Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியனை களமிறக்க திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக இரா.சாணக்கியனை களமிறக்க திட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை வவுனியாவில் இடம்பெற்றது.இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.ஸ்ரீதரன், இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், அரியநேத்திரன், சிவமோகன், ஞா.சிறிநேசன் ஆகியோர் பங்கேற்றனர்.இந்தநிலையில் இதன்போதே இரா.சாணக்கியனை களமிறக்கும் யோசனை ஒன்றினை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும், இதுகுறித்து இரா.சாணக்கியன் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை எனவும் கூறப்படுகின்றது.வடமாகாணசபை தேர்தலில் மாவை சேனாதிராசா களமிறக்கப்பட வேண்டும். கடந்த மாகாணசபை தேர்தலில் அவர் தனது இடத்தை விக்னேஸ்வரனிற்கு விட்டுக் கொடுத்தார். இம்முறை அப்படியான முடிவை எடுக்கக்கூடாது. அவரது தலைமையில் இளைஞர்களை களமிறக்க வேண்டும்.

அத்துடன், கிழக்கு மாகாணசபை தேர்தலில் இரா.சாணக்கியனை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க வேண்டும் எனவும் யோசனை ஒன்றினை சிறிதரன் முன்வைத்துள்ளார். முஸ்லிம் மக்கள் அவரை ஆதரிப்பார்கள் என்பதால், அவரை களமிறக்கி வெற்றியடையலாமென சிறிதரன் குறிப்பிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.(15)
 

http://www.samakalam.com/தமிழ்த்-தேசியக்-கூட்டமை-32/

  • கருத்துக்கள உறவுகள்

மாகாண சபைகளுக்கான தேர்தல் – வடக்கில் மாவை,கிழக்கில் சாணக்கியன்

 
1-243.jpg
 23 Views

மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும்  பட்சத்தில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக இராசமாணிக்கம் சாணக்கியனையும் நியமிக்கலாம் என்று முன்மொழியப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய நெயற்குழுக் கூட்டம் நேற்று வவுனியா குருமன்காட்டில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

இதன்போது கருத்து வெளியிட்ட  யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இன விடுதலைப் போராட்டத்தில் நீண்ட அனுபவம் மிக்க தமிழரசுக் கட்சியின் மாவை. சேனாதிராஜாவை வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராகவும் இளைஞர்கள் மத்தியில் அதிக செல்வாக்குப் பெற்றுள்ள இராசமாணிக்கம் சாணக்கியனை கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகவும் களமிறக்க வேண்டும் என்றும் முன்மொழிவொன்றைச் செய்திருக்கின்றார்.

அத்துடன் மாவை. சேனாதிராஜாவுடன் களமிறங்கும் ஏனைய வேட்பாளர்கள் இளைஞர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

அதே போன்று கிழக்கில் கருணா, பிள்ளையான் போன்றவர்களின் சவால்களை முறியடிப்பதற்கு இளைஞரான சாணக்கியன் பொருத்தமானவர் என்றும் அவருக்கு வடக்கு கிழக்கில் இணைந்த வாலிபர் முன்னணியில் முக்கிய பதவியொன்றை வழங்க வேண்டும் என்றும் சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் பீடத்தில் நாடாளுமன்ற உறுப்பிகரான சார்ள்ஸ் நிா்மலநாதனுக்கும் பெண் பிரதிநித்துவத்தினை உறுதிசெய்வதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிகந்தராசாவுக்கும் உறுப்புரிமை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த தகவல்கள் மத்தியகுழு கூட்டத்தில் பங்கேற்ற முக்கியஸ்தர் ஒருவரால் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/?p=43330

  • கருத்துக்கள உறவுகள்

உரிய நேரத்தில் முதலமைச்சர் வேட்பாளர்களைக் கூட்டமைப்பு அறிவிக்கும்! - சம்பந்தன் தெரிவிப்பு.!

Screenshot-2021-03-01-08-02-41-132-com-a 

மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் அரசு இன்னமும் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதையும் விடுக்கவில்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர்கள் தொடர்பில் இப்போதைக்கு நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை. முதலமைச்சர் வேட்பாளர்கள் குறித்து உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும்."

- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும், கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் களமிறங்கவுள்ளனர் என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன.

இந்தச் செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைத் தொடர்புகொண்டு வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"இலங்கையில் மாகாண சபைகளுக்கான தேர்தல் விரைந்து நடத்தப்பட வேண்டும் என்பது இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கோரிக்கையாகும். எமது விருப்பமும் அதுவே ஆகும்.

எனினும், மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறைமையில் நடத்துவதா அல்லது புதிய முறைமையில் நடத்துவதா என்பது தொடர்பில் அரசுக்குள் இரு வேறுபட்ட நிலைப்பாடுகள் உள்ளன.

அதேவேளை, மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் என்றும் அரசுக்குள் இருக்கும் சிலர் கங்கணம் கட்டிச் செயற்பட்டுக்கொண்டு வருகின்றனர்.

எது நடந்தாலும் மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இந்தியாவும் அதை விரும்பாது.

மாகாண சபைகளுக்கான தேர்தலைக் காலம் தாழ்த்தாது உடனே நடத்த வேண்டும் என்று அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஜனாதிபதி தலைமையிலான அரசிடம் எடுத்துரைத்திருந்தார்.

எனவே, மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையிலோ அல்லது புதிய முறைமையிலோ அரசு நடத்தியேக ஆக வேண்டும்.

ஆனால், மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் அரசு இன்னமும் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதையும் விடுக்கவில்லை.

இந்தநிலையில், வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர்கள் தொடர்பில் இப்போதைக்கு நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை. முதலமைச்சர் வேட்பாளர்கள் குறித்து உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும்" - என்றார்.

http://aruvi.com/article/tam/2021/03/01/23137/

மாகாணசபை முதலமைச்சராகவோ அமைச்சர்களாகவோ வருபவர்கள் மக்கள் அபிவிருத்தியில் மிக அக்கறை கொண்ட, அத்துடன் நிர்வாகத்திறன்  மிக்கவர்களாக இருத்தல் வேண்டும். 

தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது கண்ணுக்கெட்டாத வெகு தூரத்தில் இருக்கும் இன்றைய நிலையில் உள்ளூர் நிர்வாகத்தை நடத்துபவர்களும் அந்த அரசியலில் ஈடுபட்டு தமது சக்தியை வீண்டிக்காமல் உள்ளூர் மக்கள் வாழ்ககை தரத்தை உயர்த்துமுகமான அபிவிருத்திகளில் அதிக கவனம் செலுத்தவேண்டும். இல்லையேல் இதுவரை நடந்ததுபோல் மேலும் மக்கள் தென்னிலங்கை கட்சிகளை நோக்கி செல்லவே வழிவகுக்கும். ஏற்கனவே நிர்வாக திறன் அற்ற விக்கினேஸ்வரன் 5 வருடத்தை வீண்டித்தது போல் அல்லாமல் எதிர்காலத்திலும் அவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்வது தமிழ் மக்களின் நிலையை உயர்த்தும். 

  • கருத்துக்கள உறவுகள்

விக்கினேஸ்வரன் கூட்டமைப்புடன் முரண்படாமல் இருந்திருந்தால் அவர்தான் கூட்டமைப்பின் நிரந்தர வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

விக்கினேஸ்வரன் கூட்டமைப்புடன் முரண்படாமல் இருந்திருந்தால் அவர்தான் கூட்டமைப்பின் நிரந்தர வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர்.

அப்போ கூட்டமைப்பு விக்னேஸ்வரனுடன் முரண்படவில்லை என்கிறீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.