Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிஸ் அதிகாரங்களை மாநகர சபைகள் கையில் எடுக்க முடியாது - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பொலிஸ் அதிகாரங்களை எக்காரணம் கொண்டும் மாநகர சபைகள் கையில் எடுக்க  இடமளிக்க முடியாது. நகர மேயருக்கும் இது பொருந்தும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சபையில் தெரிவித்தார்.

நாட்டின் சட்டத்தை முறைதவறி செயற்படுத்த அரசாங்கம் தயாரில்லை எனவும் அவர் கூறினார்.

யாழ். மாநகரசபை மேயர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் தமிழ் எம்.பிக்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்பதை தெரிவிக்கும் போதே அமைச்சர்களான தினேஷ் குணவர்தன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் இவ்வாறு கூறினார்.

இது குறித்து அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறுகையில், 

யாழ் மேயர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்து தமிழ் எம்.பிக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து தலையிட்டு, ஆராய்ந்து பார்க்க வேண்டுமென விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்களுக்கு நாம் அறிவித்துள்ளோம். அரசாங்கமாக இந்த விடயத்திற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னவென்பது குறித்து விரைவில் அறியத்தருவோம் என்றார்.

இது குறித்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறுகையில், 

யாழ். மேயர் குறித்து தமிழ் எம்.பிக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எனினும் அவர் குறித்து பிரபலமான தொலைகாட்சி ஒன்றில் முதலில் செய்திகள் வெளியிடப்பட்டது. பொலிசாரின் கடமையையும் மாநகர சபையா இன்று செய்கின்றது என குறித்த ஊடகம் கேள்வி எழுப்பியது. எங்கே இந்த நாட்டின் சட்டம் எனவும் கேள்வி எழுப்பினர். எனவே சட்டம் சரியாக செயற்பட்டாக வேண்டும்.

விடுதலைப்புலிகளின் ஆக்கிரமிப்பு காலத்தில் வடக்கில் எவ்வாறு பொலிசார் செயற்பட்டனர், நீதிமன்றங்கள் எவ்வாறு இயங்கியது என்பதை நாம் பார்த்தோம். எனவே பொலிஸ் அதிகாரங்களை எக்காரணம் கொண்டும் மாநகரங்கள் பயன்படுத்த இடமளிக்க முடியாது. நகர மேயருக்கும் இது பொருந்தும். இதுதான் அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடாகும் என்றார். 

பொலிஸ் அதிகாரங்களை மாநகர சபைகள் கையில் எடுக்க முடியாது - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ | Virakesari.lk

இவர் அடிப்படையில் ஒரு தமிழர். றோமன் கத்தோலிக்க மதத்தை சார்ந்த தமிழர். இவரது அப்பா, குருணாகல் நகரசபையின் நகர பிதாவாக (மேயராக) இருந்தவர். நன்கு தமிழ் கதைக்க கூடியவராக இவரது அப்பா இருந்தார். ஜோன்ஸ்ரனாலும் தமிழ் கதைக்க முடியும். ஆனால் ஒரு போதும் தன்னை தமிழராக காட்டிக் கொண்டது இல்லை. சிங்கள மக்களும் இவரை சிங்களவராக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

இவர் அடிப்படையில் ஒரு தமிழர். றோமன் கத்தோலிக்க மதத்தை சார்ந்த தமிழர். இவரது அப்பா, குருணாகல் நகரசபையின் நகர பிதாவாக (மேயராக) இருந்தவர். நன்கு தமிழ் கதைக்க கூடியவராக இவரது அப்பா இருந்தார். ஜோன்ஸ்ரனாலும் தமிழ் கதைக்க முடியும். ஆனால் ஒரு போதும் தன்னை தமிழராக காட்டிக் கொண்டது இல்லை. சிங்கள மக்களும் இவரை சிங்களவராக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

சிங்களம் பேசி .பெளத்ததை தழுவினால் எங்களயும் அவர்கள் ஏறுக்கொள்வார்கள்😀

7 hours ago, பிழம்பு said:

விடுதலைப்புலிகளின் ஆக்கிரமிப்பு காலத்தில் வடக்கில் எவ்வாறு பொலிசார் செயற்பட்டனர், நீதிமன்றங்கள் எவ்வாறு இயங்கியது என்பதை நாம் பார்த்தோம்.

அவர்களின் திறமையை பார்த்து பயந்து போயிற்றினம் .....

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

இவர் அடிப்படையில் ஒரு தமிழர். றோமன் கத்தோலிக்க மதத்தை சார்ந்த தமிழர். இவரது அப்பா, குருணாகல் நகரசபையின் நகர பிதாவாக (மேயராக) இருந்தவர். நன்கு தமிழ் கதைக்க கூடியவராக இவரது அப்பா இருந்தார். ஜோன்ஸ்ரனாலும் தமிழ் கதைக்க முடியும். ஆனால் ஒரு போதும் தன்னை தமிழராக காட்டிக் கொண்டது இல்லை. சிங்கள மக்களும் இவரை சிங்களவராக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

 இவர் ஒரு, அடுத்த ஜெயராஜ் பெர்னாண்டோ பிள்ளை என்று சொல்லுங்கோ.

சிங்கள கத்தோலிக்கர்கள் பதவிக்காக மதம் மாறி தங்களை அடிப்படை பவுத்தர்களாக காட்டிக்கொள்வதற்காக, அளவுக்கு மிஞ்சி அந்த மதக்கொள்கைகளுக்கு மேலாக நடிப்பார்கள். அவ்வாறே நம்மிலும் சிலர். அவர்களுக்கு தன்மானம்,  இனம், சொந்த மதம் கொள்கை கிடையாது. பதவி, புகழ் எங்கேயோ அங்கே இருப்பார்கள் இவர்கள். இவர்கள் எவ்வளவுதான் நடித்தாலும், சிங்களம் அவர்களது சுயநலத்துக்கு தாளம் போடும் வரையிலும் இவர்களை  ஏற்றுக்கொள்ளும். தட்டுத்தடுமாறி நீதியின் பக்கம் சாய்ந்தார்கள் என்று கண்டால் இவர்களின்  முடிவு பரிதாபம். அங்குமில்லை, இங்குமில்லை. மதமும் இல்லை, இனமும் இல்லை இவர்களை மீட்பதற்கு.  கொள்கை பற்றுள்ளவர்களுக்கு, அதை தம் உயிரினும் மேலாக கருதியவர்களுக்கு,  எது கதி என்பது நமது தலைவர், பண்டாரவன்னியன், கட்டபொம்மன் போன்றோரின் முடிவுகள் முடிவு நிருபித்துள்ளது. அவர்ளுக்கு சரித்திரத்திலும், மக்களின் மனதிலும் நீங்கா இடமிருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நகரின் சுற்று சூழல் பாதுகாப்பு விவகாரத்தில் தனியான காவலர்களை நியமித்தது தொடர்பில் யாழ் நகர முதல்வரின் கைது விடயம் இப்போது புதிய பரிமாணத்தில் விரிந்து செல்லும் தன்மையை அவதானிக்கும்போது நாம் பின்வரும் விடயங்களை புரிந்து செயற்பட வேண்டும்.

1. யாழ் நகரை அசுத்தம் செய்வோரிடமிருந்து அறவிடப்படும் தண்டபணத்தை ஆட்டய போடும் சந்தர்ப்பம் நழுவிவிட்டது   சிறிலங்கா காவல்துறைக்கு ஒரு மானப்பிரச்சினை.

2. காவலர்களின் சீருடை புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்திருந்ததை காரணம்காட்டி முதல்வரை கைதுசெய்தது வெறும் நாடகம்.

3. கொழும்பு நகரசபை இதுபோன்ற காவலர்களை ஏற்கனவே நியமித்து அவர்களுக்கு இதையொத்த சீருடைகளை வழங்கியிருந்தது என்ற தமிழ் தரப்பின் கூற்று உண்மையென்றால் அதை சிங்கள அரசு ஏன் சட்டைசெய்யவில்லை?

4.  நாடாளுமன்றில் கேள்வி எழுப்பி அதனால் பிரச்சினையை தீர்க்க முடியாது என்பது தெரிந்த விடயம். எனவே தமிழ் அரசியல்வாதிகள், சட்ட வல்லுனர்கள் ஒன்றுபட்டு உயர்மட்ட அளவில் செயலாற்றவேண்டும்.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, putthan said:

அவர்களின் திறமையை பார்த்து பயந்து போயிற்றினம் .....

அதோடு சிங்கள காவற் துறையின் இலஞ்ச  வருமானமும் பறிபோய்விடும் என்கிற பயம். தமிழர் அசைந்தாலே தாங்கள் தட்டிப்பறித்ததை திருப்பி வாங்கி விடுவார்களோ என்கிற  பயம் அவர்களுக்கு. தங்கள் முடிவை தாங்களே விரைந்து எழுத முயற்சிக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vanangaamudi said:

 

 

4.  நாடாளுமன்றில் கேள்வி எழுப்பி அதனால் பிரச்சினையை தீர்க்க முடியாது என்பது தெரிந்த விடயம். எனவே தமிழ் அரசியல்வாதிகள், சட்ட வல்லுனர்கள் ஒன்றுபட்டு உயர்மட்ட அளவில் செயலாற்றவேண்டும்.

கைது ....விடுதலை ....
இரண்டும் பக்கா நாடகம் போல தெரிகின்றது...
நீதிமன்றத்தில் இரவு நேரத்தில் நீதிபதியை எழுப்பி பிணை வழங்கப்படுகிறது...ஜனாதிபதி ச்ட்டத்தரனியுடன் 25 மேற்பட்ட வக்கீல்கள் ஒன்ரு கூடுயிருக்கிறார்கள்....

சில மணி நேரத்தில் அமைச்சர் ட்க்கிளஸ் அறிக்கை விடுகிறார் தனது வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி அவரை விடுத்லை செய்து விட்டார் ....இனிமேல் மேயர் குழப்படி செய்யாமல் வேலை செய்ய வேணும் என்று தன்னிடம் கூறியதாக சொன்னார்...

Just now, putthan said:

கைது ....விடுதலை ....
இரண்டும் பக்கா நாடகம் போல தெரிகின்றது...
நீதிமன்றத்தில் இரவு நேரத்தில் நீதிபதியை எழுப்பி பிணை வழங்கப்படுகிறது...ஜனாதிபதி சட்டத்தரனியுடன் 25 மேற்பட்ட வக்கீல்கள் ஒன்ரு கூடியிருக்கிறார்கள்....

சில மணி நேரத்தில் அமைச்சர் டக்கிளஸ் அறிக்கை விடுகிறார் தனது வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி அவரை விடுத்லை செய்து விட்டார் ....இனிமேல் மேயர் குழப்படி செய்யாமல் வேலை செய்ய வேணும் என்று தன்னிடம் கூறியதாக சொன்னார்...

 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, putthan said:

கைது ....விடுதலை ....
இரண்டும் பக்கா நாடகம் போல தெரிகின்றது...
நீதிமன்றத்தில் இரவு நேரத்தில் நீதிபதியை எழுப்பி பிணை வழங்கப்படுகிறது...ஜனாதிபதி ச்ட்டத்தரனியுடன் 25 மேற்பட்ட வக்கீல்கள் ஒன்ரு கூடுயிருக்கிறார்கள்....

சில மணி நேரத்தில் அமைச்சர் ட்க்கிளஸ் அறிக்கை விடுகிறார் தனது வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி அவரை விடுத்லை செய்து விட்டார் ....இனிமேல் மேயர் குழப்படி செய்யாமல் வேலை செய்ய வேணும் என்று தன்னிடம் கூறியதாக சொன்னார்...

மாபெரும் நாடகம் இரண்டு பக்கமும் சேர்ந்து நடித்து முடித்து இருக்கிறார்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.