Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மட்டக்களப்பில் பரபரப்பு: வியாழேந்திரன் வீட்டின் முன் துப்பாக்கிச் சூடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனகராசா சரவணன்

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டின் முன்பாக வைத்து, ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

அதில் காயமடைந்த இளைஞன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இதனை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில், மென்டர்சன் வீதியிலேயே இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீடு உள்ளது.அவ்வீட்டுக்கு முன்பாகவே இன்று (21) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

மணல் லொறியொன்றின் சாரதியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் இடம்பெற்ற போது, ராஜாங்க அமைச்சர் வீட்டில் இல்லை என தெரியவந்துள்ளது.

இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட வேளையிலேயே அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த அமைச்சரவை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திய அந்த அதிகாரி, பொலிஸில் சரணடைந்துள்ளார்.

image_66d2c086e8.jpgimage_4d573d4821.jpgimage_c9a0248002.jpgimage_0b5bb234f0.jpg


  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு துப்பாக்கிப் பிரயோகத்தின் திடுக்கிடும் பின்னணி வெளியானது

J.A. George 

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டின் முன்பாக வைத்து, ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

அதில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இதனை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மட்டக்களப்பு சின்னஊறணி பகுதியில் உள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாகவே இன்று (21) மாலை 5.10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

மணல் லொறியொன்றின் சாரதியே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறிய பொலிஸ் பேச்சாளர், சம்பவம் இடம்பெற்ற போது, ராஜாங்க அமைச்சர் வீட்டில் இல்லை என தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார்.

மூன்று நாட்களுக்கு முன்னதாக டிப்பர் சாரதியுடன் பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பிரதிபலனாக இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

குறித்த டிப்பர் சாரதி, முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர்,  துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திய அந்த உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Tamilmirror Online || மட்டக்களப்பு துப்பாக்கிப் பிரயோகத்தின் திடுக்கிடும் பின்னணி வெளியானது

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டுபேருக்குமிடையிலான வாய்தகறாறு இன்று துப்பாக்கி சூட்டில் முடிந்திருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கிச் சூட்டை அடுத்து வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு- பதற்றநிலை!

துப்பாக்கிச் சூட்டை அடுத்து வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு- பதற்றநிலை!

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் மக்கள் ஒன்றுகூடிய நிலையில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) மாலை  ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையிலேயே மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதியில் ஒன்றுகூடியுள்ளனர்.

இதன்போது, பெருமளவானோர் ஒன்றுகூடிய நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டிற்கு எதிராக கோசங்களை எழுப்பி வருகின்றனர்.

இதையடுத்து, அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Gun-Shot-in-Batticalao-Minister-Viyalenthiran-Home-Front-5-1.jpg

https://athavannews.com/2021/1224120

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் எனது தனிப்பட்ட பகையோ! கட்சி சார்ந்த அரசியலோ இல்லை! – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

BeFunky-collage-18.jpg?6bfec1&6bfec1

மட்டக்களப்பு நகர் – மன்ரசா வீதியில் அமைந்துள்ள எனது வீட்டுக்கு முன்னால் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தாருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலைத், மன வேதனையைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற போது, நான் கொழும்பில் இருந்த நிலையில், தொலைபேசி ஊடாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவத்தில் காயமடைந்தவரை வைத்தியசாலையில் அனுமதிக்க கூறியதுடன் சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை உடன் முன்னெடுக்குமாறும் நீதியை நிலை நாட்டுமாறும், பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட அனைவருக்கும் பணிப்புரை விடுத்துள்ளேன்.

எனது வீட்டில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் பிறிதொரு நபர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தால் மேற்படி நபர் காயமடைந்து, அதன் பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதில் மிக மிக வேதனை அடைகின்றேன். காலம் தாழ்த்தாது உரிய நீதியை நியாயத்தை நாட்ட கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளேன். அத்துடன் இந்த விடயத்தில் எந்த எனது தனிப்பட்ட விதமான பகையோ! கட்சி சார்ந்த அரசியலோ! இல்லை என்பதையும் தெளிவாகவும் , ஆணித்தரமாகவும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

எஸ்.வியாழேந்திரன்,
இராஜாங்க அமைச்சர்

 

https://www.meenagam.com/துப்பாக்கி-சூட்டு-சம்பவத/

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் பிறிதொரு நபர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தால் மேற்படி நபர் காயமடைந்து,

தமிழ் பேசும் பொலிஸ் உத்தியோகத்தராக இருப்பாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

தமிழ் பேசும் பொலிஸ் உத்தியோகத்தராக இருப்பாரோ?

பெயர் வெளியே வராத படியால்… சிங்களம் அல்லது முஸ்லீமாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

வீதியில் சென்றவரை அழைத்து வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலர் சுட்டார் – சம்பவத்தினை நேரில் கண்டவர்

 
IMG_0125-696x522.jpg
 51 Views

வீதியால் சென்றுகொண்டிருந்தபோது, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலர் அழைத்தே அவர் மீது துப்பாக்கிசூடு நடாத்தியதாக சம்பவத்தினை நேரில் கண்டவர் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை மட்டக்களப்பு,ஊறணி,மன்றேசா வீதியில் உள்ள அமைச்சர் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக இடம்பெற்ற அமைச்சரின் மெய்பாதுகாவலரினால் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

மெய்பாதுகாவலருக்கும் குறித்த நபருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினை தொடர்ந்து மெய்பாதுகாவரால் குறித்த குடும்பஸ்தர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தில் சின்ன ஊறணியை சேர்ந்த 35வயதான மகாலிங்கம் பாலசுந்தரன் என்பவரே உயிரிழந்திருந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிசூடு நடாத்திய மெய்பாதுகாவலர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிசூடு நடாத்திய துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத்துறையினர்,குற்றத்தடவியல் பிரிவினர்,புலனாய்வுத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தார். இதன்போது குறித்த பகுதிக்கு செல்ல ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

IMG_0127.jpg

தாங்கள் மன்ரேசா வீதியில் உள்ள வீடு ஒன்றில் காசு வாங்கிவிட்டு முச்சக்கர வண்டியில் செல்லும்போது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக மரத்தின் கீழ் இருந்த மெய்பாதுகாவலர் குறித்த நபரை அழைத்ததாகவும்  பின் இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்ற நிலையில் திடீர் என மெய்பாதுகாவலர் இடுப்பிலிருந்து துப்பாக்கியை எடுத்து குறித்த நபரின் தலை மீது சுட்டதாகவும் உயிரிழந்த நபருடன் சென்றவர் தெரிவித்துள்ளார்.

மண் ஏற்றிச்செல்லும் வாகனத்தின் சாரதியாக கடமையாற்றும் உயிரிழந்தவர்,கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக தனது வாகனத்துடன் வந்தபோது இராஜாங்க அமைச்சரின் வாகனங்கள் வீதியை மறித்து நின்றுள்ளது. இதையடுத்து வாகனங்களை வீதியோரத்தில் நிறுத்துமாறு உயிரிழந்தவர் கூறிய நிலையில் அங்கு வாய்த்தர்க்கம் இடம்பெற்றதாகவும் அதன் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

https://www.ilakku.org/?p=53063

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“நான் பொலிஸ் என துப்பாக்கியை எடுத்ததும் வெடித்தது நண்பன் கீழே வீழ்ந்தான் ” - நேரில்கண்டவர் பரபரப்பு தகவல்.

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டிற்கு முன்னால் நேற்று திங்கட்கிழமை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றது.

குறித்த சம்பவத்தில் மட்டக்களப்பு ஊரணியை சேர்ந்த 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவர்  உயிரிழந்தார்.

சம்பவத்தையடுத்து பிரதேச மக்கள் போராட்டங்களை மேற்கொண்ட நிலையில், இராஜாங்க அமைச்சரின் வீடு அமைந்துள்ள பகுதி பொலிஸாரின் பாதுகாப்புக்கள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற  நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் இன்று செவ்வாய்கிழமை காலை 11.00 மணியில் சென்று பார்வையிடப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், துப்பாகிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபரை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி சாரதி பரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

முச்சக்கரவண்டி சாரதியும் உயிரிழந்தவரின் நண்பனுமான விஜயராஜா தெரிவிக்கையில்,

நானும் நன்பணுமான பாலேந்திரனும் முச்சக்கரவண்டியில் வீதியால் சென்ற போது எங்களை கூப்பிட்டு வரவழைத்து நான் யார் என்று தெரியுமா நான் பொலிஸ் என துப்பாக்கியை எடுத்ததும் வெடிச்சது, எனது நண்பன் கீழேவிழுந்தான்.

நானும் பாலசுந்தரமும் நண்பர்கள் சம்பவதினமான நேற்று அமைச்சரின் வீடு அமைந்துள்ள மென்ரசா வீதியிலுள்ள வீடு ஒன்றில் மண் கொடுப்பது தொடர்பாக முச்சக்கரவண்டியில் சென்று திரும்பிவரும் போது அமைச்சரின் வீட்டின் முன்பகுதியிலுள்ள வெற்றுக்காணியிலுள்ள மரம் ஒன்றில் குறித்த மெய்ப்பாதுகாவலர் இருந்துள்ளார். இதன்போது அவரை கண்டு முச்சக்கரவண்டியை நிறுத்துமாறு எனது நண்பன் கோரினார் நான் நிறுத்தாமல் சென்றேன்.

இருந்தபோதும் நண்பன் முச்சக்கரவண்டியை திருப்பி எடுங்கோ பொலிஸார் கூப்பிடுவதாகவும் கதைத்துவிட்டு போவோம் என்றார். அதனையடுத்து நான் முச்சக்கரவண்டியை திருப்பிக்கொண்டு அமைச்சரின் வீட்டின் முன்னால் வீதியில் நிறுத்தியபோது  வீதிக்கு வந்த மெய்ப்பாதுகாவலர் நண்பனிடம் கேட்டார் என்னடா கைகாட்டிச் சென்றனீ என அதற்கு நண்பன் நீ யார் என்றார் அப்போது மெய்ப்பாதுகாவலர் இதை கேட்க நீயார் என இருவருக்கும் வாய்த்தர்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து மெய்ப்பாதுகாவலர் நண்பனை கழுத்தில் கையை வைத்து தள்ளிக் கொண்டுபோனபோதும் நான் யாரு என்று தெரியுமா பொலிஸ் என துப்பாகியை மெய்ப்பாதுகாவலர் எடுத்ததும் வெடித்தது நண்பன் கீழே வீந்துள்ளான் இரத்தம் வெளியேவந்தது அதன் பின்னர் எனது முச்சக்கரண்டியில் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றேன்.

அதேவேளை மூன்று தினங்களுக்கு முன்னர் மெய்பாதுகாவருடன் நண்பனுக்கு பிரச்சினை நடந்திருக்கின்றது எனக்கு அதுபற்றி தெரியாது என்றார்.

“நான் பொலிஸ் என துப்பாக்கியை எடுத்ததும் வெடித்தது நண்பன் கீழே வீழ்ந்தான் ” - நேரில்கண்டவர் பரபரப்பு தகவல் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

வியாழேந்திரனின் வீட்டிற்கு முன் வைத்து தலையிலேயே சுட்டார்கள் – பல விடயங்களை அம்பலப்படுத்தும் சகோதரி

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் சகோதரி ஸ்தலத்தில் நடந்த பல விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சுட்டுக் கொல்லப்பட்டவரின் நண்பரொருவர் நேரடி சாட்சியம் வழங்கியிருந்த நிலையில் உயிரிழந்தவரின் சகோதரி இவ்வாறு கண்ணீர் மல்க வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அதன்படி, “ஏன் அவரை சுட வேண்டும். என்வென்றாலும் கூப்பிட்டு பேசியிருக்கலாம் தானே? அமைச்சர் இல்லாத போது பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அங்கு என்ன வேலை?

 

 

எனது சகோதரர் பயணித்தது சாதாரணமான, எல்லாருக்கும் பொதுவான ஒரு வீதி. என்ற போதும் இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்பாக செல்லும் போது வாகனத்திலிருந்து கீழே இறங்கி தான் செல்ல வேண்டும் என அந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் கூறியுள்ளார்.

எனது சகோதரரை தலையிலேயே சுட்டுள்ளார்கள். எனவே இந்த உண்மைகள் எல்லாம் தெரியவர வேண்டும் எனில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தனது வீட்டின் சிசிடிவி காணொளிகளை வெளிப்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
 

https://www.meenagam.com/வியாழேந்திரனின்-வீட்டிற/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.