Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“HRC இன் தீர்மானத்திற்கு ஆதரவாக புதுடெல்லி வாக்களிக்கும்” ஈடேறுமா சுமந்திரனின் எதிர்பார்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“HRC இன் தீர்மானத்திற்கு ஆதரவாக புதுடெல்லி வாக்களிக்கும்” ஈடேறுமா சுமந்திரனின் எதிர்பார்பு!

March 20, 2021

Sumanthiran-SriLanka.jpg

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பாக, அடுத்த வாரம் கொண்டுவரப்படவுள்ள ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என தாம் நம்புவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

HRC இன் தீர்மானத்திற்கு இந்தியா வாக்களிப்பதா அல்லது விலகுவதா என்பது “அவர்கள் தீர்மானிக்கும் ஒரு விடயம்”, ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்பார்ப்புகள், தீர்மானத்தை இந்தியா “தெளிவாக” ஆதரிக்க வேண்டும், வாக்களிக்க வேண்டும் என, வரவிருக்கும் HRC இன் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு குறித்து தி இந்துவிடம் சுமந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 2020 பொதுத் தேர்தல்களுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் அதன் பிரதிநிதித்துவம் குறைவாக இருந்தபோதிலும், இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கின் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது, 225 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

ஆரம்ப கட்ட உரையாடலின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட இந்தியாவின் அறிக்கையில், இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டை அங்கீகரிப்பதற்கு இணையாக, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்வைத்திருப்பதால், இந்த நேரத்தில் “எங்கள் நம்பிக்கைகள் அதிகம்” எனவும், கடந்த பெப்ரவரி 25ல், ஜெனீவாவில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தலையிட்டதையும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பினர்கள் அடுத்த வாரம் வாக்களிக்க வேண்டும் என்ற தீர்மானத்தின் சரியான எதிர் விளைவை ராஜபக்ஷ நிர்வாகம் விரும்புகிறது. இந்த தீர்மானத்தை தோற்கடிக்க இந்தியாவின் ஆதரவை மிக உயர்ந்த மட்டத்தில் கொழும்பு கோரியுள்ளது, மேலும் இந்தியா தனது இலங்கைக்கான ஆதரவுக்குஉறுதி அளித்துள்ளது என இலங்கையின் வெளியுறவு செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜ் கூறியுள்ளார், ஆனால் இது தொடர்பாக புது டில்லி எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை.

எவ்வாறாயினும் 2009 முதல் இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானங்களை சுட்டிக்காட்டியுள்ள சுமந்திரன், இந்தியாவின் கடந்தகால வாக்களிப்பு முறைகளை மேற்கோள் காட்டி, குறிப்பாக 2009, 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் – 2014 ல் இந்தியா மூன்று முறை தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக குறிப்பிட்டள்ளார். “இந்த வரலாற்று சாதனைகளின் அடிப்படையில் இந்தியா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கும் என தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

 

https://globaltamilnews.net/2021/158307/

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம்

நெடுந்தீவு

நயினாதீவு

அனலதீவு?????

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானில் 3 Billion Dollars முதலீடு செய்துள்ளதோடு தலிபான்களோடும் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு ஆயத்தமாகும் இந்தியா இலங்கையில் மட்டும் முதலீடுமில்லை (சுண்டைக்காய் முதலீடுகளைப் பற்றி இங்கு கவனத்தில் கொள்ளவில்லை) சமாதானப் பேச்சுவார்த்தையுமில்லை என்றால், இலங்கை தொடர்பாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைதான் என்ன.. ?

இதனை தெளிவுறப் புரிந்துகொண்டதன் காரணமாகத்தான் சிங்களம் சீனாவை நோக்கிப் போகின்றதோ... 🤥

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலை:``ஐ.நா-வில் எங்களுக்கு எதிராக இந்தியா வாக்களிக்காது” - உறுதிபட பேசும் இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறவுள்ள, இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா தங்களுக்கு எதிராகச் செயல்படாது என்று அந்தநாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 46-வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது நடந்த ஈழ இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா குழு சமர்ப்பித்த அறிக்கையில் பத்து ஆண்டுகள் ஆகியும் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஐ.நா சபை
 
ஐ.நா சபை

இதனைத் தொடர்ந்து, தற்போது நடைபெற்றுவரும் கூட்டத்தொடரில், இனப்படுகொலை குற்றங்களைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த செயலுக்கு இலங்கை கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், இந்தியா எங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காது என்ற உத்திரவாதத்தை அளித்துள்ளது என்று அதிகாரப்பூர்வமாகவே அந்த நாட்டின் வெளியுறவுத்துறைச் செயலர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். அதே போல, கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்நாட்டு அதிபர் இந்திய அரசை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இனப்படுகொலை மற்றும் போர்க் குற்ற விசாரணை மீதான வாக்கெடுப்பின் போது, இந்தியா ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெறுகின்றன. முன்னர் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், ``இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும். மனித உரிமைகள் மறுக்கப்பட்ட தமிழர்கள் மற்றும் பிற சமூகங்களுக்கு இந்தியா துணை நிற்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் 2009, 2012, 2013, 2014 ஆகிய நான்கு முறை நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா மூன்றுமுறை மட்டுமே வாக்களித்துள்ளது. 2014-ம் ஆண்டு வாக்களிக்கவில்லை. தற்போது நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் இந்தியா தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகக் கூறவில்லை. பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கையை வைத்தவரும் நிலையில், வரும் மார்ச் 22-ம் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் இந்தியா என்ன முடிவெடுக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

இனப்படுகொலை:``ஐ.நா-வில் எங்களுக்கு எதிராக இந்தியா வாக்களிக்காது” - உறுதிபட பேசும் இலங்கை|India assured the support in UNHRC says Sri Lanka’s Foreign Secretary - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறலில் இந்தியாவிற்கும் பங்குண்டு. அதுவும் தன் நாட்டில் ஒரு பகுதியில் இந்த தவறை செய்துகொண்டுதானிருக்குது. அதைத் தெரிந்தே இலங்கையும் இந்தியா  மட்டில் கெஞ்சுவதும், மிஞ்சுவதுமாக இருக்கிறது. சொரணை கெட்ட இந்தியாவுக்கு, இலங்கை எவ்வளவு அவமதித்தாலும் உறைக்காது. வாக்கெடுப்பில் நிலைமையை ஆராய்ந்து தன் மதிப்பை கெடுக்காமல் உயர்ந்த பக்கம்  சாய்ந்து நல்லவன் வேஷம் போடும் அல்லது நழுவும். ஒருநாள் இந்தியாவும் ஐ. நா. சபையில் இப்படி ஒரு நிலைமையைச் சந்திக்க நேரிடும். 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, satan said:

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறலில் இந்தியாவிற்கும் பங்குண்டு. அதுவும் தன் நாட்டில் ஒரு பகுதியில் இந்த தவறை செய்துகொண்டுதானிருக்குது. அதைத் தெரிந்தே இலங்கையும் இந்தியா  மட்டில் கெஞ்சுவதும், மிஞ்சுவதுமாக இருக்கிறது. சொரணை கெட்ட இந்தியாவுக்கு, இலங்கை எவ்வளவு அவமதித்தாலும் உறைக்காது. வாக்கெடுப்பில் நிலைமையை ஆராய்ந்து தன் மதிப்பை கெடுக்காமல் உயர்ந்த பக்கம்  சாய்ந்து நல்லவன் வேஷம் போடும் அல்லது நழுவும். ஒருநாள் இந்தியாவும் ஐ. நா. சபையில் இப்படி ஒரு நிலைமையைச் சந்திக்க நேரிடும். 

பாலகன் பாலச்சந்திரனின் கொலையிலே இந்த ராணுவ உடுப்புகள் இந்திய ராணுவத்தினுடையது என்று சொன்னவர்கள் இதைவிட கூடுதலான பிரச்சனை வரும் போது 

இரசாயன குண்டுகள் தந்ததும் போட்டதும் இந்தியபடை தான் என்ற உண்மையையும் போட்டுடைக்கலாம்.

அத்துடன் கடைசி நேரத்திலும் கிடைத்த ராஜதந்திரத்தைப் பாவித்து ஐ.நா.சபையுடன் பேசி வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை இந்தியாவின் ஆலோசனையின் (நம்பியார் ஊடாக) சுட்டுக் கொன்றதையும் போட்டுடைக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.