Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற மேற்குல நாடுகளால் பெரும்பான்மை வாக்குகளைப் பெற முடியவில்லை – அரசாங்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற மேற்குல நாடுகளால் பெரும்பான்மை வாக்குகளைப் பெற முடியவில்லை – அரசாங்கம்!

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற மேற்குல நாடுகளால் பெரும்பான்மை வாக்குகளைப் பெற முடியவில்லை – அரசாங்கம்!

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றிக்கொள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் பெரும்பான்மை வாக்குகளை பெற முடியவில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உள்ள 47 உறுப்பு நாடுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அவர்களால் 22 வாக்குகளை மாத்திரமே பெற முடிந்ததாகவும் 25 வாக்குகளைப் பெறமுடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.

11 நாடுகள் வாக்களித்துள்ளன என்பதுடன், மேலும் 14 நாடுகள் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தன என சுட்டிக்காட்டியுள்ள அவர், இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றிக்கொள்ள மேற்குலக நாடுகளினால் பெரும்பான்மையைப் பெறமுடியாமற் போயுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலனவர்கள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாகக செயற்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2021/1204309

  • கருத்துக்கள உறவுகள்

”ஜெனிவா தீர்மானத்தை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்ற முடியாமல் போனவை எமக்கு கிடைத்த வெற்றியே” : தினேஸ்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றிக்கொள்ள ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் பெரும்பான்மை வாக்குகளை பெற முடியாமல் போனதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

47 உறுப்பினர்களில் பிரேரணைக்கு ஆதரவாக அவர்களினால் 22 வாக்குகளை மாத்திரமே பெற முடிந்ததாக குறிப்பிட்ட அமைச்சர், 25 வாக்குகளை பெறமுடியாமல் போனதாகவும் தெரிவித்தார்.

11 பேர் பிரேரணைக்கு வாக்களித்துள்ளதுடன் மேலும் 14 நாடுகள் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தன. இலங்கைக்கு எதிராக பிரேரணையை நிறைவேற்றிக்கொள்வதற்கு மேலாதிக்க நாடுகளினால் பெரும்பான்மையை பெறமுடியாமற் போயுள்ளது.பெரும்பாலானவர்கள் இந்த பிரேரணைக்கு சார்பாக செயல்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

மனித உரிமைகள் பேரவையில் , இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு முடிவடைந்ததன் பின்னர் அ கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் , இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

பிரேரணைக்கு எதிராக வாக்களித்த அனைத்து நாடுகளுக்கும் அமைச்சர் இதன் போது நன்றி தெரிவித்தார்.

அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் முழு உலகும் சிரமங்களை எதிர்கொண்டிருக்கும் தற்போதைய நிலையில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அடிப்படை விடயமான மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு முன்னுரிமை வழங்கி நிறைவேற்றிவருகிறது.. வல்லரசு என்று கூறிக்கொள்ளும் சில நாடுகள் கூட தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத நிலையில், இலங்கை மனித உரிமைகளை பாதுகாக்கும் நோக்குடன் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தது. வைரஸ் பரவலிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய இந்த தருணத்தில், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அடிப்படை நோக்கம் இந்த கொடுர வைரசு தொற்று பரவலில் இருந்து உலக மக்களை மீட்டெடுப்பதாக அமைய வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் நிலையான அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டிருக்கிறது. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தலைமைத்துவத்துடன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டதோடு, எவருக்கும் இங்கு கேள்வி எழுப்புவதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டிருக்கிறது. அநீதி இழைக்கப்பட்டிருக்குமாயின், அதுபற்றி விளக்கம் அளிக்கவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

எல்ரிரிஈ பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட சமாதானத்தை ஜனாதிபதி மேலும் வலுப்படுத்தியுள்ளார். கூட்டத்தொடரின் இடைநடுவில் மனித உரிமைகள் ஆணையாளரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் அடங்கிய ஆவணமும் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை நிராகரிக்குமாறு இலங்கை உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருந்தது. நாடொன்றின் உள்ளக விவகாரத்தில் எந்தவொரு நாட்டிற்கும் தலையிட முடியாது என்றும், ஐக்கிய நாடுகளின் பிரகடனத்திற்கு அமைய மாத்திரம் செயற்பட முடியாது என்றும் அவர் கூறினார்.

பங்களாதேஷ், பொலிவியா, சீனா, கியூபா, எரித்திரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சோமாலியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

14 நாடுகள் வாக்களிப்பதிலிருந்து விலகிக் கொண்டிருக்கின்றன. இந்தியா, ஜப்பான், லிபியா, இந்தோனேஷியா, கெபோன், நெமீபியா, முர்த்தானியா, நேபாளம், செனகல், சூடான், டோகோ, பஹ்ரெயின், புர்கினாபாஸோ, கெமறூன் ஆகிய நாடுகள் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தன.

பிரேரணைக்கு ஆதரவாக ஆர்ஜன்டீனா, ஆர்மேனியா, அவுஸ்திரியா, பஹமாஸ், பிரேசில், பல்கேரியா, ஐவரிகோஸ்ட், செக் குடியரசு, டென்மார்க், பிஜி தீவுகள், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, மலாவி, மார்ஷல் தீவுகள், மெக்சிக்கோ, நெதர்லாந்து, போலந்து, கொரியா, உக்ரைன், பிரித்தானியா மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் வாக்களித்துள்ளன.
 

 

http://www.samakalam.com/ஜெனிவா-தீர்மானத்தை-பெரு/

  • கருத்துக்கள உறவுகள்

விழுந்தாலும் மீசையில மண் ஓட்டேல்லையாம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பெற்ற வாக்குகள் சுமார் 69 இலட்சம்.
அவருக்கு எதிராக வாக்களித்த, வாக்களிக்காத, ஒட்டுமொத்த பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் தொகை சுமார் 90 இலட்சம்.
ஆகவே, "வாக்களிக்காதவர்களும் நம்மவரே" என்ற அரசாங்கத்தின் கணக்கின்படி, அவர் உண்மையில் தோல்விதான் அடைந்துள்ளார்.
ஆகவே அவர் அரசியலை விட்டு வீட்டுக்கு போக வேண்டுமோ?
 
  • கருத்துக்கள உறவுகள்

அவர்களால் தீர்க்கப்பட வேண்டிய கணக்கு இன்னும் நிறைய இருக்கு. அதற்காகத்தானே வருந்தி அரச கட்டிலேறி இருக்கிறார்கள். இல்லையென்றால் மக்களை உசுப்பேற்றி, மற்றவர்களை குற்றவாளிக்கூண்டிலேற்றிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் போட்ட முடிச்சை அவர்களே அவிழ்ப்பதுதான் நிஞாயம்.  அவர்களை கட்டிலேற்றியவர்களே  விரட்டுவார்கள், அதுவரை பொறுத்திருப்போம்.    

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் பொதுத் தேர்த்தலில் வாக்களிக்காத மக்களின் வாக்குகளையும்  தங்களுக்கு கிடைத்த வாக்குகளுடன் கூட்டித்தான்  தங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என அறிவிப்பார்கள்  அந்தப் பழக்கம்  தான் அமைச்சரை இப்படிச்சொல்ல வைத்துவிட்டது..எல்லாம்  போகப்..போகப்.  சரி வரும். 

டல்லி  பிரதமராயிருந்தபோது. பைத்தியக்கார ஆஸ்பத்திரியை சுற்றிப் பார்க்கப் போனார் அங்கே  நான் பிரதமர்....நான் பிரதமர்.   ...இப்படி பலமுறை கூறிக்கொண்டு போனார்.   அங்கேயிருந்த ஒரு பைத்தியம் சொல்லிச்சுதாம்.  நானும் வரும்போது  உப்படித் தான் வந்தேன் எனக்கு இப்ப கொஞ்சம்  சுகம் உங்களுக்கும்  போகப்..போகப். சுகம் வருமென்று 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.