Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரீட்சை முடிவுகள்: பிள்ளைகளை குறை கூறுவதை நிறுத்துங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சை முடிவுகள்: பிள்ளைகளை குறை கூறுவதை நிறுத்துங்கள்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

இந்தவாரம் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளைத் தொடர்ந்த எதிர்வினைகளை, சில நாள்களாக நேரடியாகவும் சமூக வலைத்தளங்களிலும் காணக்கிடைத்தன.   

முடிவுகள் வெளியாகிவிட்டன; இதனுடன் தொடர்புடைய தரப்புகள் செய்யக் கூடியதும் செய்ய வேண்டியதும் இரண்டுதான். முதலாவது, பரீட்சை எழுதிய மாணவர்களும் அவர்தம் பெற்றோரும் செய்யவேண்டியது. அது, ‘அடுத்தது என்ன?’ என்ற வினாவைத் தொடுப்பதாகும்.  

 இரண்டாவது, கற்பித்த ஆசிரியர்களும் பாடசாலைகளும் செய்ய வேண்டியவை. இம்முறை முடிவுகளில் இருந்து கற்ற பாடங்கள் என்ன? செய்ய தவறுகள் என்ன? செய்ய வேண்டியது என்ன என்பதை, சுயவிமர்சன நோக்கில் ஆராய்வதும் முன்னேற்றுவதற்கு வழிகாண்பதும் ஆகும்.  

ஆனால், இவை இரண்டும் நடப்பதாகத் தெரியவில்லை. பரீட்சையில் தோற்ற மாணவர்கள் மீது பழியைப் போட்டுவிட்டு, எல்லோரும் தப்பித்து விடுகிறார்கள். இது தீர்வல்ல; இது வளமான எதிர்காலச் சந்ததிக்கான வழியுமல்ல.  

இலங்கையில் கல்வி, கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக, மிகுந்த நெருக்கடியை எதிர்நோக்குகின்றது. இந்நிலையில், ‘கல்வி எதற்காக’ என்ற வினாவையும், ‘கல்வி யாருக்காக’ என்ற வினாவையும் கேட்பது தவிர்க்க இயலாதது.   
நம்முடைய கல்வி முறை, கடந்த 50 வருடங்களாகப் பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இன்று நம்மிடையே உள்ள பாடசாலைக் கல்விமுறை, ஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்டது. கொலனியச் சூழலில், கொலனிய நிர்வாகத் தேவைகளை முதன்மைப்படுத்தி உருவான கல்வி முறை, கொலனியத்தின் கீழ் ஏற்பட்ட சமூக மாற்றங்களை உள்வாங்கியும் அதன் பின்பான மாற்றங்களுக்கு அமையவும் மாற்றங்களுக்கு உட்பட்டது.   

எனினும், கல்வி புகட்டும் முறை, பாடசாலை வகுப்பறை சார்ந்தே பேசப்பட்டாலும், கடந்த 25 வருட காலத்துக்குள் பாடசாலைகள், கல்வி முறை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள சீரழிவு காரணமாக, கல்வி முறையில் சீர்திருத்தத்தைப் புகுத்தினாலும் அது எதிர்மாறான விளைவுகளையே ஏற்படுத்தி உள்ளது.  

‘எல்லோருக்கும் இலவசக் கல்வி’ என்ற கொள்கையும் பல்கலைக்கழகம் வரையான அதன் நீடிப்பும், கல்வி வாய்ப்புகளைப் பரவலாக்கியது. இதனடிப்படையில், எழுதவும் வாசிக்கவுமான அறிவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டால், நம் கல்வி முறை, ஆசியாவில் வெற்றிகரமான ஒன்றே! ஆனால், கல்வியை அவ்வாறு மதிப்பிடல் சரியாகாது.   

ஏனெனில், அனைவருக்கும் கல்வி வாய்ப்பையோ, எல்லாப் பாடசாலைகளிலும் ஒப்பிடத்தக்க கல்வித் தரத்தையோ உறுதிசெய்ய, இலவசக் கல்விமுறையால் இயலவில்லை. சாதி, வர்க்க, இன அடிப்படைகளில் மக்கள் பிரிவுகளுக்கு நெடுங்காலம் மறிபட்ட கல்வி வாய்ப்பு, மிக மெதுவாகவே வந்து சேர்ந்தது.   

எமது கல்விமுறையானது, சமூகப் பயனுள்ள மனிதர்களை உருவாக்குகின்றதா என்பது, நாம் எல்லோரும் கேட்க வேண்டிய அடிப்படையான வினா. இன்று நமது கல்வி முறை, நாட்டினதோ மக்களினதோ நலன்களை முதன்மைப்படுத்துகின்ற ஒன்றல்ல. அது எஜமானர்களது கட்டளைகளுக்கமைய இயங்கக் கூடிய, சிற்றூழியர்களை உற்பத்தி செய்யும் ஒரு கருவியாக மாறிவிட்டது.   

இன்னொருபுறம் நமது கல்வி, வணிக மயமாகிவிட்டது. பரீட்சைப் பெறுபேறுகளே கல்வித் தொழிற்சாலைகளின் உற்பத்திப் பண்டங்களாகி விட்டன. பெறுபேறுகளே அனைத்தையும் தீர்மானிக்கின்றன. வெற்றி தோல்வியின் அளவுகோல் அதுவே! இது பிள்ளைகளையே பாதிக்கின்றது.  

எமது பாடத்திட்டத்தில், விஞ்ஞானக் கற்பித்தலின் ஆய்வுகூடக்கூறு, மோசமாகக் குறைந்துள்ளது. ஆய்வுகூடங்கள் இன்மை, வளப்பற்றாக்குறை என்பன இதில் பிரதானமானவை.   

பாடத்திட்டங்கள் மிகப்பெரியதாகவும் ஏராளமான தரவுகளை உடையதாகவும் அமைந்துள்ளன. மாணவர்கள் அவற்றைப் படிப்பதை விடுத்துத் தகவல்களை மனனஞ்செய்ய முற்படுகின்றனர். இது மாணவரின் ஆய்ந்தறியும் திறனைக் கெடுத்துள்ளது.   

இணையத்தினூடு உடனடியாகத் தகவல்களைப் பெறக்கூடியமையும் கேள்வியின்றித் தகவல்களை ஏற்கும் போக்கும், பிரச்சினையை மேலும் மோசமாக்கியுள்ளது. இதன் மிகக்கேடான விளைவுகளை, பல்கலைக்கழகங்களில் கற்கின்ற மாணவர்களின் நடத்தை உறுதிசெய்கிறது.   

ஒருபுறம் உலகமும் கற்றலும் வேகமாக நவீனமாகையில், நமது வகுப்பறைக் கல்வி, பாரம்பரிய அறிவு வழங்கல் மாதிரியில் இருந்து அதிகம் விலகவில்லை. இதைச் சாத்தியமாக்க, பாடசாலை ஆசிரியர்களை மீள்பயிற்சிக்கு உட்படுத்துகிற தேவை மிகமுக்கியமானது. ஆனால், அதில் கவனம் செலுத்தப்படுவதில்லை.   

மேலும், பாடசாலைக் கல்வி முறையின் தொடர்ச்சியான உயர்கல்வியானது, எவ்வாறு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களுடன் பொருந்துகின்றது என்பது பற்றியோ, பாடசாலைக் கல்வியையும் பல்கலைக்கழகக் கல்வியையும் தொடர்ந்து, தொழிலொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவான, தொழில் பயிற்சிகளுக்கான திட்டங்கள் என்ன என்பது பற்றியோ, போதிய கவனம் எதுவும் இல்லாமலே, கல்விச் சீர்திருத்தங்கள் வருகின்றன.   

ஏட்டுப்படிப்பைவிட, நடைமுறை சார்ந்த விடயங்களுக்கு அழுத்தம் தரவேண்டும் என்பது, இன்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால், அதைச் செயற்படுத்துவதாகக் கல்விமுறையோ, பாடசாலைகளோ இல்லை. கற்றலுக்கு புறம்பான செயற்பாடுகளைப் பயனற்றதாக நோக்கும் போக்கு, ஆசிரியர்களிடமும் பெற்றோரிடமும் அதிகரித்துள்ளது.   

இந்தக் கல்வி முறைமை, மாணவர்களது தனிப்பட்ட மேம்பாட்டுக்கோ, சமூக மேம்பாட்டுக்கோ போதியதுமல்ல; உகந்ததுமல்ல. இன்றைய பாடசாலைகள், சமூக மேம்பாட்டுக்கும் சமூக உணர்வுக்கும் ஆற்றும் பங்கு மிகவும் குறுகி விட்டது. பல்கலைக்கழகக் கல்வியும் அதே விதமாகச் சீர்குலைந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.  

மாணவரின் பாடசாலை வேலைச் சுமை, முன்பை விட அதிகரித்துள்ளது. தனியார் கற்றலுக்கு (டியூசன்) போகுமாறு பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவர்களை உந்துவது, சுமையை மோசமாக்குகின்றது. பரீட்சையை நோக்காகக் கொண்ட கல்வி அணுகுமுறை, கல்வித் தரத்தின் சரிவுக்கு ஒருபுறம் பங்களிக்க, மறுபுறம் மாணவர்கள் மீதான மிகையான சுமையும் காரணியானது. எமது கல்விமுறைச் சீரழிவுக்கு, மிகவும் பங்களித்த விடயங்களில் ஒன்று, தனியார் கல்வி நிலையங்களின் வருகையும் தனியார் கற்பித்தலும் ஆகும்.  

பாடசாலைகளோடு ஒப்பிடக்கூடியளவு கல்வியில் ஈடுபடும் கட்டத்தை, தனியார் கல்வி நிலையங்கள் எட்டியுள்ளன. முழுமையாகப் பரீட்சையை மட்டுமே நோக்காகக் கொண்ட தனியார் கல்வி நிலையங்கள், மாணவர்களைப் பரீட்சைக்கு தயார்படுத்தும் தொழிற்சாலைகளாகி விட்டன. இது மாணவர்களின் சுயகற்றலையும் அறிவுத்தேடலையும் சிதைக்கின்றது; கற்றலைப் பரீட்சைக்குரியதாக மட்டும் சுருக்குகிறது.  

தனியார் கற்பித்தல் என்பது, முறையான பாடசாலைக் கல்விக்கு மட்டுமன்றி, அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற இலக்குக்கும் குழிபறித்துள்ளது. பாடசாலை ஆசிரியர்கள், தனியார் கல்வி நிலையங்களையே நம்பி இருக்கிறார்கள். பாடசாலை மாணவர்கள், தனியார் கற்றலை மேற்கொள்வதால் பாடசாலையில் ஆசிரியர்கள் கற்பிக்காமல் இருப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது.   

மறுபுறம், இதே ஆசிரியர்கள் இக்கல்வி நிலையங்களில் கற்பிப்பதன் மூலம் பணமீட்டுகிறார்கள். காலையில் பாடசாலையில் வெண்கட்டியைக் கையால் தொடாதவர்கள், மாலையில் தொண்டை கிழிய, ஆடையெல்லாம் வெண்கட்டித் துகள்கள் நிறைய, கற்பிக்கும் எத்தனையோ பேரை நாமறிவோமல்லவா? முதலில் பிள்ளைகளிடத்தில் குற்றம் காண்பதை நிறுத்துவோம்.   

நல்ல பெறுபேறுகளைப் பெற்று, பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதால், வளமான சமூகம் உருவாகும் என்ற மாயையை நாம் முதலில் தகர்த்தெறிவோம். போட்டியும் பொறாமையும் குழிபறிப்புகளும் நிறைந்தவையாக எமது பல்கலைக்கழகங்கள் திகழ்கின்றனவே? பகடிவதை என்ற பெயரில், மனநோயாளர்கள் தங்கள் வக்கிரங்களை நிறைவேற்றுகிறார்களே? அதற்கு பல்கலைகழகமே, மறைமுகமாகத் துணை நிற்கிறதே? இவைதான் வளமான சமூகத்தின் அறிகுறிகளா?   

இதிலிருந்து நாம் விடுதலை பெறுவது எவ்வாறு என்பதே, நம்முன்னுள்ள சவால். எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்தவும் எதையும் ஆராய்ந்து அறியவும், எந்த நிபுணத்துவத்தையும் எதிர்த்து வாதாடவும் ஆற்றலும் உறுதியும் கொண்டஓர் இளம் தலைமுறை உருவாக, நாம் என்ன செய்யமுடியும்?   

நமது கல்வி நிறுவன அமைப்புகளின் வரையறைகளுக்குள் இது இயலுமானதல்ல. பழைமையில் ஊறிச் சீரழிந்த ஓர் அமைப்பால், இதைச் செய்ய இயலாது. சமூக ஈடுபாடும் சமூக நீதிக்கான வேட்கையும் அநீதிகளுக்கு எதிரான கோப உணர்வும் விமர்சன மனோபாவமும் சமூக மாற்றத்துக்கான செயலூக்கமும் வெகுசனம் சார்பான நடைமுறையும் மாணவப் பருவத்திலே பயிராக்கப்பட வேண்டும்.   
சமூக உணர்வற்ற கல்விமான்களும் தொழில் வல்லுநர்வுகளும் இயந்திரங்களைவிடக் கீழானவர்கள். இவர்களை பல்கலைக்கழகங்களிலும் சமூகத்திலும் நாம் அன்றாடம் சந்திக்கிறோம்.   

பரீட்சைகளும் பெறுபேறுகளும் முடிவல்ல. உயர்தரப் பரீட்சை முடிவுகள் ஒரு மாணவனின் அறிவையோ திறமையையோ அளவிடும் அளவுகோல்களல்ல. இப்பரீட்சையின் வெற்றி தோல்விகள், ஒருபோதும் வாழ்க்கையின் வெற்றி, தோல்விகளைத் தீர்மானிப்பதில்லை.   

பரீட்சையில் நல்ல பெறுபேறுகளைப் பெற்று, உயர்பட்டங்களைப் பெற்றோர், வாழ்க்கையில் தோற்ற கதைகள் எம்மத்தியில் நிறைந்து கிடக்கின்றன. பரீட்சைகளையும் பெறுபேறுகளையும் ஒருபக்கமாக வையுங்கள். பிள்ளைகள் வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொடுப்போம். வாழ்க்கையை நேசிக்கவும் வாழவும் தெரிந்த பிள்ளைகளே, சகமனிதனையும் சமூகத்தையும் நேசிப்பார்கள்.   
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பரீட்சை-முடிவுகள்-பிள்ளைகளை-குறை-கூறுவதை-நிறுத்துங்கள்/91-271276

 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

பரீட்சைகளும் பெறுபேறுகளும் முடிவல்ல. உயர்தரப் பரீட்சை முடிவுகள் ஒரு மாணவனின் அறிவையோ திறமையையோ அளவிடும் அளவுகோல்களல்ல. இப்பரீட்சையின் வெற்றி தோல்விகள், ஒருபோதும் வாழ்க்கையின் வெற்றி, தோல்விகளைத் தீர்மானிப்பதில்லை.   

பரீட்சையில் நல்ல பெறுபேறுகளைப் பெற்று, உயர்பட்டங்களைப் பெற்றோர், வாழ்க்கையில் தோற்ற கதைகள் எம்மத்தியில் நிறைந்து கிடக்கின்றன.

மாணவர்களை அவர்கள் செல்லும் கல்வி  வழியில் விட்டு அவர்களை நாம் பின்னின்று ஊக்குவித்தாலே காணும்.
எங்கள் ஆசைகளை பிள்ளைகளின் மீது திணிக்காமல் இருந்தாலே போதும்.
மாணவர்களே தங்கள் எதிர்காலக் கல்வியின் வழியினை முடிவு செய்ய பெற்றோர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
58 minutes ago, கிருபன் said:

பரீட்சை முடிவுகள்: பிள்ளைகளை குறை கூறுவதை நிறுத்துங்கள்

அதே போல் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவனை மட்டும் தலையில் தூக்கி வைத்து ஆடுவதையும் நிறுத்துங்கள்.


அண்மையில் இலங்கை பாடசாலை பரீட்சை பெறுபேறுகள் சம்பந்தமாக வெற்றிபெற்ற மாணவர்களின் படங்களை பிரசுரித்து அது சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் புளகாங்கிதம் அடைந்திருந்தனர்.அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவெனில் உங்களிடம் படித்த மாணவர்கள் பலர் குறைந்த புள்ளிகளையே பெற்றுள்ளனர்.
எனவே அடக்கி வாசியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்


இங்கே ஞாலசீர்த்தி மீநிலங்கோ தொடங்கி கிருபன் வாத்தியார் குமாரசாமி நல்ல கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
36 minutes ago, விளங்க நினைப்பவன் said:


இங்கே ஞாலசீர்த்தி மீநிலங்கோ தொடங்கி கிருபன் வாத்தியார் குமாரசாமி நல்ல கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் 😎

உதிலை கிருபன் எண்டவர் எங்கை என்ன கருத்தை சொன்னவர்? வெட்டி ஒட்டினவருக்கு பேரும் புகழும் குடுக்கிற பழக்கத்தை நிப்பாட்டுங்கோ 😁

Edited by குமாரசாமி
ஸ்மைலி மாற்றம்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

உதிலை கிருபன் எண்டவர் எங்கை என்ன கருத்தை சொன்னவர்?

நான் முதலில் ஞாலசீர்த்தி மீநிலங்கோவின் கட்டுரையை படித்துவிட்டு வாத்தியார், உங்கள் கருத்துக்களை படிக்கும் போது அதில் கிருபன் said கிருபன் said என்று வந்தது தானே நான் அதை கிருபனே சொன்னதாக நினைத்துவிட்டேன் 😁

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நான் முதலில் ஞாலசீர்த்தி மீநிலங்கோவின் கட்டுரையை படித்துவிட்டு வாத்தியார், உங்கள் கருத்துக்களை படிக்கும் போது அதில் கிருபன் said கிருபன் said என்று வந்தது தானே நான் அதை கிருபனே சொன்னதாக நினைத்துவிட்டேன் 😁

இப்படி வந்தால் கிருபன் சொன்னதாகத் தானே  அர்த்தம்

உங்களில் பிழையில்லை
நல்ல கால விளக்கம் சொன்னதால் தப்பித்துவிட்டீர்கள்😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:


இங்கே ஞாலசீர்த்தி மீநிலங்கோ தொடங்கி கிருபன் வாத்தியார் குமாரசாமி நல்ல கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் 😎

படிப்பு விசயத்தில நான் யாழில் கருத்து சொல்வதில்லை🤓

57 minutes ago, குமாரசாமி said:

உதிலை கிருபன் எண்டவர் எங்கை என்ன கருத்தை சொன்னவர்? வெட்டி ஒட்டினவருக்கு பேரும் புகழும் குடுக்கிற பழக்கத்தை நிப்பாட்டுங்கோ 😁

வெட்டி ஒட்டுவதே வெட்டிவேலை என்பது உண்மைதான்🤪

33 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நான் முதலில் ஞாலசீர்த்தி மீநிலங்கோவின் கட்டுரையை படித்துவிட்டு வாத்தியார், உங்கள் கருத்துக்களை படிக்கும் போது அதில் கிருபன் said கிருபன் said என்று வந்தது தானே நான் அதை கிருபனே சொன்னதாக நினைத்துவிட்டேன் 😁

கிருபன் said என்று வராமலும் quote பண்ண வசதி இருக்கு. அவற்றை கற்பிக்க ஒரு வாத்தியார் வேணும்😃

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, கிருபன் said:

வெட்டி ஒட்டுவதே வெட்டிவேலை என்பது உண்மைதான்🤪

நான் நீங்கள் நினைக்கிற மாதிரி அந்த  கூடாத மீனிங்கிலை  எல்லாம் சொல்லேல்லை. 
நீங்கள் இணைக்கிற செய்திகள் எல்லாம் உங்கடை கருத்தாய் இருக்கக்கூடாது/இருக்காது எண்ட நல்லெண்ணத்திலைதான் சொன்னனான்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

படிப்பு விசயத்தில நான் யாழில் கருத்து சொல்வதில்லை🤓

இது கிருபனில் எனக்கு பிடித்திருந்தது.

நேருக்கு நேர்

ஒளிவு மறைவு இல்லாமல் தான் நினைப்பதை

சொல்லக்கூடியவர்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

படிப்பு விசயத்தில நான் யாழில் கருத்து சொல்வதில்லை🤓

வெட்டி ஒட்டுவதே வெட்டிவேலை என்பது உண்மைதான்🤪

கிருபன் said என்று வராமலும் quote பண்ண வசதி இருக்கு. அவற்றை கற்பிக்க ஒரு வாத்தியார் வேணும்

 

அப்படியெல்லாம் சொல்லலாமா கிருபரே😃
உங்கள் சேவை எங்களுக்குத் தேவை 🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் நண்பர் ஒருவர் எழுதியது..

 

 

எனது நண்பனின் தமையன் (அவரும் நல்ல நண்பர்தான்) O/L பரீட்சையில் ஆறேழு டிஸ்ரிங்ஷன்ஸ் எடுத்தார். ஆனால் A/L இல் all F வந்தது. அப்படித்தான் வரும் என்று ரிசல்ட்ஸ் வரமுன்னரே எனக்குச் சொன்னதும் நல்ல நினைவில் இருக்கின்றது. பின்னர் கொழும்பிற்கு வந்து பல்வேறு துறைகளில் படிக்க ஆரம்பித்து, IT துறையில் நுழைந்து பல கடினமான பரீட்சைகளை எல்லாம் தாண்டி கொழும்பில் வேலை செய்து, இப்போது மத்திய கிழக்கில் ஒரு பெரிய கம்பனி ஒன்றின் IT department இன் Head ஆக இருக்கின்றார்.

என்ன துறையாக இருந்தாலும் ஆர்வமும், உழைப்பும், விடாமுயற்சியும், விழுந்தாலும் துவளாமல் எழுவேண்டும் என்ற மனமும் இருந்தால் வாழ்வில் முன்னேறலாம்.

15 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் இணைக்கிற செய்திகள் எல்லாம் உங்கடை கருத்தாய் இருக்கக்கூடாது/இருக்காது எண்ட நல்லெண்ணத்திலைதான் சொன்னனான்.

நான் வாசிப்பதில் அரைவாசியைத்தான் யாழில் ஒட்டுவது. மிச்சத்தையும் ஒட்டினால் கனபேர் பிரசர் குளிசையை இரட்டிப்பாக்க எடுக்கவேண்டிவரும்😆

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

என்ன துறையாக இருந்தாலும் ஆர்வமும், உழைப்பும், விடாமுயற்சியும், விழுந்தாலும் துவளாமல் எழுவேண்டும் என்ற மனமும் இருந்தால் வாழ்வில் முன்னேறலாம்

இதுவே வாழ்க்கையின் தத்துவம்

12 minutes ago, கிருபன் said:

O/L பரீட்சையில் ஆறேழு டிஸ்ரிங்ஷன்ஸ் எடுத்தார். ஆனால் A/L இல் all F வந்தது.

எனது சகோதரர்களும் இதற்கு எடுத்துக் காட்டு
பல தோல்விகளின் பின்னரும் இலக்கை நோக்கி சென்றதால்  வடக்கு மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் ஒரே காலத்தில் ஆங்கில விரிவுரையாளர்களாக, பேராசிரியர்களாக  இருந்தார்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.