Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவர் வே.பிரபாகரன் உயிரிழந்த அன்று நான் சாப்பிடவில்லை : பிள்ளையாரை போலிருந்ததாலே பிள்ளையான் என பெயர் வந்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் வே.பிரபாகரன் உயிரிழந்த அன்று நான் சாப்பிடவில்லை : பிள்ளையாரை போலிருந்ததாலே பிள்ளையான் என பெயர் வந்தது

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் உயிரிழந்த அன்று நான் சாப்பிடவில்லை. சிறிய வயதில் அவரை நேசித்ததன் அடிப்படையில் அவரது உடல் காணப்பட்ட விதம் எனக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்கிற பிள்ளையான்.

பிள்ளையாரை போலிருந்ததால் எனக்கு பிள்ளையான் என்ற பெயர் வந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில்,

நான் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த போது குபேரன் என பெயர் வைத்தார்கள். பின்னர் நான்கைந்து பெயர் அதே பெயரில் இருந்ததால் என்னை பிள்ளையான் என அழைத்தனர். கட்டையாக, உருண்டையாக நான் இருந்தேன். அதனால் அந்த பெயர் வந்தது.

யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது, வசதி படைத்தவர்கள் தமது சொத்துக்களை புலிகளிற்கு எழுதி கொடுத்துவிட்டு இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்றார்கள். அங்கு, புலிகள் தமது சொத்துக்களை பறித்து விட்டார்கள் என இராணுவத்திடம் முறையிட்டார்கள். இந்த பொலிஸ் முறைப்பாட்டை வைத்து வெள்ளவத்தையில் வீடு வாங்கி குடியிருந்தார்கள். அல்லது வெளிநாட்டுக்கு சென்றார்கள்.

யுத்தம் முடிந்த பின்னர் அவர்கள் திரும்பி வந்து அந்த சொத்துக்களை உரிமை கோருகிறார்கள் என்றார்.

 

https://www.meenagam.com/தலைவர்-வே-பிரபாகரன்-உயிர/

  • கருத்துக்கள உறவுகள்

அவரது ஒவ்வொரு வேர்களையும் கிளைகளையும் வெட்டி அல்லது வெட்ட உதவி விட்டு கதை விடுகிறார்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது, வசதி படைத்தவர்கள்

விடுதலைப்புலிகள்,
யாழ்ப்பாணத்தான்,
மேட்டுகுடியினர்

வசதி படைத்தவன்
புலம் பெயர்ந்தவன்(வெளிநாட்டு தமிழன்)
பிரபாகரன் 

இந்த சொற்களை கேட்டு கேட்டு காது புளித்துவிட்டது
இவர்களை ஓரம் கட்டி வைத்துவிட்டு உங்களது மக்களுக்கு தேவையானதை செய்யுங்கோ....
இவர்களின் பெயர்களை வைத்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்றால் உங்கள் அரசியல் நீண்டநாட்களுக்கு நிலைக்காது...ராஜாபக்ஷ்வின் ஆட்சி இல்லாத காலத்திலும் நீங்கள் அரசியல் நடத்த வேண்டுமென்றால் சொந்த மக்களை கவனியுங்கள்....மட்டகளப்பு மக்களின் காணிகளை காப்பாற்றுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, putthan said:

விடுதலைப்புலிகள்,
யாழ்ப்பாணத்தான்,
மேட்டுகுடியினர்

வசதி படைத்தவன்
புலம் பெயர்ந்தவன்(வெளிநாட்டு தமிழன்)
பிரபாகரன் 

இந்த சொற்களை கேட்டு கேட்டு காது புளித்துவிட்டது
இவர்களை ஓரம் கட்டி வைத்துவிட்டு உங்களது மக்களுக்கு தேவையானதை செய்யுங்கோ....
இவர்களின் பெயர்களை வைத்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்றால் உங்கள் அரசியல் நீண்டநாட்களுக்கு நிலைக்காது...ராஜாபக்ஷ்வின் ஆட்சி இல்லாத காலத்திலும் நீங்கள் அரசியல் நடத்த வேண்டுமென்றால் சொந்த மக்களை கவனியுங்கள்....மட்டகளப்பு மக்களின் காணிகளை காப்பாற்றுங்கள்

இதுவரை செய்தது போதும் இனிமேலும் கிழக்கு மக்களுக்கு உண்மையான அரசியல் வாதியாக இருந்து பாருங்கள் குறைந்தது ஒரு வருடம் .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

இதுவரை செய்தது போதும் இனிமேலும் கிழக்கு மக்களுக்கு உண்மையான அரசியல் வாதியாக இருந்து பாருங்கள் குறைந்தது ஒரு வருடம் .

கிழக்கு மக்களின் மேச்சல் நிலத்தை (வசதி படைத்தவர்கள் அல்ல)காப்பாற்ற முடியவில்லை இவர்களால் ...இந்த லட்சணத்தில் வசதிபடைத்தவன் திரும்பிவந்து காணி கேட்கிறானாம்...


 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

கட்டையாக, உருண்டையாக நான் இருந்தேன். அதனால் அந்த பெயர் வந்தது.

இதுகளின் குணத்துக்கு இதுகளை தள்ளி வைத்திருந்தால் தேடப்படுவோர் பட்டியலில் இருந்திருப்பார். தலைவர்  அணைத்ததால் இன்று இந்த நிலையில் இருந்து மக்களை ஏமாற்றுகிறார். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, விசுகு said:

அவரது ஒவ்வொரு வேர்களையும் கிளைகளையும் வெட்டி அல்லது வெட்ட உதவி விட்டு கதை விடுகிறார்

இன்றும் அவர்களுக்கு தலைவர் பிரபாகரன் தேவைப்படுகின்றார்.

15 hours ago, putthan said:

கிழக்கு மக்களின் மேச்சல் நிலத்தை (வசதி படைத்தவர்கள் அல்ல)காப்பாற்ற முடியவில்லை இவர்களால் ...இந்த லட்சணத்தில் வசதிபடைத்தவன் திரும்பிவந்து காணி கேட்கிறானாம்...


 

உரக்க சொன்னால் யாழ்ப்பாணிகளால் வந்த வினை என பழி போடுவார்கள்.😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.