Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலஸ்தீனிய மக்களுக்கு... ஒரு நியாயமான, அரசுக்கான... உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்- மஹிந்த ராஜபக்ஷ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலஸ்தீனிய மக்களுக்கு ஒரு நியாயமான அரசுக்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்- பிரதமர்

பாலஸ்தீனிய மக்களுக்கு... ஒரு நியாயமான, அரசுக்கான... உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்- மஹிந்த ராஜபக்ஷ.

பாலஸ்தீனிய மக்களுக்கு ஒரு நியாயமான அரசுக்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்  என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் அதிகரித்துள்ள பதற்ற நிலைமை தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ”இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் இடம்பெறும் மோதலின் காரணமாக அப்பிராந்தியங்களிலுள்ள மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளமை மிகவும் கவலையளிக்கிறது.

குறித்த மோதல் நிலைமை, அண்மையிலுள்ள பிராந்தியங்களுக்கும் பரவும் அபாயம் காணப்படுகின்றது. இது  முழு உலகிற்கும் பேரழிவை  ஏற்படுத்தக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கும். பாலஸ்தீன மக்கள் தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடி, காலனித்துவத்தின் விளைவாகும்.

மேலும் பாலஸ்தீனிய மக்களுக்கு ஒரு நியாயமான அரசுக்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களின்  பிரச்சினைக்கு நீண்டகால தீர்வு காண்பதற்கு, பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் மக்களுக்கு மிகவும் முக்கியமான பாதுகாப்பு தேவைகள் மற்றும் நியாயத்தன்மையைப் பற்றி நன்கு புரிந்துகொள்வது அவசியமாகும்.

இதேவேளை  நிம்மதியாக வாழ்வதற்கு பாதுகாப்பான மற்றும் பரஸ்பர ஏற்றுக்கொள்ளலை, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களினால் பேச்சுவார்த்தைகள் ஊடாக நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டும்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2021/1216504

Edited by தமிழ் சிறி

  • தமிழ் சிறி changed the title to பாலஸ்தீனிய மக்களுக்கு... ஒரு நியாயமான, அரசுக்கான... உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்- மஹிந்த ராஜபக்ஷ
  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, தமிழ் சிறி said:

பாலஸ்தீனிய மக்களுக்கு... ஒரு நியாயமான, அரசுக்கான... உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்- மஹிந்த

சாத்தான் வேதம் ஓதுது.

  • கருத்துக்கள உறவுகள்

தான் தன்  சொந்த மக்களை கொன்றொழித்ததை ஆராவாரமாய் கொண்டாடிக்கொண்டு, மற்றவர்களுக்கு உபதேசிப்பதால் தன்னை புனிதன் என்று மற்றவர் புகழுவர் என்று நினைக்கிறாரோ? பாவம் தீக்கோழி! மணலுக்கை தலையை புதைக்குது. இவரின் வாயே இவருக்கு ஒருநாள் எதிரியாக மாறும். 

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய கிழக்குக் காசு..😂

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒரு சிறிய ஆதங்கமாவது இலங்கையின் பூர்வீக குடிகள் மீது இருந்து இருக்கலாம் ☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தமிழ் சிறி said:

பாலஸ்தீனிய மக்களுக்கு... ஒரு நியாயமான, அரசுக்கான... உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்- மஹிந்த ராஜபக்ஷ.

பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டி பிழைக்கும் விலாங்கு மீன்களுக்கு நீதி நியாயம் பற்றி என்னவொரு அக்கறை´.......😷

  • கருத்துக்கள உறவுகள்

தனது நாட்டில் சிறுபான்மை இனத்துக்கு

பொளிச் என்று வெத்தலையை குதப்பி நடு தெருவில் துப்புறவனையும்,

கண்ட கண்ட இடத்தில் குப்பை கூழங்களை போட்டு பொது சுகாதாரத்துக்கு தீங்கு விளைவிப்பவர்களையும் தடுக்கும் உரிமையைகூட தராத ஒரு இனம் பாலஸ்தீனியர்களுக்கு நீதி நியாயமான உரிமையை வழங்க சொல்லி இஸ்ரேலை கேட்கிறது.

பார்த்து பண்ணவும் , இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு எதிராக விடுதலை இயக்கங்கள் ஆயுதம் ஏந்தியபோது முதன் முதலில் ஓடோடி வந்து உதவி செய்த நாடு இஸ்ரேல்தான், தலையாட்டி, சுற்றிவளைப்பு, நூறு தமிழனை கைது செய்தால் அதில் ஒரு தமிழ் போராளியாவது இருப்பான் எனது போன்ற பயிற்சிகளை எல்லாம் இலங்கைக்கு முதலில் அளித்தது இஸ்ரேலிய மொசாட்தான் என்று அப்போது பேசி கொள்வார்கள்.

இப்போ தான் செய்யுறதபத்தி எவனும் கதைக்ககூடாது எவருக்கும்  தனது நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் போககூடாது என்பதால்தான் சர்வதேச ஊடகங்கள் இருந்த அடுக்குமாடி கட்டிடத்தை தகர்த்து எறிந்தது இஸ்ரேல், இப்போ மஹிந்த தாத்தாவேற சவுண்டு விடுறார் .

என்னுடைய இடத்தில்  வேலை பார்க்கும் ஒரு சில சிங்களவர்கள், தீவிர மஹிந்த குடும்ப ஆதரவாளர்கள், போர் முடிந்த சிறிது காலம் எங்களுடன் கதைக்காமல்கூட இருந்தார்கள்,

இப்போ அவர்களே மெதுவா புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள், சீனாவுடன் இலங்கை அரசு சேர்ந்ததால்தான் இந்த கொரோனா காலத்தில்கூட மேற்குலகங்கள் அவர்களை கண்டு கொள்ளவில்லையாம், உதவிகள் எதுவும் பெரிசா செய்யலையாம்,ரஷ்யா சீனாகூட கொஞ்சமாதான் தடுப்பூசிகள் பிச்சை போட்டுதாம், 

இந்தியாவுக்கு மட்டும் ஓடி ஓடி உதவி செய்கிறார்களாம், தற்போதைய ஆட்சி சரியில்லையாம், அடுத்தமுறை கோத்தபாயக்கு சிங்களவர்கள் ஆதரவு பெரிதாக இருக்காதாம் ஆட்சிக்கு வர்றது கஷ்டமாம் என்று லைட்டா முணு முணுக்கினம். 

இப்போ இஸ்ரேலைவேற காந்தி ரேஞ்சுக்கு தத்துவம் பேசி கடுப்பேத்துறார், நடப்பது எதுவே அது நல்லதாகவே நடக்கிறது என்று எடுத்துக்கொள்வோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.