வதும் அந்த பூமி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.