Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உருத்திரபுரீஸ்வரன் ஆலயத்தில் பௌத்த விகாரை அமைப்பது குறித்து ஆராய்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உருத்திரபுரீஸ்வரன் ஆலயத்தில் பௌத்த விகாரை அமைப்பது குறித்து ஆராய்வு

 
Capture.JPG-1-1.jpg
 66 Views

கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரன் ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்கவுள்ளமை தொடர்பில்   கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் தமிழரின் பூர்வீக நிலங்களை அபகரிக்க சிறீலங்கா அரசு மிகவும் திட்டமிட்டு, தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை  அண்மைய காலங்களில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரன் ஆலயத்திலும் சில ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தன.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினர்களான எம் .ஏ . சுமந்திரன், எஸ்.சிறிதரன் ஆகியோர் தலைமையில்     உருத்திரபுரீஸ்வரன் ஆலய மண்டபத்தில்,  கலந்துரையாடல் ஒன்று   நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த ஆலய வளாகத்தில், அகழ்வு பணிகள் மேற்கொள்ளவதற்கு எடுத்த முயற்சியினை அடுத்து, அப்பகுதியில் பௌத்த விகாரை அமைக்க நடவடிக்கை எடுக்க முயற்சிக்கலாம் என்ற காரணத்தினால், அது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

https://www.ilakku.org/?p=47124

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன தலையங்கம்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

இதென்ன தலையங்கம்?

பத்திரிகை வியாபாரம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் பௌத்த விகாரை அனுமதிக்க முடியாது – சுமந்திரன் கருத்து

 
unnamed-1-1.png
 29 Views

கிளிநொச்சி, உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில்  பௌத்த விகாரை அமைக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆலயத்தில் வளாகத்தில் தொல்பொருள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை எனவும், அவ்வாறான ஆராய்ச்சிகள் தமிழ் தரப்பையும் இணைத்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் பௌத்த விகாரை அமைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக ஆலயத்தில் வளாகத்தில்  விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

Uruththirapuram-3.png

அந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் வளாகத்தில் உள்ள மேட்டில் பௌத்த விகாரை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தொல்லியல் திணைக்களத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள சட்டத்தில் அவர்களுக்கு உள்ள அதிகாரமானது, தொன்மை வாய்ந்த புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது மட்டுமேயாகும். புதிதாக ஆலயங்கள் கட்டுவதற்கோ விகாரைகள் கட்டுவதற்கோ அவர்களுக்குரிய சட்டத்திலே எந்தவொரு அதிகாரங்களும் கிடையாது.

கடந்த தடவை குறித்த ஆலயத்திற்கு வந்திருந்த தொல்பொருள் திணைக்களத்தினரின் நடவடிக்கைக்கு ஊர் மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் அவர்கள் நடவடிக்கையைக் கைவிட்டுப் போயுள்ளார்கள்.

இந்நிலையில், தொல்லியல் திணைக்களம் விகாரைகள் கட்டுவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்தால் அதனை நாம் வலுவாக எதிர்ப்போம்.

இதேவேளை, எமது பிரதேசங்களிலே புராதனச் சின்னங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவ்வாறான புராதனச் சின்னங்களை அவர்கள் ஆராய்ச்சி செய்யலாம்.

நாம் தொன்மை வாய்ந்த ஒரு இனம் என்ற நிலையில் எமது பிரதேசங்களில் நிச்சயமாக பல தொன்மை வாய்ந்த இடங்கள் இருக்கும். எனவே, அவை ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். இதன்போது, தமிழர்கள் எப்போதிருந்து இங்கே வாழ்ந்தார்கள் என்பதை உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

எனவே, அவ்வாறான ஆராய்ச்சிகள் செய்யப்படும்போது தமிழ் மக்களினுடைய பிரதிநிதிகள், துறைசார் உத்தியோகத்தர்கள், துறைசார் மாணவர்கள் எல்லோரையும் இணைத்து அந்த ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.ilakku.org/?p=47161

 

  • கருத்துக்கள உறவுகள்

அவங்களுக்கு எடுத்து குடுக்கிறாங்கள் இவங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

அவங்களுக்கு எடுத்து குடுக்கிறாங்கள் இவங்கள்.

ஒரு சின்ன விகாரை கட்டினால் கூட பரவாயில்லை 
150 அடி  உயரமான விகாரை கட்டுவதை கனிடிக்காது இருக்க முடியாது 😂

கண்டிக்காது இருக்க முடியாது 

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் அவங்களுக்கு குழு கொடுப்பது என்பதை விட எடுத்துக்கொடுப்பது இவங்கதான் அம்பாறையில் ச்ங்கமாஙண்டியில் புத்தர் சிலை வைக்க ஆயத்தமாகிறார்கள் ஆனால் இன்னும் வைக்கல எப்படியும் வைப்பார்கள் என நினைக்கிறன்  புத்தன் வந்தாலும் பிரச்சினை தீரப்போவதில்லை பெருமாள் வந்தாலும் பிரச்சினை தீரப்போவதில்லை பிரச்சினை நீண்டு செல்லவே இருக்கிறது இலங்கையில் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.