Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோயில்களில் தமிழில் அர்ச்சனை: அமைச்சர் சேகர்பாபு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோயில்களில் தமிழில் அர்ச்சனை: அமைச்சர் சேகர்பாபு

spacer.png

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை பிராட்வேயில் நேற்று (ஆகஸ்ட் 1) நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, 1,000 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 14 வகையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும். இதற்காக 47 கோயில்களைத் தேர்வு செய்து ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என விளம்பரப் பலகைகள் வைக்கப்படும். முதற்கட்டமாக புதன் அல்லது வியாழக்கிழமை அன்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்படும்.

அர்ச்சனை செய்பவரின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் தகவல் பலகையில் வைக்கப்படும். தமிழில் அர்ச்சனை செய்ய விரும்புவோர் அந்த அர்ச்சகரைத் தொடர்பு கொண்டு தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம்.

முதலில் பெரிய கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் முறை தொடங்கப்பட்டு, பின்பு சிறிய கோயில்களுக்கும் அம்முறை விரிவுப்படுத்தப்படும். அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யக்கூடிய அர்ச்சகர்களை முறையாகப் பயன்படுத்தி அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் பெரிய கோயில்களில் ஆடிப் பெருக்கு விழாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி மாதங்களில் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து தமிழ்நாட்டிலுள்ள கோயில்களுக்கு மக்கள் வருவது வழக்கம். அதன்மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயில்களில் வழிபாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3ஆம் தேதிக்குப் பிறகு கோயில்களைத் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்” என்று கூறினார்.

முன்னதாக, சென்னை மாநகராட்சி சார்பில் திரு.வி.க.நகர் மண்டல அலுவலக வளாகத்தில் ஒரு வார கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தின் தொடக்க விழாவை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

https://minnambalam.com/politics/2021/08/02/11/tamil-chanting-in-temples-from-next-week-says-minister-sekarbabu

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கமான ஸ்டாண்ட் பார்டட்டிகளின் சவுண்டு .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் அர்ச்சனை: அறிவிப்புப் பலகையை வெளியிட்ட முதல்வர்!

 
spacer.png

கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்த நிலையில் இதுதொடர்பான அறிவிப்புப் பலகையை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை நடைபெற வேண்டும் என்பது பலரது விருப்பமாகவும் கோரிக்கையாகவும் இருந்து வருகிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சேகர்பாபு கோயில் நிலங்களை மீட்பது, கோயில்களில் ஆய்வு மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ என்று தொடங்கப்படும் இந்தத் திட்டத்தில் முதற்கட்டமாக 47 கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்தத் திட்டம் ஆகஸ்ட் 6ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 47 திருக்கோயில்களில் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்புப் பலகையை முதல்வர் நேற்று வெளியிட்டார்.

திருக்கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு அதில் அர்ச்சகர்களின் பெயர், செல்பேசி எண் ஆகியவை பக்தர்களுக்குத் தெரிவிக்கப்படும் வகையில் குறிப்பிடப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்படும் என்று அறிவிப்புக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

https://minnambalam.com/politics/2021/08/04/10/notice-board-released-by-mk-stalin-for-tamil-archana-in-temples

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கடவுளிடமிருந்து ரிப்பளையும் தமிழில் தான் வருமோ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோயில்களில் தமிழில் அர்ச்சனை திட்டம் தொடக்கம்!

 
spacer.png

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று (ஆகஸ்ட் 5) மாலை தொடங்கி வைத்தார்.

திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் கடந்த மூன்று மாதங்களில் இந்து சமய அறநிலையத் துறையில் பல்வேறு கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தினசரி கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

முக்கிய நடவடிக்கையாக, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், கோயில் நிலங்கள் மீட்பு, கோயில் நிலங்களில் கல்வி நிலையங்கள், கோயில் சொத்துகள் குறித்த விவரங்களை அரசு இணையதளங்களில் வெளியிடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில், தமிழில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதை நடைமுறைப்படுத்தும் வகையில், கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபு இருவரும் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என்ற அறிவிப்புப் பலகையை வெளியிட்டனர்.

அதன்படி முதற்கட்டமாக அறநிலையத் துறைக்குச் சொந்தமான 47 கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “1971ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சிக்காலத்தில் அப்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்த கண்ணப்பன், கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.

1974ஆம் ஆண்டு இது தொடர்பாகச் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. விரும்புகிறவர்கள் மட்டும் தமிழில் அர்ச்சனை மேற்கொள்ளலாம், இதர மொழிகளில் வழிபாடுகள் செய்வதை இத்திட்டம் தடுக்காது என்று 1998இல் நடைபெற்ற சட்டமன்ற விவாதத்தின்போது கலைஞர் தெளிவுபடுத்தினார்.

பக்தர்கள் தங்கள் வழிபாடுகளுக்கு உகந்த மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பெரும்பான்மை மக்களின் விருப்பம் எதுவோ அதன்படி அரசு செயல்படும். அனைவரின் விருப்பத்தை நிறைவேற்றுவது அரசின் கடமை. சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் மற்றும் எந்த மதத்தினரின் மனமும் புண்படாமல் முதலமைச்சர் முடிவு எடுப்பார்.

536 கோயில்களில் அன்னைத் தமிழ் அர்ச்சனை திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. அனைத்துக் கோயில்களுக்கும் தமிழில் 14 போற்றி புத்தகங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளன” என்று தெரிவித்தார்

 

https://minnambalam.com/politics/2021/08/06/8/archanais-in-temples-will-be-done-in-tamil

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்

புரிகிற மாதிரி  இருந்தால்  நல்லது தானே??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/8/2021 at 10:05, putthan said:

அப்ப கடவுளிடமிருந்து ரிப்பளையும் தமிழில் தான் வருமோ....

சமஸ்கிருதத்திலை பூசையாக்கேக்கை ரிப்பளை  ஏதும் வருதா? :cool:

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம்போல் திமுகவின் பிரட்டு அரசியல் கொடுத்த வாக்குறுதிகள் நிறவேற்றமுட்டியவில்லை இப்படி குத்துகாரணம் அடித்து விளையாடுவினம் .

கோயில்களில் இரண்டுவிதமான வருமானம் அய்யர் மாருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
On 7/8/2021 at 03:36, குமாரசாமி said:

சமஸ்கிருதத்திலை பூசையாக்கேக்கை ரிப்பளை  ஏதும் வருதா? :cool:

பேஷா வருதே.....ஆனால் புரியவில்லை...🤣

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 6/8/2021 at 19:36, குமாரசாமி said:

சமஸ்கிருதத்திலை பூசையாக்கேக்கை ரிப்பளை  ஏதும் வருதா? :cool:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.