Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக தேர்தல் முடிவுகளை... அறிவிப்பதில் காலதாமதம் ஏற்படலாம் – சத்தியபிரத சாகு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்படலாம் – சத்தியபிரத சாகு

 தமிழக தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்படலாம் – சத்தியபிரத சாகு

வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் தாமதம் ஏற்படலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகின்ற நிலையில், தேர்தல் முடிவுகள் தாமதமாகுமா என்ற கேள்வி எழுந்திருந்திருந்தது. இந்நிலையிலேயே மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள சத்தியபிரதா சாகு, கொரோனா தொற்று காரணமாக ஒவ்வொரு வாக்கு சாவடியிலும், 1000 வாக்காளர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர்.

இதனால் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 88 ஆயிரமாக உயர்ந்தது. இந்த வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் மே மாதம் 2 ஆம் திகதியன்று எண்ணப்படவுள்ளன.

வாக்குச் சாவடிகள் அதிகமாக உள்ளதால் வாக்கு எண்ணிக்கையின் போது பயன்படுத்தப்படும் மேசைகளும் அதிகமாகவுள்ளன. இதனால் அதிகாரப்பூர்வமாக முடிவுகளை வெளியிடுவதில் சற்று காலதாமதமாகலாம் ‘ எனத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2021/1211002

  • கருத்துக்கள உறவுகள்

அப்படித்தான்..செய்ய வேணும்...அடுத்து 5 தலைமுறை ஆட்சி செய்யும் கட்சிஅரியாசனம் ஏறிடும்....டோப்புத்தலையன் வரவிடாமல் ..என்ன செய்ய வேணுமோ ஆறுதலாச் செய்யுங்கோ.....

Edited by alvayan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

அப்படித்தான்..செய்ய வேணும்...அடுத்து 5 தலைமுறை ஆட்சி செய்யும் கட்சிஅரியாசனம் ஏறிடும்....டோப்புத்தலையன் வரவிடாமல் ..என்ன செய்ய வேணுமோ ஆறுதலாச் செய்யுங்கோ.....

இப்பவே.... அந்தக் குடும்பம் (கருணா, மாறன்) 35,000 கோடி ரூபாய்க்கு சொத்து வைத்திருக்கிறார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மே மாதம் 2ஆம் திகதி நள்ளிரவிற்குள் வாக்கு எண்ணிக்கை நிறைவு – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

 
12 மணிக்குள் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவை அறிவிக்கும் வகையில் பணிகள் நடந்து வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி நடைபெற்றது. இதனையடுத்து மாதம் 2ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலால் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் இருக்குமா என்று கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், இதுதொடர்பாக இன்று பதிலளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, மே  மாதம் 2ஆம் திகதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் மே  மாதம் 2ஆம் திகதி நள்ளிரவுக்குள் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

மே மாதம் 2ஆம் திகதி நள்ளிரவிற்குள் வாக்கு எண்ணிக்கை நிறைவு – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி – Athavan News

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த கால தேர்தல்களை விடவாக்கு எண்ணும் சுற்றுகள் அதிகரிப்புமுடிவு தெரிய தாமதமாகும்

கடந்த கால தேர்தல்களை விடவாக்கு எண்ணும் சுற்றுகள் அதிகரிப்புமுடிவு தெரிய தாமதமாகும்

கடந்த கால தேர்தல்களை விட இந்த முறை வாக்கு எண்ணும் சுற்றுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதால், முடிவு தெரிய தாமதம் ஆகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
பதிவு: ஏப்ரல் 29,  2021 16:05 PM

தேனி:
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. தேனி மாவட்டத்தை பொறுத்தவரை ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் மொத்தம் 74 பேர் போட்டியிட்டனர். மாவட்டத்தில் மொத்தம் 1,561 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது.
பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் தேனி அருகே கொடுவிலார்பட்டியில் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டது. இங்கு வாக்கு எண்ணும் பணிக்கான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணும் அறைகளில் தடுப்பு கம்புகள், வலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 3 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுற்றுகள் அதிகரிப்பு
இந்த முறை தேர்தலின் போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கூடுதல் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன. கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. வாக்குப்பதிவு எந்திரங்கள் எண்ணிக்கை மற்றும் வாக்கு எண்ணும் மேஜைகள் எண்ணிக்கைக்கு ஏற்ப சுற்றுகள் எண்ணிக்கை அமையும். அந்த வகையில் கடந்த கால தேர்தல்களை காட்டிலும் தேனி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் இந்த முறை கூடுதல் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன. இதனால், வாக்கு எண்ணும் சுற்றுகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
தொகுதி வாரியாக ஆண்டிப்பட்டியில் 388, பெரியகுளத்தில் 398, போடியில் 383, கம்பத்தில் 392 வாக்குப்பதிவு மையங்களில் தேர்தல் நடந்தது. 14 மேஜைகள் வீதம் வாக்கு எண்ணிக்கை நடப்பதால், அதிகபட்சமாக பெரியகுளம் தொகுதியில் 29 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. மற்ற 3 தொகுதிகளிலும் 28 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.
முடிவு தாமதமாகும்
சுற்றுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வெற்றி, தோல்வி முடிவு தெரிவதும் தாமதம் ஆகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக பிற்பகலில் வெற்றி, தோல்வி விவரம் தெரிந்து விடும். ஆனால், இந்த முறை வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு 12 முதல் 14 மணி நேரம் வரை ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க நள்ளிரவு வரை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

https://www.dailythanthi.com/News/Districts/2021/04/29160554/Than-in-past-electionsBy-no-meansIt-is-too-late-to.vpf

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

இந்த முறை வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு 12 முதல் 14 மணி நேரம் வரை ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க நள்ளிரவு வரை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வாக்குப் பதிவை வைத்திருக்கும் இயந்திரங்களில், மோடியின் ஆழும்கட்சி வெற்றிபெறும் அளவிற்கு வாக்குகளின் எண்ணிக்கை வருவதற்கு..... 12 முதல் 14 மணி நேரம் என்ன? அதற்கு மேலும் ஆகலாம்.!! 😲

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.