Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜூன் 21 முதல் அனைவருக்கும் தடுப்பூசி இலவசம்: பிரதமர் மோடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜூன் 21 முதல் அனைவருக்கும் தடுப்பூசி இலவசம்: பிரதமர் மோடி

spacer.png

வரும் ஜூன் 21-ஆம் தேதி முதல் இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்றும் தடுப்பூசியை ஒன்றிய அரசு மொத்தமாகக் கொள்முதல் செய்யும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இன்று ஜூன் 7 மாலை 5 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர்....." நாட்டில் நிலவும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை விரைவில் கட்டுப்படுத்தப்படும். தடுப்பூசி முகாம் களை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொடிய தொற்று நோய் உலகத்தையே பாதித்து வருகிறது. இந்த நிலையில் நாம் கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போராடி வருகிறோம்.

கொரோனாவை தடுக்க ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும்தான். இந்தியாவில் தயாரித்த தடுப்பூசிகள் பல லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளது. இந்தியாவின் கோவாக்சின் ஒரு உயிர் காக்கும் மருந்தாக அமைந்துள்ளது; உள்நாட்டில் தடுப்பூசி தயாரிக்காவிட்டால் நாம் என்ன செய்திருக்க முடியும்?

ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படாத வகையில் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தியை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறோம்” என்று கூறிய பிரதமர் மோடி தற்போதைய தடுப்பூசி பற்றாக்குறை பற்றி பேசினார்.

“ நாட்டில் தற்போது நிலவும் தடுப்பூசி பற்றாக்குறை விரைவில் தீர்க்கப்படும். தேவையோடு ஒப்பிடும்போது தடுப்பூசி உற்பத்தி குறைவாகவே இருக்கிறது. ஆனாலும் தடுப்பூசி உற்பத்தியை அதிகரித்து அனைவருக்கும் தடுப்பூசியை நாம் கொண்டு செல்வோம்.

தடுப்பூசியை நாங்களே வாங்கிக் கொள்கிறோம் என்று சில மாநில அரசுகள் கூறினார்கள். ஒன்றிய அரசின் தடுப்பூசி கொள்கையில் சில மாநிலங்களுக்கு மாற்று கருத்து இருந்தன. தடுப்பூசி பற்றாக்குறையை போக்க தங்களுக்கும் தடுப்பூசி வாங்கும் உரிமை வேண்டும் என மாநிலங்கள் கோரின. இதனையடுத்து அவர்களுக்கும் உரிமை வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அதில் உள்ள சிக்கல்களை மாநில அரசுகள் உணர்ந்து விட்டன. தற்போது ஒன்றிய அரசே இதனை செய்யட்டும் என்று அந்த மாநில அரசுகள் கூறுகின்றன. இதனால் ஒன்றிய அரசே மீண்டும் தடுப்பூசியை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு வாங்கி மாநிலங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையை தொடரும்.

இப்போது மேலும் 3 புதிய கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளன. மூக்கின் வழியாக சொட்டு மருந்துபோல் செலுத்தக்கூடிய தடுப்பு மருந்தும் பரிசோதனை நிலையில் இருக்கிறது.

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒன்றிய அரசு இலவச தடுப்பூசிகளை வழங்கும். ஜூன் 21 முதல் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசிகளை வழங்கும்.கொரோனா தடுப்பூசி விநியோகத்தை ஒன்றிய அரசே முழுமையாக நடத்தும். 75 சதவீத தடுப்பூசி இலவசமாகவும், 25 சதவீதம் தனியார் மருத்துவமனைகளாலும் வழங்கப்படும்”என்று பிரதமர் அறிவித்தார்.

 

https://minnambalam.com/politics/2021/06/07/48/corona-vaccine-free-for-all-from-june-21-modi

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, கிருபன் said:

. மூக்கின் வழியாக சொட்டு மருந்துபோல் செலுத்தக்கூடிய தடுப்பு மருந்தும் பரிசோதனை நிலையில் இருக்கிறது.

போற போக்கை பாத்தால் தடிமலுக்கு அடிக்கிற ஸ்பிறே மாதிரி வரும் போல கிடக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய அரசு போய் ஒன்றிய அரசானது?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

மத்திய அரசு போய் ஒன்றிய அரசானது?

நல்ல மாற்றம். அம்பேத்கர் இந்திய அரசியல் சட்டத்தை வரையும் போது, இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்றே வரையறுக்கிறார்.

அண்ணாவும் தனது முதலாவது பாராளுமன்ற உரையிலேயே இதை வலியுறுத்தி டெல்லியில் இருப்பது ஒன்றிய அரசே அன்றி மத்திய அரசு அல்ல என பேசியுள்ளார்.

பின்னாளில் வந்த அத்தனை இந்தி பேசாத மாநில அரசுகளும், மெத்தனமாய் இருந்து விட - அதிகாரங்களை தன்னகத்தே குவித்து தன்னை மத்திய அரசு என்றும் அழைக்கிறது டெல்லி.

இது இத்தோடு நின்று விடாது, கேரளா, தமிழ்நாடு, மே. வங்கம், போன்ற மாநிலங்களை ஆளும் கட்சிகள் கூட்டிணைந்து மேலும் இழந்த அதிகாரங்களை மாநிலங்களுக்கு திருப்ப வேண்டும்.

நானே கூட இந்த “ஒன்றிய அரசு” என்பதை பற்றி நீட் நேரம் யாழில் எழுதியுள்ளேன்.

ஆனால் ஒரு தேர்ந்தெடுக்கபடும் அரசு அதை கையாளும் போது கிடைக்கும் கனதி அதிகம்.

பத்திரிகைகள் ஒன்றிய அரசு என அழைக்க தொடங்கி இருப்பது நல்ல மாற்றமே.

15 minutes ago, குமாரசாமி said:

போற போக்கை பாத்தால் தடிமலுக்கு அடிக்கிற ஸ்பிறே மாதிரி வரும் போல கிடக்கு..

இன்னும் சில வருடங்களில் ஒவ்வொரு வருடமும் வரும் ப்ளு காய்ச்சல் போல் ஆகிவிடும் என்கிறார்கள் சிலர். 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கிருபன் said:

75 சதவீத தடுப்பூசி இலவசமாகவும், 25 சதவீதம் தனியார் மருத்துவமனைகளாலும் வழங்கப்படும்”என்று பிரதமர் அறிவித்தார்.

எத்தனைபேர்  மரத்திலை தாவி ஏறப்போறானுகளோ 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, goshan_che said:

இன்னும் சில வருடங்களில் ஒவ்வொரு வருடமும் வரும் ப்ளு காய்ச்சல் போல் ஆகிவிடும் என்கிறார்கள் சிலர். 

சென்ற வருடம் கொரோனா ஆரம்பகால பகுதியில் எனது குடும்ப வைத்தியர் சொன்னது....
கொரோனா முடிந்தாலும் இன்னொரு வைரஸ் வரத்தான் போகின்றது. எனவே மருந்து மாத்திரைகளுடன் தயாராக இருக்க வேண்டிய உலகம் இது.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பெருமாள் said:

எத்தனைபேர்  மரத்திலை தாவி ஏறப்போறானுகளோ 🤣

🤣 பாகிஸ்தானில எண்டா நாட்டு வெடி குண்டு எறிவாங்கள்🤣

9 minutes ago, குமாரசாமி said:

சென்ற வருடம் கொரோனா ஆரம்பகால பகுதியில் எனது குடும்ப வைத்தியர் சொன்னது....
கொரோனா முடிந்தாலும் இன்னொரு வைரஸ் வரத்தான் போகின்றது. எனவே மருந்து மாத்திரைகளுடன் தயாராக இருக்க வேண்டிய உலகம் இது.

☹️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.