Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

large.0-02-05-c0b75323eb77501abe5bf2e007bb53ee87ae984b03b24f886f4ecce1b6fc0bb9_1c6da109647e14.jpg.30fc4ec58e83cdfe9ecd19c4d9e72239.jpg

 

அசரீரி..!

*******

மனிதா...

உலகம் உனக்கென யாரவர் சொன்னார்

உயிரினம் யாவையும் உந்தனின் படைப்பா

இயற்கையின் அழகை எப்படி அழிப்பாய்-உன்

இறப்புக்குள் மட்டுமா உலகத்தை படைத்தான்.

 

பிறப்புக்கு முன்னே எத்தனை கோடி-உன்

இறப்புக்கு பின்னாலும்  எத்தனை கோடி

வாழ வருகின்ற உயிரினமுண்டு-உன்

வாழ்க்கைக்கு மட்டுமா வையகமுண்டு.

 

உன்னையே நீயே வெறுக்கின்ற காலம்

உன்னால் தானே உருவானதிங்கு-நீயோ

விண்ணையும், மண்ணையும் விஞ்ஞானமென்று

அன்னையின் கண்ணையே அபகரித்தாயே.

 

ஒவ்வொரு உயிரினம் வாழ்வதற்க்கேற்ப

ஒவ்வொரு நிலமாக பிரித்துமே தந்தான்

ஒவ்வொரு நிலத்தையும் உன் நிலமாக்கி-மற்ற

உயிரினம் அனைத்தையும் அழிய நீ வைத்தாய்.

 

மனிதனாய் வாழவே உன்னை படைத்தான்

மனிதநேயமும் உன்னுக்குள் வைத்தான்

பொது நலம் தவிர்த்து நீ  சுயநலமானாய்-பூமி

பொறுமை இழந்துமே போராளியானாள்.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி-

16,03.2021

  • Like 9
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அசரீரி"   

உங்களின்  "குரல் " சமுதாயத்தை நேசிக்கும் ஒருவரது குரல்.

பாராடட  படத்தக்கது

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

"அசரீரி"   

உங்களின்  "குரல் " சமுதாயத்தை நேசிக்கும் ஒருவரது குரல்.

பாராடட  படத்தக்கது

உங்களின் வார்த்தைகள் என்னை மென் மேலும் உயரவைக்கும் உண்மை.

உளமார்ந்த நன்றிகள் நிலாமதி அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டத் தக்க நல்ல கவிதை......!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

"அசரீதி" பிடிச்சிருக்கு. பூமித்தாயின் கோபத்துக்கு ஆளாகி உள்ளோம் என்பது உண்மை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பசுவூர்க்கோபி said:

பொது நலம் தவிர்த்து நீ  சுயநலமானாய்-பூமி

பொறுமை இழந்துமே போராளியானாள்.

சுயநலத்தில்த் தான் பொதுநலம் இருக்கிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பசுவூர்க்கோபி said:

ஒவ்வொரு உயிரினம் வாழ்வதற்க்கேற்ப

ஒவ்வொரு நிலமாக பிரித்துமே தந்தான்

ஒவ்வொரு நிலத்தையும் உன் நிலமாக்கி-மற்ற

உயிரினம் அனைத்தையும் அழிய நீ வைத்தாய்.

இந்த வரிகளுடன் முழு உடன்பாடு எனக்கு உண்டு, கோபி...!

கடலிலை நீந்தப் போறவனைச் சுறா மீன் கடிச்சால்..அவன் சுறாவைக் குற்றம் சாட்டுகின்றான்!

சுறா எந்த ஐ.நா. சபையில் போய் முறையிடுவது?

அப்படி முறையிட்டாலும் சீனா வீட்டோ பண்ணாது என்பதற்கு என்ன  உத்தரவாதம்?😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையை போற்றும் கவிதை பகிர்விற்கு நன்றி தோழர்.👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

பாராட்டத் தக்க நல்ல கவிதை......!   👍

நன்றி சுவி அண்ணா

18 hours ago, nunavilan said:

"அசரீதி" பிடிச்சிருக்கு. பூமித்தாயின் கோபத்துக்கு ஆளாகி உள்ளோம் என்பது உண்மை.

நன்றிகள் நுனாவிலன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2021 at 22:36, ஈழப்பிரியன் said:

சுயநலத்தில்த் தான் பொதுநலம் இருக்கிறது.

நன்றிகள் ஐயா

On 17/3/2021 at 07:26, புங்கையூரன் said:

இந்த வரிகளுடன் முழு உடன்பாடு எனக்கு உண்டு, கோபி...!

கடலிலை நீந்தப் போறவனைச் சுறா மீன் கடிச்சால்..அவன் சுறாவைக் குற்றம் சாட்டுகின்றான்!

சுறா எந்த ஐ.நா. சபையில் போய் முறையிடுவது?

அப்படி முறையிட்டாலும் சீனா வீட்டோ பண்ணாது என்பதற்கு என்ன  உத்தரவாதம்?😄

அருமையாக சொன்னீர்கள் நன்றிகள் புங்கையூரன் அவர்களே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான படங்களுடன் நல்லதொரு கவிதை, நிஜத்தை கவிதை வடிவில் கொண்டு வந்துள்ளீர்கள்,

நன்றி பகிர்வுக்கு. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2021 at 08:19, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இயற்கையை போற்றும் கவிதை பகிர்விற்கு நன்றி தோழர்.👍

நன்றிகள் தோழர்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைவிட சண்டை பிடித்து 2-3 நாட்களுக்கு கதைக்காமல் இருந்து பின்பு இருவரும் சேரும்போது ஏறத்தாள முதலிரவை ஞாபகப்படுத்தும்.
    • Published By: DIGITAL DESK 3   04 JUN, 2024 | 04:25 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சீரற்ற காலநிலையால்  26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,30021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், மீள் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்கவும் ஜனாதிபதி நிதி ஒதுக்கியுள்ளார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டில் கடந்த தினங்களில் நிலவிய சீரற்ற காலநிலையால் இதுவரை (நேற்று திங்கட்கிழமை )  23 மாவட்டங்களில்  உள்ள  33 ஆயிரத்து 622 குடும்பங்களை சேர்ந்த 130,021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட திடீர் விபத்துக்களினால் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 41 பேர் காயமடைந்துள்ளனர். மண்சரிவு மற்றும் வெள்ள அபாயத்தை கருத்திற் கொண்டு  116 தற்காலிக பாதுகாப்பு மத்திய முகாம்களில் 2,369 குடும்பங்களைச் சேர்ந்த 9248 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான வசதிகள் பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. அனர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். இயற்கை அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை தொடர்பில் கடந்த வாரம் திங்கட்கிழமை  பாதுகாப்பு அமைச்சின் ஊடாக பேச்சுவார்த்தைகள்  முன்னெடுக்கப்பட்டன. அனர்த்தங்கள் தொடர்பில் அறிய தருமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 117 என்ற விசேட தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரதேச செயலக பிரிவுகள் முன்வைக்கும் யோசனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பது தற்போது வழமையாகி விட்டது. மாவட்டங்களில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அசாதாரன சூழ்நிலையின் போது மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட  வேண்டும். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு போதுமான நிவாரணம் வழங்க ஜனாதிபதி நிதி ஒதுக்கியுள்ளார் என்றார். https://www.virakesari.lk/article/185311
    • 04 JUN, 2024 | 02:47 PM போதைக்கு அடிமையான மகனை, போதைப்பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு  தாயார் கோரியதையடுத்து, இளைஞனை மீட்டு  நீதிமன்றின் ஊடாக புனர்வாழ்வு முகாமிற்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர்.  மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பகுதியில் வசிக்கும் தாயொருவர், தனது மகன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார் எனவும் அவரை அந்த பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு மானிப்பாய் பொலிஸாரிடம் கோரியுள்ளார்.  அதனை அடுத்து இளைஞனை கைது செய்த பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி  நேற்று திங்கட்கிழமை (03) , நீதிமன்றின் ஊடாக கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.   https://www.virakesari.lk/article/185294
    • லாஃப்ஸ் எரிவாயு விலை குறைப்பு! லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 3,680 ரூபாவாகும். 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 65 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1,477 ரூபாவாக திருத்தப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/185290
    • Published By: DIGITAL DESK 7   04 JUN, 2024 | 11:54 AM யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளருக்கு எதிராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு யாழ். மாவட்ட நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு அறிமுகமான நீதிமன்றங்கள், நியாய சபைகள் மற்றும் நிறுவனங்களை அவமதிக்கும் சட்ட ஏற்பாட்டின் கீழ் நீதிமன்றை அவமதித்தார் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளருக்கு எதிராக சட்டத்தரணி  வி.மணிவண்ணன் தொடுத்த வழக்கே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மாநகர ஆணையாளர் சார்பில் கடந்த மாதம் 22ஆம் திகதி முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சிறுகோரிக்கை நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சிறுகோரிக்கை நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்ய வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்திருந்தார். அந்நிலையில் குறித்த வழக்கு நேற்று (03) கட்டளைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போது, வழக்கு உரிய மன்றில் தாக்கல் செய்யப்படவில்லை என்ற ஜனாதிபதி சட்டத்தரணியின் வாதத்தை மன்று ஏற்றுக்கொண்டு, வழக்கினை தள்ளுபடி செய்வதாக மாவட்ட  நீதிபதி சி.சதீஸ்தரன் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். https://www.virakesari.lk/article/185276
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.