Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லீம் மக்கள் இந்த அரசாங்கத்தை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்- ஹக்கீம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் மக்கள் இந்த அரசாங்கத்தை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்- ஹக்கீம்

முஸ்லீம் மக்கள் இந்த அரசாங்கத்தை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப்ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பேட்டியொன்றில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

HAKEEM-300x213-1.jpg

உடல்களை அடக்கம் செய்யும் விவகாரம் எதிர்கால அரசியலில் எவ்வாறான தாக்கத்தை செலுத்தும் என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் மக்கள் இந்த அரசாங்கத்தை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் இந்த பயங்கரமான அதிர்ச்சியை அவர்கள் மறக்கமாட்டார்கள் என ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் கிட்டத்தட்ட முழு முஸ்லீம் சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என குறிப்பிட்டுள்ள ரவூப்ஹக்கீம் அவர்களை முஸ்லீம் மக்கள் மன்னிக்க முடியாத அளவிற்கு அரசாங்கம் சமூகத்தை மிகமோசமாக களங்கப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அந்த தீர்மானம் மிகவும் கடுமையான சொற்களுடன் கூடிய உள்ளடக்கத்தை கொண்டுள்ளது அரசாங்கம் தனது உடல்களை அடக்கம் செய்யும் கொள்கையை மாத்திரம் கைவிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

ஆனால் அரசாங்கம் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் ஆதரவை பெறுவதற்காகவே உடல்களை தகனம் செய்யும் கொள்கையை கைவிட்டது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்காகவே அரசாங்கம் அவ்வாறு செய்யப்பட்டது என்பது வெளிப்படையான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறுபான்மையினத்தவர்களின் மனித உரிமை மீறல்கள் குறித்த அரசாங்கத்தின் அணுகுமுறையை இது வெளிப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள ரவூப் ஹக்கீம் எந்த வித விஞ்ஞானரீதியிலான ஆதாரங்களும் இல்லாமல் அவர்கள் தொடர்ந்தும் உடல்களை தகனம் செய்வதை வற்புறுத்தி வந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

 

https://thinakkural.lk/article/113835

 

  • கருத்துக்கள உறவுகள்

இதை முஸ்லீம் நாடுகளுக்கு தெரியப்படுத்த வேண்டியது!   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, கிருபன் said:

முஸ்லீம் மக்கள் இந்த அரசாங்கத்தை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்- ஹக்கீம்

முந்தநாள் வந்திட்டு போன இன்ரான் கானுக்கு இந்த விசயம் தெரியுமோ? 😎

  • கருத்துக்கள உறவுகள்

நூறுவீதம் சிங்களவர்களின் வாக்கு பலத்துடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசுக்கு , உங்களின் மன்னிப்பு மண்ணாங்கட்டியெல்லாம் பற்றி கவலையும் இல்லை அதை அவங்கள் கணக்கெடுக்க போறதும் என்பதுகூட  புரியாமல் ஐயா முழு நீள நகைச்சுவை பண்ணுகிறார்.

முஸ்லீம் நாடுகள் இலங்கை அரசை மிரட்டும் என்ற கனவில் இலங்கை முஸ்லீம்கள் வாழ்கின்றனர், அரசாங்கங்கள் முதலில் அரசாங்கங்களுடன் தான் சேரும் அதுக்கப்புறம்தான் சமயம் இனம் எல்லாம் பார்க்கும்.

இஸ்லாமிய போதனை நிலையங்களை இழுத்துமூடி வெளிநாட்டு மத போதகர்களை எல்லாம் நாட்டுக்கு வெளியில சிங்களவன் அனுப்பினபோது பேசாத இஸ்லாமியநாடுகள் இனிமே இவர்களுக்காக குரல் கொடுக்குமாக்கும்?

வாழ்ந்தால் ஒன்று நண்பனாக வாழவேண்டும் , இல்லையென்றால் எதிரியாக வாழவேண்டும்.

தமிழர்களை சிங்களவன் எதிரியா நினைச்சான், தமிழர்களும் அவர்களை எதிரியாக நினைத்தார்கள், வாழ்வா சாவா ஒரு கை பார்க்கலாமென்று நின்றார்கள், வென்றாலும் தோற்றாலும் நேரில் மோதியவர்களுக்கென்று ஒரு மரியாதை எப்பவுமே இருக்கும்.

இரண்டுக்கும் இடையில் நிண்டு எடை கூடிய பக்கம் மட்டுமே சாய்ந்து வாழ்ந்து சந்தர்ப்பவாத சிங்கியடிச்சால் இப்படித்தான் புலம்பிக்கொண்டிருக்கவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, valavan said:

நூறுவீதம் சிங்களவர்களின் வாக்கு பலத்துடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசுக்கு , உங்களின் மன்னிப்பு மண்ணாங்கட்டியெல்லாம் பற்றி கவலையும் இல்லை அதை அவங்கள் கணக்கெடுக்க போறதும் என்பதுகூட  புரியாமல் ஐயா முழு நீள நகைச்சுவை பண்ணுகிறார்.

முஸ்லீம் நாடுகள் இலங்கை அரசை மிரட்டும் என்ற கனவில் இலங்கை முஸ்லீம்கள் வாழ்கின்றனர், அரசாங்கங்கள் முதலில் அரசாங்கங்களுடன் தான் சேரும் அதுக்கப்புறம்தான் சமயம் இனம் எல்லாம் பார்க்கும்.

இஸ்லாமிய போதனை நிலையங்களை இழுத்துமூடி வெளிநாட்டு மத போதகர்களை எல்லாம் நாட்டுக்கு வெளியில சிங்களவன் அனுப்பினபோது பேசாத இஸ்லாமியநாடுகள் இனிமே இவர்களுக்காக குரல் கொடுக்குமாக்கும்?

வாழ்ந்தால் ஒன்று நண்பனாக வாழவேண்டும் , இல்லையென்றால் எதிரியாக வாழவேண்டும்.

தமிழர்களை சிங்களவன் எதிரியா நினைச்சான், தமிழர்களும் அவர்களை எதிரியாக நினைத்தார்கள், வாழ்வா சாவா ஒரு கை பார்க்கலாமென்று நின்றார்கள், வென்றாலும் தோற்றாலும் நேரில் மோதியவர்களுக்கென்று ஒரு மரியாதை எப்பவுமே இருக்கும்.

இரண்டுக்கும் இடையில் நிண்டு எடை கூடிய பக்கம் மட்டுமே சாய்ந்து வாழ்ந்து சந்தர்ப்பவாத சிங்கியடிச்சால் இப்படித்தான் புலம்பிக்கொண்டிருக்கவேணும்.

 

அதே....

ஐயாவுக்கு  இப்பவும் தாங்க தான் உலகை கைகளில் பிடித்து  வைத்திருக்கின்றோம் என்ற  நினைப்பு

போய்

அண்ணன் யார்  தம்பியார் பகைவன்  யார்  என்று  அறிய முயலுங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ஹக்கீம் நானாவிண்ட  கதை, எங்கப்பன் குதுருக்குள்ளே இல்லையென்ற மாதிரி இருக்குது. 
அண்மையில் கூட இந்த சர்வாதிகார அரசாங்கத்துடன்  இணைந்து,  20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டதுக்கு ஆதரவாக வாக்களித்து விட்டு, இப்ப இப்படி கதை விடுகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்க பக்கத்தில் ஒருவரும் ஓடியோடி தனியா சந்திச்ச விஷயமெல்லாம்  சந்திக்கு வந்ததால், நானும் உங்களில் ஒருவன் என்று வேஷம் போட்டுகொண்டு, எல்லா கூட்டத்துக்கும் சமூகமளித்து  அறிக்கை விடுவதால் தன்னை யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் என்று நினைப்பு. ஒடிக்கழைத்த தீக்கோழி மணலுக்கை தலையைபுதைப்பது போல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.