Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எம் மீது கைவைத்தால் மனித உரிமைகள் பேரவை இரண்டாக உடையும்: ஐ.நாவையே மிரட்டும் வீரசேகர!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எம் மீது கைவைத்தால் மனித உரிமைகள் பேரவை இரண்டாக உடையும்: ஐ.நாவையே மிரட்டும் வீரசேகர!

உள்ளக விவகாரங்களில் சர்வதேச நாடுகளை தலையீடு செய்ய வேண்டாமென கோருவதுடன், எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்கிறோமென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

இம்முறை ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை பக்கச் சார்பானது. ‘தருஸ்மன்’ அறிக்கையை அடிப்படையாக கொண்டதோர் அறிக்கையாகவே இது அமைந்துள்ளது. ‘தருஸ்மன்’ அறிக்கை பொய் காரணிகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்டதென டெஸ்மன் சில்வா முதல் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தின் விசாரணைகளில் பலர் கூறியுள்ளனர்.

வெளியாகியுள்ள ஜெனீவா அறிக்கையை நாம் முற்றாக நிராகரித்துள்ளோம். ஆனால், கடந்த முறை நாம் போர்க்குற்றங்களை புரிந்தோமென நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருந்தது.

அந்த அறிக்கையை நாம் ஏற்றுக்கொண்டால் மனிதவுரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் ஒரு நாடு கூட எமக்கு ஆதரவாகச் செயற்படாது.

காரணம் அறிக்கையை ஏற்றுக்கொள்வதன் மூலம் நாம் போர்க்குற்றங்களை புரிந்துள்ளோமென ஏற்றுக்கொள்வதற்கு சமமாகும்.

ஆனால், இம்முறை அறிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளதுடன், நல்லாட்சி அரசாங்கம் வழங்கியிருந்த இணை அனுசரணையையும் மீளப் பெற்றுள்ளோம்.

அதன் காரணமாக பல நாடுகள் எம்முடன் கைகோர்த்துள்ளன.

இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி, மொன்டகிரினோ, மெசடோனியா போன்ற நாடுகள் இணைந்து இம்முறை ஜெனீவா மாநாட்டில் தீர்மானமொன்றை கொண்டுவர உள்ளதாக அறிய முடிகிறது.

அவ்வாறனதொரு தீர்மானம் கொண்டுவரப்படும் பட்சத்தில் மனிதவுரிமைகள் பேரவை இரண்டாகப் பிளவுப்படும்.

ஆகவே, தீர்மானமொன்று இல்லாது இந்த விடயத்தை கையாள நினைக்கிறோம். என்றாலும் எமது நாட்டின் உள்ளக விவகாரங்கள், எவரும் தலையீடு செய்ய வேண்டாமென்பதுடன், எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்கிறோம் எனத் தெரிவிக்க விரும்புகிறோம் என்றார்.

https://www.pagetamil.com/173595/

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-02-19-10-06-05-832-org-m 

வானிலை மாறும்..

இடி இடிக்கும்.. 

பெரும் புயல் அடிக்கும்..

சுனாமி வாரி சுருட்டும் ..

பூமி இரண்டாக பிளக்கும்..

ஊழிக்காலம் உலகை அழிக்கும்..

சுருக்கமாக சொன்னால் கலி  முடிந்து அடுத்த மனுவந்திர கல்ப காலம் தொடங்கும்..👍

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பெருமாள் said:

எம் மீது கைவைத்தால் மனித உரிமைகள் பேரவை இரண்டாக உடையும்: ஐ.நாவையே மிரட்டும் வீரசேகர!

உள்ளக விவகாரங்களில் சர்வதேச நாடுகளை தலையீடு செய்ய வேண்டாமென கோருவதுடன், எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்கிறோமென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

இம்முறை ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை பக்கச் சார்பானது. ‘தருஸ்மன்’ அறிக்கையை அடிப்படையாக கொண்டதோர் அறிக்கையாகவே இது அமைந்துள்ளது. ‘தருஸ்மன்’ அறிக்கை பொய் காரணிகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்டதென டெஸ்மன் சில்வா முதல் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தின் விசாரணைகளில் பலர் கூறியுள்ளனர்.

வெளியாகியுள்ள ஜெனீவா அறிக்கையை நாம் முற்றாக நிராகரித்துள்ளோம். ஆனால், கடந்த முறை நாம் போர்க்குற்றங்களை புரிந்தோமென நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருந்தது.

அந்த அறிக்கையை நாம் ஏற்றுக்கொண்டால் மனிதவுரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் ஒரு நாடு கூட எமக்கு ஆதரவாகச் செயற்படாது.

காரணம் அறிக்கையை ஏற்றுக்கொள்வதன் மூலம் நாம் போர்க்குற்றங்களை புரிந்துள்ளோமென ஏற்றுக்கொள்வதற்கு சமமாகும்.

ஆனால், இம்முறை அறிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளதுடன், நல்லாட்சி அரசாங்கம் வழங்கியிருந்த இணை அனுசரணையையும் மீளப் பெற்றுள்ளோம்.

அதன் காரணமாக பல நாடுகள் எம்முடன் கைகோர்த்துள்ளன.

இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி, மொன்டகிரினோ, மெசடோனியா போன்ற நாடுகள் இணைந்து இம்முறை ஜெனீவா மாநாட்டில் தீர்மானமொன்றை கொண்டுவர உள்ளதாக அறிய முடிகிறது.

அவ்வாறனதொரு தீர்மானம் கொண்டுவரப்படும் பட்சத்தில் மனிதவுரிமைகள் பேரவை இரண்டாகப் பிளவுப்படும்.

ஆகவே, தீர்மானமொன்று இல்லாது இந்த விடயத்தை கையாள நினைக்கிறோம். என்றாலும் எமது நாட்டின் உள்ளக விவகாரங்கள், எவரும் தலையீடு செய்ய வேண்டாமென்பதுடன், எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்கிறோம் எனத் தெரிவிக்க விரும்புகிறோம் என்றார்.

https://www.pagetamil.com/173595/

பத்து வருசமாய் நீங்கள் கிழிச்சதைப் பார்த்த பிறகு தான் இந்த முடிவுக்கு வந்திருக்கின்றார்கள் என நினைக்கிறேன்!

நீங்கள் இது வரை கிழிச்சது போதும்....இனி நாங்களும் கிழிச்சுப் பார்ப்போம் என்று தான் இந்த முடிவெடுத்துள்ளார்கள் போல..!😛

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவுகாலமும் ஐ. நா. மவுனம் காத்ததால் ஐ. நாவுக்கு ஒன்றும் தெரியாது அல்லது ஐ நாவால் ஒன்றும் செய்ய இயலாது நாம் பேய்க்காட்டி விடலாம்  என்று தப்புக்கணக்கு போட்டு மெத்தனமாய் இருந்துவிட்டுது சிங்களம். இப்போ அதே எண்ணத்தில் மிரட்டிப் பாக்குது அதன் விளைவு தெரியாமல். வீட்டுக்க விட்ட ரவுடித்தனத்தை வெளியிலும் காட்ட வெளிக்கிட்டு வலியப்போய் பொறியில மாட்டப்போகுது. இந்த முட்டாளுக்கு யார் இந்தப் பதவியை கொடுத்தது? பயித்தியத்தின் கையில் நெருப்பு பந்தத்தை கொடுத்த மாதிரி. 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டால் மனித உரிமை பேரவை பிளவுபடும் – அட்மிரல் சரத் வீரசேகர

 
1-172.jpg
 57 Views

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா,கனடா, ஜேர்மனி, மொன்டர்கிரினோ மற்றும் மெஸடோனியா ஆகிய 5 நாடுகள் புதிய பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக அறியமுடிகிறது. இவ்வாறான நிலை இடம்பெற்றால் மனித உரிமை பேரவை இரண்டாக பிளவுப்படும். இதனை பெரும்பாலான நாடுகள் விரும்பவில்லை என  அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.

மேலும் இலங்கையின் உள்ளக விவகாரத்தில் தலையிடுவதை மேற்குலக நாடுகளும், மனித உரிமை பேரவையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தருஸ்மன் அறிக்கையினை அடிப்படையாக கொண்டு இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. தருஸ்மன் அறிக்கை பொய்யான காரணிகளை உள்ளடக்கியுள்ளது என்பதை சர்வதேச யுத்த விசேட நிபுணர்கள் ஆதாரபூர்வமாக அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள்.

இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கும். ஜெனிவா விவகாரத்தில் இலங்கை பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொள்வதற்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும்.

இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு இலங்கை இணையனுசரனை வழங்குவதாக அரசாங்கம் குறிப்பிட்டதால் அக்காலத்தில் இலங்கைக்கு ஆதரவாக மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் ஏதும் செயற்படவில்லை.

நாட்டுக்கு எதிரான பிரேரணைகளில் இருந்து அரசாங்கம் விலகும் என்ற வாக்குறுதியை நாட்டு மக்களுக்கு வழங்கியிருந்தோம். இதற்கமைய கடந்த வருடம் இடம் பெற்ற மனித உரிமை பேரவையில் 30/1 பிரேரணையில் இருந்து அரசாங்கம் விலகிக் கொண்டது. இதன் பின்னரே மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிராக அதிக அழுத்தங்களை பிரயோகிக்க ஆரம்பித்தது.

கொவிட்-19 வைரஸ் தாக்கம் பூகோளிய மட்டத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் ஒரு நாட்டை சர்வதேச அரங்கில் நெருக்கடிக்குள்ளாக்குவது பொருத்தமற்ற செயற்படாகும். இம்முறை இடம்பெறவுள்ள கூட்டத்தொடரில் பெரும்பாலான பலம் கொண்ட நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்படும். பிரித்தானியா,கனடா,ஜேர்மனி,மொன்டர்கிரினோ,மெசடோனியா ஆகிய 5 நாடுகளும் ஒன்றினைந்து இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணையை கொண்டு வரவுள்ளதாக அறிய முடிகிறது.

இந்நாடுகள் இலங்கைக்கு எதிராக பிரேரணையினை கொண்டு வந்தால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இரண்டாக பிளவுப்படும். இதனை பெரும்பாலான நாடுகள் விரும்பவில்லை.

ஆகவே இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதை சர்வதேச நாடுகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறோம். நாடு என்ற ரீதியில் அனைத்து தரப்பினருடனும் இணக்கமாகவே செயற்படுவோம் என்று குறிப்பிட்டார்

https://www.ilakku.org/?p=42641

 

 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, பெருமாள் said:

எம் மீது கைவைத்தால் மனித உரிமைகள் பேரவை இரண்டாக உடையும்: ஐ.நாவையே மிரட்டும் வீரசேகர!

 

14 minutes ago, உடையார் said:

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டால் மனித உரிமை பேரவை பிளவுபடும் – அட்மிரல் சரத் வீரசேகர

 
1-172.jpg

சீனாவும் இந்தியாவும் பின்னாலை நிக்கிற தைரியம்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

சீனாவும் இந்தியாவும் பின்னாலை நிக்கிற தைரியம்.

சிங்களவன் கத்துவான் பின் காழில் விழுந்து காரியங்களை சீனா இந்தியவினூடாக சாதித்துவிடுவான்

 இந்த வியாபார உலகில் எங்களுக்கு இப்போது நீதி கிடைப்பது கஷ்டம், நாளெடுக்கும்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.