Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுந்தீவில் இரண்டு வாரங்களில் இரண்டு கோடி நஷ்டம்: இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்துமாறு கடற்றொழிலாளர்கள் கோரிக்கை..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறை காரணமாக தமது வாழ்வாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றமையினால், எந்த வழியிலேனும் இந்தியக் கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்துமாறு யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் வலியுறுத்தினர்.

59682616_2359056400820686_45143166230410

மேலும் கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களுக்கு இரண்டு கோடி 13 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் நஷ்டத்தினை இந்தியக் கடற்றொழிலாளர்கள் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

யாழ். மாவட்டத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர் சமாசங்கள் மற்றும் கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இன்று(08.08.2021) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியக் கடற்றொழிலாளர்களின்  அத்துமீறல்  உட்பட தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை கட்டுப்படுத்துமாறு யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களினால் தொடர்ச்சியான  கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், இன்றைய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

யாழ். மாவட்டத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர் சமாசங்கள் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில்,

இந்தியக் கடற்றொழிலார்களின் அத்துமீறல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், சுருக்கு வலை, உள்ளூர் இழுவைப் படகு, வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தல், குழை போட்டு மீன் பிடித்தல் போன்ற சட்டவிரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற கருத்தினையும் கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் முன்வைத்தனர்.

மேலும், புரெவிப் புயலால்  ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான நஸ்டஈட்டினைப் பெற்றுத் தருமாறும், நீதிமன்றத்தின் ஊடாக அரசுடமையாக்கப்பட்ட  இந்தியக் கடற்றொழிலாளர்களின் படகுகளை விற்பனை செய்து, கிடைக்கின்ற பணத்தினை யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்குமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.

நெடுந்தீவில் இரண்டு வாரங்களில் இரண்டு கோடி நஷ்டம்: இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்துமாறு கடற்றொழிலாளர்கள் கோரிக்கை..! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவுக்கு சொந்தமான நெடுந்தீவில் இந்தியா மீனவர்கள் எப்படி வரலாம்.....சீனாக்காரன் ஊருக்குள்ள வந்து கடலட்டை வியாபாரம் செய்யும் பொழுது கடற்றொழிலார் சங்கம் என்ன செய்து கொண்டிருந்தவை ? இப்ப நெடுந்தீவுகடலில் இந்தியா மீனவர்கள் மீன் பிடிப்பதால் தொல்லையாம்...

1 hour ago, putthan said:

சீனாவுக்கு சொந்தமான நெடுந்தீவில் இந்தியா மீனவர்கள் எப்படி வரலாம்.....சீனாக்காரன் ஊருக்குள்ள வந்து கடலட்டை வியாபாரம் செய்யும் பொழுது கடற்றொழிலார் சங்கம் என்ன செய்து கொண்டிருந்தவை ? இப்ப நெடுந்தீவுகடலில் இந்தியா மீனவர்கள் மீன் பிடிப்பதால் தொல்லையாம்...

கடலட்டை பிடிக்க வந்தவர்கள் உள்ளூர் மீனவர்களின் வலைகளை அறுத்து சேதமாக்கவும் இல்லை, மீன்வளத்தைக் கொள்ளை அடிக்கவும் இல்லை. அத்துடன், இந்த கடலட்டை பிடிக்கும் நிறுவனங்களில் வேலை செய்வதும் எம் உள்ளூர் மக்கள் தான். இதன் மூலம் மேலதிக வருமானமும் அவர்களுக்கு கிடைக்கின்றது.

ஆனால் இந்தியர்கள் கொள்ளையர்கள். தொப்புள் கொடி உறவு என்ற பெயரில் வந்து சட்டவிரோதமான மீன் பிடி உபகரணங்களை பயன்படுத்தி கடல் வளத்தைக் கொள்ளையிட்டு உள்ளூர் மீனவர்களின் படகுகளையும் மீன்வளத்தையும் நாசம் செய்யும் கொள்ளையர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப் படுவனுக்குத்தான் அதன் அருமை தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நிழலி said:

கடலட்டை பிடிக்க வந்தவர்கள் உள்ளூர் மீனவர்களின் வலைகளை அறுத்து சேதமாக்கவும் இல்லை, மீன்வளத்தைக் கொள்ளை அடிக்கவும் இல்லை. அத்துடன், இந்த கடலட்டை பிடிக்கும் நிறுவனங்களில் வேலை செய்வதும் எம் உள்ளூர் மக்கள் தான். இதன் மூலம் மேலதிக வருமானமும் அவர்களுக்கு கிடைக்கின்றது.

ஆனால் இந்தியர்கள் கொள்ளையர்கள். தொப்புள் கொடி உறவு என்ற பெயரில் வந்து சட்டவிரோதமான மீன் பிடி உபகரணங்களை பயன்படுத்தி கடல் வளத்தைக் கொள்ளையிட்டு உள்ளூர் மீனவர்களின் படகுகளையும் மீன்வளத்தையும் நாசம் செய்யும் கொள்ளையர்கள்.

நல்லது .....நல்லது நடந்தால் சந்தோசம் .....சீனாக்காரனுக்கு இதனால் பெரும் லாபம் இருக்கின்றது அதனால் தான் இறால் போடுகின்றான் ...என்பது தான் உண்மை ...இதை யாராலும் தடுக்க முடியாது...

சீனா திறம் என்று சொல்லி கொண்டிருக்க முடியாது....சீனா  அமேரிக்கா எகாதிபத்தியத்தியவாதிகளின் மறு பதிப்பு ...

5 hours ago, putthan said:

நல்லது .....நல்லது நடந்தால் சந்தோசம் .....சீனாக்காரனுக்கு இதனால் பெரும் லாபம் இருக்கின்றது அதனால் தான் இறால் போடுகின்றான் ...என்பது தான் உண்மை ...இதை யாராலும் தடுக்க முடியாது...

சீனா திறம் என்று சொல்லி கொண்டிருக்க முடியாது....சீனா  அமேரிக்கா எகாதிபத்தியத்தியவாதிகளின் மறு பதிப்பு ...

தமக்கு இலாபம் ஏற்படா விட்டால் எவரும் எந்த முதலீட்டையும் எங்கும் செய்யப் போவதில்லை. இறால் போட்டு சுறா பிடிப்பது தான் எந்த முதலீட்டிலும் நடப்பது. இலங்கை முழுதும் மட்டுமல்ல உலகின் பல நாடுகளில் சீனா உட்பட முன்னேறிய நாடுகள் அனைத்தும் இதனைத் தான் செய்கின்றன. தனியார் கம்பெனிகளான மைக்ரோசொவ்ட், அமேசன், வோல்மார்ட் போன்ற காப்பரேட் கம்பெனிகளும் இதனையே செய்கின்றன. புலம்பெயர்ந்த நாம் அங்கு ஒன்றை ஆரம்பிப்போமாயின் இலாபத்தினை எதிர்பார்க்காமல் விடப்போவதில்லை.

இதன் மூலம் நம் மக்களுக்கு ஓரளவுக்கு வருமானம் கிடைக்குமாயின் அதுவே இப்போதைக்கு தேவையானது. அத்துடன் இத் தொழிலையும், அதற்கு பயன்படும் நவீன தொழில்னுட்பங்களையும், நெளிவு சுளிவுகளையும், வியாபாரத்தையும் நம் மக்கள் அறிந்து கொள்ளவும் இது வாய்ப்பாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிழலி said:

தமக்கு இலாபம் ஏற்படா விட்டால் எவரும் எந்த முதலீட்டையும் எங்கும் செய்யப் போவதில்லை. இறால் போட்டு சுறா பிடிப்பது தான் எந்த முதலீட்டிலும் நடப்பது. இலங்கை முழுதும் மட்டுமல்ல உலகின் பல நாடுகளில் சீனா உட்பட முன்னேறிய நாடுகள் அனைத்தும் இதனைத் தான் செய்கின்றன. தனியார் கம்பெனிகளான மைக்ரோசொவ்ட், அமேசன், வோல்மார்ட் போன்ற காப்பரேட் கம்பெனிகளும் இதனையே செய்கின்றன. புலம்பெயர்ந்த நாம் அங்கு ஒன்றை ஆரம்பிப்போமாயின் இலாபத்தினை எதிர்பார்க்காமல் விடப்போவதில்லை.

இதன் மூலம் நம் மக்களுக்கு ஓரளவுக்கு வருமானம் கிடைக்குமாயின் அதுவே இப்போதைக்கு தேவையானது. அத்துடன் இத் தொழிலையும், அதற்கு பயன்படும் நவீன தொழில்னுட்பங்களையும், நெளிவு சுளிவுகளையும், வியாபாரத்தையும் நம் மக்கள் அறிந்து கொள்ளவும் இது வாய்ப்பாக அமையும்.

வியாபாரம் என்றால் சரி ஆனால் அதை மீறிய செயல் நடந்தால் என்ன செய்வார்கள்....நெடுந்தீவை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு எடுத்தால்? ....யாழ்குடநாட்டை 99 வருடத்திற்கு குத்தகைக்கு எடுத்தால்?
இது கற்பனை மட்டுமே எதுவும் நடக்கலாம்....

ஒரு காலகட்டத்தில் பிரித்தானியா அடிமைப்படுத்தினார்கள் ...அவர்களின் கல்வி முறை சிறந்தது ,அதன்நெளிவு ,சுளிவுகளை தெரிந்து இன்று அவர்களின் நாடுகளில் வந்து குடியேறி அவர்களுக்கே எஜமானக இருக்கும் வாய்ப்புக்களை பெற்றுள்ளோம் ...பிரித்தானியா ஆட்சி செய்யும் பொழுது பாலம் போட்டார்கள் ,பெரிய கட்டிடங்கள் கட்டினார்கள் பாடசாலைகள்,மருத்துவ மனை இப்படி பல,.......புகையிரத்ம் விட்டார்கள்,பஸ் ஓடினார்கள்.......கப்பல் ,துறைமுகம்.... சட்டத்தரணி,மருத்துவர்,பொறியியளாலர் இப்படி பல பட்டங்களுடன் பலர் முன்னுக்கு வந்தார்கள்.....
பிரித்தானியா ஆட்சியை புகழ்ந்த நம்  முன்னோர் பலர் உண்டு....ஜனநாயகம்,முதலாளித்துவம்,மனித உரிமைகள்,சம அந்தஸ்து இப்படி சில சொல்லாடல்களையும் அறிந்து கொண்டோம்.....

அதே போல் இன்று சீனா தனது ஏகாதிபத்திய ஆசைக்காக அன்று பிரித்தானியா ஆட்சியாளர்கள் செய்ததை செய்கின்றனர்....மக்கள் புது வித ஒழுங்கு முறைக்கு வழுகட்டாயமாக எடுத்து செல்லப்படுகின்றனர்....
இவர்களின் நெளிவு சுளிவுகளை கற்று முன்னுக்கு வந்து விடுவார்கள் ஆனால் 
மீண்டும் ஒர் அடிமை வாழ்க்கை.....

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2021 at 15:48, putthan said:

சீனாக்காரன் ஊருக்குள்ள வந்து கடலட்டை வியாபாரம் செய்யும் பொழுது

டகளஸ் அமைச்சர் ஆதை நிறுத்தி விட்டதா செய்தி  போட்டிருக்கார் உண்மையா??

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

டகளஸ் அமைச்சர் ஆதை நிறுத்தி விட்டதா செய்தி  போட்டிருக்கார் உண்மையா??

சிங்கன் சூரன்  ......தடுத்து நிறுத்தியிருப்பார்....உண்மை பொய் தெரியாது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.