Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா சடலங்களை தகனம் செய்வதில் மாற்றமில்லை: அரசாங்கம் உறுதி..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொவிட்  மரணங்களை தகனம் செய்யும் தீர்மானத்தில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

dadada.jpg

கொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை தகனம் செய்வதற்கு முஸ்லிம் சமூகமும், சர்வதேச ரீதியாகவும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது, கொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை தகனம் செய்யும் தீர்மானத்தில் மாற்றமில்லையென அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே, மேற்படி தீர்மானத்தை அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொரோனா சடலங்களை தகனம் செய்வதில் மாற்றமில்லை: அரசாங்கம் உறுதி..! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதுதான் எனக்குத் திருப்தி.....😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இப்போதுதான் எனக்குத் திருப்தி.....😂

எனக்கும், தான். 
இவங்கடை... எடுப்புக்கு, இப்பிடித்தான் செய்ய வேணும். 

  • கருத்துக்கள உறவுகள்

உடலை அடக்கம் செய்யும் விவகாரம் : பிரதமரின் விருப்பமே அன்றி உத்தரவல்ல – உதய கம்மன்பில

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான பிரதமரின் அறிவிப்பு அவரின் தனிப்பட்ட விருப்பம் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த விடயத்தில் இறுதித் தீர்மானம், சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தினாலேயே மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.

கொரோனா தொற்றில் உயிரிழப்போரின் இறுதி கிரியைகளை நடத்தும் விதம் குறித்து பிரதமர் அல்லது ஜனாதிபதி அல்லது அமைச்சரவையால் எந்த முடிவும் எடுக்கப்படமாட்டாது என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட தொழிநுட்ப குழுவின் பரிந்துரைக்கு அமைய, கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலம் தொடர்பாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தினால் முடிவு எட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

http://athavannews.com/உடலை-அடக்கம்-செய்யும்-வி/

 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

எனக்கும், தான். 
இவங்கடை... எடுப்புக்கு, இப்பிடித்தான் செய்ய வேணும். 

நக்கலுக்குச் சொன்னேனையா, ஒரு துரும்பு கிடைச்சாலும் விடமாட்டீங்களே..😂

பொதுமக்களின் நலனுக்கு எது உகந்ததோ  அதுவே எனது தெரிவு. அதற்காக அரசாங்கத்தின் நிலைப்பாடு உண்மையில் பொது நலன் சார்ந்ததென்றால் 👍

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கம் சனிக்கிழமையே எச்சரித்துவிட்டார்.
உடனடியாக ஜனாஸா எரிப்புத்திட்டத்தை கைவிடவேண்டும். இல்லை என்றால் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் தமிழ்க் கட்சிகளும் இணைந்து முஸ்லிம் நாடுகளிடம் முறையிடுவதோடு எமது மத உரிமைகள் மீறப்படுகின்றன எனவே இவற்றைச் சுட்டிக்காட்டி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முறையிடவேண்டும்.
ஏற்கனவே இவ்விடயம் ஐ.நாவில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பில் அரசாங்கம் செவிசாய்க்காது விட்டால் அனைத்து இன மக்களும் ஒருமித்து அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும்” என்றார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ம்.....  கெடு குடி சொற்கேளாது. ஐ. நாவை இத்தனை ஆண்டுகள் ஏமாற்றி விட்டோம் இனி இதற்குமேல் என்ன செய்யபோகினம்? யோசனையில் உள்ளது, மக்களுடன், சுகாதார அமைச்சுடன் பேசி நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய  நல்ல முடிவு எட்டப்படும். என்று சொல்லி இருக்கின்றவர்கள் காதில் பூச்சுத்தமாட்டோம். பாராட்டு  கிடைக்குமோ என்னவோ அவகாசம் கிடைக்கும். எதிர்பார்ப்பு. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

சிவாஜிலிங்கம் சனிக்கிழமையே எச்சரித்துவிட்டார்.
உடனடியாக ஜனாஸா எரிப்புத்திட்டத்தை கைவிடவேண்டும். இல்லை என்றால் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் தமிழ்க் கட்சிகளும் இணைந்து முஸ்லிம் நாடுகளிடம் முறையிடுவதோடு எமது மத உரிமைகள் மீறப்படுகின்றன எனவே இவற்றைச் சுட்டிக்காட்டி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முறையிடவேண்டும்.
ஏற்கனவே இவ்விடயம் ஐ.நாவில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பில் அரசாங்கம் செவிசாய்க்காது விட்டால் அனைத்து இன மக்களும் ஒருமித்து அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும்” என்றார்ந்த 

 

சிவாசிக்கு இன்னுமா இவங்கடை முகம் தெரியவில்லை...ஒன்று இரண்டு  1/2  அமைச்சுப் பதவியும் கை உயர்த்த ஆட்களையும் சிலபேரை அரசாங்கம் எடுத்தாலே காணும்...அப்புற ம் ஒருவரையும் நம்முடன் காணமுடியாது...ஐ .நாவில் பிரேதம் எரிப்புத்தன் முன்னுக்கு நிற்கும்...எம்முடையது எல்லாம் காணமல் போயிடும்...அப்புறம் சிவாசி ....யாருக்காக பாடட்டும்...

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

நக்கலுக்குச் சொன்னேனையா, ஒரு துரும்பு கிடைச்சாலும் விடமாட்டீங்களே..😂

பொதுமக்களின் நலனுக்கு எது உகந்ததோ  அதுவே எனது தெரிவு. அதற்காக அரசாங்கத்தின் நிலைப்பாடு உண்மையில் பொது நலன் சார்ந்ததென்றால் 👍

May be an image of 1 person and text that says 'என்னடா பொழுது போயிருச்சு, இன்னும் எதுவும் நடக்கலையென்னு பார்த்தேன் நடத்திட்டாங்க!!!'

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, alvayan said:

சிவாசிக்கு இன்னுமா இவங்கடை முகம் தெரியவில்லை...ஒன்று இரண்டு  1/2  அமைச்சுப் பதவியும் கை உயர்த்த ஆட்களையும் சிலபேரை அரசாங்கம் எடுத்தாலே காணும்...அப்புற ம் ஒருவரையும் நம்முடன் காணமுடியாது...ஐ .நாவில் பிரேதம் எரிப்புத்தன் முன்னுக்கு நிற்கும்...எம்முடையது எல்லாம் காணமல் போயிடும்...அப்புறம் சிவாசி ....யாருக்காக பாடட்டும்...

 

மிகச்சரியாக சொன்னீர்கள்.
எனக்கு தெரிந்தவரின் அப்பா கான்சரால் திங்கள் இறந்து விட்டார் கிறிஸ்தவர்கள் ஆனால் 20 சனிக்கிழமை எரிக்க போகிறார்கள். சிவாஜிலிங்கம் கொரோனாவால் இறந்த முஸ்லிம்களை எரிப்பதற்கு எதிராக போராட போகிறாராம் 🤦‍♂️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.